Jump to content

விமலுக்கு ‘புலி’ பயம்


Recommended Posts

விமலுக்கு ‘புலி’ பயம்
 

article_1487651257-wimal-%281%29.jpgபேரின்பராஜா திபான்

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கு (தமிழீழ விடுதலைப் புலிகள்) எதிரான கருத்துகளை கூறியவர். அவ்வமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் சிறையில் உள்ளனர்.

அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என, விமலின் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி கோரிநின்றார். 

அதனை கவனத்தில் எடுத்த, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால், சந்தேகநபருக்கு அச்சுறுத்தல் காணப்படுவது மற்றும் அவரை, சிறைக் கூண்டுக்குள் அடைக்கும் நேரம் தொடர்பில் கவனத்தில் எடுக்குமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு பணித்தார். 

91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு, நேற்று (20) விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. 

இந்த வழக்கின் முதலாவது சந்தேகநபரான விமல் வீரவன்ச சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, தமது சேவை பெறுனர் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக்கூடு மாலை 5.30க்கு மூடப்பட்டு, காலை 6 மணிக்கே திறக்கப்படும். இதனால் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கு அவர் சிரமங்களை எதிர்கொள்வதாகக் குறிப்பிட்டார். 

அத்துடன், நீண்ட நாட்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதால் அவருடைய அடிப்படை உரிமை மீறப்படுவதாகக் கூறிய அவர், தனது சேவை பெறுனர், நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால், அவருக்கு பத்திரிகைகளை விநியோகிக்க வேண்டும் எனவும் அதைக் கொண்டே, நாடாளுமன்றத்தில், அவரால் உரையாற்ற முடியும் எனவும் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். 

அதுமட்டுமின்றி, தனது தரப்பைச் சேர்ந்தவருக்கு, உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என்றும் மன்றின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.  

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் சிறைச்சாலைகள் திணைக்களத்துக்கு, அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரமே, பத்திரிகைகள் வழங்கப்படுவதாகவும் தேவையெனின் சிறைச்சாலை அதிகாரிக்கு கடிதம் மூலம் தெரிவித்து பெற்றுக்கொள்ளலாம் என நீதவான் அறிவித்தார். 

இதேவேளை, சந்தேகநபர் மீதான உயிர் அச்சுறுத்தல் மற்றும் அவரை சிறைக் கூண்டுக்குள் அடைக்கும் நேரம் தொடர்பில் கவனத்தில் எடுக்குமாறு, சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் கட்டளையிட்டார். 

இந்நிலையில், விமல் வீரவன்சவின் விளக்கமறியல் எதிர்வரும் மார்ச் மாதம் 6ஆம் திகதி வரை, நேற்று (20) நீடித்தது. 

அத்துடன், 2ஆவது சந்தேகநபரான, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் சமந்த லொக்கு ஹென்னதிகேயை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலிலும் செல்ல அனுமதியளித்த நீதவான், அவருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்ததுடன், கடவுச் சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார். 

இரண்டாவது சந்தேகநபரின் தாய்க்கு 76 வயதாகதாகவும் மூத்த பிள்ளை, இவ்வருடம் கல்விப் பொதுத் தராரத சாதாரண தரப் பரீட்சைக்குக்குத் தோற்றவுள்ளதாகவும் 12 வயதான இரண்டாவது பிள்ளை மனரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, சட்டத்தரணி ஷவேந்திர பெர்ணான்டோ, பிணை கோரியிருந்தார். அதன் அடிப்படையிலேயே அவருக்கு பிணை வழங்குவதாக, நீதவான் அறிவித்தார். 

தேசிய வீடமைப்பு, நிர்மாணம் மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சராக இருந்த போது, 2011 - 2014ஆம் ஆண்டு காலப்பகுதியில், தனது அமைச்சுக்குக் கீழிருந்த, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்துக்கு வாடகைக்கு அமர்த்தப்பட்ட 40 வாகனங்களை தமது அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குப் பயன்படுத்தி, 91 மில்லியன் ரூபாய் அரச நிதியை மோசடி செய்ததாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.  

- See more at: http://www.tamilmirror.lk/191902/வ-மல-க-க-ப-ல-பயம-#sthash.gB028Od0.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.