Jump to content

முதல்வராக நீடிப்பாரா எடப்பாடி பழனிசாமி?


Recommended Posts

முதல்வராக நீடிப்பாரா எடப்பாடி பழனிசாமி?

''முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து அந்தப் பதவியில் நீடிக்க இறைவன்தான் அருள் புரிய வேண்டும்'' என திருவாய் மலர்ந்திருக்கிறார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.!

இதனை வாழ்த்துச் செய்தியாக எடுத்துக்கொள்வதா? அல்லது வசைமொழியாக எடுத்துக்கொள்வதா? ஏற்கெனவே, 'தமிழகத்தை காவி மயமாக்க முயற்சிக்கிறது மத்திய அரசு', என்ற குற்றச்சாட்டு சசிகலா தரப்பினரால் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கிடையில், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும், 'பி.ஜே.பியை தமிழகத்தில் கால் ஊன்ற ஒருநாளும் விடமாட்டோம். ஆர்.எஸ்.எஸ் கனவான திராவிட ஆட்சி இல்லாத தமிழகம் என்ற வசனம் எல்லாம் தமிழகத்தில் எடுபடாது. அரசியல் சட்டத்தில் இல்லாதவற்றை எல்லாம் போலியான நிபந்தனைகளாக முன்வைத்தது சரியானதுதானா?' என்றெல்லாம் கேள்வி கேட்டு மத்திய பி.ஜே.பி-யை கடுமையாக சாடியிருந்தார். 

தமிழக தலைமைசெயலகம்

ஓ.பன்னீர்செல்வம் - சசிகலா இடையே மோதல் வெடித்த பிப்ரவரி 7-ம் தேதியில் இருந்தே, மத்திய பி.ஜே.பி-க்கு எதிரான கருத்துவாதங்களும் தமிழகத்தில் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன. முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கவர்னரிடம் கொடுத்த ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுவிட்ட நிலையில், சசிகலா முதல்வராகப் பதவி ஏற்கும் சூழல் ஏற்பட்டது. ஆனால், இந்தச் சூழலை தவிர்க்கும்விதமாக திடீரென தமிழகத்திலிருந்து மும்பைக்கு கிளம்பிச் சென்றார் ஆளுநர். தொடர்ந்து தமிழக அரசியலில் குழப்ப நிலை தீவிரமடைந்த பின்னரும், சாவகாசமாகவே தமிழகத்துக்கு வருகை தந்தார்.

அதன்பின்னர், ஆட்சி அமைக்கப் போதுமான ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பட்டியலோடு கவர்னரை சந்தித்த சசிகலா, தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை வைத்தார். ஆனால், காரணமே சொல்லாமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்தது மேற்கண்ட சந்தேகங்களை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைந்துவந்தது.

இந்த நிலையில், தமிழக பி.ஜே.பி தலைமையான தமிழிசை சவுந்தர்ராஜனோ, ''கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித பிரச்னையும் இல்லாமல், நல்லாட்சி நடத்திக் கொண்டிருந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இப்போது மாற்ற வேண்டிய அவசியம் என்ன வந்தது? எதிர்க்கட்சிகளோடு சுமூகமான அணுகுமுறை, ஜல்லிக்கட்டு, வர்தா புயல், தண்ணீர் பிரச்னை போன்ற விஷயங்களில் சிறப்பாக பணியாற்றி வந்துள்ள ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக நீடித்திருக்கவே, மத்திய அரசான பி.ஜே.பி ஆதரவு தெரிவிக்கிறது.'' என்று வெளிப்படையாகவே போட்டு உடைத்தார்.

