Jump to content

நடுவானில் தகவல் தொடர்பை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்


Recommended Posts

நடுவானில் தகவல் தொடர்பை இழந்த ஜெட் ஏர்வேஸ் விமானம்

 
 

கடந்த வியாழனன்று, மும்பையில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஜெட் ஏர்வேஸ் விமானம், ஜெர்மனி வான்வெளியில் பயணித்துக் கொண்டிருந்த சமயத்தில், திடீரென ஜெர்மனி நாட்டு விமானப் போக்குவரத்துக்கட்டுப்பாட்டு அறையுடன் இருந்த தொடர்பை இழந்துவிட்டது என்று செய்திகள் வெளியாகின.

ஜெட் விமானம்படத்தின் காப்புரிமைGETTY IMAGES

பொதுவான நடைமுறையில், ஒரு விமானம், ஒவ்வொரு நாட்டின் வான்வெளி பகுதியை கடந்து செல்லும் போது, சம்பந்தப்பட்ட நாட்டின் விமான கட்டுப்பட்டு அறைக்கு தகவல் அளிக்கவேண்டும்.

இந்த சம்பவத்தில், 330 பயணிகளை கொண்ட ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் பயணிகள் விமானம், சுமார் 30 நிமிடங்களுக்கு தகவல் தொடர்பற்று இருந்தது என்று செய்திகள் கூறுகின்றன.

சந்தேகம் நேர்ந்ததும், ஜெர்மனியின் விமானப்படையை சேர்ந்த இரண்டு விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை பின் தொடர்ந்து சென்றன என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த சம்பவம் குறித்து பிபிசிக்கு விளக்கம் அளித்த ஜெட் ஏர்வேஸ் விமான சேவையின் செய்தி தொடர்பாளர், ''முன்னெச்சரிக்கையாக ஜெர்மனி விமானப்படை விமானம், ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் பாதுகாப்பையும், அதில் உள்ள பயணிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்தது,'' என்றார்.

அவர் மேலும், சில நிமிடங்களில் தகவல் தொடர்பு சரிசெய்யப்பட்டது என்றும் இந்த சம்பவம் தொடர்பாக இந்திய அரசின் விமான போக்குவரத்து இயக்குநரகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டுவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

விசாரணை நடக்கும் வரை, சம்பந்தப்பட்ட விமானிகள் குழு, வழக்கமான நடைமுறைகளின்படி, பணியிலிருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

எந்த அசம்பாவிதம் ஏற்படாமல் பயணிகளை பாதுகாப்பாக லண்டனுக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.bbc.com/tamil/india-39021358

 

Link to comment
Share on other sites

ரேடாரில் இருந்து மறைந்த ஜெட் ஏர்வேஸ் விமானம் - வீடியோ இதோ!

கடந்த வியாழன் அன்று, மும்பை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஜெட் ஏர்வேஸ் போயிங்-777 விமானம், ஜெர்மனி எல்லைக்குள் பறக்கும்போது, திடீரென்று கட்டுப்பாட்டு அறையின் தொடர்ப்பை இழந்தது. இதையடுத்து ஜெர்மனியின் விமானப்படை தனது தேடுதல் பணியை முடுக்கிவிட்டது. 

Jet Airways - German Escort

 

தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டதால்  ஜெர்மன் போர் விமானங்கள் உடனடியாக பறந்து சென்றன. சில நிமிடங்களில் மீண்டும் விமானத்துடன் தொடர்பு கிடைத்தது. ஆனாலும், பாதுகாப்புக்காக ஜெர்மன் போர் விமானங்கள் எஸ்கார்ட் செய்தன. பின்னர் லண்டனில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. ஜெட் ஏர்வேஸ் விமானிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. 

போர் விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை எஸ்கார்ட் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவாம் இது!

 

 

 

 

 

 

http://www.vikatan.com/news/world/81358-germany-scrambles-fighter-planes-for-jet-airways-flight.html?artfrm=news_most_read

Link to comment
Share on other sites

ஜெட் ஏர்வேஸை ஜெர்மன் போர் விமானங்கள் மடக்கியதன் அதிர்ச்சிப் பின்னணி! #9w118 #jetairways

மும்பையில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற  ஜெட் ஏர்வேஸ் விமானம் காணாமல்போனதற்கான காரணங்கள், முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளன. 

