Jump to content

பன்னீரின் தயக்கமும்.. பழனிச்சாமியின் பாய்ச்சலும்!


Recommended Posts

பன்னீரின் தயக்கமும்.. பழனிச்சாமியின் பாய்ச்சலும்!

பன்னீர்செல்வம்

“மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் செய்யத் துணியாத செயலை, முதல்முறையாகப் பதவியேற்ற பழனிசாமி செய்துவிட்டார்” என்று சிலாகித்துப் பேசுகிறார்கள் அ.தி.மு.க-வின் முன்னணியினர்.

பெரியகுளம் தொகுதியின் வேட்பாளராக 2001-ம் ஆண்டு அறிமுகமாகி,  தேர்தலில் வெற்றியும் பெற்று வருவாய்த் துறை அமைச்சராக ஜெயலலிதாவினால் தமிழகத்துக்கு அறிமுகம் செய்யப்பட்டார் பன்னீர்செல்வம். ஆனால், ஜெயலலிதா மீதான வழக்கைச் சுட்டிக்காட்டி அப்போது அவரின் முதல்வர் பதவி பறிக்கபட்டது. இதைச் சற்றும் எதிர்பாராத ஜெயலலிதா, அடுத்து என்ன செய்வது, யாரை பொறுப்புக்கு நியமிப்பது என்ற நீண்ட ஆலோசனையில் ஈடுபட்டார். சசிகலாவின் அக்கா மகனாகவும் அன்றைய அ.தி.மு.க-வின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த டி.டி.வி.தினகரன், “பன்னீர்செல்வம் நமக்கு விசுவாசமாக இருப்பார்” என்று கூற எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம் தமிகத்தின் முதல்வர்கள் பட்டியலில் பன்னீர்செல்வம் பெயரும் பதிந்தது. 

பயமும், பவ்யமும் கலந்தே முதல்வராகப் பதவியேற்றார் பன்னீர்செல்வம். ஆனாலும், முதல்வரின் அறையை அவர் பயன்படுத்த மறுத்துவிட்டார். அப்போது வருவாய்த் துறை அமைச்சராக அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையே முதல்வரின் அறையாகவும் செயல்பட்டது. ஜெயலலிதாவின் உத்தரவு இல்லாமல் எந்த உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டதில்லை. “தனக்குப் பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க வேண்டாம்” என்றுகூட அப்போது அவர் சொல்லிப்பார்த்தார். பன்னீர்செல்வம் ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராகத்தான் அப்போது இருந்தார். அதன் பிறகு, ஜெயலலிதாவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்ததும், தனது பொறுப்பை அவரிடமே வழங்கி, அவருடைய குட்புக்கிலும் இடம்பிடித்தார் பன்னீர்செல்வம்.

2014-ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, பெங்களூருவில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்புவந்து அவர் சிறைசெல்லும் நிலை ஏற்பட்டடதால், அவர் முதல்வர் பதவியை இழக்க வேண்டியதாயிற்று. அப்போது, தமிழகத்தின் நிதித்துறை அமைச்சராக பன்னீர்செல்வம் இருந்தார். இந்தநிலையில், ஆட்சியை அடுத்து யார் எடுத்துச் செலுத்துவது என்ற கேள்வி எழுந்தது. நீதிமன்ற வாயிலில் இருந்த ஜெயலிலதா சற்றும் யோசிக்காமல் பன்னீரை அழைத்து முதல்வராகப் பதவியேற்றுக்கொள்ள உத்தரவிட்டார். பெங்களூருவிலிருந்து சென்னை வந்த பன்னீர்செல்வமும், அமைச்சர் பெருமக்களும் அவசரஅவசரமாக கவர்னர் மாளிகையில் பதவியேற்றுக்கொண்டார்கள். முதல்வராகப் பன்னீர்செல்வம் பதவியேற்றாலும் முதல்வரின் அறையை அவர் பயன்படுத்த மறுத்துவிட்டு, நிதி அமைச்சரின் அலுவலகத்திலேயே முதல்வராக அவர் தொடர்ந்தார்.

