Jump to content

கனடாவில் 8 மில்லியன் டொலர் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினர் கைது


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கனடா டொரான்டோ பகுதியில் மோசடியில் ஈடுபட்ட தமிழ் தம்பதியினரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளன. அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தம்பதியினர் 8 மில்லியன் கனேடியன் டொலர் வரையில் ( இலங்கை மதிப்பில் ரூ.12,09,360,000) மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 வயதான சுகன்யா பஞ்சலிங்கம், மற்றும் 35 வயதான அவரது கணவர் பாலசுப்ரமணியம் சஞ்சீவ்கரன் ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிதி மோசடி குறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இந்த விசாரணைகளின் மூலம் போலியான காசோலைகளை பயன்படுத்தி இவர்கள் பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், போலியான சான்றளிக்கப்பட்ட காசோலைகளை பயன்படுத்தி விலை உயர்ந்த கார்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, இந்த மோசடியினால் பாதிக்கப்பட்டவர்கள் பொலிஸாரை நாடி விசாரணைக்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

625.0.560.320.160.600.053.800.668.160.90.jpg

மேலதிக விபரங்களுக்கு....

 

$8M 'lost and laundered' in elaborate scheme: police

http://www.tamilwin.com/canada/01/135900

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர்ந்த தமிழர்களின் மானத்தை வாங்கிறதுக்கெண்டே கொஞ்சம் சுனாமி மாதிரி திரியுதுகள்.

ஆயுள்காலம் வரைக்கும் உதுகளை வெளியிலையே வரவிடாமல் சிறையிலை தள்ளனும்.tw_rage:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியானவர்களின் செயல்பாடுகளால் எதிர் காலத்தில் நல்ல வேலைகளுக்குள் ௬ட உள்ளிட முடியாத நிலை ஏற்படும்..காரணம் வேற்றினத்தவர் மத்தியில் ஒரு வித வெறுப்பை கொட்டிக் கொள்ளும் அழவுக்குத் தானே நம்மவர்கள் நடக்கிறார்கள்..இந்த பெண் வங்கி ஒன்றில் மோட்கேஜ் செய்பவராக பணிபுரிபவராம்.ச்சக்.

Link to comment
Share on other sites

1 hour ago, யாயினி said:

இப்படியானவர்களின் செயல்பாடுகளால் எதிர் காலத்தில் நல்ல வேலைகளுக்குள் ௬ட உள்ளிட முடியாத நிலை ஏற்படும்..காரணம் வேற்றினத்தவர் மத்தியில் ஒரு வித வெறுப்பை கொட்டிக் கொள்ளும் அழவுக்குத் தானே நம்மவர்கள் நடக்கிறார்கள்..இந்த பெண் வங்கி ஒன்றில் மோட்கேஜ் செய்பவராக பணிபுரிபவராம்.ச்சக்.

பெரிதாக அலட்டிக்கொள்ளாதீர்கள் யாயினி. இப்படி கும்பல்கள் பல கலாச்சாரத்திலும் உள்ளார்கள். சில ஊடகங்கள் நாம் தான் இப்படியான வேலைகளை செய்வதாக முனைப்பாக ஈடுபட்டுள்ளார்கள்.
இதன் பின்னால் உள்ள மாவியா கும்பலை  பலரும் இலகுவாக மறந்து விடுவது தான் நிதர்சனம்.

3 hours ago, குமாரசாமி said:

புலம்பெயர்ந்த தமிழர்களின் மானத்தை வாங்கிறதுக்கெண்டே கொஞ்சம் சுனாமி மாதிரி திரியுதுகள்.

ஆயுள்காலம் வரைக்கும் உதுகளை வெளியிலையே வரவிடாமல் சிறையிலை தள்ளனும்.tw_rage:

கு.மா அண்ணா  இளனீர் குடிச்சவன்........ யாரோ  பழ மொழி தெரியும் தானே. இலகுவாக காசு உழைக்கும் எம்மவர்கள் இவர்களின் வலையில் இலகுவாக அகப்பட்டு விடுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானத்தை.... வாங்குகிறார்கள். :mellow:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மானமா.. அப்படியொன்னு தமிழரட்ட இப்ப இருக்கா. சொறீலங்காவில் இப்ப எல்லாம் சிங்களவன் கூட தமிழில பேசி தான் காசு பறிக்கிறான். tw_angry::rolleyes:

