Jump to content

கருணாவின் மீள்பிரவேசம் எற்படுத்தி இருக்கும் சலசலப்பு


Recommended Posts

கருணாவின் மீள்பிரவேசம் எற்படுத்தி இருக்கும் சலசலப்பு
 

article_1487486842-625-new.jpg- கே.சஞ்சயன்  

மட்டக்களப்பில் எழுக தமிழ் நிகழ்வு இடம்பெற்ற மறுநாளான கடந்த 11 ஆம் திகதி, தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி என்ற பெயரில் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்திருக்கிறார் கருணா எனப்படும், விநாயகமூர்த்தி முரளிதரன்.  

விடுதலைப் புலிகளின் கிழக்குப் பிராந்தியத் தளபதியாக பெரும் செல்வாக்குடன் இருந்த கருணா, புலிகள் இயக்கத்தை உடைத்துக் கொண்டு வெளியேறி, அரசாங்கத்துடன் இணைந்து கொண்டவர்.  

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் அவருக்கு ராஜ உபசாரம் வழங்கப்பட்டிருந்தது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் பதவியும் பிரதி அமைச்சர் பதவியும் அவருக்கு அளிக்கப்பட்டிருந்தன.  

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த ஆட்சி மாற்றம், கருணாவை வெறுமை நிலைக்கு மாத்திரமன்றி, சிறைக்கம்பிகள் வரைக்கும் கொண்டு சென்றது.  

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பொதுவெளியில் இருந்து ஒதுங்கியிருந்த அல்லது ஓரம்கட்டப்பட்டிருந்த கருணா மீண்டும், நுகேகொடவில் கடந்த ஜனவரி 27ஆம் திகதி நடந்த மஹிந்த ராஜபக்ஷ ஆதரவுப் பேரணியில் பங்கேற்று உரையாற்றியிருந்தார்.  

அங்கு அவர் நிகழ்த்திய உரையில், தாம் மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசி என்பதைப் பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தார். மீண்டும் அரசியலில் ஈடுபடுவதானால், மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழேயே அதனைச் செய்வேன் என்றும் குறிப்பிட்டிருந்தார்.  

அவ்வாறு அவர் கூறி, இரண்டு வாரங்கள் கழித்து, மட்டக்களப்பில் நடத்திய கூட்டத்தில், புதிய கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.  

இதன் மூலம் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுவதிலும் நடந்து கொள்வதிலும் வல்லவர் என்பதைக் கருணா மீண்டும் நிரூபித்திருக்கிறார்.  

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த வரையில், தமிழர்களுக்குத் தமிழீழமே ஒரே தீர்வு என்று கூறிப் போராடி வந்திருந்தார். புலிகள் இயக்கத்தைத் தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலை இயக்கம் என்றே கூறிவந்திருந்தார்.  

ஆனால், நுகேகொடக் கூட்டத்தில் உரையாற்றிய போது அவர், மஹிந்த ராஜபக்ஷவைப் பெருமைப்படுத்துவதற்காக, கொடிய பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளை அழித்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்.  

அந்தக் கட்டத்தில் புலிகள் இயக்கம் அவருக்குப் பயங்கரவாத அமைப்பாக அதுவும், கொடிய பயங்கரவாத அமைப்பாக மாறியிருந்தது. அப்படிப் பேசினால்தான், நுகேகொட கூட்டத்தில் கைதட்டல் விழும் என்பது அவருக்குத் தெரியும்.  

அதுபோலத்தான், உபதலைவர் பதவியில் இருக்கும் வரையில், அவருக்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சி இனிப்பானதாகவே இருந்தது. அந்தப் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், “தான் சுதந்திரக் கட்சியில் இருந்து தம்மால் தமிழ் மக்களுக்கு எதையும் செய்ய முடியவில்லை” என்று கூறியிருக்கிறார்.  

புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்ற போது கருணா, கிழக்கு மாகாணம் என்ற பிரதேசவாதத்தைப் பயன்படுத்தியே, தமிழ் மக்களின் ஒற்றுமையைக் குலைக்க முயன்றார்.   

சமீப காலம் வரையில் கிழக்கு மக்களின் நலன்களுக்காகக் கட்சி ஒன்றை அமைக்கப் போவதாகத்தான் கூறி வந்தார்.  
ஆனால் இப்போது, வடக்கு, கிழக்கு மக்களின் நலன்களுக்காக என்று தனது நிலையை மாற்றிக் கொண்டிருக்கிறார். இதே வடக்கு, கிழக்கு மக்களின் நலன்கள் பற்றி, 2004 இல் கருணா சிந்தித்திருக்கவில்லை. அவ்வாறு அவர் சிந்தித்திருந்தால் நிலைமைகள் வேறாக அமைந்திருக்கும்.  

ஆக, கருணாவின் முடிவுகளும் தெரிவுகளும் எப்போதும் குழப்பம் நிறைந்ததாகவும் முன்னுக்குப் பின் முரணானதாகவுமே இருந்து வந்திருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் அவரது புதிய கட்சி. 