எடப்பாடி பழனிசாமி

ஜெயலலிதா அறிமுகம் செய்த எந்தத் திட்டத்தையும் அவர் தொடங்கிவைக்க மறுத்துவிட்டார். நடப்பு விவகாரங்களுக்கு  ஒப்புதல் வழங்கியே மாதங்களைக் கடத்தினார். எதிர்க்கட்சிகள், முதல்வரின் செயல்பாடுகள் குறித்து விமர்சனம் செய்தாலும் அதைக் காதில்போட்டுக் கொள்ளாமல் ஜெயலலிதாவுக்கு விசுவாசமாகவே நடந்துகொண்டார். அப்போது தமிழகத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் கட்டப்பட்டுத்  திறப்பு விழாவை நோக்கி, முதல்வரின் உத்தரவுக்காகக் காத்திருந்தன. ஆனால், ‘அம்மா வரட்டும்’ என்று அனைத்து அம்மா உணவகங்களையும் மூடியே வைத்திருந்தனர். முதல்வரின் அறையும் மூடப்பட்டு இருந்தது.

வழக்கில் இருந்து விடுதலையாகி ஜெயலலிதா மீண்டும் முதல்வராகப் பதவியேற்றபோதுதான் அந்த முதல்வர் அலுவலகம் பயன்பாட்டுக்கு வந்தது. அதேபோல் 2016-ம் ஆண்டு ஜெயலலிதாவின் மரணத்தைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதல்வர் வாய்ப்பு பன்னீருக்கு வந்தது. இரண்டு முறை முதல்வராக  இருந்தபோதாவது, ஜெயலலிதா இருக்கிறார் என்ற பயத்தில் அவருடைய முதல்வர் அலுவலகத்தைப் பயன்படுத்தாமல் தவிர்த்தார். ஆனால், இந்த முறை முதல்வரின் அலுவலகத்தை பன்னீர்செல்வம் பயன்படுத்துவார் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில், நிதி அமைச்சரின் அலுவலகத்தின் வாயிலில் முதல்வர் என்ற பெயர் பலகை மட்டும் மாட்டப்பட்டு முதல்வர் அலுவலகம் பன்னீரின் நிதி அமைச்சர் அலுவலகத்திலேயே செயல்படத் தொடங்கியது.

அ.தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதிகளைக்கூடச் செயல்படுத்தாமல் தமிழகத்தின் பிரதான பிரச்னைகள் குறித்து மட்டுமே கவனம் செலுத்திவந்தார். “முதல்வர் அலுவலகத்தைப் பயன்படுத்துங்கள் என்று கார்டனில் இருந்து உத்தரவு வரும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால், உங்களின் முதல்வர் பதவியே நிரந்தரமானதல்ல என்று சொல்லாமல் சொல்லிவந்தனர் கார்டன் தரப்பினர். அதனால் முதல்வர் அலுவலகம் மீது அவர் ஆர்வம் காட்டாமல் இருந்துவந்தார். “முதல்வர் அலுவலகத்துக்கு மாறுவீர்களா’’ என்று கேட்டதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். ஆனால் சசிகலாவுக்கு எதிராக இவர் போர்க்கொடி தூக்கியதும் அவருடைய முதல்வர் பதவி பறிபோய் புதிய முதல்வராக தமிழகத்தின் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். பதவியேற்றதும், சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அதில் வெற்றிபெற்றதும் உற்சாகமானார் பழனிசாமி. 

