Jump to content

வன்னிப் பெருநிலப்பரப்பில் கட்டுக்கரைக் குளத்தை அடுத்து நாகபடுவானில் கண்டுபிடிக்கப்பட்ட இன்னொரு புராதன குடியிருப்பு மையம்


Recommended Posts

வன்னிப் பெரு­நி­லப்­ப­ரப்பில் கட்­டுக்­கரைக் குளத்தை அடுத்து நாக­ப­டு­வானில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இன்­னொரு புரா­தன குடி­யி­ருப்பு மையம்

01-7e76407d6b2a127c1f9540550c857182cd0e95ca.jpg

 

நீண்­ட­கா­ல­மாக தொல்­லியல், வர­லாற்று ஆய்­வா­ளர்­களால் அதிகம் கவ­னத்தில் கொள்­ளப்­ப­டாத வன்னிப் பிராந்­தி­யத்­திற்கு தொன்­மை­யான, தொடர்ச்­சி­யான வர­லாறு உண்டு என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வதில் அண்­மைக்­கால­மாக மன்னார் மாவட்­டத்தில் கட்­டுக்­கரைக் குளம் என அழைக்­கப்­படும் பிர­தே­சத்தில் மேற்­கொள்­ளப்­பட்டு வரும் தொல்­லியல் அகழ்­வாய்­வு­க­ளுக்கு முக்­கிய இட­முண்டு. இங்கு தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் நிலையில் பூந­க­ரிப்­ பி­ர­தேச சபையின் நிர்­வா­கத்­திற்கு உட்­பட்ட முழங்­காவில் குமு­ழ­முனை வட்­டா­ரங்­களை அண்­டிய நாக­ப­டு­வானில் தெரி­ய­வந்த தொல்­லியற் சின்­னங்கள் பற்­றிய செய்­தி­களை அப்­பி­ர­தேச கிராம அலு­வ­லகர்;, சமுர்த்தி உத்­தி­யோ­கத்தர், ஊட­க­வி­ய­லாளர் மற்றும் வர­லாற்று ஆர்­வ­லர்கள் எமது தொல்­லியல் இறு­தி­ வ­ருட மாணவன் பானு­சங்­க­ருக்கு தெரி­யப்­படுத்­தினர். அதன் அடிப்­ப­டையில் தொல்­லியல் திணைக்­களப் பிர­திப்­ப­ணிப்­பாளர் மற்றும் பூந­கரிப் பிர­தேச செய­லா­ளரின் அனு­ம­தி­யுடன் தொல்­லி­யல் ­தி­ணைக்­கள பிர­தேச பொறுப்­பாளர் பா. கபிலனின் உத­வி­யுடன் யாழ்ப்­பாணப் பல்­கலைக்­க­ழக தொல்­லியல் பிரிவு ஆசி­ரி­யர்கள், மாண­வர்கள் இணைந்து கடந்த­ வாரம் அவ்­வி­டத்தை அடை­யாளம் கண்டு அங்கு பரீட்ச்­ச­ார்த்தமான ஆய்வு ஒன்றை மேற்­கொண்டு வரு­கின்­றனர். இவ்­விடம் கட்­டுக்­க­ரைக்­கு­ளத்­திற்கு வட­மேற்கே 50 கி.மீற்றர் தொலைவில் நாக­ப­டு­வானில் கானா மேட்டைக் குளம் என அழைக்­கப்­படும் காட்­டுப்­ப­கு­தியில் பாழ­டைந்த குளத்தின் அணைக்­கட்­டுக்கு அருகில் அமைந்­துள்­ளது. இவ்­வி­டத்தில் இருந்த பாரிய மர­மொன்று வேருடன் விழுந்த போது அவற்றின் அடிப்­ப­கு­தியில் புதை­யுண்­டி­ருந்த வர­லாற்றுத் தொன்மை மிக்க பல சின்­னங்கள் வெளிக்­கி­ளம்­பி­யி­ருந்­தன. இச்­சின்­னங்­களை அச்­சத்­து­டனும் ஆச்­ச­ரி­ய­மா­கவும் பார்த்த மக்­களில் ஒரு பிரி­வினர் அவற்றின் வர­லாற்றுப் பெறு­ம­தியை உண­ராமல் அச்­சின்­னங்­களில் பல­வற்றை ஆல­யங்­க­ளுக்கும், தமது வீடு­க­ளுக்கும் எடுத்துச்சென்­றுள்­ளனர். எஞ்­சி­யி­ருந்­த­வற்றை அச்சம் கார­ண­மாக மக்கள் சிதை­வ­டையச் செய்து ஒதுக்­குப்­பு­றங்­களில் வீசி­யுள்­ளனர்.

