Jump to content

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சில கேள்விகள்..?


Recommended Posts

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சில கேள்விகள்..?

மிழக அரசியலில், கடந்த 7-ம் தேதி ஆரம்பித்த சூறாவளிப் புயல் நேற்றைய வாக்கெடுப்பு வைபவத்தோடு கரை கடந்துவிட்டது. இடைப்பட்ட இந்த பத்து நாட்களில்தான் எத்தனை எத்தனை திருப்பங்கள், ஆச்சரியங்கள், ஏமாற்றங்கள், துரோகங்கள்... எது எப்படியோ... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் 122 பேர் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வராக தனது பதவியைத் தக்கவைத்துக்கொண்டுவிட்டார்.! தமிழக அரசியல் வரலாற்றில் முன் எப்போதும் இல்லாத அசாதாரண சூழலில் முதல்வராகப் பொறுப்பேற்றிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் கவனத்துக்கு சில குறிப்புகள் இங்கே...அரசியல் விஷயங்களில், தாங்கள் எந்தப் பக்கம் என்று இதுவரையிலும் உறுதியான அடையாளம் காட்டிக்கொள்ளாத கோடம்பாக்கத்துக்காரர்கள் இந்த முறை தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்துத் துணிச்சலாக கருத்து தெரிவித்திருக்கிறார்கள். அவர்களது கருத்துகள் சரியா, தவறா என்ற ஆராய்ச்சிக்குள் போகாமல், தைரியமான அவர்களது அணுகுமுறையை வரவேற்றே ஆகவேண்டும்.

எடப்பாடி பழனிசாமி

சமீபகால தமிழக அரசியல் நிலவரங்களை தனது ட்விட்டர் பக்கங்களில் கடுமையாக விமர்சித்து வந்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். நேற்றைய தினம் அவர் பதிவிட்டுள்ள செய்தியில், 'கவர்னரது மின்னஞ்சல் முகவரிக்கு தமிழக மக்கள் தங்களது மனக் குமுறல்களை அனுப்பிவைக்க வேண்டும்' என்று கோரியிருக்கிறார். கூடவே, 'தொகுதிக்கு திரும்பும் தங்கள் சட்டமன்ற உறுப்பினருக்கு உரிய மரியாதை அளித்து வரவேற்பு அளிக்க வேண்டும்' என்றும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். 

'இப்போது மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பது நாம்தான் நண்பர்களே...' என்று மக்களின் இயலாமையையே பகடி செய்திருக்கிறார் நடிகர் சூர்யா. இதே வரிசையில், நடிகர் சித்தார்த், அர்விந்த் சுவாமி, கருணாகரன், குஷ்பு சுந்தர்... என பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவேற்றம் செய்திருக்கிறார்கள். வாக்கெடுப்பின்போது சட்டசபையில் அரங்கேறிய சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் மாண்பையே குலைத்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் அரசியல் தலைவர்கள் வழக்கம்போல், தத்தமது நிலைப்பாடுகளைப் பொருத்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். அரசியல்வாதிகளின் கருத்துகளுக்கு நாம் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என்பது, பேசப்படும் விஷயத்தைப் பொருத்தது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான புதிய தமிழக அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பரிமாறிக்கொள்ளும் அதிருப்திகளை அலட்சியம் செய்யாமல், கவனத்தில் கொண்டு சிறப்புற பணியாற்ற வேண்டிய பொறுப்பும், கடமையும் தமிழக அரசுக்கு உண்டு.

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற்ற முதல்வர், ''எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவதே எங்களது குறிக்கோள்.'' என்று செய்தியாளர்களிடம் உறுதிபட தெரிவித்துள்ளார். அந்தவகையில், தமிழகத்தின் தலைவலியாகவேத் தொடர்ந்து வரும் சில பிரச்னைகள் குறித்த கேள்விகளை முதல்வரின் கவனத்துக்கு இங்கே வைக்கிறோம்...

''ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு சம்மதிக்க முடியாது'' என்றார் ஜெயலலிதா. அதேபோல், ''மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணங்களை உயர்த்தும் மத்திய அரசின் உதய் திட்டத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.'' என்று துணிச்சலாக சொன்னார். இதுமட்டுமா... ''கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும் - சமூக பொருளாதார நோக்கங்களை சிதைக்கும் மருத்துவக் கல்லூரிக்கான நீட் தேர்வு முறையை நிரந்தரமாக நீக்க வேண்டும்.'' என்று ஓங்கி குரல் கொடுத்தார் ஜெயலலிதா. மேலும், ''தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திலிருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும்'' என்றும் கோரிக்கை வைத்து மத்திய அரசின் நிலைப்பாடுகளை துணிச்சலாக எதிர்கொண்டவர் ஜெயலலிதா.

