Jump to content

நில மீட்புப் போராட்டங்களை ஆதரிப்போம்! மாவை சேனாதிராசா


Recommended Posts

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கும் போராட்டங்களை ஆதரிப்போம் இலங்கை தமிழரசு கட்சி துணைத் தலைவர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

கேப்பாப்பிலவு மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவர் வெளியிட்டுள் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சென்ற பல நாட்களாக முல்லைத்தீவில் அஹிம்சை வழியில் ஜனநாயக வழிகளில் அரசுப் படைகளினால் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் சொந்த நிலங்களை மீட்கவும் அந்த நிலங்களில் மீளக்குடியேறி வாழ்வதற்குமான உரிமை மறுக்கப்பட்ட மக்கள் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர்.

இனவிடுதலைப் போராட்ட காலங்களில் துன்பமான துயரமான இழப்புக்களையும் அனுபவித்த மக்கள் திடசங்கற்பம் கொண்டு நடாத்தும் போராட்டங்களை நாம் ஆதரிக்கின்றோம்.

ஒரு திட்டமிட்ட அடிப்படையில் அனைவரும் ஒருங்கினைந்து இலக்கை எட்டும் வரை போராடுவது நியாயமானதேயாகும்.

இப் போராட்டங்களில் அமைதியான அஹிம்சை வழியிலான வன்முறைகளுக்கு இடமளிக்காத ஜனநாயக வழிப் போராட்டங்களில் நாம் பங்கு கொள்ள வேண்டும் என அழைப்பு விடுக்கின்றோம்.

ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவித்து அதற்குச் சொந்தமான மக்களைமீளக் குடியமர்த்துவோம் என ஜனாதிபதியும் அரசும் வாக்குறுதி அளித்து இரண்டு வருடங்களாகிவிட்டன.

இக் காலத்தில் ஒருசிறு முன்னேற்றம் ஏற்ப்பட்டதே தவிர மக்கள் நிலங்கள் பெருமளவில் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இவ்விடயங்களில்

2012,2013,2014,2015,ஆம் ஆண்டுகளில் இலங்கையுட்பட அங்கத்துவ நாடுகளினால் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட ஐ.நா.மனித உரிமைத் தீர்மானங்கள் பெருமளவில் நிறைவேற்றப்படாமல் அரசும் ,ஜனாதிபதியும் இழுத்தடிப்புச் செய்துவருவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

மக்களைப் போராட அரசு நிர்ப்பந்திப்பதை வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஜனாதிபதியும் அரசும் உடன் நேரடியாகக் தலையிட்டு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்க வேண்டும் என்றும் அந்த மக்களை மீளத் தங்கள் நிலங்களில் குடியேற்ற வேண்டுமென்றும் வற்புறுத்துகின்றோம்.

அனைத்துத் தரப்பு மக்கள் சிவில் அமைப்புக்கள் நிலமீட்புக்காகப் போராட்டங்களில் ஈடுபடுவதையும் வரவேற்கின்றோம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும் பாராளுமன்றத்திலும் நேரடியாகவும் ஜனாதிபதியிடமும் அரசிடமும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை விடுவிக்கவேண்டுமென வற்புறுத்தி வருகின்றனர்.

பாராளுமன்றத்தில் முல்லைத்தீவில் இடம்பெறும் போராட்டங்கள் தொடர்பிலும் ஒத்தி வைப்புப் பிரேரனை கொண்டு வந்து விவாதித்துள்ளனர்.

ஆனாலும் விடிவு இல்லை. எனவே மக்கள் போராட்டங்களை நில ஆக்கிரமிப்புக்கு எதிராக தங்கள் சொந்த நிலங்களை விடுவித்து மீளக்குடியிருப்புக்குரித்ததான மக்கள் வாழ்வுரிமைப் போராட்டங்களை ஆதரிப்போம் அப் போராட்டங்களின் பங்காளிகளாவோம்.

இத்தகைய போராட்டங்களை நடாத்தியும் பங்களிப்புச் செய்தும் ஆதரித்தும் வந்த வரலாற்றைக் கொண்ட நான் சென்ற திங்கள் 09.01.2017 அன்று நினைவிழக்கும் வரையிலான கொடிய நோயொன்றினால் நீண்ட நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததனால் நான் பங்கு பற்ற முடியவில்லை என எனது மன வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி நோயிலிருந்து தேறுவதற்கு மருந்து உட்கொண்டு வருகின்றேன்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடக்க வேண்டியுள்ளது. இருப்பினும் நான் விரைவாகத் தேறி வருகின்றேன்.

இத்தகைய போராட்டங்களை ஆதரிக்கின்றேன். விரைவில் போராட்டங்களில் பங்கெடுக்க முடியும் என நம்புகின்றேன். அதனாலும் இவ்வறிக்கையை வெளியிடுகின்றேன் என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

http://www.tamilwin.com/community/01/135961

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாராவது தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் ஏனைய தமிழர் நலன்சார்ந்து அரசியல்திட்டங்களை முன்னெடுக்கிறோம் என புலுடா விடும் அரசியல்வாதிகள் அனைவருக்கும் நான் கூறவரும் விடையத்தை காதில் போட்டுவிடுங்கோ

மாகாணசபைத் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் இவைகளின் பிரசாரக்கூட்டங்களின்போது நாம்தான் தமிழர்களது அபிலாசைகளை எவ்விதமேனும் நிறைவேற்றிக்கொள்ளக்கூடிய தகுதியுள்ள அரசியல் சக்தி, எம்மை உங்கள் பிரச்சனைபற்றிப் பேசுவதற்கு, போராடுவதற்கு நாடாளுமன்றம் அனுப்புங்கோ எங்களது பிரச்சனைகளை உங்களுடன் வாழும் எம்மால்தான் புரிந்துகொள்ளமுடியும் ஆகையால் மாகாணசபையினது அதிகாரங்களை நாம் பெற்றுக்கொள்ளும்வகையில் எம்மைத் தெரிவுசெய்யுங்கள் எனக்கூறி ஓட்டுக்களைப்பெற்று அதிகாரத்துக்கும் பதவிக்கும் வந்தவர்கள் நீங்கள்,

