Jump to content

அரசியல் நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் குற்றச்சாட்டுக்கள் புனையப்படுகின்றன சொத்துக்களை சேர்க்கவில்லை; வங்கிக்கணக்கும் எனக்கில்லை என்கிறார் கோத்தபாய ராஜபக் ஷ


Recommended Posts

அரசியல் நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் குற்றச்சாட்டுக்கள் புனையப்படுகின்றன

 

சொத்துக்களை சேர்க்கவில்லை; வங்கிக்கணக்கும் எனக்கில்லை என்கிறார் கோத்தபாய ராஜபக் ஷ

(பா.ருத்ரகுமார்)

வங்கிக்கணக்கு என்று எனக்கு எதுவும் கிடையாது. காணியையும் வீட்டையும் சொத்  துக்களையும்கூட நான் சேர்க்கவில்லை. திருட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட  தில்லை. அரசியல் நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் குற்றச்சாட் டுக்கள் புனையப் படுகின்றன. எவ்வாறாயினும் அரச அதிகாரி எனும் பொறுப்பில் இருந்தவன் என்ற அடிப்படையில்  விசாரணைகளுக்கு பதிலளிப்பேன் என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார். 

சந்தஹிருசேயா என்ற விஹாரையின் தங்க புத்தர் சிலை விவகாரம் தொடர்பில் நிதிக்குற்றவியல் விசாரணைப் பிரிவில் நேற்று வெ ள்ளிக்கிழமை ஆஜராகிய கோத்தபாய ராஜபக்ஷ பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நேற்றுக் காலை 9. 45 மணியளவில் ஆரம்பமாகிய விசாரணை சுமார் மூன்று மணிநேரம் நீடித்திருந்தது. சுங்கத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் தொடர்பில் விசாரணை நடத்தவே அவருக்கெதிராக விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 

யுத்த வெற்றியை நினைவுட்டும் வகையில் அனுராதபுரத்தில் நிர்மானிக்கப்பட்டிருந்த சந்தஹிருசேயா என்ற விஹாரையில் தங்க புத்தர் சிலை மற்றும் அரசமரம் ஆகியன பிரதிஸ்டை செய்யப்பட்டிருந்தன.

இந்த சிலை மற்றும் அரசமரம் ஆகியனவற்றை உருவாக்குதற்கு சுங்கத் திணைக்களத்திடமிருந்து கடற்படையினர் தங்கம் பெற்றுக்கொண்டிருந்தனர் எனவும் முழு அளவில் தங்கத்தினால் சிலை உருவாக்கப்பட தங்கம் வேண்டியிருந்தபோதிலும், தங்க மூலாம் மட்டுமே பூசப்பட்டு சிலை பிரதிஸ்டை செய்யப்பட்டதாகவும் குற்றம் சுமத்தப் பட்டுள்ளது.

இது தொடர்பில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் கோதபாய விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். விசாரணையின் முடிவில் ஊடகவியலாளர்கள் கோத்தபாயவிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதன்போது அவர் கூறுகையில்;

சுங்கத் திணைக்களத்தினால் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் தங்கம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கென நான் இன்று இங்கு அழைக்கப்பட்டிருந்தேன். நான் இவ்வாறு அழைக்கப்படுவது அறிந்த விடயம்தான்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக நான் ஒருபோதும் கூறியது கிடையாது. இதுபற்றி கூறுபவர்களிடம்தான் கேட்கவேண்டும். அத்துடன் அவ்வாறான தீர்மானம் எதனையும் நான் இதுவரையில் எடுக்கவில்லை.

மேலும் அரச ஊழியன் என்ற வகையில் நான் ஆற்றிய பணிகள் தொடர்பில் விசாரணை களை நடத்துவார்களாயின் அதற்கு நிச்சயமாக பதிலளிப்பேன் . அவ்வாறு இல்லாது திருட்டு மற்றும் ஊழல் தொடர்பில் என்னிடம் விசாரிப்பார்களாயின் அதுதொடர்பில் என்னால் பொறுப்பு கூற முடியாது. நான் எந்தகுற்றச்செயலையும் செய்யவில்லை. திருட்டு நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. சொத்துக்களை கொள்வனவு செய்யவில்லை. வீடுகளை வாங்கவில்லை. காணி.யை வாங்கவில்லை. அதேபோன்று வங்கிக்கணக்கு எதுவும் என்னிடம் கிடையாது.

இதேவேளை மிக் விமானம் கொள்வனவு தொடர்பில் என்மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. மிக் விமானம் கொள்வனவு செய்யப்பட்டதானது கேள்வி மனுக்கோரலின் அடிப்படையிலேயேயாகும். இதனை விமானப்படையே கொள்வனவு செய்தது. பொறுப்புள்ள அதிகாரி என்ற வகையில் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தேன்.

எனினும் என்மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் அரசியல் நிகழ்ச்சி நிரலின் பின்னணியில் புனையப்பட்டதாகவே அமைந்துள்ளன. நாம் செயற்பட்ட காலத்தில் எம்மோடு இருந்தவர்களும் இன்றைய அரசாங்கத்தில் அங்கம்வகிக்கின்றனர். அவர்கள் இவை தொடர்பில் நன்கு அறிந்து வைத்துள்ளனர் என்றார். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-18#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.