Jump to content

தாழும் கப்பல் கரைசேராது... கருணா


Recommended Posts

தாழும் கப்பல் கரைசேராது
 
 

article_1487489894-607-new.jpg- கே.எல்.ரி.யுதாஜித்
“யுத்தம் என்பது, அழிவில்லாமல் நடைபெறுவதொன்றல்ல. நாட்டில் இடம்பெற்ற 
ஜே.வி.பி கிளர்ச்சியின்போது, 80 ஆயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள். மக்கள் மத்தியிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதும் அவர்களுக்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுமே, காலத்தின் தேவையாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், இறுதி யுத்தகாலத்தில், அமெரிக்கா வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை.

அதேபோல்தான், 

த.தே.கூ.வினர் இப்போது, பிரிட்டன் வரும், ஜெனீவா காப்பாற்றும், வேறு நாடு வரும் என்று எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அவர்களின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறாது” என, கருணா அம்மான் எனப்படும் வி.முரளிதரன் தெரிவித்தார்.  

‘தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி’ என்ற புதிய கட்சியை மட்டக்களப்பில் ஆரம்பித்துள்ள, விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாண முன்னாள் தளபதியாக இருந்து, பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து, 10 வருட காலமாக அமைச்சராகவும் பிரதி அமைச்சராகவும் பதவி வகித்த கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுடனான நேர்காணலின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்மிரருக்காக அவர் வழங்கிய விசேட செவ்வியின் முழு விவரம் வருமாறு, 

கே: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உப-தலைவர்களில் ஒருவரான நீங்கள், அங்கட்சியிலிருந்து நீங்கிவிட்டீர்களா?
ஒரு கட்சியில் இருந்துகொண்டு வேறொரு கட்சியை ஏற்படுத்துவது முடியாத காரியம். அந்த வகையில், சு.க.விலிருந்து முழுமையாக வெளியேறியதன் பின்னரே, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியை ஆரம்பித்துள்ளேன்.   
கேசு.கவினரால், உங்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளனவா?

ப: அவ்வாறு எதுவுமில்லை. கடந்த பத்து வருடங்களாக, சு.கவின் உப தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் பிரதி அமைச்சராகவும் இருந்திருக்கிறேன்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவில், தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அக்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவேளை, சுதந்திரக் கட்சியின் கொள்கைகளுக்கமைவாக நானும் வாக்களித்திருக்கிறேன். அதன் பின்னரான விடயங்களிலும் பங்கு கொண்டிருக்கிறேன்.

தமிழ் மக்களுக்கான கட்சியின் தேவை கருதியே தற்போதைய முடிவினை எடுத்திருக்கிறேன். எமது கட்சி, வடக்கு -கிழக்கினை மையமாகக்கொண்டே, ஆரம்பத்தில் செயற்படும்.   

கே: பிரச்சினை இல்லாவிடின், புதுக் கட்சியை ஆரம்பித்தமைக்கான பிரதான நோக்கம் என்ன?

ப: புதிய ஆட்சியிலாவது, தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையிலேயே, கடந்த தேர்தலின் போது, புதிய அரசாங்கத்துக்குச் சார்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, தமிழ் மக்கள் வாக்களித்தனர். ஆனால், 100 நாட்களுக்குள் அரசியல் சாசனம் எழுதப்படும், தீர்வு வரும் என்றார்கள். ஒன்றும் நடக்கவில்லை. 2016க்குள் என்றார்கள்.

அதற்குள்ளும் ஒன்றும் நடக்கவில்லை. 2 வருடங்கள் இந்த அரசாங்கம் ஆட்சி நடத்திவிட்டது. அதன் பிற்பாடுகூட, எதுவித முன்னேற்பாடுகளும் இல்லை. அதேநேரத்தில், தமிழ் மக்களுக்கான அபிவிருத்தியும் இல்லை. தீர்வும் இல்லை.   

அண்மையில், த.தே.கூவினரால் வடபகுதியில் நடத்தப்பட்ட கூட்டங்களின் போது, மக்கள் காரசாரமான வாதங்களில் ஈடுபட்டனர். இது இவ்வாறிருக்க, கிழக்கில் வேறு விதமான சூழல் நிலவுகிறது. அரசியல் அதிகாரம் எதுவுமற்றவர்களாகவே, த.தே.கூவினர் இருக்கின்றனர்.