அண்மையில்.. வெள்ளவத்தையில் உள்ள ஒரு பிரபல வங்கியில்.. ஏ ரி எம்மில் ஒருவர் காசு எடுக்கப் போனவர்.. காட் எல்லாம் போட்டு முடிய... காசு வரல்ல.. ஆனால்.. வங்கியில்.. காசு கழிப்பட்டுப் போச்சு. இங்கின வந்து விசாரிச்சால்.. அவருக்கு வெள்ளை பேசுது. நீ எதுக்கு அங்க போய் காட் பாவிச்சது.. அவர் சொன்னார்.. சொல்லிட்டு தானே போனனான் பாவிப்பன் என்று. அதுக்கு மனேச்சர் சொன்னது.. பிரச்சனைன்னு வந்தால்.. அது ஒரு வகையிலும் ஒத்துழைக்காத நாடு  என்று. மற்றைய நாடுகள் என்றால்... பறவாயில்லை.. ஏதாவது பேசித் தீர்க்கலாம் என்று. மேற்கத்தைய வங்கிக் கிளைகள் அங்கிருந்தால் கூட.. காட் பாவிப்பது நல்லதில்லை.. அங்க வேலை செய்யுறது லோக்கல் ஆக்கள்.. என்றாங்கள்.. இங்க. 

பிறகு கழிக்கப்பட்ட பணத்தை போராடி மீட்டிட்டார். அங்க வங்கி காசியந்திரங்களுக்கு மேல்.. வங்கியே கமரா பூட்டி கண்காணிக்குது. உடன இங்க மனேச்சர் சொன்னது.. அது இங்க சட்டவிரோதம்.. அங்க அவங்களுக்கு அது வழமை. நாங்க தான் கவனமா இருக்கனுன்னு. இத்தனைக்கும்.. உந்தக் கிளைகளில் அதிகம் வேலை பார்ப்பது தமிழர்களும் முஸ்லீம்களும் ஆவர். அதுக்காக சிங்களவன் நல்லவனுன்னு இல்லை.. அவனும் தான். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
27 minutes ago, nedukkalapoovan said:

மானமா.. அப்படியொன்னு தமிழரட்ட இப்ப இருக்கா. சொறீலங்காவில் இப்ப எல்லாம் சிங்களவன் கூட தமிழில பேசி தான் காசு பறிக்கிறான். tw_angry::rolleyes:

அண்மையில்.. வெள்ளவத்தையில் உள்ள ஒரு பிரபல வங்கியில்.. ஏ ரி எம்மில் ஒருவர் காசு எடுக்கப் போனவர்.. காட் எல்லாம் போட்டு முடிய... காசு வரல்ல.. ஆனால்.. வங்கியில்.. காசு கழிப்பட்டுப் போச்சு. இங்கின வந்து விசாரிச்சால்.. அவருக்கு வெள்ளை பேசுது. நீ எதுக்கு அங்க போய் காட் பாவிச்சது.. அவர் சொன்னார்.. சொல்லிட்டு தானே போனனான் பாவிப்பன் என்று. அதுக்கு மனேச்சர் சொன்னது.. பிரச்சனைன்னு வந்தால்.. அது ஒரு வகையிலும் ஒத்துழைக்காத நாடு  என்று. மற்றைய நாடுகள் என்றால்... பறவாயில்லை.. ஏதாவது பேசித் தீர்க்கலாம் என்று. மேற்கத்தைய வங்கிக் கிளைகள் அங்கிருந்தால் கூட.. காட் பாவிப்பது நல்லதில்லை.. அங்க வேலை செய்யுறது லோக்கல் ஆக்கள்.. என்றாங்கள்.. இங்க. 

பிறகு கழிக்கப்பட்ட பணத்தை போராடி மீட்டிட்டார். அங்க வங்கி காசியந்திரங்களுக்கு மேல்.. வங்கியே கமரா பூட்டி கண்காணிக்குது. உடன இங்க மனேச்சர் சொன்னது.. அது இங்க சட்டவிரோதம்.. அங்க அவங்களுக்கு அது வழமை. நாங்க தான் கவனமா இருக்கனுன்னு. இத்தனைக்கும்.. உந்தக் கிளைகளில் அதிகம் வேலை பார்ப்பது தமிழர்களும் முஸ்லீம்களும் ஆவர். அதுக்காக சிங்களவன் நல்லவனுன்னு இல்லை.. அவனும் தான். :rolleyes:

நடந்த விஷங்களை... "பக்காவாக"  சொல்வதைப் பார்க்க.... 
அண்மையில்... ஸ்ரீலங்காவுக்குப்  போன, 
நெடுக்கருக்கு.... நடந்த விடயம் போலுள்ளது. :grin: :D:

Link to comment
Share on other sites

1 hour ago, nedukkalapoovan said:

மானமா.. அப்படியொன்னு தமிழரட்ட இப்ப இருக்கா. சொறீலங்காவில் இப்ப எல்லாம் சிங்களவன் கூட தமிழில பேசி தான் காசு பறிக்கிறான். tw_angry::rolleyes:

