Jump to content

படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி: 19 பேர் மாயம்


Recommended Posts

படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி: 19 பேர் மாயம்
 
 

article_1487491595-image_1487489572-0078பேருவளை பயாகல கடலில், படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பலியானதுடன், இன்னும் 19 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புனித யாத்திரை சென்றிருந்தவர்களே இவ்வாறு அனர்த்தத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

- See more at: http://www.tamilmirror.lk/191778/படக-கவ-ழ-ந-தத-ல-ப-ர-பல-ப-ர-ம-யம-#sthash.4khPFbz4.dpuf
Link to comment
Share on other sites

படகு கவிழ்ந்ததில் 11 பேர் பலி

p19-da2722ad8a608372c7010ceef3b24497f5f75a65.jpg

 

தேவாலய நிகழ்வொன்றில் ஊர்வலமாக சென்றவேளையில் களுத்துறை கட்டுக்குருந்தை கடலில் விபரீதம்

(எம்.எப்.எம்.பஸீர்)

தேவாலய நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பக்தர்கள் பயணித்த படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11பேர் நீரில் மூழ்கி பலயான துயர சம்பவம் நேற்று களுத்துறை கட்டுக் குருந்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

இந்தப் படகில் பயணித்தவர்களில் 24 பேர் நீரில் மூழ்கிய நிலையில் காப்பாற்றப்பட்டுள்ளனர். மேலும் படகில் சென்று நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளவர்களை தேடும் முயற்சியில் கடற்­படை

மற்றும் விமா­னப்­ப­டை­யினர் நேற்று இரவுவரை ஈடு­பட்டனர்.

பேரு­வளை ஹெல்கொட்டுவ சென்லாசரஸ் தேவா­ல­யத்தின் வரு­டாந்த திருவி­ழாவை முன்­

னிட்டு, திருச்­செ­ாரூபத்தினை ஏந்தி செல்லும் படகு ஊர்­வ­ல­மா­னது நேற்றுக்காலை ஆரம்­ப­மா­கி­யுள்­ளது.19 பட­குகள் இந்த ஊர்­வ­லத்தில் பங்­கேற்­றுள்­ள­துடன் அத்­தனை பட­கு­க­ளிலும் திரு­வி­ழா­வுக்கு வருகை தந்த பக்தர்கள் சென்­றுள்­ளனர். ஒவ்­வொரு பட­கிலும் பெருந்­தொ­கை­யான மக்கள் இவ்­வாறு பயணித்துள்ளனர். அவர்கள் பேரு­வ­ளையில் இருந்து களுத்­து­றை தேவா­லயத்தை நோக்­கியே இந்த படகு ஊர்­வ­லத்தில் சென்­றுள்­ளனர்.

திருச்சொரூபம் ஏந்திச் செல்லும் மேற்­படி ஊர்­வ­ல­மா­னது களுத்­து­றையில் உள்ள மற்­றைய தேவா­ல­யத்தை அடைந்த பின்னர் மீளவும் பேரு­வளை நோக்கி படகுகளில் பக்தர்கள் திரும்பி வரும் போது கட்­டு­குருந்ததை கடலில் ஊர்­வ­லத்தில் வந்த ஒரு பட­கா­னது கவிழ்ந்­துள்­ளது.

இந்தப் படகில் சிறுவர், பெண்கள் உட்­பட சுமார்

35 இற்கும் அதிகமானவர்கள் இருந்ததாக கூறப்­ப­டு­கின்றது. சிறிய ரக மீன்­பிடி பட­கொன்றே இவ்­வாறு கவிழ்ந்­துள்­ள­துடன் அதில்

 இருந்த எவரும் உயிர் காப்பு

 அங்­கி­களை அணிந்­தி­ருக்க வில்லை என்று ஆரம்ப கட்ட பொலிஸ் விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளது.

