Jump to content

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற, ஓ.பி.எஸ்., - இடைப்பாடி அணியினர் இடையே, இன்று சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறுகிறது.


Recommended Posts

gallerye_000737708_1713035.jpg

 

  • gallerye_000727412_1713035.jpg

 

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்ற, ஓ.பி.எஸ்., - இடைப்பாடி அணியினர் இடையே, இன்று சட்டசபையில் பலப்பரீட்சை நடைபெறுகிறது.

 

Tamil_News_large_1713035_318_219.jpg

அதனால், 1988ல் நடந்த வன்முறை காட்சிகள் மீண்டும் அரங்கேறுமோ என, பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையில், கடைசி நேரத்தில், 16 எம்.எல்.ஏ.,க்கள் அணி மாறலாம் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், பரபரப்பு அதிகரித்துள்ளது.

ஜெ., மறைவை தொடர்ந்து, முதல்வராக பன்னீர்செல்வம் பொறுப்பேற்றார். அ.தி.மு.க.,வின் தற்காலிக பொதுச்செயலராக, சசிகலா நியமிக்கப்பட்டார். கட்சியை கைப்பற்றியதோடு, ஆட்சியையும் கைப்பற்ற முடிவு செய்தார்.முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்தார். அ.தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவராகி, முதல்வராக முயற்சித்தார். அவருக்கு எதிராக பன்னீர்செல்வம், போர்க்கொடி துாக்கினார்.

இச்சூழ்நிலையில், சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா குற்றவாளி என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததும், அவரின் முதல்வர் கனவு தகர்ந்தது. எனினும், கட்சியும், ஆட்சியும், தன் குடும்பத்தினர் கையை விட்டு போய்விடக் கூடாது என, முடிவு செய்த சசிகலா, தன் விசுவாசியான, இடைப்பாடி பழனிசாமியை, முதல்வராக்க முன்வந்தார்.

அவரது திட்டப்படி, அ.தி.மு.க., சட்டசபை கட்சித் தலைவரானார் இடைப்பாடி.
ஆட்சி அமைக்க, கவர்னரிடம் உரிமை கோரினார். அதற்கு அனுமதி அளித்த கவர்னர், 15 நாட்களுக்குள், சட்டசபையில் பெரும் பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டார். அதை ஏற்று, இடைப்பாடி பழனிசாமி, முதல்வராக பொறுப்பேற்றார். பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, இன்று காலை, 11:00 மணிக்கு, சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது.

இதேபோல, எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ,

அ.தி.மு.க.,வானது, ஜானகி அணி, ஜெ., அணி என, பிளவுபட்டது. முதல்வராக இருந்த ஜானகி பெரும்பான்மையை நிரூபிக்க, சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தபோது, கடும் அமளி ஏற்பட்டது. அதே போன்ற வன்முறை காட்சி கள், இன்றும் அரங்கேறுமோ என்ற பதற்றம் எழுந்துள்ளது.

சட்டசபையில், தற்போது ஒரு காலியிடம் போக, 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அ.தி.மு.க.,விற்கு, 135; தி.மு.க.,விற்கு, 89; காங்கிரசுக்கு எட்டு; முஸ்லிம் லீக்கிற்கு, ஒரு எம்.எல்.ஏ., உள்ளனர். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள், இடைப்பாடிக்கு எதிராக ஓட்டளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். அதன் கூட்டணி கட்சியான, காங்., மற்றும் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ.,க்களும் எதிராக ஓட்டளிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், பன்னீர் செல்வம் மற்றும்அவரது ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள், 11 பேர் உள்ளனர். அவர்களும் தீர்மானத் திற்கு எதிராக ஓட்டளிப்பர். மீதமுள்ள, 124 எம்.எல்.ஏ.,க்களில், ஓட்டெடுப்பு முடிவில், சமநிலை ஏற்பட்டால் மட்டுமே, சபாநாயகர் ஓட்டளிப்பார்.

எனவே, மீதமுள்ள, 123 எம்.எல்.ஏ.,க்களில், எட்டு எம்.எல்.ஏ.,க்கள், தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்தாலே, அரசு கவிழ்ந்து விடும். இச்சூழலில், 16 எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளிக்க உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

இடைப்பாடி பழனிசாமிக்கு, பெரும்பான் மையை நிரூபிக்க, 117 ஓட்டுகள் தேவை. ஒரு வேளை, எம்.எல்.ஏ.,க்கள் சிலர், ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் இருந்தால், பழனிசாமி கொண்டு வரும் நம்பிக்கை தீர்மானத்திற்கு, எதிர்ப்பை விட ஆதரவு அதிகம் கிடைக்கும் நிலை ஏற்படலாம். அப்போது, தீர்மானம் நிறைவேறி யதாக அறிவிக்கப்படும்.