அண்மையில்.. வெள்ளவத்தையில் உள்ள ஒரு பிரபல வங்கியில்.. ஏ ரி எம்மில் ஒருவர் காசு எடுக்கப் போனவர்.. காட் எல்லாம் போட்டு முடிய... காசு வரல்ல.. ஆனால்.. வங்கியில்.. காசு கழிப்பட்டுப் போச்சு. இங்கின வந்து விசாரிச்சால்.. அவருக்கு வெள்ளை பேசுது. நீ எதுக்கு அங்க போய் காட் பாவிச்சது.. அவர் சொன்னார்.. சொல்லிட்டு தானே போனனான் பாவிப்பன் என்று. அதுக்கு மனேச்சர் சொன்னது.. பிரச்சனைன்னு வந்தால்.. அது ஒரு வகையிலும் ஒத்துழைக்காத நாடு  என்று. மற்றைய நாடுகள் என்றால்... பறவாயில்லை.. ஏதாவது பேசித் தீர்க்கலாம் என்று. மேற்கத்தைய வங்கிக் கிளைகள் அங்கிருந்தால் கூட.. காட் பாவிப்பது நல்லதில்லை.. அங்க வேலை செய்யுறது லோக்கல் ஆக்கள்.. என்றாங்கள்.. இங்க. 

பிறகு கழிக்கப்பட்ட பணத்தை போராடி மீட்டிட்டார். அங்க வங்கி காசியந்திரங்களுக்கு மேல்.. வங்கியே கமரா பூட்டி கண்காணிக்குது. உடன இங்க மனேச்சர் சொன்னது.. அது இங்க சட்டவிரோதம்.. அங்க அவங்களுக்கு அது வழமை. நாங்க தான் கவனமா இருக்கனுன்னு. இத்தனைக்கும்.. உந்தக் கிளைகளில் அதிகம் வேலை பார்ப்பது தமிழர்களும் முஸ்லீம்களும் ஆவர். அதுக்காக சிங்களவன் நல்லவனுன்னு இல்லை.. அவனும் தான். :rolleyes:

நிறைந்த கற்பனைகளுடன் எழுதப்பட்டுள்ளது - என்ன லாபமோ யாமறியோம்.

நான் 2011 இலிருந்து இங்கு குறைந்தது ஒரு 500 தடவைகளாவது எனது காட்டுகளை பாவித்து ஏ டி எம்மில் பணம் எடுத்திருப்பேன். சில இடங்களை தவிர மற்றய கடைகளில் எனது கார்ட்களைப் பாவிப்பதில்லை.

எனக்கு வசதியாக - அதாவது கணக்கு வைத்துக் கொள்ள, சில பாங்கிலேயே மட்டும் பணம் எடுப்பேன்.

இதுவரை இப்படி நடந்ததில்லை.

ஒரே ஒரு முறை எனது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்றது. நோர்வேயில் உள்ள எனது வங்கியுடன் தொடர்பு கொண்டபோது - சில தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக தொடர்பு இல்லை, கிரெடிட் கார்டை பாவிக்க சொன்னார்கள் - பிராப்ளம் சோல்வ்ட்.

எனது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நான் ஏமாற்றப்பட்டது இங்கிலாந்தில்தான்.

வந்துட்டானுங்க கதை அளக்க. 

Link to comment
Share on other sites

Four men charged with fraud after CCTV records ATM being tampered with

Four people charged with fraud after they were caught tampering with ATM on CCTV

Four people charged with fraud after they were caught tampering with ATM on CCTV

9 Mar 2016 / Rebecca Taylor, Reporter - Wandsworth /  @wandsworthbecca

      

Don't be the last to know! Get the latest local news straight to your inbox.

Sign up

 

Four men have been charged after CCTV recorded an ATM being tampered with last night.

The men, who were arrested last night, have all been charged with the possession or control of an article for use in fraud.

The men charged are Manikkam Sivakumaran, 40, of Plough Lane, Wimbledon, Varathan Rajun Santhanam, 44, of Mellison Road, Wandsworth, Mylvaganam Naresh, 30, of Brixton Road, Lambeth, and Dilrukshan Gnaneswaran, 23, also of Brixton Road, Lambeth.

All four men are due to appear at Wimbledon Magistrates’ Court today

Merton Police are warning people to be vigilant when using ATMs to withdraw money.

They advise people to cover their pin number, check their surroundings and always report anything suspicious.

http://www.yourlocalguardian.co.uk/news/local/14330839.Four_people_charged_with_fraud_after_they_were_caught_tampering_with_ATM_on_CCTV/ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, nunavilan said:

பெரிதாக அலட்டிக்கொள்ளாதீர்கள் யாயினி. இப்படி கும்பல்கள் பல கலாச்சாரத்திலும் உள்ளார்கள். சில ஊடகங்கள் நாம் தான் இப்படியான வேலைகளை செய்வதாக முனைப்பாக ஈடுபட்டுள்ளார்கள்.
இதன் பின்னால் உள்ள மாவியா கும்பலை  பலரும் இலகுவாக மறந்து விடுவது தான் நிதர்சனம்.