அதாவது உங்கள் பிரச்சனைகளை நாம் பார்த்துக்கொள்கிறோம் எத்தகைய விட்டுக்கொடுப்புகளுக்கும் இடம்தராது நாங்கள் உங்கள் உரிமைகளை இழந்தவைகளைப் பெற்றுத்தருவோம் என கூறியே எங்கள் பிரச்சனைக்கான பிரதிநிதிகளாக எம்மால் உங்களை தெரிவுசெய்யப்பட்டவர்களாக ஆக்கியுள்ளோம்.

ஒரு அரசியல் தலைமை அதனூடான எங்களது விடையங்களை கவனிப்பதற்கான கடப்பாடு மற்றும் அறம் சார்ந்த உணர்வு இருப்பவர்களாக நீங்கள் எங்களது தெரிவுக்குப்பின்பு இருந்திடல் வேண்டும் அதாவது எமது உரிமை கலாச்சாரம் நிலம் கல்வி பொருளாதாரம் சம்பந்தமான தமிழர்க்குப்பொதுவான பிரச்சனைகள் வரும்போது, தமிழ் மக்களது பிரதிநிதிகள் எனப்படும் நீங்கள்தான் உண்ணாவிரதம் சத்தியாக்கிரகம் போராட்டம் ஊர்வலம் மாநாடு என முன்னின்று செய்திடல்வேண்டும் தவிர நீங்கள்தான் இப்படியான போராட்டங்களின் மக்கள் ஈடுபடமுன்பே ஈடுபடல்வேண்டும் அதற்கான தார்மீகத் தகுதிகளும் மக்கள் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் கூடிய அனைத்துத் தரப்பு அங்கீகாரத்தையும் நீங்களேகொண்டுள்ளீர்கள், அதற்கான சட்ட உரிமைகளும் சட்டப்பாதுகாப்பும் அடிப்படை உரிமையும் உங்களுக்கே உள்ளது.

அதைவிடுத்து தமிழர்கள் தங்கள் பிரச்சனைகள், மற்றும் தேவைகளுக்கான தீர்வுக்காக அவர்களே தெருவில் இறங்கிப்போராடவேண்டும் நாம் எமக்கு நேரமிருந்தால் வெயிலோ மழையோ அவ்வேளையில் உங்களது கைகளால் உங்களுக்காகவே பிடிக்கவேண்டிய குடையை உங்களால் உள்வாங்கப்பட்ட ஒரு ஆதரவாளர் கையில் கொடுத்து ஒரு தமிழ் அடிமை எனக்குக் குடைபிடிக்கின்றது நான் அவனது எஜமானர் எனும் மிதப்பில் வெள்ளை வேட்டியை காலநிலைக்கேற்ப உயர்த்தியோ பதிச்சோ கட்டிக்கொண்டு ஒருசில நிமிடங்கள் குறை கேட்பது எனும்கோதாவில் புகைப்படம் எடுத்து அதை ஆவணப்படுத்தி அதையே ஊடகங்களில் வெளியிட்டு அன்று மாலையே கொழும்பு நோக்கிப் பயணமாகி..........

கோப்பாப்பிலவுக்கும் காணாமலாக்கப்பட்ட தங்கள் உறவுகளுக்கும் வெயிலிலும் மளையிலும் தெருப்புழுதியிலும் மளைவெள்ளத்திலும் மரணத்துடன் விளையாடும் உண்ணாவிரதமிருக்கும் தமிழன் நிலை எண்ணிப்பாராது......

நாடாளுமன்ற உணவகத்தில் மானியவிலையில் கிடைக்கும் கட்டு சம்பல், குழைக்கறி, காரல் கருவாட்டுப்பொரியல், மைசூர் பருப்புக்கறி இதனுடன் சூரமாலுக் குழம்பை அள்ளி வாய்க்குள் அதக்கும்போது........

உங்களுக்கு நரகலைத் தின்பதுபோல் இருப்பதில்லையா!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவரட்ட ஆராவது இப்ப ஆதரவு கேட்டவையா. களத்தில் நின்று போராட வேண்டியவை.. இப்ப தான் ஆதரவு தெரிவிக்கினமாம். வாக்கு வாங்கேக்க மட்டும்.. பல விதமா வாக்குறுதிகளை சிங்களவனுக்கு பின்னாலும் முன்னாலும் கூனிக் குறுகி வழங்குவார்கள். அப்படி வழங்கினவர்களில் ஒருவர் தான் மாவை. :rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
    • நீங்க வேறை... அவர் இந்த  கம்பியை  சொன்னவர். 
    • வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நிச்சயமாக இல்லை. இங்கே ஒரு பிரித்தானிய இடை மத்திய வர்க்க வாழ்கையை (middle middle class) இலங்கை உயர் மத்திய தர வர்க்கத்துடனோ (upper middle class) ஒப்பிட்டுள்ளேன். நாம் இலங்கை போய் அனுபவிப்பது அங்கே உள்ள upper class இன் வாழ்க்கை அல்ல. 5 நட்சத்திர விடுதிகள் போன்ற வீடுகள். கடற்கரையோர வீக் எண்ட் ஹொலிடே வீடுகள். Q8, X7, GLS வாகனங்கள்….Sri Lankan upper class இன் ரேஜ்ஞே வேறு. 
    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.