ஆனால், 117 ஓட்டுகள் கிடைக்காவிட்டால், அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்ற நிலை ஏற்படும். இதுகுறித்து, சபாநாயகர், கவர்னருக்கு அறிக்கை அளிப்பார்; அதனடிப்படையில், கவர்னர் அடுத்த முடிவை எடுப்பார்.

எதிர்க்கட்சிகள் முடிவால் சசிகலா தரப்பினர் பீதி! இடைப்பாடி பழனிசாமி, முதல்வராக

 

பொறுப்பேற்பதற்கு முன், தி.மு.க., நடுநிலை வகிக்க, முடிவு செய்திருந்தது. சென்னையில், நேற்று நடந்த தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், தீர்மானத்திற்கு எதிராக, ஓட்டளிக்க முடிவு செய்தனர். அதன் கூட்டணி கட்சிகளான, காங்கிரஸ் மற்றும் முஸ்லிம் லீக்கும் எதிர்த்து ஓட்டளிக்க, முடிவு செய்துள் ளன. இது,சசிகலா தரப்பினரிடம், பீதியை ஏற்படுத்தி உள்ளது.

எதிர்க்கட்சியினரும், பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களும், ரகசிய ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என, வலியுறுத்த திட்டமிட்டுள்ள னர். இதை ஏற்பதும், ஏற்காததும் சபாநாயக ருடைய உரிமை. எனவே, குரல் ஓட்டெடுப் புக்கே வாய்ப்பு அதிகம்.

அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் மாறி ஓட்டளித் தால், சசிகலா தரப்பினர் ரகளையில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது. எனவே, சட்டசபை வளாகத் தில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
 

கருணாநிதிவர மாட்டார்!


அ.தி.மு.க., அரசின் ஆயுளை முடிவு செய்ய உள்ள, இன்றைய சட்டசபை கூட்டத்தில், தி.மு.க., தலைவர், உடல்நலக் குறைவு காரண மாக, பங்கேற்க மாட்டார் என, தெரிகிறது.
 

பன்னீருக்கு மேலும் 16 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு?


பன்னீர்செல்வத்திற்கு, மேலும், 16 எம்.எல்.ஏ.,க் கள் ஆதரவு தர முன்வந்துள்ளதாக கூறப்படு கிறது.இடைப்பாடி பழனிசாமி, முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். கவர்னர் வித்யாசாகர் ராவ் உத்தரவின்படி, அவர் தன் பலத்தை நிரூபிப்பதற்காக, சட்டசபையில், இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு கோருகிறார்.

இதற்காக, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலரும், கூவத்துாரில் உள்ள சொகுசு விடுதியில், ஒரு வாரத்திற்கும் மேலாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அதேநேரத்தில், முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம், 'எம்.எல்.ஏ.,க்கள் மனசாட்சி யுடன் ஓட்டளிக்க வேண்டும்' என, கூறியுள் ளார். இதற்காக, பன்னீர்செல்வத்தின் ஆதரவு எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும், கூவத்துாரில் உள்ள எம்.எல்.ஏ.,க் களுடன் ரகசிய பேச்சு நடத்தி வருகின்றனர்.

பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக மாறியதால், கல்வித்துறை அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட, பாண்டியராஜன், இதில் தீவிரமாக இறங்கியுள்ளார். நேற்று முன்தினம் இரவு முதல், பாண்டியராஜன் தரப்பினர், எம்.எல்.ஏ.,க்களை, மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர்.

இப்பேச்சில், திருநெல்வேலி, துாத்துக்குடி, விருதுநகர், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த, 16 எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தர முன்வந்துள் ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1713035