 

இதில் பெரிதாக அலட்டிக் கொள்வதில் எனக்கு எந்த இலாபமும் இல்லை தான் நுணா..ஆனால் அடுத்தவன் செய்யிறான் என்பதற்காக நாமும் அந்த வழியைத் தான் பின் பற்ற வேண்டும் என்றும் இல்லைத்தானே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, ஜீவன் சிவா said:

நிறைந்த கற்பனைகளுடன் எழுதப்பட்டுள்ளது - என்ன லாபமோ யாமறியோம்.

நான் 2011 இலிருந்து இங்கு குறைந்தது ஒரு 500 தடவைகளாவது எனது காட்டுகளை பாவித்து ஏ டி எம்மில் பணம் எடுத்திருப்பேன். சில இடங்களை தவிர மற்றய கடைகளில் எனது கார்ட்களைப் பாவிப்பதில்லை.

எனக்கு வசதியாக - அதாவது கணக்கு வைத்துக் கொள்ள, சில பாங்கிலேயே மட்டும் பணம் எடுப்பேன்.

இதுவரை இப்படி நடந்ததில்லை.

ஒரே ஒரு முறை எனது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்றது. நோர்வேயில் உள்ள எனது வங்கியுடன் தொடர்பு கொண்டபோது - சில தொழில் நுட்ப பிரச்சனை காரணமாக தொடர்பு இல்லை, கிரெடிட் கார்டை பாவிக்க சொன்னார்கள் - பிராப்ளம் சோல்வ்ட்.

எனது வாழ்க்கையில் ஒரே ஒரு முறை நான் ஏமாற்றப்பட்டது இங்கிலாந்தில்தான்.

வந்துட்டானுங்க கதை அளக்க. 

 

7 hours ago, nedukkalapoovan said:

மானமா.. அப்படியொன்னு தமிழரட்ட இப்ப இருக்கா. சொறீலங்காவில் இப்ப எல்லாம் சிங்களவன் கூட தமிழில பேசி தான் காசு பறிக்கிறான். tw_angry::rolleyes:

அண்மையில்.. வெள்ளவத்தையில் உள்ள ஒரு பிரபல வங்கியில்.. ஏ ரி எம்மில் ஒருவர் காசு எடுக்கப் போனவர்.. காட் எல்லாம் போட்டு முடிய... காசு வரல்ல.. ஆனால்.. வங்கியில்.. காசு கழிப்பட்டுப் போச்சு. இங்கின வந்து விசாரிச்சால்.. அவருக்கு வெள்ளை பேசுது. நீ எதுக்கு அங்க போய் காட் பாவிச்சது.. அவர் சொன்னார்.. சொல்லிட்டு தானே போனனான் பாவிப்பன் என்று. அதுக்கு மனேச்சர் சொன்னது.. பிரச்சனைன்னு வந்தால்.. அது ஒரு வகையிலும் ஒத்துழைக்காத நாடு  என்று. மற்றைய நாடுகள் என்றால்... பறவாயில்லை.. ஏதாவது பேசித் தீர்க்கலாம் என்று. மேற்கத்தைய வங்கிக் கிளைகள் அங்கிருந்தால் கூட.. காட் பாவிப்பது நல்லதில்லை.. அங்க வேலை செய்யுறது லோக்கல் ஆக்கள்.. என்றாங்கள்.. இங்க. 

பிறகு கழிக்கப்பட்ட பணத்தை போராடி மீட்டிட்டார். அங்க வங்கி காசியந்திரங்களுக்கு மேல்.. வங்கியே கமரா பூட்டி கண்காணிக்குது. உடன இங்க மனேச்சர் சொன்னது.. அது இங்க சட்டவிரோதம்.. அங்க அவங்களுக்கு அது வழமை. நாங்க தான் கவனமா இருக்கனுன்னு. இத்தனைக்கும்.. உந்தக் கிளைகளில் அதிகம் வேலை பார்ப்பது தமிழர்களும் முஸ்லீம்களும் ஆவர். அதுக்காக சிங்களவன் நல்லவனுன்னு இல்லை.. அவனும் தான். :rolleyes:

இது களவுப் பிரச்சனை இல்லை. தொழில்நுட்ப காரணம். வேறு பிரச்சனை இல்லை.