ஆயினும் எமது ஆய்வின் போது இவ்­வ­கை­யான தொல்­லியற் சின்­னங்கள் அவ்­விடத்தில் பரந்த அளவில் மண்­ணினுள் புதை­யுண்­டி­ருப்­பதை உண­ர­மு­டிந்­தது. அவற்றை உறு­திப்­ப­டுத்தும் நோக்கில் அங்கு தெரிவு செய்­யப்­பட்ட ஒரு இடத்தில் 4 × 3 மீற்றர் நீள, அக­லத்தில் மாதி­ரிக்­குழி அமைத்து அகழ்வு செய்தோம். இந்த அகழ்வின் போது அடை­யாளம் காணப்­பட்ட மூன்று கலா­சார மண் அடுக்­கு­களில் பல்­வேறு கால­கட்­டத்தைச் சேர்ந்த மட்­பாண்­டங்­களைக் கண்­டு­பி­டிக்க முடிந்­தது. அவை வடிவ அமைப்­பிலும், தொழில் நுட்­பத்­தி­ற­னிலும் கட்­டுக்­கரைக் குளப்­பி­ர­தேச அகழ்­வாய்வில் கிடைத்த மட்­பாண்­டங்­களைப் பெரு­ம­ளவு ஒத்­த­தாக உள்­ளன. மூன்­றா­வது கலா­சார மண் அடுக்கில் ஒரு சில மட்­பாண்­டங்­க­ளுடன் பெரு­ம­ளவு சுடுமண் உரு­வங்­களும், கழி­வி­ரும்­பு­களும் (Iron Slakes) கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன.