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் பலமுறை இவ்வாறு கணித்து ஏமாந்து இருக்கிறேன். 
    • கீரை கூட்டு இப்படி செய்து பாருங்கள்.......!  👍
    • வைக்கோ ராம‌தாஸ் ஆதிமுக்கா கூட்ட‌னில‌ இருந்த‌து தெரியும் அண்ணா...........போரை நிறுத்த‌ச் சொல்லி ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்க வைகோ அதை ப‌ழ‌ச்சாரு கொடுத்து முடித்து வைத்தது இன்னொரு க‌தை................இன‌மும் அழிஞ்சு போச்சு எங்க‌ட‌ போராட்ட‌மும் முற்றிலுமாய் இருந்த‌ இட‌மே தெரியாம‌ எல்லாத்தை அழித்து விட்டார்க‌ள் இனி இதுக‌ளை ப‌ற்றி விவாதிச்சா கோவ‌த்துட‌ன் கூடிய‌ வெறுப்பு தான் வ‌ரும்................க‌ணிமொழியின் ஊழ‌லுக்காக‌ தான் க‌ருணாநிதியால் அப்ப‌ ஒன்றும் செய்ய‌ முடியாம‌ போன‌து இன்னொரு கதை................
    • இதில் ஒரு மாற்று கருத்து இல்லை. ஆனால் இன்றைய இலங்கையின் யதார்த்தம்: சாதாரண சிங்கள மக்கள்: நாம் உங்களுக்கு எதையும் தரப்போவதில்லை.  சாதாரண தமிழ் மக்கள் (பெரும்பான்மை): நாம் உங்களிடம் எதையும் கேட்கப்போவதும் இல்லை. யாழில் ஏ எல் டுயூசன் விளம்பரம், வெளிநாட்டு வேலை படிப்பு விளம்பரம், நுகர்வு பொருள் விளம்பரம் இவைதான் எங்கும் கண்ணில் படுகிறன.  பயிஷ்கரிப்பு, கடையடைப்பு, ஹர்த்தால், இப்படியானவற்றை நான் காதில் கூட கேட்கவில்லை. கம்பஸ்சில் ஓரளவு உணர்வு தங்கி இருக்க கூடும். மாவீரர் வாரம், மே மாதம் உணர்சிகள் அங்கும், வெளியிலும் வெளிப்படையாக வரக்கூடும், ஆனால் பொதுவாக அவரவர், தத்தம் சுய வேலைகளில் மட்டுமே கவனமாக உள்ளார்கள். கொழும்பில் 90 களில் சிலர் கூடி தமிழ் சங்கத்தில் இலக்கியம் பற்றி பேசுவார்கள் அப்படியாக சுருங்கி விட்டது யாழில் அரசியல். மக்கள் அரசியல், குறிப்பாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து மிகவும் அந்நியபடுவதாக உணர்ந்தேன். செஞ்ச்சோன்ஸ் போலர் மாதுளன் சிஎஸ்கே யில் எடுபடுவாரா, இலங்கை அணியில் எடுக்க இனவாதம் விடுமா? இப்படி பட்ட மட்டத்தில்தான் அரசியல் இருக்கிறதே தவிர. முன்னர் போல், உரிமைகள் அபிலாசைகள் பற்றி பேசுவோர் குறைவாகவே உள்ளனர். நமக்குத்தான் கோட்டையை, கறுத்த பாலத்தை, ஆனையிறவை, மாங்குளம் சந்தியை தாண்டும் போது பழைய நினைவுகள் வந்து மனம் சுண்டுகிறது. அந்த மக்கள் அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் பழசை எல்லாம் நினைவில் வைத்திருப்பதாக தெரியவில்லை. இவை எதுவுமே தெரியாத ஒரு சந்ததி முன்னுக்கு வந்து விட்டது என்பதும் உண்மை. உணர்ச்சி இல்லாமல் இல்லை. அழிவுகளை மறந்தார்கள் என்பதும் இல்லை. ஒரு ஐந்து நிமிட கதையில் உள்ள கிடக்கையை அறிய முடிகிறது. ஆனால் இது எனக்கான வேலை இல்லை, இது அதற்கான நேரமும் இல்லை, தேவையும் இல்லை என்ற நழுவல் போக்கே பலரிடம். அதை தப்பு சொல்ல எமக்கு ஒரு அருகதையும் இல்லை. ஆனால் நான் அவதானித்தது இதைத்தான். ஜனவரி மாதம் வரை பெரும்ஸ் நாதத்தை தன் நண்பன் என கொண்டாடி, என்னை அவருடன் சேர்ந்து கும்மிப் போட்டு, நேற்று திடீரென நானும் நாதமும் கூட்டு எண்டு ஒரு ரீலை ஓட்டினார் பெரும்ஸ்🤣. நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்🤣.
    • நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌க்கு உங்க‌ளை க‌ண்ட‌து ம‌கிழ்ச்சி க‌ந்த‌ப்பு அண்ணா........... பாசிச‌ பாஜ‌க்கா மூன்றாவ‌து இட‌ம் வ‌ருவ‌து ப‌ல‌ருக்கு சிறுதுளி அள‌வு கூட‌ பிடிக்காது...............ச‌கோத‌ரி காளியம்மாள் வெற்றி பெறுவா  என்ற‌ ந‌ம்பிக்கை இருக்கு பாப்போம்.............வீஜேப்பி திட்ட‌ம் போட்டு தான் நாம் த‌மிழ‌ர் க‌ட்சி சின்ன‌த்தை ப‌றித்து ஊர் பேர் தெரியாத‌ க‌ட்சிக்கு குடுத்து அவ‌ர்க‌ளின் தில்லு முல்லு இப்போது வெளிச்ச‌ஹ்ஹ்துக்கு வ‌ந்து விட்ட‌து............. நாம் த‌மிழ‌ர் சின்ன‌ம் ப‌றி போகாட்டி அண்ண‌ன் சீமான் தேர்த‌ல் ப‌ர‌ப்புர‌ய‌ எப்ப‌வோ செய்ய‌ தொட‌ங்கி இருப்பார்............க‌ட்சி பிள்ளைக‌ளுக்கு நெருக்கடி வந்திருக்காது.................. தேர்த‌ல் முடிவு இன்னும் 9கிழ‌மையில் தெரிந்து விடும்............அதுக்கு பிற‌க்கு விவாதிப்போம் அண்ணா...............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.