பொதுவாக வெளிநாட்டு மட்டைகள், அம்மட்டையின் உள்ளே சங்கேதமாக குறிப்பிடப்பட்டிருக்கும், அடிப்படை கரண்சி யில் இருந்து பாவிக்கபடும் நாட்டின் அடிப்படை கரண்சிக்கு நாணயமாற்று கணக்கீடு செய்து, பின் உள்ளூர் கரண்சிக்கு கணக்கீடு செய்து, ஒவ்வொருவங்கியினதும், மட்டை வழங்குனரினதும், அரசவரியினதும் கணக்கீடுகளுக்கு உள்ளாகி , நமக்கு இறுதியாக எவ்வளவு தருவது என்று தீர்மானிப்பதனிடையே.... , ஏதோ ஒரு தரவு தாமதமாகின்... ATM புரோசசிங் ரைம் கடந்தால், மட்டையை தள்ளி, transaction முடித்துவிடும்.

கணக்கில் கழிந்திருக்கும். பணம் கொடுக்கப்பட்டிருக்காது. இது பலருக்கு நடப்பது.

அடுத்தது.... வெளிநாடுகளில் ATM ல் பணம் எடுப்பது முட்டாள்தனமானது.

 

Link to comment
Share on other sites

2 minutes ago, Nathamuni said:

பொதுவாக வெளிநாட்டு மட்டைகள், அம்மட்டையின் உள்ளே சங்கேதமாக குறிப்பிடப்பட்டிருக்கும், அடிப்படை கரண்சி யில் இருந்து பாவிக்கபடும் நாட்டின் அடிப்படை கரண்சிக்கு நாணயமாற்று கணக்கீடு செய்து, பின் உள்ளூர் கரண்சிக்கு கணக்கீடு செய்து, ஒவ்வொருவங்கியினதும், மட்டை வழங்குனரினதும், அரசவரியினதும் கணக்கீடுகளுக்கு உள்ளாகி , நமக்கு இறுதியாக எவ்வளவு தருவது என்று தீர்மானிப்பதனிடையே.... , ஏதோ ஒரு தரவு தாமதமாகின்..

இல்லையே

இன்னமும் கொஞ்சம் விபரமாக தேடித் பாருங்கள்.

நாம் பணம் எடுக்கும்போது மட்டையில் உள்ள விபரத்தை வைத்துத்தான் பணம் தருமே தவிர அங்கேயே அப்போதே எல்லாமும் கணக்கிடப்படுவதில்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஜீவன் சிவா said:

இல்லையே

இன்னமும் கொஞ்சம் விபரமாக தேடித் பாருங்கள்.

நாம் பணம் எடுக்கும்போது மட்டையில் உள்ள விபரத்தை வைத்துத்தான் பணம் தருமே தவிர அங்கேயே அப்போதே எல்லாமும் கணக்கிடப்படுவதில்லை.
 

 

உங்கள் மட்டையின் Base currency NK, இலங்கையினது... US$ நீங்கள் கேட்பது இலங்கை ரூபாயில்..

மட்டை வழங்குனர், விசா, மாஸ்டர்.... அவர்களது இலங்கைக்கான நாட்டு ரோயாலிற்றி....

இலங்கை அல்லது நோர்வே அரச வரி இருப்பின்...அது (இந்தியாவில் உண்டு).

நாணயமாற்று விகிதம் அடிக்கடி மாறும். இந்த மாற்றத்தின் Range ஜ முன்கூட்டியே அனுமானித்து அதன் highest figure படியே  நீங்கள் பணம் பெறுவீர்கள்.

ஏதாவது உலகளாவிய sensitive காரணத்தினால்... இந்த அனுமான range வெளியே மாற்றுவிகிதம் போனால்... உடனடியாக புதிய விகிதம் update ஆகும்.

அந்த நேரத்தில் மட்டை போட்டால் இது போல் நிகழும்.

முக்கியமாக banks always wins and we are losers என்பது தான் வங்கியியல் money transaction நிலைப்பாடு.

இலண்டனின் Stock Exchange லும் பார்க்க, money exchange மார்க்கற் பாரியது.... ஆனால் இரண்டாவது.... சந்து பொந்துகளிலும் நடக்கும். முதலாவது SE ல் மட்டும். 

(நமக்கு வேலை இந்தப் பக்கம்தான்.)

Link to comment
Share on other sites

39 minutes ago, Nathamuni said:

அரசவரியினதும் கணக்கீடுகளுக்கு உள்ளாகி , நமக்கு இறுதியாக எவ்வளவு தருவது என்று தீர்மானிப்பதனிடையே...

இந்த கணக்கீடு 
அப்பவே நடக்குமா அல்லது பிறகா?

அதுவும் டெபிட் காட்டை பாவிக்கும்போது 

இன்னமும் கொஞ்சம் விபரமாக தேடித் பாருங்கள்.

46 minutes ago, Nathamuni said:

அடுத்தது.... வெளிநாடுகளில் ATM ல் பணம் எடுப்பது முட்டாள்தனமானது.

