Jump to content

பிப்.19-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்


Recommended Posts

பிப்.19-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 

 
ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் ஓபிஎஸ் | கோப்புப் படம்.
ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் ஓபிஎஸ் | கோப்புப் படம்.
 
 

கடும் அமளிகளுக்கு மத்தியில் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்களும், எதிராக 11 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். சட்டப்பேரவையில் நடந்த பெரும் ரகளை, திமுகவினர் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டது, நம்பிக்கை வாக்கெடுப்பு முறை, சபாநாயகர் நடவடிக்கைகள் என பேரவை நிகழ்வுகள் குறித்த விமர்சனங்களும் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

பரபரப்பான இன்றைய தினத்தின் நிகழ்வுகளின் தொகுப்பு: இந்த பக்கத்தை அவ்வப்போது ரெப்ரஷ் செய்க:

1.55 pm: சட்டப்பேரவையில் மறுவாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ் தரப்பு ஆளுநரிடம் வலியுறுத்தல்

1.25 pm: 'பினாமி' ஆட்சியை அகற்றி, மக்களாட்சியை நிலைப்பெறச் செய்யும்வரை நமது போராட்டம் ஓயப்போவதில்லை: ஸ்டாலின்

1.20 pm: ஆளுநருடன் ஓபிஎஸ் சந்திப்பு

1.15 pm: தமிழகம் முழுவதும் வரும் 22 ஆம் தேதி திமுகவினர் உண்ணாவிரதம்: மு.க.ஸ்டாலின்

1.10 pm: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்திக்க புறப்பட்டார்

1.00 pm: எதிர்க்கட்சிகள் இல்லாமல் வாக்கெடுப்பு நடந்தது முரண்பாடானது: திருச்சி சிவா

12.45 pm: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரை சந்திக்க உள்ளார்

12.30 pm: திருச்சி சிவா தலைமையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் விதயாசாகர் ராவுடன் சந்திப்பு

12 pm: நம்பிக்கை வாக்கெடுப்பில் ரகசிய வாக்கெடுப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை: வைகோ

11.30 am: சசிகலாவின் கீழ் இயங்கும் ஆட்சி தொடரவே கூடாது: தீபா

11 am: ஆளுநரை சந்திக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன், அனைத்து அமைச்சர்களும் ராஜ்பவன் வருகை,

10.30 am: ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

10.15 am: அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் தொடங்கியது

9.45 am: ராஜ்பவனில் ஆளுநர் வித்யாசாகர் ராவை காலை 11 மணிக்கு சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

9.30 am: மெரினாவில் போராட்டம் நடத்திய மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 2,000 பேர் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு

முந்தைய நிகழ்வுகள்:

>>> முன்னதாக பேரவையில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர். 11 எம்.எல்.ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தமிழக முதல்வராக தன் பதவியைத் தக்கவைத்துக் கொண்டார். அதன் விவரம்: எதிர்க்கட்சியினர் இல்லாத பேரவை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசு வெற்றி

>>> பேரவையில் அரசின் பெரும் பான்மை நிரூபிக்கப்பட்டது தொடர்பான அறிக்கையை ஆளுநருக்கு பேரவைச் செயலர் ஜமாலுதீன் அனுப்பி வைத்தார். அதன் விவரம்: அரசின் பெரும்பான்மை நிரூபிக்கும் தீர்மானம் குறித்த அறிக்கை: ஆளுநருக்கு அனுப்பினார் பேரவைச் செயலர்

>>> ‘சட்டப்பேரவை காவலர்களால் தாக்கப்பட்டேன்’ என்று கூறி கிழிந்த சட்டையுடன் பேரவையில் இருந்து வெளியே வந்த மு.க.ஸ்டாலின், சாலையில் நின்று மக்களிடம் முறை யிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் விவரம்: ‘சட்டப்பேரவை காவலர்களால் தாக்கப்பட்டேன்’: மு.க.ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

>>> மக்களுக்கு மாபெரும் துரோகத்தை செய்துவிட்டு, சசிகலா அணிக்கு ஆதரவு அளித்தது சரியா என்று, எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிக்கு திரும்பினால்தான் தெரியும். அவர்களை தொகுதி மக்கள் கேள்வி கேட்கப்போவது உறுதி என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார். அதன் விவரம்: சசிகலா அணிக்கு வாக்களித்தவர்களை தொகுதி மக்கள் கேள்வி கேட்பது உறுதி: ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

>>> ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டவர்களை ஏற்கமாட்டோம் என்று கோவை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும், அதிமுக கோவை மாநகர் மாவட்டச் செயலாளருமான பி.ஆர்.ஜி.அருண் குமார் கூறினார். அதன் விவரம்: எங்களது எதிர்ப்பு காரணமாகவே சசிகலா 3 முறை விடுதிக்கு வந்தார்: கோவை வடக்கு எம்.எல்.ஏ. அருண்குமார் தகவல்

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்19ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9550520.ece?homepage=true

Link to comment
Share on other sites

4.00 pm: ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் தீவிர ஆலோசனை

சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், மைத்ரேயன், மாஃபா பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

3.30 pm: தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற சட்டவிரோத அராஜகங்கள் குறித்து இந்திய குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்க உள்ளோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதன் விவரம்: பேரவையில் நடைபெற்ற சட்டவிரோத நிகழ்வுகள் குறித்து குடியரசுத் தலைவரிடம் புகார்: ஸ்டாலின்