பன்னீர்செல்வத்தை பீட் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு காய் நகர்த்தத் தொடங்கினார். அ.தி.மு.க-வின் இப்போதைய  அதிகார சக்தியாக இருக்கும் தினகரனைச் சந்தித்துப் பேசினார்.“நம்மீது மக்களிடம் இப்போது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதைச் சரி செய்யவேண்டும் என்றால், உடனடியாக நாம் கவர்ச்சியான திட்டங்களை அறிவித்தால் மட்டுமே முடியும். அம்மாவினால் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட அறிவிப்புகளை நான் பதவியேற்றதும் அறிவித்தால் நம் மீதான இமேஜ் மாறும். கொஞ்ச நாள்களில் மக்களின் மனநிலை மாறியதும் நீங்கள் ஆட்சியைப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொன்னதும், தினகரன் தரப்பு அதற்கு ஓ.கே சொல்லி... “உங்களுக்கு அனைத்து உரிமையும் உள்ளது. நீங்கள் எங்களுக்கு விசுவாசமாக இருந்தால் போதும்’’ என்று மட்டும் சொல்லப்பட்டது. 

உற்சாகமான பழனிசாமி, தனது செயலாளர்களை அழைத்து... “முதல்வரின் அறையை ரெடி பண்ணுங்கள்” என்று சொன்னதும் ஆச்சர்யபட்டனர் அதிகாரிகள். அவசரமாக முதல்வர் அறை ரெடியானதும், திங்கள்கிழமை அன்று நண்பகலில் முதல்வர் அறைக்குள் கால் வைத்தார். அங்கிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு அஞ்சலி செலுத்திவிட்டு, ஜெயலலிதா எந்த சேரில் அமர்ந்தாரோ, அதிலேயே அவர் அமர்ந்து முதல்வராகப் பதவியேற்றுக்கொண்டார். அவர், பதவியேற்றபோது தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கைதட்டி வாழ்த்துகள் தெரிவித்தார். முதல்வர் அறையின் வாயிலிலும், முதல்வர் பழனிசாமி என்று மாற்றப்பட்டது. ஆறு மாதங்களாக மூடிக்கிடந்த அறையில் அமரந்து ஜெயலலிதா அறிவித்த’ ஐந்து திட்டங்களின் செயல்பாட்டுக்கான ஆணை’யிலும் கையெழுத்திட்டுள்ளார். 

“ ‘பன்னீரால் முடியாமல் போனது பழனிசாமியால் முடியும்’ என்று பன்னீர் தரப்பை கடுப்பேற்றத்தான்... இப்படி ஓர் ஏற்பாடு நடைபெற்றது’’ என தலைமைச் செயலகத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பன்னீர் பயந்தார்,.. பழனிசாமி பாய்ந்துள்ளார். 

