Jump to content

தொகுதிப்பக்கம் செல்ல முடியுமா சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ?


Recommended Posts

தொகுதிப்பக்கம் செல்ல முடியுமா சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ?

சட்டசபை

.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா ஆசி பெற்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒருவழியாக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார்.

சசிகலா தலைமையை ஏற்காத அ.தி.மு.க-வினர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், சசிகலா ஆதரவுடன் முதல்வராகியிருக்கும் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்போர் ஒரு அணியாகவும் பிரிந்து நிற்கின்றனர்.

இப்படிப்பட்ட பரபரப்பான சூழ்நிலையில், தமிழக சட்டசபைக் கூட்டம் இன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்காக கூடியது.

எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 122 எம்.எல்.ஏக்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாகவும், அரசை எதிர்த்து ஓ.பி.எஸ் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்ததாகவும் தெரிவித்து, அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எடப்பாடி தலைமையிலான தமிழக அரசு இன்னும் எத்தனை மாதங்களுக்கு நீடிக்கும் என்பது கேள்விக்குறியே என அரசியல் நோக்கர்களும், சாமான்ய மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் இல்லாமல் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டிருப்பதை தி.மு.க-வும், ஓ.பி.எஸ் தரப்பும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுதொடர்பாக அவர்கள் சட்டரீதியாக எந்த நடவடிக்கையை வேண்டுமானாலும் எடுக்கக்கூடும்.

"நம்பிக்கை வாக்கெடுப்பில் சசிகலா ஆதரவு அரசை வெற்றிபெறச் செய்த எம்.எல்.ஏக்கள் தொகுதிப்பக்கம் தலைகாட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சசிகலா தலைமைக்கு ஆதரவு தெரிவித்த 122 அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்களும் நேரா கிளம்பி அவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதிக்குச் சென்றால், வாக்காளர்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்" என்று கொந்தளிக்கிறார் நாமக்கல் தொகுதியைச் சேர்ந்த ஒருவர். 

சட்டசபை

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மொத்த தமிழ்நாட்டையும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த கும்பல் கேலிக்கூத்தாக்கி இருப்பதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். "மக்களிடம் வாங்கிய ஓட்டுகளை மதுவுக்கும், பலகோடி ரூபாய் பணத்துக்கும் மாஃபியா கும்பலுக்கு வித்துட்டு, தமிழ்நாட்டில் ஜனநாயகத்துக்கு சாவு மணி அடிச்ச இதுபோன்ற எம்.எல்.ஏக்களை நாம நல்லபடி வரவேற்கத் தயாராக வேண்டாமா மக்களே..?..122 தொகுதிகளிலும் மக்கள் எல்லாரும் ஒண்ணு கூடி நம் வாக்குகளை வீணடித்தவர்களுக்கு "மிகச்சிறப்பான (?)' வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யுங்க...என்ன செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா? (மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில்)" என்று தமிழக மக்கள் கேட்டவண்ணம் உள்ளனர். இந்த வகையில், தமிழகம் முழுவதும் எடப்பாடி மீதும், அவருக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏக்கள் மீதும் மக்கள் கடும் கொந்தளிப்புடன் உள்ளனர். 

ஒருவேளை இந்த அரசு எஞ்சியுள்ள நான்கரை ஆண்டுகாலம் பதவியில் நீடித்தாலும், எதிர்வரும் காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எந்த முகத்தை வைத்துக் கொண்டு தங்கள் தொகுதிப்பக்கம் தலைகாட்ட முடியும்?  75 நாட்கள் அப்போலோவில் நடந்தது என்ன என்பதற்கு சசிகலாவோ அல்லது அவரது குடும்பத்தினரோ இதுவரை பதிலளிக்கவில்லை. மாரடைப்பால் மரணம் என்பதை ஒருவேளை ஒப்புக்கொண்டாலும், அதற்கான ஓரிரு ஆதாரங்களையாவது வெளியிடலாமே? என்பது சாமான்ய தொண்டனின் கேள்வி. சசிகலா குடும்பத்தைப் பொறுத்தவரை மக்களின் கோபம் அவ்வளவு எளிதில் மறந்துவிடக் கூடியதாக இல்லை. இதனை சசிகலா தரப்பினர் உணர்ந்து, தற்போது எம்.எல்.ஏக்களாக உள்ளவர்களுக்கு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை. சசிகலா தரப்பினர் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் மீதான வெறுப்பு காரணமாக, எதிர்வரும் தேர்தலில் புதியவர்களே நிறுத்தப்படுவார்கள். அப்போதுதான் தங்கள் தரப்பு ஓட்டு வாங்க முடியும் என்று சசிகலா தரப்பும் உணர்ந்தே உள்ளது. 