2.30 pm: நடுநிலையோடு செயல்பட வேண்டிய சட்டப்பேரவை தலைவர், சாதியை முன்னிறுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்குரியது: விஜயகாந்த்

கட்சிகளுக்கும் ஜாதி பேதங்களுக்கு அப்பாற்பட்டு நடுநிலையோடு செயல்பட வேண்டிய சட்டப்பேரவை தலைவர், சாதியை முன்னிறுத்தி பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. இரண்டு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க தயாராகி விட்டார்கள் என்று விஜயகாந்த் கூறியுள்ளார். அதன் விவரம்: அதிகாரப் போட்டியில் அதிமுகவும், திமுகவும் நாடகங்களை அரங்கேற்றி வருகின்றன: விஜயகாந்த் குற்றச்சாட்டு

Link to comment
Share on other sites

பிப்.19-ல் அதிமுக அதிர்வுகள்: நிகழ்வுகளும் திருப்பங்களும்

 
 
 
ஆளுநர் வித்யாசாகர் ராவ் | கோப்புப் படம்.
ஆளுநர் வித்யாசாகர் ராவ் | கோப்புப் படம்.
 
 

சட்டப்பேரவை நிகழ்வுகள்: செயலாளரிடம் விளக்க அறிக்கை கோரினார் ஆளுநர்

*

கடும் அமளிகளுக்கு மத்தியில் சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. அரசுக்கு ஆதரவாக 122 எம்எல்ஏக்களும், எதிராக 11 எம்எல்ஏக்களும் வாக்களித்தனர். சட்டப்பேரவையில் நடந்த பெரும் ரகளை, திமுகவினர் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டது, நம்பிக்கை வாக்கெடுப்பு முறை, சபாநாயகர் நடவடிக்கைகள் என பேரவை நிகழ்வுகள் குறித்த விமர்சனங்களும் வலுவாக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நிகழ்நேரப் பதிவு நிறைவு

*

8.45 pm: சனிக்கிழமை நடந்த சட்டப்பேரவை நிகழ்வுகள் குறித்து சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீனிடம் ஆளுநர் விளக்க அறிக்கை கேட்டுள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்பை அங்கீகரிக்கக் கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும், மறு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த விளக்க அறிக்கை கேட்கப்பட்டதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

8.30 pm: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாடகை நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக கோவில்பட்டியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தற்போதைய முதல்வர் அமர்ந்திருப்பது ஒரு வாடகை நாற்காலி போன்றது. அது நிரந்தரம் அல்ல. இந்த ஆட்சி நீடித்திருக்க வேண்டும். எந்த அரசு ஆட்சியில் இருந்தாலும் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும்'' என்றார்.

8.15 pm: திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கண்ணியம் காத்து அவையிலும், வெளியிலும் களப்பணி ஆற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதன் விவரம்: சபாநாயகர் இருக்கையில் திமுக எம்.எல்.ஏக்கள் அமர்ந்ததை ஏற்கவில்லை: ஸ்டாலின்

7.30 pm: தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் ஜனநாயகத்துக்கு இழுக்கானது. அரசியல்வாதிகளின் இத்தகைய நடத்தையால் அரசியல் முறை மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் அபாயம் ஏற்படும் என மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு வேதனை தெரிவித்துள்ளார். அதன் விவரம்: தமிழக சட்டப்பேரவையில் நிகழ்ந்தது ஜனநாயகத்துக்கே இழுக்கானது: வெங்கய்ய நாயுடு வேதனை

6.15 pm: தமிழகத்தின் பிரச்சினைகளை நினைவில் கொண்டிருப்பது மட்டுமே முதல்வரின் பணி அல்ல. அவற்றை உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறியுள்ளார். அதன் விவரம்: தமிழகப் பிரச்சினைகளை நினைவில் கொண்டிருப்பது மட்டுமே முதல்வரின் பணி அல்ல: அன்புமணி

5.00 pm: பேரவைக்கான மாண்பை திமுகவினர் சீர்குலைத்துவிட்டனர்: நவநீதகிருஷ்ணன் எம்.பி. குற்றச்சாட்டு

தமிழக சட்டப்பேரவைக்கான மாண்பை திமுகவினர் சீர்குலைத்துவிட்டனர். திட்டமிட்டு நம்பிக்கை வாக்கெடுப்பை தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுகவினர் முற்பட்டனர் என்று நவநீதகிருஷ்ணன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். அதன் விவரம்: பேரவையில் திமுகவுக்கு ஓபிஎஸ் அணி துணை போனது: அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன் குற்றச்சாட்டு

4.15 pm: அதிமுகவின் அதிகாரப் போட்டி, திமுகவின் அதிகார வேட்கை, பாஜகவின் புறக்கடை முயற்சி போன்றவற்றால் தமிழக மக்களின் மிக முக்கியமான பிரச்சினைகள் கவனிக்கப்படாமல் புறந்தள்ளப்பட்டுள்ளன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார். அதன் விவரம்: அதிகாரப் போட்டியில் அதிமுக, அதிகார வேட்கையில் திமுக, புறக்கடை முயற்சியில் பாஜக: ஜி.ராமகிருஷ்ணன் தாக்கு

http://tamil.thehindu.com/tamilnadu/பிப்19ல்-அதிமுக-அதிர்வுகள்-நிகழ்வுகளும்-திருப்பங்களும்/article9550520.ece?homepage=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.