இதையும் கொஞ்சம் விளக்கினால் - பலருக்கு பிரயோசனமாக இருக்கும் (முட்டாள்களாக இல்லாமல் இருக்க)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

 

இது களவுப் பிரச்சனை இல்லை. தொழில்நுட்ப காரணம். வேறு பிரச்சனை இல்லை.

பொதுவாக வெளிநாட்டு மட்டைகள், அம்மட்டையின் உள்ளே சங்கேதமாக குறிப்பிடப்பட்டிருக்கும், அடிப்படை கரண்சி யில் இருந்து பாவிக்கபடும் நாட்டின் அடிப்படை கரண்சிக்கு நாணயமாற்று கணக்கீடு செய்து, பின் உள்ளூர் கரண்சிக்கு கணக்கீடு செய்து, ஒவ்வொருவங்கியினதும், மட்டை வழங்குனரினதும், அரசவரியினதும் கணக்கீடுகளுக்கு உள்ளாகி , நமக்கு இறுதியாக எவ்வளவு தருவது என்று தீர்மானிப்பதனிடையே.... , ஏதோ ஒரு தரவு தாமதமாகின்... ATM புரோசசிங் ரைம் கடந்தால், மட்டையை தள்ளி, transaction முடித்துவிடும்.

கணக்கில் கழிந்திருக்கும். பணம் கொடுக்கப்பட்டிருக்காது. இது பலருக்கு நடப்பது.

அடுத்தது.... வெளிநாடுகளில் ATM ல் பணம் எடுப்பது முட்டாள்தனமானது.

 

முனியர் நீங்கள் சொல்வது போலவும் அவருக்கு நடந்திருக்கலாம். ஆனால் அவர் இந்தப் பிரச்சனையை காசாளர் கவுன்டருக்கு எடுத்துச் சென்றும் அங்கு உரிய கவனம் செலுத்தாமல்.. தட்டிக்கழிக்கும் பாங்கில் செயற்பட்டது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  கவுன்டரில்.. விடயத்தை விளக்கிச் சொல்லி இருக்கலாம்.. அல்லது அவர்களுக்கு இந்த அறிவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

இருந்தாலும்.. விடயத்தை அவர் இங்கு வந்து தெரிவித்ததும்.. இங்கு வங்கி உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி விசாரணைகளை முடுக்கிவிட்டது. அதுமட்டுமன்றி அங்கு அந்த வங்கியுடன் மேலும்..எந்தத் தகவல்களையும் பரிமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்களாம். காசியந்திரம் காசை வழங்கவில்லையா என்பதை அவர்கள் இலகுவாக இயந்திரக் காசிருப்பை கணித்து கண்டு சொல்லலாம்.. எனவே தாங்கள்.. அவர்களிடம் இது பற்றி கோரிக்கை வைப்போம் என்றே சொன்னார்களாம். அதற்கு அந்த வங்கி ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் மாற்றீடாக அந்தக் காட்டை வங்கிக்கு வழங்கிய நிறுவனம்.. இதனைக் கையாளும் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டினார்களாம். 

சொறீலங்காவில் உள்ளவர்கள் ஏன் ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை..??! ஒருவேளை.. தொழில்நுட்பக் கோளாறு என்றால்.. அதனை விளக்கிச் சொல்லவும் பஞ்சியா..?!:rolleyes:

-------------------

எதுஎப்படியோ.. இப்படியான விவகாரங்கள் சொறீலங்காவில் நடக்குது என்பதை தெரியப்படுத்தவே இந்தப் பதிவு. சொறீலங்கா பெரிய பத்திரமான தேசம் என்று பத்திரம் வழங்கி.. அங்குள்ள.. அலங்கோலங்களை மறைக்கனுன்னு எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை. அந்த நாடு அலங்கோலங்களில் இருந்து வெளிய வந்து மக்களின் முழு நம்பிக்கைக்குரிய நாடானால் மட்டுமே.. அங்கு உண்மையா அபிவிருத்தியும் முன்னேற்றமும் வரும். அதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. 

இன்றேல்.. அது இன்னும் பல ஆண்டுகளுக்கும் 3ம் உலக நாடாகவே இருக்கும். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

முனியர் நீங்கள் சொல்வது போலவும் அவருக்கு நடந்திருக்கலாம். ஆனால் அவர் இந்தப் பிரச்சனையை காசாளர் கவுன்டருக்கு எடுத்துச் சென்றும் அங்கு உரிய கவனம் செலுத்தாமல்.. தட்டிக்கழிக்கும் பாங்கில் செயற்பட்டது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.  கவுன்டரில்.. விடயத்தை விளக்கிச் சொல்லி இருக்கலாம்.. அல்லது அவர்களுக்கு இந்த அறிவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