இக்­க­லாச்­சார மண்­ப­டையில் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட சுடுமண் உரு­வங்­களும், மட்­பாண்­டங்­களும் இங்கு வாழ்ந்த பண்­டைய கால மக்­களின் சமய நம்­பிக்­கை­களைப் பிரதி­ப­லிப்­ப­தாக உள்­ளன. அச்­சு­டுமண் உரு­வங்­களில் பீடத்தின் மேல் அமர்ந்­தி­ருக்கும் இரு தெய்­வங்­களின் சிலைகள் சிறப்­பாகக் குறிப்­பி­டத்­தக்­கன. இத்­தெய்வச் சிலை­களை ஊர்­வ­ல­மாகத் தூக்கிச்செல்லும் வகையில் அதன் சது­ர­மான பீடத்தின் நான்கு பக்­கங்­க­ளிலும் முக்­கோண வடி­வி­ல­மைந்த சது­ர­மான துவா­ரங்கள் காணப்­படுகின்­றன. பீடத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தெய்வச் சிலை­களின் இரு கால்­களும் காற்­ச­லங்­கை­க­ளுடன் தொங்­க­வி­டப்­பட்ட நிலையில் காணப்­ப­டு­கின்­றன. சிலையின் வலது கரம் பிற்­கால தெய்வச்சிலை­களில் இருப்­பது போன்ற அப­யகரமா­கவும், இடது கரம் வர­தகரதமா­கவும் தோற்­ற­ம­ளிக்­கின்­றன. அவற்றின் வலது கரத்தின் உள்­ளங்­கையில் திரண்ட மும்­ம­ணிகள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றின் தோற்ற அமைப்பு பிற்­காலச் சிலைகள், செப்புத் திரு­மே­னி­களின் கலை­வ­டி­வங்­களை நினை­வு­ப­டுத்­து­வ­தாக உள்­ளன. இருப்­பினும் இச்­சி­லை­களின் தலைப்­பாகங்கள் பெரு­ம­ள­வுக்கு சிதை­வ­டைந்த நிலை­யி­லேயே காணப்­பட்­டன. அவற்­றி­டையே கிடைத்த நட்­சத்­தி­ர­ வ­டி­வி­லான தோட­ணிந்த காதுகள், தாடைப்­ப­கு­திகள் பண்­டைய கால மக்­களின் கலை­ம­ர­பையும், உயர்ந்த தொழில் நுட்பத் திற­னையும் புலப்­ப­டுத்­து­வ­தாக உள்­ளன. இச்­சிற்­பங்­க­ளுடன் சேர்ந்­த­தாக மேலும் சில கைகள் உடைந்த நிலையில் கிடைத்­துள்­ளன. அக்­கை­களில் சில­வற்றின் உள்­ளங்­கை­களில் திரண்ட மும்­ம­ணிகள் காணப்­ப­டு­கின்­றன. இவற்றை நோக்கும் போது பல கரங்கள் கொண்ட தெய்வச் சிலை­க­ளாக இவை இருந்­தி­ருக்­கலாம் என எண்ணத் தோன்­று­கி­றது.

இச்­சி­லை­க­ளுடன் இவ்­வ­கழ்­வாய்வில் கிடைத்த பிற தொல்­லியற் சின்­னங்கள் இவ்­விடம் பண்­டை­ய­கால மக்­களின் வழி­பாட்­டுக்கு­ரிய மைய­மாக இருந்­தி­ருக்­கலாம் எனக் கருத இட­ம­ளிக்­கி­றது. இதற்கு அகழ்­வாய்வின் போது கிடைத்த பல அள­வு­களிள் வடி­வங்­களில் அமைந்த நாக உரு­வங்கள், ஆமையின் வடிவம், அகல் விளக்­குகள், ஆலய மணிகள், எருதின் உருவம், யானை, குதிரை என்­ப­வற்றின் உடற்­பா­கங்கள், இலிங்க வடி­வங்கள், பல அள­வு­களில் பயன்­ப­டுத்­தப்­பட்ட சட்­டிகள், தட்­டுகள், அவற்றின் விளிம்­பு­களில் படுத்­து­றங்கும் நாகபாம்பின் உருவம் என்­ப­வற்றை உதா­ர­ணங்­க­ளாகக் குறிப்­பி­டலாம். இச்­சான்­றா­தா­ரங்­க­ளுடன் இங்கு கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இரு சுடுமண் அச்­சுக்கள் இங்கு சிறப்­பாகக் குறிப்­பி­டத்­தக்­கன. அவற்றின் ஒரு­பக்­கத்தில் புள்­ளி­க­ளான இலச்சினை அல்­லது பண்­டைய கால எழுத்துக்கள் காணப்­ப­டு­கின்­றன. இது அறி­ஞர்­களின் முறை­யான பொருள் விளக்க்­கத்தைப் பெறும்­பட்­சத்தில் இங்­கி­ருந்த குடி­யி­ருப்­புக்கள் மற்றும் சமயச் சின்­னங்­களின் காலத்தை நிச்­ச­யப்­ப­டுத்தக் கூடி­ய­தாக இருக்கும் என நம்­பலாம்.

