Jump to content

ஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்!( வீடியோ )


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்! ( வீடியோ )

தமிழக கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நேற்று பதவியேற்றுக்கொண்டார். ஆனால் பெண் நிருபர் ஒருவர் அவரிடம் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட போது அதற்கு பதில் சொல்ல முடியாமல் திக்குமுக்காடி தப்பித்து சென்ற சம்பவம் நடந்துள்ளது.

நேற்று தமிழகத்தின் 13-வது முதல்வராக எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 31 அமைச்சர்களும் பதவியேற்று கொண்டனர். இதில் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பதவியேற்றார்.
 
இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் செங்கோட்டையனிடம் பெண் நிருபர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில், அந்த பெண் நிருபர் அமைச்சர் செங்கோட்டையனிடம் ஆங்கிலத்தில் பல கேள்விகளை கேட்கிறார்.
கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தினறியவாறு மேடம் சசிகலா சப்போர்ட்டிங் என கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்கிறார். ஆனால் அவரை விடாத அந்த நிருபர் அவரை தொடர்ந்து சென்றவாறு மேலும் சில கேள்விகளை ஆங்கிலத்தில் கேட்கிறார்.
 
ஆனால் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என வேகமாக சென்றுவிட்டார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

நன்றி : வெப்துனியா

டிஸ்கி : 

busy.jpg

 

மனோரமா : தலைவர் தம்பி ..!
கவுண்டமணி : அடடே வாங்க செட்டியாரம்மா.. வாங்க..! வாங்க..! யாரு அந்த மொட்டை ?
திருப்பதியா ? பழனியா ?
மனோரமா: சாமிங்க ..!
கவுண்டமணி : ஒ .. பழனிசாமி ..?
மனோரமா:வெறும் சாமி .!
கவுண்டமணி : என்னம்மா வெறும் சாமி உப்பு போட்ட சாமின்னு ? எனக்கு நிறைய வேலை இருக்கு நான் ரொம்ப பிசி ..!
மனோரமா : ஐயோ ரொம்ப பசியோட இருக்கீங்களா ?..நான் வேணா போய் ஆப்பம் செஞ்சு எடுத்துட்டு வரவா ..?
கவுண்டமணி : நோ! நோ! பிசி.. பிசி.. அதாவது பிசி மீன்ஸ் பிசி ..
மனோரமா : ஓ பிஸ் .. பிஸ் ..

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி போகட்டும், விடுங்க... தோழர்.
செங்கோட்டையனின்... பின் பக்க, முடியை பார்க்க....
கரு கரு என்று... வளர்ந்து, நல்ல கறுப்பாக  இருக்குது.
இது, ஒரிஜினல் முடியா... அல்லது டை  அடிச்ச  முடியா... என்று சந்தேகமாக இருக்கப்பு. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆங்கிலம் தெரியாமல் ஓட்டம்பிடித்த செங்கோட்டையன்: இவர் தான் கல்வித்துறை அமைச்சர்! ( வீடியோ )

தமிழ்நாட்டின் கல்வி அமைச்சருக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என்பதின் அவசியம் என்ன?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, குமாரசாமி said:

தமிழ்நாட்டின் கல்வி அமைச்சருக்கு ஆங்கிலம் தெரிய வேண்டும் என்பதின் அவசியம் என்ன?

என்னண்ணே.. இப்பிடிக் கேட்கிறீங்க?
கல்வி அமைச்சருக்கு,   நாலு மொழி  தெரியா விட்டாலும் 
குட்  மார்னிங், கூட்டன்  மோகன்....  போன்ற, 
சொல்லும்  உச்சரிக்க  முடியாத, நிலையில் அவர்கள் உள்ளார்கள். பாவங்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.