Jump to content

கிளிநொச்சியிலும் படம்பிடித்த இராணுவம் (VIDEO)


Recommended Posts

கிளிநொச்சியிலும் படம்பிடித்த இராணுவம் (VIDEO)
 

article_1487592972-news.jpg

-எஸ்.என்.நிபோஜன்

கிளிநொச்சி, பரவிபாஞ்சான் மக்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தங்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என, கவனயீர்ப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இதன்போது, போராட்டத்தில்  செய்தி சேகரிக்கச் சென்ற  ஊடகவியலாளர்களை, அருகில் காவலரணில் இருந்த   இராணுவத்தினர்,  தங்களின் அலைபேசிகள மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்தனர்.

 

 

http://www.tamilmirror.lk/191873/க-ள-ந-ச-ச-ய-ல-ம-படம-ப-ட-த-த-இர-ண-வம-VIDEO-

Link to comment
Share on other sites

கிளி.பரவிப்பாஞ்சான் மக்களும் தொடர் போராட்டத்தில்
கிளி.பரவிப்பாஞ்சான்  மக்களும் தொடர் போராட்டத்தில்
கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவம் ஆக்கிரமித்துள்ள தமது காணிகளை விடுவிக்குமாறுகோரி,பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமிற்கு முன்பாக இன்று காலை பொதுமக்கள் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
 
கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் இராணுவ முகாமால் கடந்த ஏழு வருடங்களாக கையகப்படுத்தப்பட்டிருக்கும் தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த ஓகஸ்ட் மாதம் 31 ஆம திகதி மாலை முதல் 17 குடும்பங்கள் முகாமுக்கு முன்னால் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
1487575958_download%20%281%29.jpg
ஏழு நாட்களாக போராட்டம் தொடர்ந்த போதிலும், மக்களின் காணிகளை விடுவிக்க எந்தவொரு தரப்பினரும் முன்வராததை அடுத்து அப்பகுதி மக்கள் காலவரையரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.  
 
இதற்கமைய கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக சென்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் இந்த விடயம் தொடர்பில் பேசியுள்ளதாக வும், இரண்டு வாரங்களுக்குள் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.
 
இதனையடுத்து இரண்டு வாரங்களுக்கு தமது போராட்டத்தை மக்கள் ஒத்திவைத்திருந்தனர்.
 
இந்த நிலையில், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியின் பிரகாரம் மூன்று ஏக்கர் காணி மாத்திரமே விடுவிக்கப்பட்டநிலையில் ஏனைய 15 க்கும் அதிகமான குடும்பங்களுக்கான 10 ஏக்கர் காணி விடுவிக்கப்படவில்லை.
 
எஞ்சிய 10 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டம் இடம்பெற்ற பகுதிக்குச் சென்ற சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் 03 மாத காலப்பகுதிக்குள் இராணுவத்திடம் உள்ள காணிகள் விடுவிக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.
 
இந்தநிலையில், கடந்த டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி, விஜயகலா மகேஸ்வரன் அளித்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், மீண்டும் அப்பகுதி மக்கள் இன்றுமுதல்  தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
20-2-2017%2015.2.12%203.jpg
இதேவேளை  கிளிநொச்சி – பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்திடமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, இன்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை  தமது முகாமுக்குள் இருந்தவாறு  இராணுவத்தினர் புகைப்படம் எடுத்து வருகின்றனர். 
20-2-2017%2015.2.50%202.jpg

http://www.onlineuthayan.com/news/24122

Link to comment
Share on other sites

மக்கள் போராடி தமது இடங்களை பெற்றால் சரி. அரசியல்வாதிகள் கையாலாகாதவர்களாகவே உள்ளனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

C5Gv-AhWMAEyimy.jpg

ஈழத்தில்.. "சிறீலங்கா படையினரே வெளியேறு; இது எங்கள் நிலம்" முல்லைத்தீவு சிறார்கள் போர்க்கோலம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொறீலங்கா இராணுவம் இப்ப கையடக்கத் தொலைபேசியும் கமராவுமாத் தான் திரியுது. கொழும்பில் கூட வாகனங்களில் இருந்தபடி... கிளிக் நடக்குது. என்னத்தை எடுக்கிறாய்ங்களோ.

சொறீலங்கா இராணுவம் ஏகபோக எகத்தாளத்தனத்தோடு இருக்க அனுமதிக்கப்பட்டுள்ளதன் விளைவுகள் இவை. இவற்றிற்கு சிங்கள மக்களும் விலைகொடுக்கிறார்கள். குறிப்பாக இளம் சிங்களப் பெண்பிள்ளைகளை படம்பிடிப்பதும் நடக்குது. 

இதுக்கு எல்லாம் காரணம் சிங்கள இராணுவ ரவுடிகளுக்கு வெற்றி வீரர்கள் பட்டம் சூட்டி அழகு பார்ப்பது தான். அவர்களுக்கு நன்னடத்தைகளை.. தண்டனைகளை வழங்க ஒருவருக்கும் சொறீலங்காவில் திராணியில்லை. அதுதான் இந்த ஆட்டம். tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.