தமி­ழ­கத்தில் சுடு­மண்­ணா­லான தெய்வ உரு­வங்கள், அர­சனின் சிலைகள், சமயச் சின்­னங்கள் என்­பன நீர்­நி­லை­களை மையப்­ப­டுத்தி இற்­றைக்கு 2500 ஆண்­டு­க­ளுக்கு முன்னர் தோன்­றிய குடி­யி­ருப்புப் பகு­தி­களில் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளன. அவற்றுள் தெய்வ உரு­வங்கள் கிராமி தெய்­வங்கள் அல்­லது நாட்­டுப்­புற த்தெய்வங்கள் என அழைக்கப்படுகின்றன. இம்­ம­ரபு பிற்­கா­லத்­திலும் தொடர்ந்­த­தற்கு சங்க இலக்­கி­யத்­திலும், பழந் தமிழ் இலக்­கி­யங்­க­ளிலும் பல ஆதா­ரங்கள் காணப்­ப­டு­கின்­றன. நாக­ப­டு­வானில் இவ்­வகைச் சிலைகள், சிற்­பங்கள் சின்­னங்கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட இடத்­திற்கு மிக அருகே தெற்­கிலும், மேற்­கிலும் உள்ள காட்­டுப்­ப­கு­தியில் பாழ­டைந்த இரு குளங்­களின் அணைக்­கட்­டுக்கள் காணப்­ப­டு­கின்­றன. இதனால் இங்கு கிடைத்த சம­யச்­சின்­னங்கள் கட்­டுக்­கரைக் குளத்தைப் போல் பண்­டைய காலத்தில் குளத்தை மையப்­படுத்தி தோன்­றிய குடி­யி­ருப்­புக்­க­ளுக்­கு­ரிய பெறு­ம­தி­மிக்க சான்­று­க­ளாகக் கொள்­ளத்­தக்­கன. இவை ஈழத்­த­மி­ழரின் பூர்­வீக வர­லாறு, பண்­பாடு பற்­றிய ஆய்­வு­க­ளுக்கு கிடைத்த முக்கிய சான்றுகளாகக் கொள்வதில் எதுவித சந்தேகமும் இல்லை எனலாம்.

பேரா­சி­ரியர் ப.புஷ்பரட்ணம்
(தொல்­லியல் இணைப்­பாளர் யாழ்ப்­பாணப் பல்­க­லைக்­க­ழகம்)

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-17#page-4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வன்னியில் கிடைத்த இன்னொரு புராதன குடியிருப்பு மையம்

 

பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
தொல்லியல் இணைப்பாளர்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்: 

IMG_0974-1013x1024.jpg
அண்மையில் மன்னார் கட்டுக்கரை குளத்தை அண்டிய பகுதியில் ஈழத் தமிழரின் பண்டைய வாழிடம் குறித்த தொல்லியல் சான்றுகளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் பேராசிரியரான ப.புஸ்ரீ்பரட்ணம் தலைமையிலான ஆய்வுக்குழு கண்டுபிடித்தது. இந்த நிலையில் அண்மையில் நாகபடுவான் பகுதியில் பண்டைய வழிபாட்டு மையம் ஒன்றை கண்டு பிடித்துள்ளனர் பேராசிரியர் தலைமையிலான குழு. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வன்னிப் பெருநிலப் பரப்பின் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆய்வு ஈழத் தமிழர்கள் குறித்த வரலாற்று, பண்பாட்டு ஆய்வுகளுக்கு முக்கியத்துமான சான்று என்று பேராசிரியர் கூறுகின்றனர். வரலாற்று முக்கியத்துவம் மிக்க இவ் ஆய்வுக் கட்டுரையை நன்றியுடன் வாழ்த்துக்களுடன் குளோபல் தமிழ் செய்திகள் பிரசுரிக்கிறது.
-ஆசிரியர்