http://www.vikatan.com/news/tamilnadu/81485-battle-between-o-panneerselvam-and-edappadi-palanisamy.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
    • நாமெல்லாம் இதற்குள் வரமாட்டோம் ராசாக்கள்.........ஏதோ கடையில் கோப்பி குடிக்கும்போது ஒரு ஈரோ டிக்கட் வாங்கி சுரண்டிபோட்டு அங்கேயே வீசிப்போட்டு போறதுதான் அதிகம்......!  😂
    • ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?     கர்ப்பிணியான தனது மனைவி சைனு (அமலாபால்) மற்றும் தாயுடன் கேரளாவில் மகிழ்ச்சியுடன் எளிமமையாக வாழ்ந்து வருகிறார் நஜீப் (பிருத்விராஜ்). ஆற்றுமணல் அள்ளும் வேலை செய்து வாழ்க்கையை ஓட்டிவரும் அவர் குடும்ப கஷ்டத்துக்காக, வாழ்வதற்கு ஒரு நல்ல வீடு, மழை பெய்தால் ஒழுகாத சமையல்கட்டு, பிள்ளைகள் படிக்க நல்ல ஸ்கூல் என்ற சாதாரணமா கனவுகளை நிஜமாக்கும் முனைப்போடு வெளிநாடு செல்ல முடிவெடுக்கிறார். வீட்டை அடமானம் வைத்து ஏஜென்ட் மூலம் வளைகுடா நாட்டுக்குச் செல்கிறார். அங்கு என்ன நடந்தது? அங்கு அவருக்கு வேலை கிடைத்ததா? தகுந்த சம்பளம் கிடைத்ததா? அவருடைய வாழ்க்கை என்னவாக மாறுகிறது? அதிலிருந்து அவர் மீண்டாரா? இல்லையா? - இதுதான் ‘ஆடுஜீவிதம்' படத்தின் திரைக்கதை. மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலைத் தழுவி இயக்குநர் ப்ளஸ்ஸி இயக்கத்தில் வெளிவந்திருக்கும் திரைப்படம் 'ஆடுஜீவிதம்'. மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் இந்தத் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்பக் கஷ்டத்தின் காரணமாக வளைகுடா நாடு சென்று ஏமாற்றப்பட்ட மனிதனின் கதையை சமரசம் எதுவுமின்றி வெள்ளித்திரையில் கொண்டு வந்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம். குறிப்பாக, கேரளாவில் இருந்து அதிகமான எண்ணிக்கையில், வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் உடலுழைப்புத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இந்தப் படம் நிச்சயம் ஆறுதலாக இருக்கும். நாவலை படம் ஆக்குவதில் உள்ள சிரமங்கள் தென்பட்டாலும், இதுவரை நமக்கு அறிமுகம் இல்லாத நிலப்பரப்பை இந்த சர்வைவல் டிராமா கண்முன் கொண்டு வந்திருக்கிறது. “எப்படியாவது கஷ்டப்பட்டு நான் கேட்ட காசைக் கொடு, அங்க போய் மூணே மாசத்துல சம்பாதித்துவிடலாம்" - போலி ஏஜென்ட்டுகளின் இந்த ஒற்றைப் பொய்தான், உலகம் முழுவதும் நஜீப்களை மீண்டும் மீண்டும் உருவாக்கிக் கொண்டே இருக்கிறது என்பதை இப்படம் நிறுவியிருக்கிறது. போலி ஏஜென்ட் ஸ்ரீகுமார் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், பக்தி பரவசத்துடன் ஊர் திருவிழாவுக்கு வந்துவிடும் நபர் எனக் காட்டியிருப்பது இயக்குநர் ப்ளஸ்ஸி டச். படத்தில் அந்த கேரக்டருக்கு ஒரு காட்சிதான். வேறு காட்சிகளே கிடையாது. படத்தின் முதல் பாதியை ப்ளஸ்ஸி காட்சிப்படுத்தியிருக்கும் விதம் அழகு. பாலைவனத்தில் நடக்கும் காட்சிகளையும், கேரளத்தின் காட்சிகளையும் இணைத்து கதை சொல்லிய விதம், சுட்டெரிக்கும் வெயிலில் பெய்யும் பனிக்கட்டி மழைபோல் குளிரூட்டுகிறது. இரண்டாம் பாதியில் வெகு நேரமாக