கருணாவைப் பொறுத்தவரையில், தமிழ்த் தேசிய அரசியலையும் செய்ய முடியாத, தேசிய அரசியலையும் செய்ய முடியாத ஒரு திரிசங்கு நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கிறார்.  

மஹிந்த ராஜபக்ஷவை மானசீகக் குருவாகக் கொண்டிருந்தாலும் அவரால், கூட்டு எதிரணியின் கீழ் அல்லது, பேராசிரியர் 
ஜி.எல்.பீரிஸ் தலைமையில் உருவாக்கப்பட்டுள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் ஊடாகக் கூட, அவர் தனது அரசியல் நகர்வை முன்னெடுக்கத் தயாராக இருக்கவில்லை.  

ஏனென்றால், மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களிடம் இருந்து வெகுதூரத்துக்கு அந்நியப்பட்டு நிற்கிறார். அவரை மீண்டும் தமிழ் மக்கள் முன்பாகக் கொண்டு வந்து நிறுத்த முனைந்தால், தனது இருப்பைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது என்பது அவருக்கு தெரியும்.  

அதேவேளை, புதிய கட்சியின் மூலமாக அவர் மஹிந்த ராஜபக்ஷவின் நோக்கங்களை நிறைவேற்றவே முனைந்திருக்கிறார் என்ற கருத்தும் உள்ளது.  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சி, வடக்கிலும் கிழக்கிலும் தன்னைப் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளை தீவிரப்படுத்தியிருக்கிறது. இந்தச் சூழலில், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பலத்தை உடைக்கவே கருணா புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறார் என்பது சுதந்திரக் கட்சியின் கருத்தாக இருக்கிறது.  

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணித் தலைவரான சாந்த பண்டார, இதனை ஒரு குற்றச்சாட்டாகவே முன்வைத்திருக்கிறார்.  

சிறிலங்கா சுதந்திரக் கட்சி எந்த வகையிலும் பலமடைந்து விடக் கூடாது என்பதே மஹிந்தவின் திட்டம். எனவே, கருணாவின் புதிய கட்சியின் ஊடாகக் கிழக்கில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பலமிழக்கச் செய்ய அவர் முனைந்திருக்கிறார்.  

நுகேகொட கூட்டத்துக்கு முதல் நாள், கருணாவை அழைத்து மஹிந்த ராஜபக்ஷ பேசியிருந்தார். இதனைக் கருணா உறுதிப்படுத்தியிருந்தார்.  

இரண்டு வாரங்களுக்கு முன்னர், மஹிந்த ராஜபக்ஷவின் கீழேயே அரசியலில் ஈடுபடுவேன் என்று உறுதிப்படுத்திய கருணா, திடீரெனப் புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்திருப்பதன் மூலம் தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.  

2004 ஆம் ஆண்டு கிழக்கை மையப்படுத்திய ஒரு பூகம்பத்தை உருவாக்கிய கருணா இப்போது, புதிய கட்சியை வடக்கு, கிழக்கை மையப்படுத்தியதாக காண்பிக்க முனைந்திருக்கிறார்.  

தமிழர் அரசியலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செல்வாக்கு பறிபோய் விட்டது என்றும் அந்த வெற்றிடத்தை நிரப்பவே தனது கட்சியின் உருவாக்கம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.  

வடக்கு, கிழக்கு இணைப்பு பற்றிய கேள்விக்கு, அவர் தெளிவான நிலைப்பாட்டைக் கூறாவிடினும், அதனை ஆதரிப்பது போன்றே கருத்தை வெளியிட்டிருக்கிறார்.  

இதனைத் தமிழ்த் தேசிய அரசியலில் நுழையும் அவரது புதிய முயற்சி ஒன்றுக்கான எத்தனமாகவும் குறிப்பிடலாம். ஆனாலும், தேசிய அரசியல் இணக்கப்பாட்டுடனேயே புதிய கட்சி செயற்படும் என்பதையும் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார்.  
எனினும், கருணாவினால் தொடங்கப்பட்டுள்ள புதிய கட்சி, தமிழ்த் தேசிய அரசியலில், பெரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தும் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. ஏற்கெனவே, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை கருணாவே உருவாக்கியிருந்தார்.  

ஆனால், பிரதேசவாதக் கருத்துகள் உச்சநிலையில் இருந்த காலகட்டத்தில் கூட, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.  

அத்தகைய பிரதேசவாத கருத்துகள் வலுவிழந்து போயுள்ள தற்போதைய கட்டத்தில், கருணாவின் புதிய கட்சியினால் மக்களின் செல்வாக்கைப் பெறுவதென்பது, கடினமானதாகவே இருக்கும்.  

தமிழ்த் தேசிய அரசியலில் கருணா மீண்டும் நுழைய முனைவது, ஒரு வகையில் அவரது தேசிய அரசியல் மீதான நம்பிக்கையீனத்தை தான் வெளிப்படுத்தியிருக்கிறது.  

ஆனாலும், தேசிய அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு உட்பட்டே அவரது இந்தத் தமிழ்த் தேசிய அரசியல் நுழைவும் அரங்கேறுகிறது என்பது முக்கியமானது.  