ஜெட் ஏர்வேசுக்கு வழிகாட்டும் ஜெர்மன் போர் விமானம்

கடந்த 16-ம் தேதி, ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று மும்பையில் இருந்து லண்டனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. ஜெர்மனியின் கோலென் நகரின் மீது பறந்துகொண்டிருக்கும்போது, திடீரென்று தரைக்கட்டுப்பாட்டு அறையுடனான  விமானத்தின் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டது. விமானம் கடத்தப்பட்டதாகக் கருதிய ஜெர்மன் அரசு, உடனடியாக இரு போர் விமானங்களைக்கொண்டு காணாமல் போன விமானத்தைத் தேடியது. வானில் பறந்துகொண்டிருந்த இந்திய விமானத்தைக் கண்டுபிடித்துப் போர் விமானங்கள் மடக்கின. இந்த போயிங் 777 ரக விமானத்தில் (எண் 9W 118) 330 பயணிகளுடன் 15 விமான ஊழியர்களும் இருந்தனர். 

ஜெர்மன் போர் விமானங்கள் வழிகாட்ட, இந்திய விமானம் பறந்துசென்ற வீடியோக்கள், இணையங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. குறித்த நேரத்தில், விமானம் லண்டனைச் சென்றடைந்ததாகச் சொல்லப்பட்டது. விமானம் காணாமல் போனது குறித்து  ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் விசாரணைக்கு உத்தரவிட்டது. விசாரணையின் முடிவில் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.  விசாரணையில்... தலைமை பைலட் உறங்க, துணை விமானி விமானத்தை இயக்கியது தெரியவந்துள்ளது. அவரும் அரைகுறை கிறக்கத்தில் இருந்துள்ளார். செக் குடியரசுக்கு மேல் பறக்கும்போது, பரேக் நகரத் தரைக்கட்டுப்பாட்டு அறையுடன் விமானத்துக்குத் தொடர்பு இருந்துள்ளது. ஆனால், ஜெர்மனி வான்வெளிக்குள் நுழைந்ததும்  தரைக்கட்டுப்பாட்டு அறையுடன் தகவல் தொடர்பை இழந்துள்ளது.  

தரைக் கட்டுப்பாட்டுடன் தொடர்பை இழக்க, தவறான அலைவரிசையை செட் செய்துள்ளதும் ஒரு காரணம் எனத் தெரியவந்துள்ளது. துணை விமானி, தனது ஹெட் செட்டில் ஒலி அளவையும் குறைவாக வைத்திருக்கிறார். தவறான சமிக்ஞைகளைக் கையாண்டிருக்கிறார். இப்படி, சுமார் 33 நிமிடங்கள் 500 கி.மீட்டர் தொலைவுக்கு ஜெர்மனி வான்வெளியில் விமானம் பறந்துசென்றுள்ளது. அந்தச் சமயத்தில் டெல்லியில் இருந்து லண்டனை நோக்கிச் சென்ற (எண் 9W 122) என்ற மற்றொரு ஜெட் ஏர்வேஸ் விமானம் செக் குடியரசின் வான் வெளிக்குள் நுழைந்துள்ளது. மற்றொரு இந்திய விமானத்தைக் கண்ட செக் குடியரசின் பரேக் நகரத் தரைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், அந்த விமானத்தைத் தொடர்பு கொண்டு, மும்பை - லண்டன் விமானம் காணாமல்போனது குறித்து  தகவல் தெரிவித்திருக்கின்றனர். டெல்லி - லண்டன் விமானத்தின் விமானி, இந்திய தரைக்கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். 

தரைக்கட்டுப்பாட்டுடன் சுமார் அரைமணி நேரமாக தொடர்பு இல்லாமல், மும்பை - லண்டன் விமானம் பறந்துள்ளது. பின்னர்தான் ஜெர்மனி போர் விமானங்கள் ஜெட் ஏர்வேஸ் விமானத்தை  வானில் வழிமறித்துள்ளன. இது தொடர்பாக, விமான நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ''தற்போதைய நிலையில் மத்திய விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. காக்பிட்டில் நடந்த வாதங்கள் குறித்து அறிவதற்காக, விமானி அறையில் இருந்து 'வாய்ஸ் ரொக்கார்ட் ' பதிவுகள்  எடுக்கப்பட்டுள்ளன''  எனத் தெரிவித்துள்ளார். 

இதற்கு முன், கடந்த 2014-ம் ஆண்டும் இதேபோன்று ஜெர்மன் வான்வெளியில் ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று அரை மணி நேரம் தரைக்கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு இல்லாமல் பறந்திருக்கிறது. பொறுப்பற்ற விமானிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென பலரிடமிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

http://www.vikatan.com/news/world/81633-the-reasons-behind-why-jet-airways-losses-air-traffic-control-and-german-air-force-get-into-action.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.