ஆனால், முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு மேற்கண்ட நான்கு திட்டங்களுக்கும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க அரசு அவசரம் அவசரமாக சம்மதம் தெரிவித்து வரவேற்பு கொடுத்துவிட்டது. தற்போது அந்த ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றுவதாக உறுதிகொடுத்துள்ள தாங்கள் இவ்விஷயத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறீர்கள்?

வரலாறு காணாத வறட்சியால், கருகிக் கொண்டிருக்கும் பயிர்களுக்குப் போட்டியாக நூற்றுக்கணக்கான விவசாயிகளும் தற்கொலை செய்து மாண்டு போனார்களே... அவர்களது துயர் துடைக்க நிரந்தரத் திட்டமாக என்ன வழிவகை கைவசம் வைத்துள்ளீர்கள்?

பருவமழை பொய்த்துப் போனதால், அடுத்து வரும் மாதங்களில் சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுக்க தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடப் போகிறதே.... அதைத் தடுத்து நிறுத்த என்ன வழிவகை காணப் போகிறீர்கள்?

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் காவிரியை தரமறுக்கும் கர்நாடக அரசு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் கதையாக தற்போது மேகதாதுவில் புதிய அணை கட்டும் முயற்சிகளில் மும்முரமாகியுள்ளதே... இதனைத் தடுத்து நிறுத்த என்ன செய்யப்போகிறீர்கள்?

பாலாற்றின் குறுக்கே 50 அடி உயரத்தில் தடுப்பணையைக் கட்டி முடித்திருக்கும் ஆந்திர அரசு, தற்போது, மேலும் 2 தடுப்பணைகளைக் கட்டி முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆந்திர அரசின் இந்த முயற்சியைத் தடுத்து நிறுத்தி தமிழகத்துக்குள் ஈரம் படரச் செய்வீர்களா? அல்லது நல்லதாகப் போயிற்று பாலாற்று மணலை அள்ள டெண்டர் விடலாம் என்று முடிவெடுப்பீர்களா?

கடந்த ஆண்டு தேர்தலில் ஜெயித்து வந்ததும், முதல் கட்டமாக 500 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட ஜெயலலிதாவின் வழியைப் பின்பற்றி நீங்களும் மேற்கொண்டு கடைகளை மூட நடவடிக்கை எடுப்பீர்களா? (அதற்கு தங்களது கட்சியின் பொதுச்செயலாளர் ஒப்புதல் கிடைக்குமா?

edapa_cm_1_10460.jpg

கடந்த சில மாதங்களாக உள்ளாட்சி நிர்வாகம் இன்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருவதைத் தடுக்கும் விதமாக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படுமா? அல்லது அதிகாரிகள் பதவி நீட்டிப்பு, மேல் முறையீட்டு மனு காத்திருப்பு எனக் காரணங்கள் பல சொல்லி தேர்தலை தள்ளிப்போடுவீர்களா?

மணல் கொள்ளையில் புதிய சரித்திரம் படைத்த மாஃபியா கும்பல்களை ஒழித்துக்கட்டி நியாயமான நடைமுறையை அமுல்படுத்தி தமிழக இயற்கை வளங்களைக் காக்கும் நடவடிக்கையை எடுப்பீர்களா? அல்லது அது மேலிட சமாச்சாரம்... என்று ஒதுங்கிக் கொள்வீர்களா?

- இன்னும் கேட்பதற்கு நிறைய கேள்விகள் இருக்கின்றன; ஆனால், இடம் போதாது. நிறைவாக ஒரே ஒரு கேள்வி... யாரை எதிர்த்து நீங்கள் இன்றைக்கு இந்தப் பொறுப்புக்கு வந்தீர்களோ... அவரது பாணியிலேயே, கட்சித் தலைமைக்கு அடிபணிந்து, கை கட்டி, வாய் பொத்தி அடிமை சேவகமாக முதல்வர் பணியாற்றினால், அதற்கு பெரியகுளம் என்ன? எடப்பாடி என்றால்தான் என்ன?

