Jump to content

திரை விமர்சனம்: பகடி ஆட்டம்


Recommended Posts

திரை விமர்சனம்: பகடி ஆட்டம்

 

 
 
pakadi_3135931f.jpg
 
 
 

பாலியல் வன்முறைக்குப் பல முகங்கள் உண்டு. அதில் ஒன்றைத் திரைவிலக்கிக் காட்டுகிறது இந்தப் ‘பகடி ஆட்டம்’.

செல்வச் செழிப்பு மிக்க குடும் பத்தின் ஒரே வாரிசு சூர்யா (சுரேந்தர்). தன் வசதியையும் வசீகரத் தையும் தூண்டிலாகப் பயன்படுத் திப் பெண்களுக்கு வலை வீசுவது அவன் பொழுதுபோக்கு. அப்படி அவனிடம் சிக்கிய ஒரு பெண் கவுசல்யா (மோனிகா). நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த கவுசல்யா, முதல் தலைமுறைப் பட்டதாரியாக உருவாக வேண்டியவள். அவள் சூர்யாவின் வலையில் சிக்கிச் சின்னாபின்னம் ஆக, துடித்துப் போகிறது குடும்பம். அடுத்த பெண்ணுக்கு வலைவிரிக்கத் தயா ராகும் சூர்யாவோ திடீரென்று காணாமல் போகிறான். அவனைக் கண்டுபிடிக்க துணை காவல் ஆணையர் ரகுமான் தலைமையில் ஒரு அணி களமிறங்குகிறது. அதன் பிறகு என்ன ஆயிற்று என்பதுதான் ‘பகடி ஆட்டம்’.

பாத்திரங்களை அவரவர் நிலைகளில் அறிமுகப்படுத்தியபடி இயல்பாகத் தொடங்குகிறது படம். ஆனால், சூர்யா கவுசல்யா காதல் காட்சிகளில் எந்தப் புதுமை யும் இல்லாமல், எளிதில் ஊகிக்கக் கூடிய காட்சிகளாக நத்தைபோல நகர்வதால் முதல் பாதி திரைக்கதை பெரும் ஆயாசத்தைத் தருகிறது. முதல் பாதியில் சூர்யா கடத்தப்பட்டு சிக்கிக்கொள்ளும் காட்சிகள் தவிர எல்லாக் காட்சிகளுமே அரதப் பழசு ரகம்.

காணாமல் போன இளை ஞனைக் கண்டுபிடிக்கும் புலன் விசாரணையாக மாறும் இரண் டாவது பாதி, நிமிர்ந்து உட்கார வைத்துவிடுகிறது. நம்பகத்தன்மை மிக்க காட்சிகள் மூலமாக புலன்விசாரணையை நகர்த்துகிறார் இயக்குநர். கைபேசிகளையும், சமூக வலைதளங்களையும் இன்றைய இளைஞர்கள், இளம்பெண்கள் எப்படிப் பயன்படுத்துகிறார்கள்? அவர்களது உலகில் எதற்கு அதிக முக்கியத்துவம் இருக்கிறது? சமூகப் பொறுப்பு மிக்க ஒரு காவல் அதிகாரி சட்டத்தின் எல்லையைத் தாண்டி நீதி வழங்க முடியுமா எனப் பல்வேறு அம்சங்கள் கச்சிதமாகவும் நேர்த்தியாகவும் கையாளப்பட்டிருக்கின்றன.

கவுசல்யாவாக நடித்திருக்கும் மோனிகா, அவரது அக்காவாக நடித்திருக்கும் கவுரி நந்தா ஆகி யோரது நடிப்பு, பாத்திரங்களுக்கு நம்பகத்தன்மை சேர்க்கின்றன. எதிர்மறைக் கதாபாத்திரம் ஏற்றிருக் கும் சுரேந்தர், பாத்திரத்தை நன்கு உள்வாங்கி நடித்திருக்கிறார். மிடுக்கான தோற்றம், பொருத்தமான உடல்மொழியால் ரகுமான் இயல்பாகக் கவர்ந்துவிடுகிறார். நிழல்கள் ரவி, ராஜ ஆகியோரது அனுபவமிக்க நடிப்பு, அவர்களது பாத்திரங்களுக்கு வலு சேர்க்கிறது.

கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை கட்டியம் கூறுவதுபோல அடுத்து வரவிருக்கும் காட்சியைப் பற்றி அறிவித்துவிடுகிறது. இளைய ராஜாவின் இசையில் உருவான இரண்டு அருமையான பாடல்களை (இளமையெனும் பூங்காற்று, என்ன என்ன கனவு கண்டாயோ) பயன்படுத்திக்கொண்ட விதம் இப்படத்துக்குத் தனி அந்தஸ்தை தந்துவிடுகிறது.

இன்றைய இளைஞர்களின் போக்கு, பெண்களுக்கான ஆபத்து ஆகியவை குறித்த தன் பார்வையைப் புலன்விசாரணை கலந்த குடும்பக் கதையாக முன்வைத்துள்ளார் இயக்குநர் ராம் கே.சந்திரன். முதல் பாதியின் இழுவையைத் தவிர்த்திருந்தால் இந்த ஆட்டத்தை முழுமையாக ரசித்திருக்கலாம்!

http://tamil.thehindu.com/cinema/cinema-others/திரை-விமர்சனம்-பகடி-ஆட்டம்/article9553250.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யார் து…துரைமுருகன் சொல்வதையா…நோ சான்ஸ்🤣. ஜூன் 4 தெரியும்தானே ஏன் அவசரம். எனது ஒரே கவலை பிஜேபி எவ்வளவு சீட் எடுக்கப்போகிறது என்பது மட்டுமே. பூஜ்ஜியம் என்றால் சந்தோசம்.  பூஜ்ஜியத்துக்கு மேல் கூடும் ஒவ்வொரு சீட்டுக்கும் ஏற்ப கவலை கூடும். தேர்தல் கட்டம் கட்டமாக தானே நடக்குது? இன்று முழு உபிக்கும் நடக்கவில்லை. நடந்த இடங்களில் 67% மாம். ஆனால் மேற்கு வங்கத்தில் நடந்த இடங்களில் 77 சதவீதமாம். இன்று நடந்த மொத்த தொகுதிகளில் 62% பதிவு. ஆனால் தமிழ் நாட்டு தொகுதிகளில் 72.09% நான் யாழ்கள திமுக ஆதரவாளன் இல்லை. ஆனால் சீமான், பிஜேபியை எதிர்ப்பவன். பழனிச்சாமி எதிர்கட்சி தலைவர், குறைந்ததது 29% வாக்கு வங்கி உள்ள கட்சியின் தலைவர். அவர் எப்படி வாக்கை பிரிப்பவர் ஆவார்? விட்டால் திமுக வும் வாக்கை பிரிக்கும் கட்சி என்பீர்கள் போலுள்ளது. 10% கீழே வாக்கு வங்கி, தனியே ஒரு தொகுதியிலும் வெல்ல வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிந்தும், 39 தொகுதியிலும் நிற்பவர்கள்தான் வாக்கை பிரிப்போர்.
    • ர‌ம் மீண்டும் ஆட்சியை பிடிப்பார் பைட‌ன் வென்றால் ஆள் இல்லாத‌ இட‌த்துக்கு எல்லாம் கை காட்டுவார் ஹா ஹா...............................................
    • தெரியும் ஆனால் இந்த‌ தேர்த‌லில் ப‌ண‌ம் பெரிசா புகுந்து விளையாட‌ வில்லை எல்லாம் சில்ல‌றை காசு தான் இந்த‌ முறை ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் 2000ரூபாய் கொடுத்த‌தாக‌ த‌க‌வ‌ல் வ‌ந்த‌து😏.................................
    • சென்னையின் தோல்விக்கு கார‌ண‌ம் வேக‌ ப‌ந்து வீசாள‌ர்க‌ள் சுழ‌ல் ப‌ந்துக்கு சாத‌க‌மான‌ பிச்சில் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளை தெரிவு செய்வ‌து முட்டாள் த‌ன‌ம்...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.