Jump to content

அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும்: ஸ்டாலின்


Recommended Posts

அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும்: ஸ்டாலின்

 

 
ஸ்டாலின் | கோப்புப் படம்: சிவ சரவணன்
ஸ்டாலின் | கோப்புப் படம்: சிவ சரவணன்
 
 

அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார்.

மேலும், ஜனநாயக விதிமீறலைக் கண்டித்து வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள திமுகவின் போராட்டத்தில் பங்கேற்க அரசியல் கட்சிகளுக்கும் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியதாவது:

''ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறைகாக அறிக்கை தரவில்லை. ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் உள்ளது. ஜெ.மறைந்துவிட்டார் என்ற செய்தி வந்த பிறகு, ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார் என்று மருத்துவமனை அறிக்கை அனுப்பியது.

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை கழகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று, ஓபிஎஸ் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, ஜெ.மறைவுச் செய்தியை வெளியிட்டனர். ஆளுநர் மாளிகைக்கு பேருந்தில் சென்ற அதிமுக அமைச்சரவை அன்றைய நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டது.

அதற்குப் பிறகு ஓபிஎஸ் தன் பதவியை ராஜினாமா செய்தார். திடீரென்று ஒரு நாள் பொறுப்பு முதல்வர் ஓபிஎஸ் மெரினாவில் ஜெ.நினைவிடத்தில் தியானம் செய்த பிறகு பேசினார். அப்போது வலுக்கட்டாயமாக என்னை ராஜினாமா செய்ய வைத்தார்கள் என்ற ஓபிஎஸ், ''ஜெ.மரணத்தில் சந்தேகம் உள்ளது. அதை நிவர்த்தி செய்ய வேண்டிய பொறுப்பு இருப்பதால் விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்'' என்றார். மேலும், சசிகலா குடும்பம் குறித்து 10% மட்டும்தான் கூறினேன். 90% இன்னும் உள்ளது என்றார்.

அதற்குப் பிறகு கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அடைத்துவைக்கப்பட்டனர். இந்த நிலையில் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரிடம் நான் மனு அளித்தேன். ஆளுநர் எடப்பாடி பழனிசாமி 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் அவகாசம் கொடுத்தார். ஆனால், 48 மணிநேரத்துக்குள் சட்டப்பேரவை கூடுவதாக செயலாளர் ஜமாலுதீன் அறிவித்தார்.

இந்த நிலையில் கூவத்தூரில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பிணைக் கைதிகளாக அடைத்து வைக்கப்பட்டனர். 18-ம் தேதி சட்டப்பேரவை கூடியது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் செம்மலை, மாஃபா பாண்டியராஜன் ஆகியோர் ரகசிய வாக்கெடுப்பு கோரினர்.

செம்மலை, ''நான் கூவத்தூரில் இருந்த அறை சாவி இது என எடுத்துக்காட்டினார். இங்கே அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அச்சத்தோடு உள்ளதால் வேறு ஒருநாளில் வாக்கெடுப்பு நடத்தலாம் அல்லது ரகசிய வாக்கெடுப்பு நடத்தலாம். எம்.எல்.ஏக்களின் பாதுகாப்பு முக்கியம்'' என்றார்.

நானும் எம்.எல்.ஏக்களுக்கு சுதந்திரம் தேவை. எனவே அவர்கள் தொகுதிக்கு சென்று மக்கள் கருத்தைக் கேட்டு வாக்கெடுப்பு குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பதால் ஒரு வாரத்துக்கு வாக்கெடுப்பை தள்ளி வைக்க வேண்டும் என்றேன்.

அவை ஒத்திவைக்கப்பட்ட பிறகு, சபாநாயகர் அழைத்து என் சட்டையை திமுக உறுப்பினர் கிழித்துவிட்டார். இது நியாயமா? என்று கேட்டார். நியாயம் இல்லை. அதை திமுகவினர் செய்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என்றேன். வாக்கெடுப்பை ஒத்திவைக்கக் கோரிய போது முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டமாகக் கூறினார். மீண்டும் அவை 3 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

எங்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்றியது மரபு இல்லை. அப்படி வெளியேற்ற முடியாது. அதுகுறித்து சபாநாயகருக்கு கடிதம் எழுதி அளித்தோம். ஆனால், எதிர்க்கட்சி இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது ஜனநாயகப் படுகொலை என்பதை வலியுறுத்தி மெரினா - காந்தி சிலை அருகே உண்ணாவிரதம் மேற்கொண்டோம்.

குடியரசுத் தலைவரிடம் சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து விளக்க நேரம் கேட்டுள்ளோம். வரும் 22-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் அறப்போராட்டம் நடத்த உள்ளோம். இது தொடர் போராட்டமாக நடைபெறும். இது திமுகவின் பிரச்சினை என்று மட்டும் கருதிவிடக் கூடாது. மக்கள் பிரச்சினை.

சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏக்கள் தொகுதிப் பக்கம் செல்ல முடியவில்லை. மக்கள் எதிர்ப்பு அதிகம் உள்ளது. சசிகலாதான் ஜெ.மரணத்துக்கு காரணம் என்று மக்கள் அடிமனதில் ஓர் எண்ணம் உள்ளது. அதனால் மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள். சசிகலா குடும்பத்தினர் வரக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.

இந்த தமிழகத்தைக் காப்பாற்ற ஆட்சியைத் தூக்கியெறிய, இளைஞர்கள், மாணவர்கள், மக்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால், வரும் 22-ம் தேதி போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய ஆதரவு தர வேண்டும். ஒத்த கருத்துடைய அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கலாம். அதிமுக ஆட்சியைத் தூக்கியெறிய திமுகவின் அறப் போராட்டத்தில் மக்கள் இணைய வேண்டும்.

திருச்சி உண்ணாவிரதப் போராட்டத்துக்கு நான் தலைமை ஏற்கிறேன். காஞ்சிபுரம் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு துரைமுருகன் தலைமை ஏற்கிறார்.

சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலையாக்க வேண்டும். பேரவையில் நடந்தவற்றை அப்படியே ஒளிபரப்பாமல், வெட்டப்பட்ட காட்சிகளே ஒளிபரப்பப்படுகின்றன.

சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வுகளால் எனக்கு உள்காயம் ஏற்பட்டுள்ளதாக உணர்கிறேன். உடல் வலி உள்ளது. எனவே,ஸ்கேன் எடுத்துப் பார்க்க முடிவு செய்துள்ளேன்.

கருணாநிதி உடல்நிலை

திமுக தலைவர் கருணாநிது வயது மூப்பு காரணமாக சில சிரமங்களை எதிர்கொண்டு வருகிறார். மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் டிரக்டாஸ்டமி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் குணமடைவார் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம்'' என்று ஸ்டாலின் பேசினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/அதிமுக-ஆட்சியைத்-தூக்கியெறிய-திமுகவின்-அறப்-போராட்டத்தில்-மக்கள்-இணைய-வேண்டும்-ஸ்டாலின்/article9552044.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.