2004 இல் எது நிகழ்ந்ததோ, அதுவேதான் 2017இலும் அரங்கேறுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.  
விடுதலைப் புலிகளால் ஒரு காலத்தில் ஓரங்கட்டப்பட்டு, ஒதுக்கி வைக்கப்பட்டு அரசாங்கத்துடனும், இராணுவத்தினருடனும் சேர்ந்து இயங்கிய பல கட்சிகள், பின்னர் தீவிர தமிழ்த் தேசிய அரசியலில் இறங்கிய வரலாறு இருக்கிறது.  

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் மூன்று அத்தகையவை தான். அவர்களைத் தமிழ் மக்கள் ஏற்றுக் கொண்டது போலவே, தம்மையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை கருணாவுக்கு ஏற்பட்டிருக்கலாம். அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனாலும், கருணா விடயத்தில் தமிழ் மக்களின் பார்வை வேறு விதமானது.   

கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் விடுதலைப் புலிகளால் கை காட்டப்பட்டவை. கருணாவோ, தமிழ் மக்களுக்கு அவ்வாறு புலிகளால் அடையாளம் காட்டப்பட்டவர் அல்ல. அவர் புலிகளால் துரோகியாகவே அடையாளம் காட்டப்பட்டவர். அத்தகைய நிலையில் உள்ள ஒருவர், தமிழ்த் தேசிய அரசியலில், அவ்வளவு இலகுவாக வெற்றி பெற்று விட முடியாது. இது கருணாவுக்கும் தெரியாத விடயமல்ல.  

- See more at: http://www.tamilmirror.lk/191771/கர-ண-வ-ன-ம-ள-ப-ரவ-சம-எற-பட-த-த-இர-க-க-ம-சலசலப-ப-#sthash.cbb49jQ3.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அங்கால யாழ்ப்பாண பொருளாதாரம் அசுரப் பாய்சல் இஞ்சால குளம் வரை கூட்டி போறியள். உந்த யாழ் IT காரர்களுடன் நல்ல அனுபவம் உள்ளது. நண்பர் ஒருவருக்காக கொரானா காலத்தில் online sale ற்காக இணையம் ஒன்றை வடிவமைக்க கிட்டத்தட்ட 2/3 மாதங்கள் பலருடன் இழுபட்டு கடைசியில் 5 நாட்களில் தென்னிந்தியாவில் web + app  Logo என பல இத்தியாயிகளுடன் கிடைத்தது. ஆனால் சிறீலங்காவில் சில தென்பகுதி நிறுவனங்களிற்கு ஊடாக  செய்து முடிக்கலாம்.   தற்போது WhatsApp இலேயே Catalog ஒன்றை உருவாக்கி செய்து கொள்ளலாம்.
    • 1)RR, CSK,SRH, KKR 2)  1# RR  2# CSK  3# SRH  4# KKR 3)RCB 4)CSK 5)SRH 6)SRH 7)CSK 8)SRH 9)GT 10)RIYAN PARAG 11)RR 12)Yuzvendra Chahal 13)RR 14)Virat Kohli 15)RCB 16)Jasprit Bumrah 17)MI 18)Sunil Narine 19)KKR 20)SRH
    • அமெரிக்கா இல்லை என்றால் இஸ்ரேல் இந்த‌ உல‌க‌வ‌ரை ப‌ட‌த்தில் இருந்து காண‌ம‌ல் போய் இருக்கும் இஸ்ரேலுக்கு ஏதும் பிர‌ச்ச‌னை என்றால் இங்லாந்தும் அமெரிக்காவும் உட‌ன‌ க‌ப்ப‌லை அனுப்பி வைப்பின‌ம் அதில் இங்லாந் போர் க‌ப்ப‌லுக்கு ஹ‌வூதிஸ் போராளிக‌ளின் தாக்குத‌லில் க‌ப்ப‌ல் தீ ப‌ற்றி எரிந்த‌து வானுர்த்தி மூல‌ம் த‌ண்ணீர‌ ஊத்தி தீயை அனைத்து விட்டின‌ம்..........................ஈரானின் ஆதர‌வாள‌ போராளி குழுக்க‌ள் இஸ்ரேல‌ சுற்றி இருக்கின‌ம்................ஈரான் மீது கைவைத்தால் இஸ்ரேலின் அழிவு நிச்ச‌ய‌ம்............................ ஈரானின் மிர்சேல்க‌ள் ப‌ல‌ வித‌ம் அதே போல் ரோன்க‌ள் ப‌ல‌ வித‌ம்...................ஈரானின் ஏதோ ஒரு மிர்சேல் டாட‌ரில் தெரியாத‌ம்  ச‌ரியான‌ இல‌க்கை தாக்கி  அழிக்க‌ கூடிய‌ ச‌க்ந்தி வாய்ந்த‌ மிர்சேலாம் அது அதை ஈரான் இன்னும் ப‌ய‌ன் ப‌டுத்த‌ வில்லை...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.