Jump to content

“எங்கம்மா என்னை அப்படி ஒண்ணும் வளர்த்திடல” : சீறும் செம்மலை


Recommended Posts

“எங்கம்மா என்னை அப்படி ஒண்ணும் வளர்த்திடல” : சீறும் செம்மலை

பன்னீர்செலவம்

சினிமாவை விஞ்சி பல ட்விஸ்ட்களுடன் தமிழக அரசியலில், கடந்த இரு வாரங்களாக நடந்த 'சசிகலா வெர்சஸ் ஓ.பி.எஸ்' என்ற அரசியல் பரபரப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றியின் மூலம் கொஞ்சம் அமைதிக்கு வந்துள்ளது. 

11 எம்.எல்.ஏக்கள், 12 எம்.பிக்களுடன் இன்னும் பல எம்.எல்.ஏக்கள் வருவார்கள் என புன்னகைத்தபடியே எதிர் முகாமுக்கு கிலி கொடுத்தவந்த பன்னீர்செல்வத்திற்கு பக்கபலமாய் நின்றவர்களில் ஒருவர் முன்னாள் அமைச்சரும், இந்நாள் எம்.எல்.ஏ வுமான செம்மலை. கூவத்துாரில் இருந்து 'தப்பிவந்த' எம்.எல்.ஏ-க்களில் ஒருவரான அவருடன் நடந்து முடிந்த பரபரப்புகள் குறித்து பேசினோம். 

“எதிர்க்கட்சியினர் பன்னீர் செல்வத்தைக் கருவியாக வைத்து இயக்குகிறார்கள். ஜெயலலிதாவிடம் அரசியல் பயின்ற சசிகலா அ.தி.மு.க-வைக் கட்டுக்கோப்பாக வழி நடத்துவார். அ.தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒன்றாக இருக்கிறோம்” என பிப்ரவரி 8-ந்தேதி கூறிவிட்டு அடுத்த சில தினங்களில் ஓ.பி.எஸ் அணிக்கு தாவியது ஏன்? என்றோம். 

கழகத்தில் மூத்த உறுப்பினர் என்ற முறையில் கட்சியின் கட்டுக்கோப்பு உடைந்துவிடக்கூடாது என்பதற்காக சசிகலா தலைமையை ஏற்க முன்வந்தேன். ஆனால் ஆரம்பத்திலேயே சில தவறுகள் நடக்க ஆரம்பித்ததை பார்த்து தவறாக முடிவெடுத்ததை உணர்ந்து வெளியேறினேன். எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா போன்று தலைமைப் பண்பு இல்லாதவர் என்பதும், சொந்தக்கட்சியினரையே சிறைவைக்கும் அணுகுமுறையும் தவறாகப்பட்டது. தவிர எம்.எல்.ஏ என்ற முறையில் என் தொகுதிமக்களுடனும் கலந்துபேசி ஓ.பி.எஸ் அணிக்கு வந்தேன்.  

செம்மலைசட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றிபெற்றிருக்கிறதே...

ஜனநாயக மரபுக்கு மாறாக சட்டமன்ற உறுப்பினர்கள் அடைத்துவைக்கப்பட்டு தங்களுக்கு வாக்களிக்கும்படி மிரட்டப்பட்டனர். நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கவர்னர் 15 நாட்கள் கொடுத்திருந்தும் மறுநாளே அதுவும் அரசு விடுமுறை தினத்தில் அவசர கதியில் வாக்கெடுப்பை நடத்தி வெற்றிபெற்றதாக அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் நாங்கள்தான் வெற்றிபெற்றிருப்போம். சூழ்நிலைக்கைதிகளாய்த்தான் வந்து வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர் எம்.எல்.ஏக்கள். 

ஓ.பி.எஸ் ஆதரவு நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பீர்களா...

அ.தி.மு.கவை ஒரு குடும்பத்தின் பிடியிலிருந்து மீட்க ஓ.பி.எஸ் மேற்கொண்டுள்ள இந்த தர்ம யுத்தத்தில் இப்போதுள்ள 11 சட்டமன்ற உறுப்பினர்கள், 12 எம்.பிக்கள் அத்தனைபேரும் உறுதியாக களத்தில் நிற்போம். தொடர்ந்து மற்ற எம்.எல்.ஏக்களும் கட்சியின் மற்ற நிர்வாகிகளும் மனமாற்றம் அடைந்து ஆதரவு தருவார்கள். பிளவோ, பிற அணிகளோ இன்றி அ.தி.மு.க, ஓ.பி.எஸ்ஸின் தலைமையில் இயங்கும். விரைவில் அம்மாவின் ஆட்சி தமிழகத்தில் அமையும் என்பதில் சந்தேகமில்லை.
 
சசிகலாவுக்கு எதிராக ஓ.பி.எஸ் போர்க்கொடி உயர்த்தியதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாக சொல்லப்படுகிறதே...

,இதில் எள்ளளவும் உண்மையில்லை. கழகத்தை மீட்கும் இந்த போராட்டத்தை கொச்சைப்படுத்தும் கேவலமான அரசியல் இது. உண்மையில் எங்களின் பின்னணியில் பாஜக இருந்திருந்தால் முடிவு இப்படியா இருந்திருக்கும். எங்களின் நிலை இந்நேரம் வேறுமாதிரியாக இருந்திருக்குமே. அ.தி.மு.க என்ற மக்கள் பலம் கொண்ட கட்சியை மீட்க தி.மு.க, பா.ஜ.க என யாரிடமும் போய் கையேந்தி நிற்க வேண்டிய அவசியமில்லை. எதிரணி தங்களின் தவறுகளை மறைக்க இப்படியெல்லாம் பேசி விஷயத்தை அரசியலாக்கப்பார்க்கிறார்கள். அப்படி எந்தக் காலத்திலும் யாரின் பிடியிலும் நாங்கள் சிக்கமாட்டோம். ஜெயலலிதா, எம்.ஜி.ஆர் எங்களை அப்படி வளர்க்கவுமில்லை. எங்களுக்கான அரசியலை எப்படி முன்னெடுக்கவேண்டும் என்பதை அவர்கள் கற்றுத்தந்திருக்கிறார்கள்.  

சசிகலா

 

உங்கள் அணியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன?...

ஓ.பி.எஸ் தலைமையில் அம்மாவின் ஆட்சி அமையும் வரை தொய்வின்றி தொடரும். தமிழகம் முழுவதும் எங்களது தலைவர்கள் சுற்றுப்பயணம் செய்து ஆதரவு திரட்டுவார்கள். ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டிலிருந்து கழகத்தை மீட்டு எதிர்காலத்தில் எந்த பிளவுகளும் இல்லா அ.தி.மு.கவை வென்றெடுப்போம்.

http://www.vikatan.com/news/tamilnadu/81446-this-is-why-i-switched-loyalty--semmalai.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.