முஸ்லிம் தலைவர்கள், அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கையில், வேறு விதமான பிரச்சினைகளை எதிர் கொள்கிறோம். இந்த ஒரு வெற்றிடமான சூழ்நிலையில் தான், ஒரு திடமான அரசியல் கட்சியினை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் உருவானது.   

த.தே.கூவினர், தாங்கள் தான் தமிழர்களின் தனிப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில், த.தே.கூ என்பது, ஒரு தனிக் கட்சியே அல்ல. அது பதிவு செய்யப்படவே இல்லை.

அது விடுதலைப் புலிகள் அமைப்பால் உருவாக்கப்பட்ட ஒன்று. அதற்கு, நானும் ஒரு காரணகர்த்தாவாவேன். ஊடகவியலாளர் சிவராம் இருக்கும் காலத்திலேயே, நாங்கள் அதனை உருவாக்கினோம். ஒரு கூட்டுக் கட்சியாக இருந்துகொண்டே, அக்கட்சி செயற்படுகின்றது. கூட்டுக்கட்சியாக இருந்துகொண்டு, த.தே.கூ தான் தமிழர்களின் பிரதிநிதிகள் என்று கூறமுடியாது.   

அதேநேரத்தில், வடக்கு முதல்வர் ஒரு பாதையிலும் சம்பந்தன் ஐயா வேறு ஒரு பாதையிலும், அதற்குள் இருக்கும் எம்.பிக்களின் விமர்சனங்கள் வேறு விதமாகவும், மாகாணசபை உறுப்பினர்கள் இன்னுமொரு பாதையிலுமெனப் பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்படியெல்லாம் பார்க்கையில் ஓர் ஆணித்தனமான தலைமைத்துவத்தினையுடைய கட்சி ஒன்றின் தேவை உணரப்படுகிறது. அதற்கான கடமை எனக்கிருக்கிறது.   

கடந்த 30 வருடங்களாக, தமிழ் மக்களுக்காகப் போராடியிருக்கிறோம். அக்காலத்தில், உலகம் முழுவதும் சென்று பேச்சுகளில் ஈடுபட்டிருக்கிறோம்.

அதேபோல, இயக்கத்திலிருந்து பிரிந்த பின்னர், சு.கவில் 10 வருடம், நாடாளுமன்றத்தில் 10 வருடம் என இருந்திருக்கிறேன். இதன் ஊடாக, சிங்களத் தலைவர்களின் உறவு பலமாக இருக்கிறது. எந்த நிலைகள் வந்தாலும், அதனை எதிர்கொள்ளக்கூடிய ஆற்றல், எங்கள் கட்சிக்கு இருக்கிறது. என்னுடைய தலைமைத்துவத்தின் ஊடாக அதனை வழங்க இருக்கிறேன்.  

த.தே.கூவுக்கு எதிராக, இந்தக் கட்சியைத் தொடங்கவில்லை. தமிழ் மக்களின் அரசியல் வெற்றிடத்தினை நிரப்புவதற்கு, ஒரு கட்சி தேவைப்படுகிறது. எனவே, ஒரு தனிக்கட்சியாக அறிவித்திருக்கிறோம். அதற்கு, எல்லோருடைய ஆதரவும் எங்களுக்குத் தேவை.   

கே: த.தே.கூவை உருவாக்குவதில் பாரிய பங்குண்டு என்று கூறுகிறீர்கள். அவ்வாறாயின், அக்கட்சியுடன் ஏன் நீங்கள் இணையவில்லை? 

ப: இப்போது, தனிக்கட்சியாக அமைத்திருக்கிறோம். எதிர்காலத்தில், எந்தக் கட்சியுடனும் பேசத் தயாராக இருக்கிறோம். எதிர்ப்பதற்குத் தயாரில்லை.

ஆனால், த.தே.கூ ஒரு தனிக்கட்சியாகப் பதிவு செய்யப்பட்டிருக்குமானால், இந்தக்கட்சியை ஆரம்பித்திருக்க மாட்டேன். அதனைப்பதிவதற்குக்கூட அவர்கள் தயாரில்லை.