சட்டசபை

தவிர, தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே, அ.தி.மு.க அலுவலகம் மற்றும் இரட்டை இலை சின்னம் யாருக்கு? சசிகலாவை பொதுச் செயலாளராக நியமித்தது செல்லுமா என்பன போன்ற கேள்விகளுக்கு எல்லாம் விடை கிடைக்கும். எப்படி இருப்பினும் இப்போது அ.தி.மு.க எம்.எல்.ஏக்களாக இருப்பவர்கள் மீண்டும் அதே தொகுதியில் வெற்றிபெறுவது கண்டிப்பாக இயலாத காரியம். முதலில் சசிகலா தரப்பு அவர்களுக்கு தேர்தலில் சீட் வழங்காது என்பதுதான் கண்கூடான உண்மை. எனவே, 'காற்றுள்ள போதே தூற்றிக் கொள்' என்ற ரீதியில்தான் தமிழக அரசின் மற்றும் எம்.எல்.ஏக்களின் செயல்பாடுகள் அமையும். முடிந்தவரை அல்லது கிடைத்தவரை ஊழல் செய்து சுருட்ட வேண்டும். எப்படியும் மீண்டும் ஒருமுறை சட்டமன்ற உறுப்பினராகப் போவதில்லை என்பதால், இந்த முறை எவ்வளவு முடியுமோ அவ்வளவு லஞ்சம் பெற்று 'செட்டில்' ஆகிட வேண்டும் என்ற எண்ணமே சசிகலா ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணஓட்டமாக இருக்கும். எப்படிப் பார்த்தாலும் தமிழக மக்களுக்குத் தான் திண்டாட்டம். 'மக்களின் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்பதை அரசியல்வாதிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உணர்ந்து நடந்து கொண்டால்தான் எதிர்வரும் காலத்தில் அவர்கள் தொகுதிப்பக்கம் தலைகாட்ட முடியும்!  

http://www.vikatan.com/news/tamilnadu/81288-can-sasikala-led-admk-mlas-go-back-to-their-constituencies.html

Link to comment
Share on other sites

உதறல்!
அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு தொகுதியில்
தலைகாட்ட முடியாமல் போகுமோ என பயம்
போலீஸ் பாதுகாப்பு கேட்டு மனு கொடுக்க முடிவு
 
 
 

பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, சொந்த தொகுதிகளுக்கு செல்ல முடியாமல் போய் விடுமோ என, சசி ஆதரவு, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது. அதனால், முழு போலீஸ் பாதுகாப்பு கேட்க, கூவத்துாரில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்துள்ளனர்.

 

Tamil_News_large_1713469_318_219.jpg

அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னை யில், சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என, இரு பிரிவுகள் உள்ளன. இந்த பிரிவுகளில், சசிகலா அணியினர், எம்.எல்.ஏ.,க்களை கூவத்துார் சொகுசு விடுதியில், 10 நாட்களாக தங்க வைத்தனர்.

அங்கு, அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து

கொடுத்தனர். இவர்களில் சிலர், சசிகலா குடும்ப ஆதிக்கத்தை விரும்பவில்லை. ஆனாலும், அவர் களால் வெளியேற முடியாமல், குண்டர்கள் கட்டுப் பாட்டில் வைக்கப்பட்டனர்; சில, பெண் எம்.எல்.ஏ.,க் களும், தங்கள் குடும்பத்தினரை விட்டு பிரிந்து, 10 நாட்க ளாக அவதிப்பட்டனர். சசிகலா குடும்பத்தி னருக்கு ஆதரவாக, எம்.எல்.ஏ.,க்கள் செயல்படு வதை, மக்கள் விரும்பவில்லை.

அதனால், அவர்கள், தங்கள் கருத்தையும், விருப்பத் தையும், தங்களின், எம்.எல்.ஏ.,க்களுக்கு, மொபைல் போன் வாயிலாக தெரிவித்தனர். தங்களின் கருத்தை கேட்டு, முடிவு எடுக்கும்படி வலியுறுத்தி னர். ஆனால், அதை பொருட்படுத்தாமல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில் பெரும்பான்மை யினர், சசிகலா பக்கம் நின்றனர். இதனால், பொது மக்களும், அ.தி.மு.க., தொண்டர்களும் கடும் கோபத்தில் உள்ளனர். அவர்கள்,தங்கள் எதிர்ப்பை, நேற்று முன்தினம், பல இடங்களில் வெளிப்படுத்தினர்.

அதை பார்த்த, எம்.எல்.ஏ.,க்கள், இப்போது கலக்கத் தில் உள்ளனர். ஓட்டெடுப்பு முடிந்த தும், ஊருக்கு எப்படி திரும்புவது என்ற தயக் கத்தில் உள்ளனர். இவ்வளவு நாளும், சொகுசு விடுதியில் தங்க

 

வைத்து, சகல வசதிகளும் செய்து தந்த சசிகலா உறவினர்களிடம், அவர்கள் இதுபற்றி முறை யிட்டு உள்ளனர்.

தொகுதிக்கு திரும்புவதில் சிக்கல் இருப்பதால், போதிய போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என, கேட்டுள்ளனர். கூவத் துாரில், நேற்று முன்தினம் நடந்த ஆலோசனை கூட்டத்தில், இது பற்றி பல, எம்.எல்.ஏ.,க்கள் இந்த கோரிக்கையை வலியுறுத்தினர்.சில, எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கேட்டுள்ளனர்.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1713469

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.