Jump to content

ஆட்சி அமைக்க அதிர்ஷ்டம் தேடி வருகிறது கதவை மூடி திருப்பி அனுப்புகிறார் ஸ்டாலின்?


Recommended Posts

ஆட்சி அமைக்க அதிர்ஷ்டம் தேடி வருகிறது கதவை மூடி திருப்பி அனுப்புகிறார் ஸ்டாலின்?

 

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் இரண்டு அணிகளாக உடைந்துள்ள நிலையில், ஆட்சியை கைப்பற்றும் வியூகத்தை அமைக்காமல், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் இழுத்தடிக்கிறார்' என, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குமுறுகின்றனர்.

இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:சட்டசபையில், கூட்டணி பலத்துடன், தி.மு.க., வுக்கு, 98 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது. தி.மு.க., ஆட்சி அமைக்க, 18 எம்.எல். ஏ.,க்களின் ஆதரவு தான் தேவை. இதை மனதில் வைத்து தி.மு.க.,வினர் செயல்பட வேண்டும் என, தன், 93வது பிறந்த நாள் விழாவில், தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறினார்.


ஆதரவு தர மாட்டோம்
மக்களுக்கு விரோதமான ஆட்சியாக, அ.தி.மு.க., ஆட்சி செயல்படுமானால், தி.மு.க., ஆட்சி அமைக்க தயங்காது என்பதை, ஆளுங்கட்சி தலைமைக்கு, அன்றே கருணாநிதி சூசகமாக எச்சரித்தார். அவரது வாக்கு பலிக்கும் வகையில், தற்போது ஆளுங்கட்சி இரண்டாக உடைந்துள்ளது.
தற்காலிக பொதுச்செயலர் சசிகலா தலைமையில் ஓர் அணி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், மற்றொரு அணி என, அ.தி.மு.க., பிரிந்து
கிடக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், தி.மு.க., ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என, அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள், ஸ்டாலினிடம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், நம்பிக்கை ஓட்டெடுப்பில், யாருக்கும் ஆதரவு தர மாட்டோம் என, தி.மு.க., உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு
உள்ளது.

அதிருப்தி

இந்த முடிவு எடுத்த மறுநாள், தி.மு.க., கொறடா சக்கரபாணியின் அழைப்பில், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், சென்னையில் முகாமிட்டிருந்தனர். இது
குறித்து, ஸ்டாலினிடம் நிருபர்கள் கேட்டபோது, 'எம்.எல்.ஏ.,க்களை, நாங்கள் அழைக்கவில்லை' என்றார்.

அதேபோல், 'பன்னீர்செல்வத்தின் அணிக்கு, நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம்' என, முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தெரிவித்த கருத்துக்கும், ஸ்டாலின் மறுப்பு தெரிவித்தார்; 'அப்படியொரு எண்ணம் தி.மு.க.,வுக்கு இல்லை' என்றார்.
அரசியல் ரீதியாக, அ.தி.மு.க., ஆட்சியைக் கவிழ்த்து, அ.தி.மு.க., அதிருப்தியாளர்கள் ஆதரவில், ஆட்சியை கைப்பற்ற, ஸ்டாலின் விரும்பவில்லை. அதனால், மூத்த தலைவர்கள், மூத்த
எம்.எல்.ஏ.,க்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர் ஏற்பதில்லை. இது, அவர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
'வெகு சிலருக்கு தான் அதிர்ஷ்டம், பல தடவை வந்து கதவை தட்டும்; அப்போதும், அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், இனி எப்போதும் அதிர்ஷ்டம் தேடி வராது; இதை உணர்ந்து, ஸ்டாலின் செயல்பட வேண்டும்' என்கின்றனர்.
இவ்வாறு கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1713501

Link to comment
Share on other sites

சபாநாயகர் தானாக சேட்டை கிழித்தாரா? அல்லது தி.மு.கவினர் கிழித்தார்களா?tw_blush: tell me tell me.tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.