அவர்கள், தமிழரசுக் கட்சியின் சின்னத்தை வைத்துக்கொண்டு, தங்களுடைய தலைமைகளைத் தக்கவைப்பதற்காக, போராடிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அதிலுள்ள மற்றைய கட்சிகளையும் சேர்த்து ஒரு கட்சியாக ஆக்குவதற்கான நோக்கம் இல்லை. அதற்குக்கூடத் தயாரில்லாமல் இருக்கையில், ஒரு தாழும் கப்பலில் ஏறுவதற்கு நாங்கள் தயாரில்லை.   

கே: ஏனைய தமிழ் கட்சிகளுடன் உறவுகள், தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளீர்களா?

ப: அனைத்துக் கட்சிகளுடனும் உறவுகள் இருக்கின்றன. எதிர்காலத்தில், தனித்தனியாகப் பேசுவோம், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுடனும் எங்களது கட்சியினைப் பதிவு செய்வதற்கான தஸ்தாவேஜுக்களைக் கையளித்த பின்னர், உரிய முறையில் கலந்துரையாடுவதற்கு இருக்கிறோம்.   

கே: கட்சியின் சின்னம் மற்றும் கட்சியைப் பதிவு செய்தல் தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?

ப: தற்போதைய நிலையில், செயலாளரை மட்டுமே தெரிவு செய்திருக்கிறோம். பிரஜைகள் குழுவினுடைய வ.கமலதாஸ், செயலாளராகச் செயற்படுகிறார். கட்சியின் யாப்பினை எழுதிக்கொண்டிருக்கிறோம். முதற்கட்ட நடவடிக்கையாக, தேர்தல் ஆணையகத்தினைத் தொடர்புகொண்ட பொழுது, விண்ணப்பத்தினை தரும்படி கூறியிருக்கிறார்கள்.   

தேர்தல் ஆணைக்குழுத் தலைவர், ஏற்கெனவே அரசியல் கட்சிகள் பதிவு செய்வதாக இருந்தால், விவரங்களை வழங்கும்படி கேட்டிருக்கிறார். அதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த வாரம் அல்லது எதிர்வரும் வாரத்தில், அதற்கான ஆவணங்களைக் கையளிப்போம். 

அதே நேரத்தில், கரைச்சிப் பிரதேச சபை தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதால், பதிவு தாமதமாகலாம். கட்சியாக நாங்கள் செயற்படலாம். பதிவு தாமதித்து வரலாம்.   

கே: தேர்தலில் போட்டியிடும் நோக்கம் ஏதாவது உண்டா?

ப: கண்டிப்பாக, வடகிழக்கில் பரந்துபட்ட அடிப்படையில் போட்டியிடுவோம். தற்போது எங்களது கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களைத் தெரிவு செய்துகொண்டிருக்கிறோம். சிறந்த புத்திஜீவிகள், கல்விமான்கள் முன்வந்திருக்கிறார்கள். எங்களது மத்திய குழு, சிறந்ததொரு புத்திஜீவிகளைக் கெண்டதொரு அமைப்பாக இருக்கும்.

அதற்கு அடுத்தபடியாக செயற்குழுவும் தெரிவு செய்யப்படும். அதில் வடக்கு, கிழக்கினைப் பிரதிநிதித்துவப்படுத்தி இருப்பார்கள். அதன் பிற்பாடு, எங்களது கட்சியின் கொள்கைகளை வெளியிடுவோம். அதன் பின்னர், பரந்துபட்ட அடிப்படையில், செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். நிச்சயமாக, வருகிற பிரதேச சபைத் தேர்தலை எதிர்கொள்வோம்.   

கே: தனித்தா அல்லது ஏதாவது கூட்டணியின் இணைந்துகொண்டா போட்டியிடுவீர்கள்?

ப: தனிப்பெரும் கட்சியாகவே உருவாக்குகிறோம். அந்தச் சூழலைக் கொண்டுதான் முடிவு செய்யப்படும். சிலநேரம் த.தே.கூவில் இருக்கும் கட்சிகள், எங்களுடன் இணைந்து கொள்ளலாம். 