இந்த நிலையில் படகு கவிழ்ந்­த­தை­ய­டுத்து விடயம் பொலி­ஸா­ருக்கு அறி­விக்­கப்­ப­டவே கடற்­படை, கட­லோர பாதுகாப்பு படை மற்றும் மீன­வர்­களின் உத­வி­யுடன் படகில் இருந்­து நீரில் மூழ்கியோரை காப்­பாற்றும் முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்பட்­டுள்­ளன. எவ்­வா­றா­யினும் 7 பேரை மட்டுமே காயங்­க­ளுடன் அவர்­களால் மீட்க முடிந்­துள்­ளது. குறித்த 7 பேரும் நாகொடை மற்றும் பேரு­வளை வைத்­தி­ய­சா­லை­களில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் நேற்று மாலைவரை 11 பேரின் சட­லங்கள் மீட்­கப்பட்­டி­ருந்­தன. இதில் 12 வய­து­டைய சிறுவன் ஒரு­வ­னு­டைய சட­லமும் அடங்­கு­வ­தாக மீட்புப் படை­யினர் தெரி­விக்­கின்­றனர்.

நீரில் மூழ்கி காணாமல்போன­வர்­களை தேடும் பணி­களில் கடற்­ப­டையின் 15 சுழி­யோ­டிகள் ஈடு­பட்­டுள்ள நிலையில், கடற்­ப­டையின் 6 டிங்கி பட­கு­களும் 4 டோரா பட­கு­களும் களுத்­துறை - கட்­டு­கு­ருந்த கடலில் தேடுதல் நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளன. இதனை விட விமா­னப்­ப­டை­யி­னரின் பெல் 212 ரக ஹெலி­கப்டர் ஒன்றும் தேடு­தலில் ஈடு­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் கடற்­படை ஊடகப் பேச்­சாளர் லெப்­டினன் கொமாண்டர் சமிந்த வலா­கு­லகே கேச­ரிக்கு தெரி­வித்­த­தா­வது,

 இந்த படகு கவிழ்ந்­தமை தொடர்பில் கடற்­படை தலை­மை­ய­கத்­துக்கு முற்­பகல் 11.20 மணி­ய­ள­வி­லேயே தகவல் கிடைத்­தது. உட­ன­டி­யா­கவே நாம் களுத்­து­றையில் உள்ள எமது உடன்நட­வ­டிக்கை பிரிவை நாம் அனுப்பி வைத்தோம். உண்­மையில் மூழ்கியது ஒரு சிறிய மீன்­பிடி படகாகும். அதில் பொது மக்­களை அழைத்து செல்­வது என்­பது சாத்­தி­ய­மற்­றது. அத்­த­கைய பட­கொன்றில் 20 இற்கும் அதி­க­மானோர் பயணித்துள்ளதாகேவ நாம் அறி­கின்றோம். எனினும் உண்­மையில் அந்த படகில் எத்­தனை பேர் இருந்­தனர் என்­பது உறு­தி­யாக தெரி­யாதுள்ளது.

 அந்த படகில் பய­ணித்த எவரும் உயிர் காப்பு அங்கி அணி­யா­மையும் அதிகமானோர் படகில் ஏற்­றப்­பட்­ட­மையுமே விபத்து மற்றும் உயி­ரி­ழப்­புக்­க­ளுக்கு கார­ண­மாகும்.

 உண்­மையில் கடலில் இத்தகைய ஊர்வலம் செல்வதாயின் கடற்படைக்கும் கடலோர பாதுகாப்பு படைக்கும் அறிவிக்க வேண்டும். அதன்போது நாம் அதற்கான ஏற்பாடுகளை செய்வோம். அவ்வாறு இல்லாமல் தாமாக செல்லும் போது படகுகளின் தரம், உயிர்காப்பு அங்கிகள் தொடர்பில் நாம் தலையீடு செய்ய முடியாது.

எனினும் இந்த சம்பவத்தை பொறுத்தவரை தொடர்ந்து நாம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-20#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.