Jump to content

படை முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்! – ஐ.நா.வுக்கு அறிக்கை


Recommended Posts

படை முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்! – ஐ.நா.வுக்கு அறிக்கை

 
   icon_comments_74.png

vvt_picketing_3_020603

 

இலங்கை படை முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிதரும் ஆவணமொன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கையளித்துள்ளது.

இலங்கை ராணுவத்தால் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் மூவரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணம் நேற்று (திங்கட்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது.

ராணுவத்தாலும் பொலிஸாராலும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 55 பெண்களின் வாக்குமூலங்களை பதிவுசெய்துள்ளதாக தெரிவித்துள்ள சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா, அவர்களுள் 48 பேர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்திலும் 7 பேர் புதிய அரசாங்கத்தின் காலத்திலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வவுனியா, கொழும்பு உள்ளிட்ட நாட்டின் 4 பகுதிகளில் இவ்வாறான பாலியல் முகாம்கள் உள்ளதென குறிப்பிடப்பட்டுள்ளதோடு, பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்ட 6 அதிகாரிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

குறித்த அறிக்கையை எதிர்வரும் 22ஆம் திகதி ஜெனீவாவில் இலங்கையிடம் கையளிக்கவுள்ளதாக தெரிவித்துள்ள யஸ்மின் சூக்கா, இவ்விடயங்களில் இலங்கை அரசாங்கம் எவ்வகையான நீதி விசாரணைகளை முன்னெடுக்கப் போகின்றதென பொறுத்திருந்து பார்க்கவேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

http://athavannews.com/?p=421694

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தமிழ்பெண்களை சிங்கள காமக் காட்டுமிராண்டி இராணுவத்தில் இருவருக்கு கட்டி வைச்சு.. போட்டோ எடுத்துப் போட்டு.. இதையும் சமாளித்து விடுவார்கள்.

சம் சும் கும்பல் இருக்கு. அது உதவும்.

முன்னாள் போராளிகளின் மர்மச் சாவுகள்.. தமிழ் பெண்கள் மீது தொடரும் பாலியல் தொந்தரவுகள் குறித்து எம்மவர்களே பேசுவதில்லை.

மாறாக மிகப் பெரிய குற்றவாளிகளையும் காட்டுமிராண்டிகளையும் காடைகளையும் கொண்ட சொறீலங்கா இராணுவத்தை நீதியின் முன் நிறுத்தி தண்டிப்பதை விடுத்து.. அதுக்கு வெள்ளையடித்து.. இன்னும் இன்னும் இராணுவக் குற்றவாளிகளை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

ரகசிய இன அழிப்புக்கு துணை போகிறார்கள். 

Link to comment
Share on other sites

தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக இராணுவத்தினர் வைத்திருந்தனர் : புகைப்பட ஆதாரங்களுடன் ஐ.நா.விடம் சிக்கியது

Published on 2017-02-21 15:25:12

 

பெண்களை கைது செய்து, தடுத்து வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்படும் ஆறு இராணுவ அதிகாரிகளின் விபரங்களை சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கையளித்துள்ளது.sri-lankan-army-abuse.jpg

விபரங்களுடன் கூடிய ஆவணங்களுடன் இரகசியமான இணைப்பில் 6 புகைப்படங்களை உள்ளடக்கப்பட்டுள்ளதாக தென் ஆபிரிக்காவின் ஜொகனனஸ்பேர்க் நகரை தலைமையகமாக கொண்டு இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு அறிவித்துள்ளது.

 

ஜெனிவாவில் எதிர்வரும் 22 ஆம் திகதி இலங்கை பிரதிநிதிகளை சந்திக்கும் பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம் இந்த தகவல்களை வழங்கியுள்ள மேற்படி அமைப்பு, குற்றவாளிகளாக இராணுவ அதிகாரிகளை பணியில் இருந்து நீக்குமாறு இலங்கை அரசாங்கததை கோருமாறு கேட்டுள்ளது.

 

இந்த விபரங்களை இலங்கை அரசாங்கத்திடம் கையளித்து நம்பிக்கையான விசாரணையை நடத்தும் வரை அவர்கள் அனைவரையும் பணியில் இருந்து இடைநீக்கம் செய்யுமாறு பெண்களுக்கு எதிரான வேறுபாடுகள் தொடர்பான ஐ.நா குழு கோரும் என தாம் எதிர்பார்ப்பதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பணிப்பாளர் யஷ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

 

அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

 

அரசாங்கம் குற்றவாளிகளின் பெயர், விலாசங்களை எங்களிடம் தொடர்ந்தும் கோரி வந்தது. நாங்கள் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களின் விபரங்களை ஐ.நா குழு ஊடாக வழங்கியுள்ளோம். நீதியை நிலைநாட்டும் கடும் தேவை அரசாங்கத்திற்கு இருக்கின்றதா என்பதை பார்ப்போம்.

 

அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை நாங்கள் எமது அறிக்கையில் கூறியுள்ளோம். ஐ.நா குழு அதன் முன்னேற்றங்களை கண்காணிக்க முடியும் என சூகா கூறியுள்ளார்.

 

குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இராணுவ அதிகாரிகளில் மேஜர் ஒருவரும் லெப்டினட் ஒருவரும் அடங்குகிறார்.

 

பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை எதிர்நோக்கும் இலங்கையின் மூன்று சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள், அவர்களிடம் சிக்கிய பெண்களின் சத்தியக் கடிதங்களின் பெயர்கள் ஐ.நா குழுவிடம் வழங்கப்பட்டுள்ள விபரமான அறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

 

இந்த அதிகாரிகளில் ஒருவர் ஐ.நா அமைதிக்காக்கும் படையில் சேவையாற்றியுள்ளார். நான்காவது அதிகாரி சித்திரவதை கொடுப்பதில் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார். 5ஆவது அதிகாரி இந்த குற்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

இராணுவத்தினர் பெண்களை பாலியல் அடிமைகளாக பயன்படுத்த அவர்களை நீண்டகாலம் தடுத்து வைத்தாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு முகாம்கள் தொடர்பான ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளது.

 

முகாம்கள் இயங்கியதாக கூறப்படும் நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு கூறியுள்ளது.

 

வவுனியாவுக்கு அருகில் ஒரு முகாம், புத்தளத்திற்கு அருகில் ஒரு முகாம். கொழும்பில் ஒரு முகாம் , கொழும்புக்கு வெளியில் வடக்கு,கிழக்கு அல்லாத ஒரு பிரதேசத்தில் ஒரு முகாம் என இந்த முகாம்கள் இயங்கி வந்துள்ளன எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

 

விசாரணைகளை நடத்தாமை, பொறுப்புக் கூறவேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் அமைப்பு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம், ஐ.நா குழுவின் முன் கடுமையாக சாடியுள்ளது.

 

சித்திரவதை மற்றும் பயங்கரமான பாலியல் தாக்குதல்களை வெளியிட்டுள்ள 55 பெண்கள் தொடர்பான முழுமையான விபரங்களை அமைப்பு தனது புதிய அறிக்கையில் உள்ளடக்கியுள்ளது.

 

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் 48 பெண்களும் தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனின் ஆட்சியின் கீழ் 7 பெண்களும் பாலியல் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் என அதில் கூறப்பட்டுள்ளது.

 

எது எப்படி இருந்த போதிலும் இராணுவம் திட்டமிட்டு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது என்பதை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு சிலர் அப்படியான குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/16906

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.