அல்லது த.தே.கூ எங்களை இணையச் சொல்லலாம். மத்திய அரசாங்கத்தில் இருக்கும் கட்சிகள் அழைக்கலாம். அந்த முடிவுகள் தேர்தல் நெருங்கிவரும் சூழலைப் பொறுத்து அறிவிக்கப்படும். பிரதேச சபைத் தேர்தலைப் பொறுத்தவரையில் பெரும்பாலும் தமிழ்க் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவதனையே விரும்புகிறோம்.   

கே: த.ம.வி.பு கட்சியின் ஆரம்பத்துக்குக் காரணமாக இருந்தவர் நீங்கள். அந்தக் கட்சி தொடர்பில், எவ்வாறான கையாளுதல் இருக்கும்?

ப: த.ம.வி.பு கட்சியில், நான் அங்கத்தவன் அல்ல. உருவாக்கத்தில் என்று பார்த்தாலும், அந்தக் கட்சிக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. பிரிந்து சென்ற பிற்பாடு நேரடியாக சு.கவுடன் தான் என்னை அங்கத்தவனாக்கிக் கொண்டேன். அதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. தலைவராகப் பிள்ளையான் இருக்கிறார். செயலாளர் மற்றையவர்களும் இருக்கிறார்கள். அவர்களையும் எங்களது கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு வரவேற்கிறோம். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.   
கே: ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான புதிய கட்சியில் இணையுமாறு அழைப்பு கிடைத்துள்ளதா? 

ப: சிங்களக் கட்சிகளுடன், பதிவின் பின்னர் பேசவிருக்கிறோம். உண்மையில், தனிப்பெரும் தமிழ்க் கட்சியாகச் செயற்படவே விரும்புகிறோம். எதிர்காலத்தில் கிழக்கில் தமிழ் முதலமைச்சரை உருவாக்குவதற்கான தீவிர செயற்பாடுகளில் ஈடுபடுவோம். வடக்கில் பிரச்சினை வரப்போவதில்லை.   

கே: இவ்வளவு காலத்துக்கு, தனிக் கட்சியை ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கம் ஏன் இருக்கவில்லை?

ப: யுத்தம் முடிவடைந்தவுடன், பாதுகாப்புத் தான் தேவைப்பட்டது. பாதுகாப்புத் தேவையை உறுதிப்படுத்த வேண்டுமென்றால், அதிகாரம் தேவை. அதற்காகத்தான், மஹிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணைந்துகொண்டேன்.

அமைச்சு அதிகாரத்தினையும் பெற்றேன். அதனூடாக, பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். மக்கள் அனைவரையும் அவர்களது வதிவிடங்களுக்கு அனுப்பி வைத்தோம். முற்றுமுழுதான மீள்குடியேற்றம் இல்லாவிட்டாலும், முடியுமானவரை மக்களை மீள்குடியேற்றினோம், கிழக்கில் இருந்த இராணுவக் கெடுபிடிகளைக் குறைத்தோம்.  

ஆனால் வடக்கில், தொடர்ந்தும் பிரச்சினைகள் உள்ளன. அங்குள்ள அரசியல் தலைவர்கள், முரண்பட்ட அரசியலை முன்னெடுக்கின்றமையினால், இராணுவத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கோ இராணுவுத்தை இணைத்துக்கொண்டு செயற்படுவதற்கோ வாய்ப்பில்லை. அதனால்தான், கேப்பாப்புலவில் பிரச்சினை நீடிக்கிறது.   

கேப்பாப்புலவு என்பது மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய காணியாகும். அது ஒரு மீன்பிடிக் கிராமம். இராணுவத்தை அகற்றும்படி நான் சொல்லவில்லை.

அதேநேரத்தில், இராணுவத்தை வைத்திருக்க வேண்டுமாக இருந்தால், அரச காணிகளுக்குள் நிலைநிறுத்தலாம். கேப்பாப்புலவு 50 மீற்றர் வீதியைக் கடந்தால் அரச காணி. இங்கிருக்கும் முகாமை அகற்றி, அங்கே அமையுங்கள்.