கிடைத்ததற்கரிய வாய்ப்பாக கொங்கு மண்டலத்துக்கு கிடைத்திருக்கும் இந்த நல்வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையோடு.... காத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்!

http://www.vikatan.com/news/tamilnadu/81315-some-questions-for-cm-edappadi-palanicami.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Paco Rabanne 1Million அட நம்ம தங்க பிஸ்கட். பயல் பிரமாதம் அடிச்சு தூக்குவான். கொஞ்சம் spicy and warm ஆக இருப்பதால் எல்லா இடத்திலும் செட் ஆகமாட்டான். இவனுக்கு பின்னால் ஒரு கதையே உள்ளது. மயிரிழையில் தப்பினேன் இல்லையென்றால் பயல் எண்ட வேலைக்கு உலை வச்சிருப்பான்.     நமது favourites 1. Bleu de chanel  2. Dior Sauvage 3. Giorgio Armani acqua di gio (கிளாசிக்) ஒரு காலத்தில் பிரமாதம் நாள் கணக்கில் சட்டையில் மணம் இருக்கும் ஆனால் இப்போ வருவது அந்தளவுக்கு தரமாக இல்லை அதனால் Profondo வுக்கு மாறிவிட்டேன் பொருள் டக்கர். இதெல்லாம் ஒவ்வொரு நாளும் விசிற கட்டுப்படியாகாது என்பதால் சாதாரண பாவனைக்கு Davidoff Coldwater Intense ,Cyrus Writer and Nautica Blue.   Gucci Envy கேள்விப்பட்டிருக்கிறேன் பாவிக்க கொடுத்துவைத்திருக்கவில்லை.      
    • எனக்கு தெரிந்த சில சிறிய பென்சன்காரர்கள் (மாதம் 500 இலிருந்து 600 யூரோக்கள் வரை) அங்கே 6 முதல் 9 மாதங்கள் தங்கி வருகிறார்கள். அவர்களுக்கு இது இனி கடினம் தானே? விமான ரிக்கற் மற்றும் விசா செலவு என்று பார்த்தால் வாழ்க்கை இனி இறுகலாம் அல்லவா?
    • குளிப்பா? கிலோ என்ன விலை எனும் சப்பையள் நாளுக்கு நாலு தரம் குளிக்கும் எம்மை பார்த்து மூக்கை பொத்துகிறார்களா? ஜோக்தான். எனக்கும் இதில் கொஞ்சம் நாட்டம் அதிகம்தான். Paco Rabanne 1Million பாவித்துள்ளீர்களா? எனக்கு பிடிக்கும். முன்னர் Gucci Envy for men பிடிக்கும். ஒரு பத்து வருடம் முன் நிறுத்தி விட்டார்கள்.  இப்போ வெறும் போத்தல் நல்ல விலை போகிறது. கடைசியாக பாவித்தது ஒரு 10 மில்லியோடு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன். 
    • அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்படும் விடயம் சூடுபிடித்திருக்கின்றது. இந்த விடயத்தைப்பற்றிப் பேச்சு எழுந்தவுடனேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் இரா.சம்பந்தன் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டிருந்தனர். அவர்களுக்கு ஒத்தூதும் வகையில் வடக்கு மாகாணசபையின் அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானமும் கருத்து வெளியிட்டிருக்கிறார். கடந்த காலங்களில் அரசதலைவர் தேர்தலின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது வகிபாகம் மிகப்பெரியது. அந்தக் கட்சி எடுக்கும் முடிவையே தமிழ் மக்களும் எடுத்திருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள்ளும் பங்காளிகளுடன் பேசி, அந்த முடிவு எடுக்கப்பட்டதா என்ற கேள்வி எழுந்தால் எந்தத் தாமதமும் இல்லாமல் இல்லை என்ற பதிலே கிடைக்கும். சகல முடிவுகளையும் சம்பந்தன் அல்லது சம்பந்தனின் பெயரால் சுமந்திரனே எடுத்தனர், அதை ஏனையோரிடம் திணித்தனர். அவர்களும் எதிர்ப்புகளை கட்சிக்குள் பதிவு செய்துவிட்டு, திணிக்கப்பட்ட முடிவை செயற்படுத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் தெரிவுக்கான தேர்தலில் எம்.ஏ.