பாலைவனத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் அயற்சியைத் தருகிறது. "பெரியோனே ரஹ்மானே" பாடல் முழுமையாக இல்லாதிருப்பது குறையாகத் தோன்றுகிறது. உலகம் முழுவதும் வேலைக்காக புலம்பெயரும் எவரும் தங்களது வாழ்க்கையுடன் சுலபமாக ஒப்பிட்டுக் கொள்ள இந்தப் படம் உதவும். அந்தவகையில், இயக்குநரின் இந்த முயற்சி நிச்சயம் பாராட்டுக்குரியது. இயக்குநரின் இந்த மெனக்கெடல்களுக்கு பெரிய ஒத்துழைப்பு வழங்கியிருக்கிறது, இந்தப்படத்தின் தொழில்நுட்பக் குழு. ஒளிப்பதிவு, பின்னணி இசை, ஒப்பனை, ஆடைகள், ஒலிப்பதிவு என படத்தில் வரும் அத்தனை தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பும் பாராட்டுக்குரியது. படத்தின் தொடக்கம் முதலே கே.எஸ்.சுனிலின் கேமரா பார்வையாளர்களின் கண்களை அகல விரயச் செய்கிறது. பரந்து கிடக்கும் பாலைவனம், வெயில், கானல்நீர், ஒட்டகம், ஆடுகள், மலைக்குன்று என அனைத்து இடங்களிலும் கேமிரா ஜீவித்துக்கிடக்கிறது. இருளை விழுங்கிய நடுராத்திரி, கசராவில் (ஆட்டுப்பட்டி) ஆடுகளுக்கு வைக்கப்பட்டிருக்கும் தண்ணீரை தாகம் தணிக்க குடித்துவிட்டு கேமிரா இருக்கும் திசை நோக்கி பிருத்விராஜ் பார்க்கும் காட்சி, ஒட்டகம் ஒன்றின் கண்ணுக்குள் பிருத்விராஜ் தெரியும்படி காட்சிப்படுத்தியிருக்கும் காட்சியும் அருமை. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது மூன்றாவது மலையாளப் படம். படத்தின் டைட்டில் தொடங்கும்போது, ரஹ்மானின் புல்லாங்குழல் பாலைவன மணல்வெளியில் நம் மனங்களை இலகுவாக இழுத்துச் செல்கிறது. முதல் பாதியில் வரும் பாடல் அட்டகாசம். படம் முழுக்க அவ்வப்போது சின்ன சின்ன வரும் பாடல்கள் அதிகாலை நேரத்தில் தூரத்தில் கேட்கும் பங்கோசைக்கு இணையாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் எதுவும் இல்லாதபோதும், தப்பித்துச் செல்ல முயற்சிக்கும் காட்சிகளில் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசைதான் வலு சேர்த்திருக்கிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் கட்ஸ் முதல் பாதியை கணகச்சிதமாக கத்தரித்திருக்கிறது. பிருத்விராஜ் கேரியரில் இந்தப் படம் மிகமுக்கிய திரைப்படமாக இருக்கும். படத்தில் அவரது கதாப்பாத்திரத்துக்கு நிறைய சேஞ்ச் ஓவர் வருகிறது. அப்படி வரும் எல்லா இடங்களிலும் பிருத்விராஜ் ஸ்கோர் செய்திருக்கிறார். குடிக்கவும், கழுவவும் தண்ணீர் இல்லாத கணங்களில் அவரது நடிப்பு கலங்கடித்து விடுகிறது. உயிர்வாழ வேண்டும் என்றால், கண்ணுக்கு எட்டிய தூரம் வரை விரிந்துக் கிடக்கும் பாலைவனத்தை நடந்து கடக்க வேண்டிய காட்சிகளில் பிருத்விராஜின் உடல்மொழி வியக்க வைக்கிறது. பிருத்விராஜ் உடன் வளைகுடா நாடு செல்லும் ஹக்கிம் (கே.ஆர்.