மக்களது இடங்களில் முகாம்களை வைத்திருப்பதை உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால், இப்போது யுத்தம் இல்லை. இதுபோன்ற பிரச்சினைகளைக் குறைப்பதற்கு அங்குள்ள தலைமைகள் தவறுகின்றன. எதிர்காலத்தில் இவ்வாறான விடயங்களைச் செய்து கொடுப்போம்.   

கே: முன்னாள் போராளிகளின் கைது மீண்டும் தொடர்கிறதே? 

ப: இதற்கும் த.தே.கூ தான் காரணம். போராளிகள் இணைந்து, ஜனநாயகப் போராளிகள் என்ற அரசியல் கட்சியை உருவாக்கினார்கள். அதனை வரவேற்க வேண்டும். ஆயுதப் போராட்டத்தில் இருந்தவர்கள், ஒரு கட்சியை உருவாக்கி வருகிறார்கள் என்றால், அவர்களை அரசியலுக்குள் விட்டு வாதப்பிரதிவாதங்களை முன்வைக்க வாய்ப்புக்கொடுக்க வேண்டும்.

த.தே.கூவுடன் இணைந்து போட்டியிடுவது குறித்துப் பேசச் சென்றவேளை, அவர்களுக்கு இடமளிக்கவில்லை.   
இப்போது, சுமந்திரன் எம்.பியை அவர்கள் சுட வந்தார்கள் என்று புதிதாக ஒரு புரளியைக் கிளப்பிவிட்டிருக்கிறார்கள். இது வெறும் பொய். சுமந்திரன் எம்.பியைக் கொல்வதற்கு, அவர்களுக்கு ஒரு நோக்கமும் இல்லை.

அவருடைய பாதுகாப்பை அதிகரிப்பதற்காகவே, இவ்வாறான புரளியொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதனால் என்ன நடந்திருக்கிறது? 6 போராளிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.   

மஹிந்த அரசாங்கம் இருக்கையில், 12ஆயிரம் போராளிகளையும் புனர்வாழ்வளித்து வெளியே விட்டோம். அத்தனை போராளிகளும் இன்று கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகிறார்கள். இப்போது, சுமந்திரனைப் போன்றவர்களின் புரளிகளால், போராளிகளுக்குப் பிரச்சினை வந்திருக்கிறது. 

அவர்களை முன்நிறுத்தி, அவர்களுக்கு, அரசியலில் நல்ல வாய்ப்பினைக் கொடுக்கவேண்டும். நாடாளுமன்றத்தில் இருக்கும் ஜே.வி.பியினரும் த.தே.கூ.வினரும், போராட்டத்தில் களமிறங்கியவர்கள் தான். அவ்வாறிருக்கையில், இவர்களை மாத்திரம் நாம் ஏன் புறக்கணிக்க வேண்டும்.   

கே: இன்னமும் விடுவிக்கப்படாதிருக்கும் அரசியல் கைதிகள் குறித்து?

ப: அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. அதேநேரத்தில், நீதித்துறையினை மதிக்க வேண்டும். நானும் கைது செய்யப்பட்டேன். ஆனால் நீதிமன்றத்தினை மீறி வரமுடியாது. பாரிய குற்றச்சாட்டுகள் என்கிற ரீதியில், கொஞ்சக் கைதிகள் தான் இருக்கிறார்கள். எதுவித தொடர்புமில்லாது ஆதரவாளர்களாக இருந்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள், விடுதலை செய்யப்பட வேண்டும்.   

கே: காணாமற்போனோர் தொடர்பான விவகாரம் இலங்கையில் பூதாகாரமாக இருக்கிறது. அது தொடர்பிலான நடவடிக்கைகள் பற்றி? 

ப: தனிப்பட்ட முறையில் கூறுவதென்றால், காணாமற்போனோர் விடயத்துக்கு, அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும். அவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்று கூறவேண்டும்.   

கே: முகாம்களில் இருப்பதாகச் சொல்லப்படுவது பொய்யா?

ப: சில அரசியல்வாதிகள், ஹம்பாந்தோட்டையில் 2000 பேருடன் முகாம் இருக்கிறது, அநுராதபுரத்தில் இருக்கிறது என்று சொல்கிறார்கள். இது, முற்றிலும் தவறான தகவல்.   

