Jump to content

எமது நிலத்தை மீட்கும் போராட்டம் எமக்கு மற்றுமொரு முள்ளிவாய்க்கால் கேப்பாப்புலவு மக்கள் தெரிவிப்பு


Recommended Posts

எமது நிலத்தை மீட்கும் போராட்டம் எமக்கு மற்றுமொரு முள்ளிவாய்க்கால்

 

கேப்பாப்புலவு மக்கள் தெரிவிப்பு

கேப்­பா­ப்பு­ல­வி­லி­ருந்து ரி.விரூஷன்

எமது நிலத்தை மீட்­ப­தற்­கான இப்போராட்­ட­மா­னது எமக்கு இன்­னு­மொரு முள்­ளி­வாய்க்கால் போன்­றுள்­ளது எனவும் அவ் இறு­தி­க்கட்ட யுத்­தத் தில் அனு­ப­வித்த வேத­னை­களை இப்போராட் ­டத்­திலும் அனு­ப­விப்­ப­தா­கவும் நில மீட்பு போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வரும் முல்­லைத்­தீவு கேப்­பா­ப்புலவு மக்கள் தெரி­வித்­தனர்.

தொடர்ந்தும் எமது நில­மா­னது விடு­விக்­கப்­ப­டாது விட்டால் இறு­தி­யாக எமது இவ் விடத்­தி­லேயே எமது உயிரை மாய்த்­துக்­கொள்வோம் எனவும் அம் மக்கள் தெரி­வித்­தனர் . அத்­துடன் தமது போராட்டம் தொடர்­பாக வெளி­நாட்டு மற்றும் சர்­வ­தேச அரச தல­மைகள் தொடர்ந்து அவ­தா­னித்து வரு­கின்ற போதிலும் இது வரை எமது போராட்­டத்­திற்­கான தீர்வை பெற்றும் தரும் வகை­யி­லான எந்­த­வொரு அழுத்­தத்­தையும் அர­சாங்­கத்­திற்கு வழங்­க­வில்லை எனவும் அவர்கள் கவலை வெளி­யிட்­டனர் .  

கேப்­பா­பி­லவு பிலக்­கு­டி­யி­ருப்பை சேர்ந்த 384 குடும்­பங்­க­ளது 524 ஏக்கர் காணி­க­ளா­னது விமாப் படை­யி­னரால் சுவி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இதில் பிலக்­கு­டி­யி­ருப்பை சேர்ந்த 84 குடும்­பங்­க­ளுக்­கான 42 ஏக்கர் காணி­களும் அதே­போன்று கேப்­பா­பி­லவை சேர்ந்த 145 குடும்­பங்­க­ளுக்­கான 503 ஏக்கர் காணி­களும் விமா­னப்­ப­டை­யி­னரால் சுவி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இவற்­றை­விட புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­தியில் 46 குடும்­பங்­க­ளுக்­கான 19 ஏக்கர் காணி­களும் இரா­ணு­வத்­தி­னரால் சுவீ­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் தமது நிலத்தை மீட்­டெ­டுக்கும் வகையில் கேப்­பா­பி­லவு பிலக்­கு­டி­யி­ருப்பு மக்கள் கடந்த முதலாம் திக­தியில் இருந்து தொடர்ச்­சி­யான போராட்­டத்தில் ஈடு­பட்­டு­வ­ரு­கின்­றனர். அவர்கள் தமது போராட்டம் தொடர்பில் மேலும் கூறு­கையில்

இறுதி யுத்­தத்தின் போது எமது சொந்த நிலத்தில் இருந்து இடம்­பெ­யர்ந்து சென்ற எம்மை மீண்டும் சொந்த நிலத்தில் குடி­ய­மர்த்த வேண்டும் என நாம் தொடர்ச்­சி­யாக மேற்­கொண்ட போராட்­டத்­தை­ய­டுத்து கடந்த 2012 எம்மை சொந்த நிலத்தில் மீள குடி­ய­மர்த்­து­வ­தாக கூறிய முன்­னைய அர­சாங்கம் பின்னர் சொந்த நிலத்தில் குடி­ய­மர்த்­தாது மேறொரு இடத்தில் குடி­ய­மர்த்தி எம்மை ஏமாற்­றி­விட்­டது. இவ்­வா­றான நிலையில் பல்­வேறு தட­வைகள் எமது சொந்த நிலத்தை மீட்­ப­தற்­காக போரா­டியும் எது­வித பயனும் ஏற்­ப­டா­த­தா­லேயே தற்­போது இவ் இறுதி போராட்­டத்தை ஆரம்­பித்­துள்ளோம்.

மேலும் இப் போராட்­ட­மா­னது எமக்கு இன்­னு­மொரு முள்­ளி­வாய்க்கால் போன்­றுள்­ளது. அத்­துடன் அவ் இறுதி யுத்­தத்தில் அனு­ப­வ­தித்த வேத­னை­க­ளையும் அச்­சு­றுத்­தல்­க­ளையும் அனு­ப­வித்து வருகின்றோம்.

இனியும் எமது நிலத்தை விடுவித்து எமது நிலத்தை எம்மிடம் மீள வழங்காது அரசாங்கம் தொடர்ந்தும் இழுதடிப்புக்களையும் ஏமாற்று வேலைகளிலும் ஈடுபடுமாயின் எமது உயிரை இவ் விடத்திலேயே மாய்த்துக்கொள்வோம் நாதம் அஞ்ச மாட்டோம் என்ற தெரிவித்தனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2017-02-19#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.