நீண்டகாலமாக தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்களால் அதிகம் கவனத்தில் கொள்ளப்படாத வன்னிப் பிராந்தியத்திற்கு தொன்மையான, தொடர்ச்சியான வரலாறு உண்டு என்பதை உறுதிப்படுத்துவதில் அண்மைக்காலமாக மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரைக் குளம் என அழைக்கப்படும் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் அகழ்வாய்வுகளுக்கு முக்கிய இடமுண்டு. இங்கு தொடர்ந்தும் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் பூநகரிப்பிரதேச சபையின் நிர்வாகத்திற்கு உட்பட்ட முழங்காவில் குமுழமுனை வட்டாரங்களை அண்டிய நாகபடுவானில் தெரியவந்த தொல்லியற் சின்னங்கள் பற்றிய செய்திகளை அப்பிரதேச கிராம அலுவலகர்;, சமுர்த்தி உத்தியோகத்தர், ஊடகவியலாளர் மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் எமது தொல்லியல் இறுதிவருட மாணவன் திரு.பானுசங்கருக்கு தெரியப்படுத்தினர்.

 

 
அதன் அடிப்படையில் தொல்லியற் திணைக்களப் பிரதிப்பணிப்பாளர் மற்றும் பூநகரிப் பிரதேச செயலாளரின் அனுமதியுடன் தொல்லியற்திணைக்களப் பிரதேசப் பொறுப்பாளர் திரு. பா. கபிலன் உதவியுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியற் பிரிவு ஆசிரியர்கள் மாணவர்கள் இணைந்து கடந்தவாராம் அவ்விடத்தை அடையாளம் கண்டு அங்கு பரீட்ச்சகரமான  ஆய்வு ஒன்றை  மேற்கொண்டு வருகின்றனர். இவ்விடம் கட்டுக்கரைக்குளத்திற்கு வடமேற்கே 50 கி.மீற்றர் தொலைவில் நாகபடுவானில் கானா மேட்டைக் குளம் என அழைக்கப்படும் காட்டுப்பகுதியில் பழடைந்த குளத்தின் அணைக்கட்டுக்கு அருகில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் இருந்த பாரிய மரமொன்று வேருடன் விழுந்த போது அவற்றின் அடிப்பகுதியில் புதையுண்டிருந்த வரலாற்றுத் தொன்மை மிக்க பல சின்னங்கள்; வெளிக்கிளம்பியிருந்தன. இச்சின்னங்களை அச்சத்துடனும், ஆச்சரியமாகவும் பார்த்த மக்களில் ஒரு பிரிவினர் அவற்றின் வரலாற்றுப் பெறுமதியை உணராமல் அச்சின்னங்களில் பலவற்றை ஆலயங்களுக்கும், தமது வீடுகளுக்கும் எடுத்துச் சென்றுள்ளனர். எஞ்சியிருந்தவற்றை அச்சம் காரணமாக மக்கள் சிதைவடையச் செய்து ஒதுக்குப்புறங்களில் வீசியுள்ளனர்.
 