கே: அரசியல் தீர்வு விடயத்தில், உங்களது கட்சியின் நிலைப்பாடு? 

ப: கொள்கை ரீதியாகப் பார்க்கையில், வடக்கு - கிழக்கு தமிழர்களின் தாயகம் என்பதனை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில், அது சிறந்த முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. காலம் கூட இருந்தாலும், 13ஆவது திருத்தச்சட்டத்தில் மாற்றங்களைச் செய்து, அதனை மையப்படுத்தி நடைமுறைப்படுத்தும் வகையில் தான் எங்களது கொள்கைப் பிரகடனம் இருக்கும்.

ஏனென்றால், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ காலத்தில், 13க்கு மேலும் கொடுப்பேன் என்று, பலமுறை பேசியிருக்கிறார். அதனை த.தே.கூ தவற விட்டுவிட்டது. அண்மையில் சம்பந்தன் ஐயா, 70 வருடப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு, மஹிந்த ராஜபக்ஷ உதவி செய்ய வேண்டும் என்று பேசியிருக்கிறார்.

இப்போது இதனை உணர்ந்து கொண்ட அவர், மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கும் போது, ஏன் அதைக் கேட்கவில்லை. அதனை அன்று கேட்டு, மஹிந்த அரசாங்கத்துடன் கைகோர்த்திருந்தால், சிறந்ததொரு தீர்வைப் பெற்றிருக்கலாம். இப்போது, குழம்பிய குட்டை போல நாடாளுமன்றம் இருக்கிறது.   

கே: ஐ.நாவில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான தீர்மானம், நீர்த்துப்போவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றனவே? 

ப: ஐ.நா, இலங்கை அரசாங்கத்துக்கு எதிர்காலத்தில் எந்தவிதமான உதவியையும் செய்யப்போவதில்லை. ஏனென்றால், ஜீ.எஸ்.பி பிளஸ் சலுகைக்காக, 58 கட்டுப்பாடுகள் போடப்பட்டிருந்தன.

அது ஒரு சமிக்ஞை. அதில், இலங்கை அரசாங்கம் வெல்ல வேண்டுமாக இருந்தால், இலங்கை அரசாங்கம், தமிழ் மக்களது பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் கொடுத்தாக வேண்டும். அதன்மூலமாகவே, சர்வதேசத்தினை வெல்லக்கூடியதாக இருக்கும். இல்லாதுபோனால், உள்ளேயே தீர்க்கவேண்டும். இல்லையேல், தொடர்ந்தும் ஐ.நா எதிராகவே இருக்கும்.  

அடுத்தது, சர்வதேச விசாரணை. இது ஒரு சிக்கலான விடயம். சர்வதேச விசாரணையினைக் கொண்டுவரும்படி, எல்லோரும் சொல்கிறார்கள். அதன்மூலம் என்ன நடக்கப்போகிறது என்பதனை, நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். என்ன நடக்கப்போகிறது? இதில், யார் குற்றவாளி? இறைமையுள்ள ஓர் அரசாங்கம், விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் போரிட்டிருக்கிறது. 

அவர்களை, பயங்கரவாத இயக்கமாக உலகம் அறிவித்திருக்கிறது. இரண்டு பக்கமும் போர்க்குற்றம் இருக்கிறது என்று ஜெனீவா அறிவித்திருக்கிறது என்று பார்க்கும் நேரத்தில், ஒரு சிக்கலை உருவாக்கலாம். இப்போது இந்த நாட்டுக்குத் தேவையானது, தேசிய நல்லிணக்கமாகும்.

இந்தத் தேசிய நல்லிணக்கத்தினை ஏற்படுத்துவதில் தான் நாம் கவனம் எடுக்க வேண்டும். அதற்கான சூழல் ஏற்படாத வகையில், பிரச்சினைகளைக் கொண்டு வருவதன் மூலம், இனக்குரோதம் வளர வாய்ப்பு உருவாகும். என்னைப் பொறுத்தவரையில், அழிந்தது அழிந்ததுதான், ஆனால், மீண்டும் ஓர் அழிவு வராமல் பார்க்கவேண்டிய பொறுப்பு, எங்களது அரசியல்வாதிகளுக்கு இருக்கிறது.  