இருந்தாலும்.. விடயத்தை அவர் இங்கு வந்து தெரிவித்ததும்.. இங்கு வங்கி உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கி விசாரணைகளை முடுக்கிவிட்டது. அதுமட்டுமன்றி அங்கு அந்த வங்கியுடன் மேலும்..எந்தத் தகவல்களையும் பரிமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்களாம். காசியந்திரம் காசை வழங்கவில்லையா என்பதை அவர்கள் இலகுவாக இயந்திரக் காசிருப்பை கணித்து கண்டு சொல்லலாம்.. எனவே தாங்கள்.. அவர்களிடம் இது பற்றி கோரிக்கை வைப்போம் என்றே சொன்னார்களாம். அதற்கு அந்த வங்கி ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால் மாற்றீடாக அந்தக் காட்டை வங்கிக்கு வழங்கிய நிறுவனம்.. இதனைக் கையாளும் என்று சொல்லி நம்பிக்கை ஊட்டினார்களாம். 

சொறீலங்காவில் உள்ளவர்கள் ஏன் ஒரு உதவியும் செய்ய முன்வரவில்லை..??! ஒருவேளை.. தொழில்நுட்பக் கோளாறு என்றால்.. அதனை விளக்கிச் சொல்லவும் பஞ்சியா..?!:rolleyes:

-------------------

எதுஎப்படியோ.. இப்படியான விவகாரங்கள் சொறீலங்காவில் நடக்குது என்பதை தெரியப்படுத்தவே இந்தப் பதிவு. சொறீலங்கா பெரிய பத்திரமான தேசம் என்று பத்திரம் வழங்கி.. அங்குள்ள.. அலங்கோலங்களை மறைக்கனுன்னு எங்களுக்கு ஒரு தேவையும் இல்லை. அந்த நாடு அலங்கோலங்களில் இருந்து வெளிய வந்து மக்களின் முழு நம்பிக்கைக்குரிய நாடானால் மட்டுமே.. அங்கு உண்மையா அபிவிருத்தியும் முன்னேற்றமும் வரும். அதுமட்டும் தெளிவாகத் தெரிகிறது. 

இன்றேல்.. அது இன்னும் பல ஆண்டுகளுக்கும் 3ம் உலக நாடாகவே இருக்கும். :rolleyes:

 
 
 

பணம் கொடுக்காமல் காட்டினை புறம் தள்ளுவது இங்கும் நடக்கின்றது.

அது மட்டுமல்ல.... 10 பவுண்ட்ஸ் கேட்டால், 100 பவுண்ட்ஸ் கொடுக்கும் நிகழ்வும் நடந்துள்ளது.

இது வெளியே சொல்ல முடியாத technical cliches.

ஒரு  வங்கி இதனை fix பண்ணினால் அடுத்த வங்கி அதை follow பண்ண நேரம் எடுப்பதால், இரு வங்கிகளுக்கான technical communication முதல், intenational intenet link speed போன்ற பல விடயங்கள் இடையே உண்டு.

இதில் இங்குள்ள வங்கி முகவர் சொன்னது, சும்மா convince பண்ணுவது. பல கோடிக்கணக்கான transactions இடையே ஒன்றை மட்டும் மனிதர்களால் தேடிப்பிடிக்க முடியாது.

உண்மையில், பணம் கொடுக்கப்படவில்லை என்பதை இரு பக்க வங்கிகளுக்கும் அறிவித்து, கணக்கை நேர் செய்வது visa ஓர் master என்னும் இடையில் உள்ள முகவர்.

இலங்கை வங்கித்துறை, இந்தியாவிலும் பார்க்க நவீனமானது. இந்தியாவில், மத்திய அரசு பணத்தினை செல்லுபடியில்லாமல் செய்து, ஒருவருக்கு 4000 ரூபா மட்டும் எடுக்கலாம் என்னும் போது, வங்கி முகாமை யாளர்கள், ரெட்டி போன்ற ஆட்களுக்கு கோடிக்கணக்கில் துணிவாக கொடுக்குமளவுக்கு இருக்கிறது வங்கியியல் அங்கு.

பைனான்ஸியல் சேர்விஸ்ஸ்ல் இலங்கை காத்திரமான ஒரு முகாந்திர நிலையமாக மாறும் என்ற நிலைப்பாட்டுடன், லண்டன் stock exchange அங்கே அலுவலகம் திறந்து உள்ளது.

http://www.uda.gov.lk/index.php?option=com_content&view=article&id=55:london-stock-exchange-group-increases-footprint-in-sri-lanka&catid=9&Itemid=147&lang=en

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு மில்லையன் டொலர்  இலங்கை காசுக்கு எவ்வளப்பா ??

Link to comment
Share on other sites

46 minutes ago, முனிவர் ஜீ said:

எட்டு மில்லையன் டொலர்  இலங்கை காசுக்கு எவ்வளப்பா ??