கட்டுக்கரை மட்பாண்டங்களை ஒத்தவை

ஆயினும் எமது ஆய்வின் போது இவ்வகையான தொல்லியற் சின்னங்கள் அவ்விடத்தில் பரந்த அளவில் மண்ணினுள் புதையுண்டிருப்பதை உணரமுடிந்தது. அவற்றை உறுதிப்படுத்தும் நோக்கில் அங்கு தெரிவு செய்யப்பட்ட ஒரு இடத்தில் 4 ஒ 3 மீற்றர் நீள அகலத்தில் மாதிரிக்குழி அமைத்து அகழ்வு செய்தோம்.  இந்த அகழ்வின் போது அடையாளம் காணப்பட்ட மூன்று கலாசார மண் அடுக்குகளில் பல்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மட்பாண்டங்களைக் கண்டுபிடிக்க முடிந்தது. அவை வடிவ அமைப்பிலும், தொழில் நுட்பத்திறனிலும் கட்டுக்கரைக் குளப்பிரதேச அகழ்வாய்வில் கிடைத்த மட்பாண்டங்களைப்  பெருமளவு ஒத்ததாக உள்ளன. மூன்றாவது கலாசார மண் அடுக்கில் ஒரு சில மட்பாண்டங்களுடன் பெருமளவு சுடுமண் உருவங்களும், கழிவிரும்புகளும் (ஐசழn ளுடயமநள) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இக்கலாச்சார மண்படையில் கண்டுபிடிக்கப்பட்ட சுடுமண் உருவங்களும், மட்பாண்டங்களும் இங்கு வாழ்ந்த பண்டைய கால மக்களின் சமய நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதாக உள்ளன. அச்சுடுமண் உருவங்களில்  பீடத்தின் மேல் அமர்ந்திருக்கும் இரு தெய்வங்களின் சிலைகள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. இத்தெய்வச் சிலைகளை ஊர்வலமாகத் தூக்கிச் செல்லும் வகையில் அதன் சதுரமான பீடத்தின் நான்கு பக்கங்களிலும் முக்கோண வடிவிலமைந்த சதுரமான துவாரங்கள் காணப்படு கின்றன. பீடத்தில் அமர்ந்த நிலையில் உள்ள தெய்வச் சிலைகளின் இரு கால்களும் காற்சலங்கைகளுடன் தொங்கவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. சிலையின்  வலது கரம் பிற்கால தெய்வச் சிலைகளில் இருப்பது போன்ற அபயக~;தமாகவும்,  இடது கரம் வரதக~;தமாகவும் தோற்றமளிக்கின்றன. அவற்றின் வலது க~;தத்தின் உள்ளங்கையில் திரண்ட மும்மணிகள் காணப்படுகின்றன. இவற்றின் தோற்ற அமைப்பு பிற்காலச் சிலைகள், செப்புத் திருமேனிகளின் கலைவடிவங்களை நினைவுபடுத்துவதாக உள்ளன. இருப்பினும் இச்சிலைகளின்  தலைப்பாகங்கள்  பெருமளவுக்கு சிதைவடைந்த நிலையிலேயே காணப்பட்டன. அவற்றிடையே கிடைத்த நட்சத்திரவடிவிலான தோடணிந்த காதுகள், தாடைப்பகுதிகள் பண்டைய கால மக்களின் கலைமரபையும், உயர்ந்த தொழில் நுட்பத் திறனையும் புலப்படுத்துவதாக உள்ளன. இச்சிற்பங்களுடன் சேர்ந்ததாக மேலும் சில கைகள் உடைந்த நிலையில் கிடைத்துள்ளன.  அக்கைகளில் சிலவற்றின் உள்ளங்கைகளில் திரண்ட மும்மணிகள் காணப்படுகின்றன. இவற்றை நோக்கும் போது பல கரங்கள் கொண்ட தெய்வச் சிலைகளாக இவை இருந்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

 

 
பண்டைய வழிபாட்டு மையம்

இச்சிலைகளுடன் இவ்வகழ்வாய்வில் கிடைத்த பிற தொல்லியற் சின்னங்கள் இவ்விடம் பண்டையகால மக்களின் வழிபாட்டிற்குரிய மையமாக இருந்திருக்கலாம் எனக் கருத இடமளிக்கிறது. இதற்கு அகழ்வாய்வின் போது கிடைத்த பல அளவுகளிள் வடிவங்களில் அமைந்த நாக உருவங்கள், ஆமையின் வடிவம்,  அகல் விளக்குகள், ஆலய மணிகள், எருதின் உருவம், யானை, குதிரை என்பவற்றின் உடற்பாகங்கள், இலிங்க வடிவங்கள், பல அளவுகளில் பயன்படுத்தப்பட்ட சட்டிகள், தட்டுகள், அவற்றின் விழிம்புகளில் படுத்துறங்கும்  நாக பாம்பின் உருவம் என்பவற்றை உதாரணங்களாகக் குறிப்பிடலாம். இச்சான்றாதாரங்களுடன் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட இரு சுடுமண்  அச்சுக்கள் இங்கு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. அவற்றின் ஒருபக்கத்தில்  புள்ளிகளான இலட்சனை அல்லது பண்டைய கால எழுத்துக் காணப்படுகின்றது. இது அறிஞர்களின் முறையான பொருள் விளக்க்கத்தைப் பெறும்பட்சத்தில் இங்கிருந்த குடியிருப்புக்கள் மற்றும் சமயச் சின்னங்களின் காலத்தை நிச்சயப்படுத்தக் கூடியதாக இருக்கும் என நம்பலாம்.
 