உண்மையில், சசிகலாவை முதல்வராகப் பதவி ஏற்கச் செய்வதில், பி.ஜே.பி-க்கு என்ன தயக்கம்? ஏன் இந்தக் காலதாமதம்? என்ற கேள்விக்கு... சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு வெளிவர இருப்பதால் கவர்னர் காலதாமதம் செய்கிறார், நியாய தர்மங்களையும் கணக்கில்கொண்டே கவர்னர் முடிவெடுக்க வேண்டியிருப்பதால் காலதாமதம் ஆகிறது.... என்று பலரும் பல்வேறு காரணங்களை சொல்லிக்கொண்டிருந்தனர். ஆனால், பதில் சொல்ல வேண்டிய கவர்னர் மவுனமாகவே இருந்தார். இத்தனைப் பிரச்னைகளுக்கு நடுவிலும், நேரடியாக மத்திய பி.ஜே.பி அரசை குறைகூற முடியாமல், தி.மு.க-வை மட்டுமே சாடிக் கொண்டிருந்தார்கள் சசிகலா தரப்பினர். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு, மத்திய அரசைப் பகைக்க வேண்டாம்... என்பது போல் பல காரணங்கள் அதன் பின்னணியில் இருந்தன. 

இந்த நிலையில், பிப்ரவரி 14-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கின் மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பும் வெளியாகியது. சசிகலா உள்ளிட்ட மூவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அவசரம் அவசரமாக அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அவரும் கவர்னரை சந்தித்து ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பட்டியலைக் கொடுத்தார். ஆனாலும் ராஜ்பவனில் இருந்து எந்தவித சமிக்ஞையும் வரவில்லை. அடுத்து வந்த நாட்களில் தொடர்ந்து இரண்டாவது முறையும் கவர்னரை நேரில் சந்தித்தார். இந்த இரண்டுவார இழுத்தடிப்புகளுக்குப் பிறகு பிப்ரவரி 16-ம் தேதி எடப்பாடி பழனிசாமி கவர்னர் தலைமையில் முதல்வராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இதே நேரம் சசிகலாவுக்கு எதிர் அணியான ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு, 11 எம்.எல்.ஏ-க்களும், 10 மத்திய அமைச்சர்களும் ஆதரவு கொடுத்திருந்தனர். 

''இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியான அ.தி.மு.க-வை உடைக்க பி.ஜே.பி வைத்திருந்த நீண்டகால திட்டத்தை இப்போது செயல்படுத்தியுள்ளது. அதற்காகத்தான் போதிய கால அவகாசத்தை ஓ.பன்னீர்செல்வத்துக்கு கொடுத்து இவ்விஷயத்தில் இழுத்தடித்தது. இப்போது ஓ.பி.எஸ் அணியில் உள்ள 10 எம்.பி-க்களும் மத்தியில் பி.ஜே.பி அரசுக்கு ஆதரவாகத்தான் செயல்படுவார்கள். ஆக, அவர்களின் திட்டம் நிறைவேறிடுச்சு.'' என்கிறார்கள் சசிகலா தரப்பினர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர் செல்வமும்

இதனை மறுத்துப்பேசும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள், ''ஆட்சியையும் கட்சியையும் பிடிக்கத் திட்டமிட்ட சதி செய்த சசிகலா கும்பல்தான் இப்படி மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு பிரச்னையை திசை திருப்புகிறார்கள். அவரது பதவி ஆசைக்கு ஓ.பி.எஸ் இடைஞ்சலாக இருந்ததால், கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கினார்கள். அதையொட்டி எழுந்த பிரச்னைகள்தான் இத்தனைக்கும் காரணம். ஒருவேளை சசிகலாவை அவசரகதியில் முதல்வராகப் பொறுப்பேற்க வைத்திருந்தால், சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்குப் பிறகு இன்னொரு அரசியல் குழப்பம் ஏற்பட்டிருக்குமா இல்லையா?'' என்று லாஜிக்கலாக கேள்வி கேட்கிறார்கள்.

நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும்... இனி நடப்பவை நல்லவையாக நடக்கட்டும்!

http://www.vikatan.com/news/tamilnadu/81316-edapadi-palanisami-will-be-continue-cm-post.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விசா கட்டணம் கணிசமாக கூடியுள்ளது. அந்த பாதிப்பு மட்டுமே. வேறு மாற்றங்கள் இல்லை. உதாரணமாக தொடர்சியாக ஒரே மூச்சில் 3 மாதம் நாட்டில் நிற்க இப்போ 200 டொலர் (ஒரு வருட மல்டி என்ரி விசா ஆனால் 3 மாதத்தின் பின் வெளியே போய் வரல் வேண்டும். ஒருக்கா பலாலி-சென்னை போய் வந்தால் இன்னொரு 3 மாதம், இப்படியாக ஒரு வருடம் நிற்கலாம்). முன்பு இது 100/120 என நினைக்கிறேன்.  ——————- அதேபோல் இப்போ இதை கையாளவது VFS. இவர்கள் 30 டொலர் அளவு அட்மின் சார்ஜ் எடுப்பார்கள். ஏனைய நாடுகளில் அதுவே நடைமுறை. ஆகவே 30 நாளுக்குள் தங்கபோகும் ஒருவருக்கு (வெள்ளையர் சராசரியாக 10 தங்குவர் என நினைக்கிறேன்): முன்பு 50 டொலர். இப்போ 75+30 டொலர். பிகு தனி மனிதருக்கு இது பெரிதாக தோற்றா விடினும் பெரிய குடும்பங்கள், தொகையாக இறக்கும் tour operators ற்கு இது கணிசமான பாதிப்பை தரும். போட்டியாளர்களாகிய தாய்லாந்து இலவச விசா கொடுக்கும் போது இலங்கை இப்படி செய்வது ரிஸ்கிதான். கூடவே நாளுக்கு 20 டொலரில் தங்கும் low end ஆட்களும் வர முன் யோசிப்பர். இதனால் அவர்களை நம்பி உள்ள ஹொஸ்டல்கள், லொஜ்ஜுகள் பாதிக்கபடும். ஆனால் 2018 இல் வைத்த இதுவரை இல்லாத சுற்றுலா பயணிகள் வருகை ரெக்கோர்ர்ட்டை 2024 ரெட்கோர்ட் உடைக்கும் என்கிறார்கள் சிலர். ஆகவே இலங்கை குறைவான ஆட்கள் ஆனால் high spending செய்ய கூடிய ஆட்கள் நோக்கி நகர்வதாய் தெரிகிறது.
    • இணைத்த படம் தெளிவாக இல்லை. கவனம் செலுத்தவும் 😎 @தமிழ் சிறி
    • நன்றிகள் அண்ணை  நாம வருடக்கணக்கெல்லாம் இல்லை 6 மாதங்களுக்கு முன்னாடிதான் கடைசியாக போனது. சிங்கையில் எமது தோலின் கலரை  பார்த்துவிட்டு அவர்களுக்குள்ளே மூக்கை பொத்துவது போல பாவ்லா காட்டி கலாய்ப்பது சப்பைகளின் வழக்கம் (பிரவுன் தோல் என்றாலே நாறுவார்களாம் என்பதை சைகையில் காட்டுவது) . அவர்களுக்கு நடுவிலே சும்மா கமகமக்க போய் நின்று அவர்களது ரியாக்சன்களை ரசிப்பது எனது வழக்கம். சிறுவயது முதலே இருந்த  வாசனைதிரவிய பித்து சிங்கை போனபின் இன்னும் உட்சத்தில் உட்கார்ந்து கொண்டது.    
    • நான் படத்தை பார்த்து 🤪மாறி விளங்கிக் கொண்டேன். அண்ணன் பயன்படுத்தியதை தம்பி பயன்படுத்தி இருக்கிறார் என்று. 
    • இதனை வேற சொல்லித்தான் தெரியனுமா ......பங்காளி மாட்டிட்டாரு ....தமிழிலில் ஒரு பழமொழி "ஆழம் தெரியாமல் காலை விடாதே " சும்மாவா சொன்னார் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.