Jump to content

மட்டக்களப்பபு எழுக தமிழ் மேடையில் சுயநல அரசியல் வெளிப்பாடு


Recommended Posts

மட்டக்களப்பபு எழுக தமிழ் மேடையில் சுயநல அரசியல் வெளிப்பாடு

 

மட்டக்களப்பபு எழுக தமிழ் மேடையில் சுயநல அரசியல் வெளிப்பாடு

 

தமிழ் தேசிய கூட்டமைப்பை பலப்படுத்துவதற்காகவே எழுக தமிழ் என கூறியவர்கள் தங்களுடைய மட்டக்களப்பில் நடைபெற்ற எழுக தமிழ் மேடையில் தனது சுயநல அரசியலை வெளிக்காட்டியிருந்தார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் தவறான பாதையில் சென்று எமது மக்களை துன்புறுத்தியவர்கள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை மாற்ற வேண்டும் எனக் கூறிக்கொள்கிறார்கள். அவர்களது கடந்த கால சரித்திரங்களில் பல தரித்திரங்கள் காணப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

தரித்திரம் பிடித்த சரித்திரத்தை உடையவர்கள் மீண்டும் புதிய தலைமைகளை உருவாக்கி மக்களை புதிய பாதையில் கொண்டுசெல்லலாம் என்று நினைத்தால் நாங்கள் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு இலுப்படிச்சேனை அம்பான் வித்தியாலய வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டியில் இறுதிநாள் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

வித்தியாலய அதிபர் ம.ரகுபதி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

தமிழ் எழுச்சி பெறுவதற்காக உண்மையான மனதோடு உளசுத்தியோடு செயற்படுகின்றவர்களையும் நாங்கள் வாழ்த்துகிறோம்.

எழுக தமிழ் மேடையில் பிரகடணப்படுத்தப்பட்ட வார்த்தைகளைப் பார்க்கும் போது தமிழ் எழுச்சி பெறவேண்டும், தமிழர்கள் எழுச்சி பெற வேண்டும், தமிழ் மக்களின் அரசியல், சமூக மற்றும் பலம் அதிகரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பிரகடனங்கள் அமைந்திருந்தால் அதனை நான் வாழ்த்துகின்றேன்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை மாற்ற வேண்டும் புதிய தலைமையைக் கொண்டு வரவேண்டும் என்று தங்களது சுயநல அரசியலைக் காட்டுகின்ற மேடையாக அது அமைந்திருந்தது.

தங்களது தோல்விக்கு தாங்களே காரணம் என சிந்திக்காதவர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையின் மீது குற்றம்சாட்டுகின்ற நாகரீகமில்லாத அரசியலைச் செய்கின்ற சில தலைமைகள் எவ்வாறு புதிய தலைமைகளாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கள் தலைமை தாங்க முடியும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சுயநல அரசியல் செய்பவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக எவ்வளவு கஷ்டப்பட்டார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆறு கடக்கும்வரை அண்ணன் தம்பி ஆறு கடந்தால் நீ யாரோ நான் யாரோ என்பது போன்று கெஞ்சி கஷ்டப்பட்டு மனு எடுத்த ஒரு சிலர் இன்று நினைக்கின்றார்கள் தங்களுக்கு கிடைத்த வாக்குகள் எல்லாம் தங்களது பேருக்கு கிடைத்த வாக்குகள் என நினைக்கின்றார்கள். இவ்வாறானவர்களுக்கு உரிய பாடம் மக்கள் மன்றத்தின் மூலமாக தீரப்பு வழங்கப்படும்.

அரசியலில் அனுபவம் இருக்க வேண்டும் சாதாரணமாக சிறிய விடயங்களை அறிந்துவிட்டு மற்றவர்களுக்கு போதனை செய்ய முற்படுபவர்களுக்கு மக்கள் எதிர்காலத்தில் தகுந்த பாடம் புகட்டுவர்´ என்றார்.

http://tamil.adaderana.lk/news.php?nid=88074

Link to comment
Share on other sites

தலைவன் எவ்வழி குடிகள் அவ்வழி என்ற முதுமொழி உலகம் உள்ளளவும் மாறாது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.