- See more at: http://www.tamilmirror.lk/191779/த-ழ-ம-கப-பல-கர-ச-ர-த-#sthash.WRDTWltX.dpuf

 

Link to comment
Share on other sites

என்ன எல்லாரும் மவுனாமயிர்க்கிர்கள்

கருனா அம்மன் அவர்கள் கேள்விக்கு என்ன பதில்

Link to comment
Share on other sites

மக்கள் வெறுத்தார்கள், எதிர்த்தார்கள் ஆனாலும் டிரம் சனாதிபதியானார். :(

மக்கள் வெறுத்தார்கள், எதிர்த்தார்கள் ஆனாலும் சசிகலா பொதுச் செயலாளரானார், அவருடைய விசுவாசி முதல்வரானார். :shocked:

மக்கள் வெறுப்பார்கள், எதிர்ப்பார்கள் ஆனாலும் கருனா..... தமிழர்களுடைய பிரதிநிதியாகலாம். :grin:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, raja.m1982 said:

என்ன எல்லாரும் மவுனாமயிர்க்கிர்கள்

கருனா அம்மன் அவர்கள் கேள்விக்கு என்ன பதில்

சில சந்தர்ப்பத்தில் மௌனமே சிறந்த பதில் ராஜா 

Link to comment
Share on other sites

2 minutes ago, தமிழரசு said:

சில சந்தர்ப்பத்தில் மௌனமே சிறந்த பதில் ராஜா 

உன்மை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, raja.m1982 said:

என்ன எல்லாரும் மவுனாமயிர்க்கிர்கள்

கருனா அம்மன் அவர்கள் கேள்விக்கு என்ன பதில்

ஈழப்பிரச்சனையென்று ஆரம்பதிலிருந்து பார்த்தால்.....
தமிழ்தலைவர்கள் சிங்கள அரசுடனான பேச்சுவார்த்தைகள்,சத்தியாக்கிரகங்கள்,உண்ணாவிரதங்கள் என அனைத்திலும் ஈடுபட்டு தோல்வியுற்ற பின்னர்தான் விடுதலை/ஆயுதப்போராட்டம் ஆரம்பித்தது.

அதுவும் முடிந்த பின்னர்....

அதே தலைமைகள்.....

அதே சரணம் .....

அதே பல்லவி.....

சிங்களமோ இருந்த இடத்திலேயேதான் நிற்கின்றது.

ஒரு அடி கூட நகரவில்லை.

எவர்களை குறை சொல்லி ஆயுதப்போராட்டம் உருவாகியதோ...

அவர்களை குறை சொல்லியே இவர் கட்சி ஆரம்பிக்கின்றார். 

கருணா சொல்லும் இதே கருத்தைசொல்லித்தான் முன்னைய தேர்தலிலும் ஒருவர் வந்தாரே.........:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த தாண்ட கப்பலே மீண்டும் மிதக்க ஆசைப்படும் போது தாழப் போகும் கப்பல் எதுக்கு தாழ்வது பற்றி அஞ்சனும்.. அதுக்கு கும்மானிடம் பதில் இருந்தால் கேட்டுச் சொல்லுங்கள். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

வடக்கு அரசியல் தளபதிகள் நடேசன் அவர்கள் ஆரம்பித்த களம் இன்று கிழக்கு அரசியல் தளபதிகள் கருணா அம்மனால் மீன்டும் ஆரம்பிக்கப்படுகிறது

bleeding white

referJoseph Stalin speech at battle of Stalingrad

 

 

raja.m1982Today 22:51

I mean Speech written by Soviet politicians
Link to comment
Share on other sites

கருணாவுக்கு தெரியும் மகிந்தவுடன் இருந்து பிரயோசம் இல்லை என்று. தனிய கட்சி திறந்து பார்ப்போம் என வந்துள்ளார். வந்தவுடன் சம்பந்தரை குறை கூறி அரசியல் அடையலாம் என நினைக்கிறார். கிழக்கு மக்கள் சரியான பதில் கொடுப்பார்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.