சுமந்திரன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, கட்சிக்குள் அவருக்கான இடம் - செல்வாக்கு கட்சி தொடர்பில் தீர்மானிக்கும் சக்திக்கான அந்தஸ்து என்பன கேள்விக்குள்ளாகியிருக்கின்றது. கடந்த காலங்களைப்போன்று தென்னிலங்கையின் அரசதலைவர் வேட்பாளர்களை கண் மூடித்தனமாக ஆதரித்த சுமந்திரன்- சம்பந்தன் கூட்டின் போக்கை இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குள் உள்ளவர்களே ஏற்க மறுக்கின்ற சூழல் உருவாகியிருக்கின்றது. இலங்கைத் தமிழரசுக் கட்சி அரசதலைவர் தேர்தல்களில் எடுத்த முடிவு தவறு என்பதை காலம் நிரூபித்திருக்கின்றது. இதை அந்தக் கட்சியின் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈ.சரவணபவன் கூட அண்மையில் ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இப்படியான சூழலில் தங்களது கைகளை மீறி, தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரம் சென்று விடுமோ என்ற அச்சத்தில், இரா. சம்பந்தன் -எம்.ஏ.சுமந்திரன் மற்றும் அவரது அணியினர் கருத்துகளை முன்வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அவர்கள் இதற்காக, ராஜபக்சக்கள் மீண்டும் வந்து விடுவார்கள், தென்னிலங்கையில் இனவாதிகள் ஒன்றாகி விடுவார்கள் என்ற தேய்ந்துபோன இசைத் தட்டையே மீண்டும் வாசிக்கத் தொடங்கியிருக்கின்றார்கள். ஒவ்வொரு தேர்தல்களின் போதும், தமிழ் மக்கள் இதைச் செய்தால் தென்னிலங்கை இப்படி எதிர் வினையாற்றும் என்று சொல்லிச் சொல்லியே, தமிழ் மக்க ளுக்கு எது தேவை என்பதைச் சொல்லாமல் செய்து விட்டிருந்தனர். இம்முறை அதேதவறை தமிழ் மக்கள் மீண்டும் இழைப்பதற்குத் தயாரில்லை. அரசதலைவர் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் என்ற முடிவை நோக்கி தமிழ் மக்கள் தாங்களாக வரவில்லை. அதை நோக்கி கடந்தகால அரசதலைவர் தேர்தல் அனுபவங்கள் தமிழ் மக்களை தள்ளிவிட்டிருக்கின்றன. இப்போதும், தமிழ்ப் பொதுவேட்பாளர் என்றதும் எதிர் வரும் அரசதலைவர் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற சிங்கள வேட்பாளர்கள் பதறத் தொடங்கியிருக்கின்றனர். அவர்கள் எவரும் தமிழ்ப்பொது வேட்பாளர் விடயத்தை சாதகமாகப் பார்க்கவில்லை. அந்தத் தென்னிலங்கை வேட்பாளர்களைப்போல அல்லது அதற்கு ஒருபடி மேலேபோய், சம்பந்தன் - சுமந்திரன் இணை அணியும் பதறத் தொடங்கியிருக்கின்றது. ராஜபக்ச பூச்சாண்டி அல்லது தென்னிலங்கை இனவாதிகள் என்ற பயத்தைக் காண்பித்து, தாங்கள் சேவகம் செய்யவேண்டிய ஏதோவொரு தென்னிலங்கை வேட்பாளரை நோக்கி தமிழ் மக்களைத் தள்ள வேண்டும் என்று இந்த அணியினர் சிந்திக்கின்றனர். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இதுவரைகாலமும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்து எதுவும் பெறமுடியாத சூழலில், தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரித்து, எங்கள் நிலைப்பாடு இதுதான் என்பதைச் சொல்வதற்கான சந்தர்ப்பமாக மாத்திரம் அரசதலைவர் தேர்தலை பிரயோகிப்பதில் தவறில்லையே...! (13.04.2024-உதயன் பத்திரிகை)   https://newuthayan.com/article/உள்ளத்தில்_இருப்பதை_உரக்கச்_சொல்ல_ஒரு_சந்தர்ப்பம்!!!
    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது. எனக்கு sign up page வரை வேலை செய்கிறது. அப்பால் முயலவில்லை. பிகு 50 நாடுகளுக்கு இலவச டூரிஸ்ட் விசா விரைவில் இலங்கை அறிவிக்கும் என ஒரு வதந்தி உலவுகிறது. வாய்ப்பில்லை என நினைக்கிறேன். நடந்தாலும் இந்த 50 இல் மேற்கு நாடுகள் இராது.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.