கோகுல்) மற்றும் இப்ராஹிம் காத்ரியாக (ஜிம்மி ஜீன் லூயிஸ்) வருபவரும் தங்களது கதாப்பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். ஒட்டகமும், மயிலும் தனது அழகை நீண்ட கழுத்தில் ஒளித்து வைத்துக்கொள்ளும். அமலாபாலும் அப்படித்தான், தனது அழகு முழுவதையும் நடிப்பில் ஒளித்து வைத்திருக்கிறார். கேரளத்தின் பொலிவும், அழகும் மயக்கும். இந்தப் படத்தில் பிருத்விராஜ் அமலாபால் வரும் காட்சிகளும் அப்படித்தான், பார்வையாளர்களின் மனதில் பாசிப்போல படர்கிறது. பாலைவன சுடுமணலின் தகிப்பைக் குறைத்து ஆழமான ஆற்றுக்குள் மூழ்கி அள்ளி எடுத்துவரப்பட்ட மணலின் ஈரத்தையும், குளிர்ச்சியைக் கொண்டு வருகிறார் அமலாபால். எப்போதெல்லாம் தன்னுடைய ஞாபகம் வருகிறதோ, அப்போதெல்லாம் நிலாவைப் பார்த்துக் கொள்ளும் சொல்லும் காட்சி கவிதையாக தைக்கப்பட்டிருக்கிறது. விமான நிலையங்களின் பார்வையாளர் காத்திருப்பு வெளிகள் எப்போதும் கண்ணீரைச் சுமந்து நிற்பவை. வெளிநாடுகளுக்கு பிரிந்து செல்லும் உறவுகளை வழியனுப்ப வந்தவர்களின் கண்ணீர் அப்பகுதி முழுக்க நிரம்பியிருக்கும் காற்று முழுவதிலும் கரித்துக் கிடக்கும். அம்மாவும், அப்பாவும், கணவனும், மனைவியும், குழந்தைகளும் வெளிநாடு செல்லும் நபருக்கு தங்களது அன்பு முழுவதையும் ஒரு பெட்டிக்குள் அடைத்துக் கொடுத்துவிட்டு கனத்த மவுனத்துடன் வீடு திரும்பும் காட்சிகளைக் கடந்திருப்போம். அந்த வகையில், சென்ட் பாட்டிலும், கலர் டிவியும், கை நிறைய பணமும் இல்லாமல், வெளிநாட்டிலிருந்து உயிர் பிழைத்தால் போதும் என்று ஆயுள் உடன் திரும்பி வந்த ஒரு எளிய மனிதனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வலிகளின்தான் இந்த 'ஆடுஜீவிதம்'! ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன? | aadujeevitham movie review - hindutamil.in
    • Simrith   / 2024 மார்ச் 28 , மு.ப. 10:49 - 0      - 67 அமெரிக்க துரித உணவு நிறுவனமான மக்டொனால்டின் உள்ளூர் உரிமை இனி தமது குடையின் கீழ் இல்லை என்று அபான்ஸ் தனியார் நிறுவனம் இன்று தெரிவித்துள்ளது. இன்று கொழும்பு பங்குச் சந்தைக்கு (CSE) அறிக்கையளித்த அபான்ஸ் பிஎல்சி, மெக்டொனால்டின் உள்ளூர் உரிமையானது, 2007 ஆம் ஆண்டின் கம்பனிகள் சட்டம் இல.7 இன் கீழ் இணைக்கப்பட்ட சர்வதேச உணவக அமைப்புகள் (பிரைவேட்) லிமிடெட் அடிப்பமையிலானது என்று சுட்டிக்காட்டியுள்ளது. அந்த நிறுவனத்தின் 98.73% பங்குகளை வைத்திருக்கும் ருசி பெஸ்டோன்ஜி, அபான்ஸ் பிஎல்சியின் நிர்வாக இயக்குனராகவும் உள்ளவர். “இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட், அபான்ஸ் பிஎல்சி அல்லது அதன் தாய் நிறுவனமான அபான்ஸ் ரீடெய்ல் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகியவற்றின் துணை நிறுவனமோ அல்லது இணை நிறுவனமோ அல்ல. கூறப்பட்ட காரணத்தினால், இன்டர்நேஷனல் ரெஸ்டாரன்ட் சிஸ்டம்ஸ் (பிரைவேட்) லிமிடெட்டின் நிதிகள் அபான்ஸ் பிஎல்சியின் நிதிகளுடன் ஒருங்கிணைக்கப்படவில்லை,” என்று அபான்ஸ் தெளிவுபடுத்தியது. கொழும்பு பங்குச் சந்தையின் பட்டியலிடுதல் விதிகளின் 8வது பிரிவின் அடிப்படையில் மற்றும் நல்லாட்சிக்கான நோக்கங்களுக்காக இந்தத் தகவலை வழங்குவதாக Abans PLC தெரிவித்துள்ளது. Tamilmirror Online || McDonald’s எமது குடையின் கீழ் இல்லை: அபான்ஸ்
    • கொடுமையிலும் கொடுமை பாண்டவர் அணியில் தருமருக்கு (விஜயகாந்துக்கு) தம்பியாக (அருச்சுனனாக) அவதாரம் எடுத்தது 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.