922557376.00 Sri Lankan Rupee tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/19/2017 at 6:50 PM, Nathamuni said:

இலண்டனின் Stock Exchange லும் பார்க்க, money exchange மார்க்கற் பாரியது.... ஆனால் இரண்டாவது.... சந்து பொந்துகளிலும் நடக்கும். முதலாவது SE ல் மட்டும். 

(நமக்கு வேலை இந்தப் பக்கம்தான்.)

 

நாதமுனி,

பங்குமாற்று வர்த்தகத்தில் ஈடுபடுவது லாபகரமானதா? இதை எப்படி ஆரம்பிப்பது என்று விளக்குவீர்களா? மேலும் இணயத்தில் விளம்பரப்படுத்தப்படுவது போல் சரக்கு (commodity) அல்லது உலோக (metal) சந்தையில் வாரத்திற்கு 500 அல்லது 600 பவுண்ஸ் பகுதி நேரமாக வேலை செய்து (online) உழைக்கமுடியுமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, colomban said:

 

நாதமுனி,

பங்குமாற்று வர்த்தகத்தில் ஈடுபடுவது லாபகரமானதா? இதை எப்படி ஆரம்பிப்பது என்று விளக்குவீர்களா? மேலும் இணயத்தில் விளம்பரப்படுத்தப்படுவது போல் சரக்கு (commodity) அல்லது உலோக (metal) சந்தையில் வாரத்திற்கு 500 அல்லது 600 பவுண்ஸ் பகுதி நேரமாக வேலை செய்து (online) உழைக்கமுடியுமா?

 
 

முடிந்த வரை அந்தப் பக்கம் போகாதீர்கள்.

சூது..... தரித்திரம் பிடித்த வேலை.

இங்கே ஒருவர் வெல்வதாயின் இன்னொருவர் இழக்க வேண்டும். இங்கே பணம் பண்ணுபவர்கள்..... வெல்பவரிடமும், இழப்பவரிடமும்.... (அதாவது இருபக்கமும்) கொமிசன் அடிப்பவர்கள் (Traders) மட்டுமே.

பணம் பண்ண வேண்டுமானால் பங்கு வர்த்தகத்திலும் பார்க்க, money trasaction (நாம் பேசிக் கொண்டிருப்பது) சிறந்தது.

அதுதான் ஊருக்கு பணம் அனுப்புவது.... உண்டியல்....     

இந்த தொழிலில் இருக்கும் யாராவது தெரிந்தால் பேசிப் பாருங்கள். 

காசு.... லட்சுமி... சீதேவியான தொழில் என்பார்கள்.

முதல் இல்லாத... நம்பிக்கை மூலதனமாக போடும் தொழில்.

சட்ட பூர்வமாக செய்வதற்குரிய வகையில் திட்டமிட்டு இறங்கினால் வெற்றி.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலருக்கு விளங்குவதில்லை... இந்த தொழில்.

பணத்தைக் இங்கே கொடுத்தால், அங்கே காசு கொடுப்பார்கள் என்ற விளக்கம் மட்டுமே.

முதலாவது கமிஷன் - ஒரு கொடுப்பனவுக்கு £5... ஒரு வாரத்துக்கு 200 செய்தால் £1000.

இரண்டாவது - விகிதத்தில் கூடுதலாக வைத்து பணம் அதில் பணம் பண்ணுவது.

மூன்றாவது.... பணம் நீங்கள் எங்கே கொடுக்கிறீர்களோ அங்கிருந்து... நகர்வதில்லை. 

இங்கே வெளியே போகாத பணத்தினை.... money market ல் தருணம் பார்த்து transaction செய்து மேலும் பணம் பார்ப்பார்கள். 

உதாரணமாக.... டொனால்ட் டிரம்ப் வென்றதும் டொலர் மதிப்பு குறைந்தது. இந்த நேரத்தில் சந்தையில் டொலரை வாங்கி.... இரு நாட்களில் அது மீளும் போது.... திருப்பி வித்து பவுனை வாங்கி விடுவார்கள்.

இது ஒரு நஷடம் இல்லாத தொழில்... ஏனெனில் பொருள் ( காசு ) டாலராக, பவுண்ட்ஸ் ஆக... யூரோ ஆக உங்களிடமே இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Nathamuni said:

பணம் கொடுக்காமல் காட்டினை புறம் தள்ளுவது இங்கும் நடக்கின்றது.

கார்ட்டை புறம் தள்ளினாலும் பறவாயில்லை.....உள்ளுக்கை தள்ளின கார்ட்டு வெளியிலை வராமலே ஒரேயடியாய் உள்ளக்கை போட்டுது எண்டெல்லே உங்கை கனசனம் விசனம் தெரிவிக்கிது.:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.