ஈழத் தமிழர் பூர்வீக வரலாற்றுச் சான்று

தமிழகத்தில் சுடுமண்ணாலான தெய்வ உருவங்கள், அரசனின் சிலைகள், சமயச் சின்னங்கள் என்பன நீர்நிலைகளை மையப்படுத்தி இற்றைக்கு 2500 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய குடியிருப்புப் பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் தெய்வ உருவங்கள் கிராமி தெய்வங்கள் அல்லது நாட்டுப்புற தெய்வங்கள் என அழைக்கப்படுகின்றன. இம்மரபு பிற்காலத்திலும் தொடர்ந்ததற்கு சங்க இலக்கியத்திலும், பழந் தமிழ் இலக்கியங்களிலும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.
 
நாகபடுவானில் இவ்வகைச் சிலைகள், சிற்பங்கள் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திற்கு மிக அருகே தெற்கிலும், மேற்கிலும் உள்ள காட்டுப்பகுதியில் பாழடைந்த இரு குளங்களின் அணைக்கட்டுக்கள் காணப்படுகின்றன. இதனால் இங்கு கிடைத்த சமயச் சின்னங்கள் கட்டுக்கரைக் குளத்தைப் போல் பண்டைய காலத்தில் குளத்தை மையப்படுத்தி தோன்றிய குடியிருப்புக்களுக்குரிய பெறுமதிமிக்க சான்றுகளாகக் கொள்ளத்தக்கன. இவை ஈழத் தமிழரின் பூர்வீக வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வுகளுக்கு கிடைத்த முக்கிய சான்றுகளாகக் கொள்வதில் எதுவித சந்தேகமும் இல்லை  எனலாம்.
  
   http://www.kuriyeedu.com/?p=45678                   
IMG_0776-1024x529.jpgIMG_0783-837x1024.jpgIMG_0974-1-1013x1024.jpgIMG_0992-1024x441.jpgIMG_1010-793x1024.jpgIMG_1020.jpgIMG_1030-909x1024.jpgIMG_1128-541x1024.jpgIMG_1131-717x1024.jpg
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 26 APR, 2024 | 03:25 PM   உயிர்த்த ஞாயிறு குண்டுதாக்குதலில் ஈடுபட்ட ஜஹ்ரான்ஹாசிமை வளர்த்தவர் தேசிய புலனாய்வு பிரிவின் தலைவர் சுரேஸ் சாலே என ஐக்கியமக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவதளபதியுமான சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலே தற்போது தனக்கும்இந்த விடயத்திற்கும் தொடர்பில்லை என காண்பிக்க முயன்றாலும் அவர் இதிலிருந்து தப்ப முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் பதவியிலிருந்தவேளை அவரை அரச புலனாய்வு பிரிவிலிருந்து நீக்கினேன் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச அவரை மீண்டும் அந்த பதவிக்கு நியமித்தார் என  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். சுரேஸ் சாலேயின் வலதுகரமான பொனிபேஸ் பெரேரா கிழக்கிற்கு பொறுப்பான இராணுவஅதிகாரியாக நியமிக்கப்பட்டார் எனவும் தெரிவித்துள்ள சரத் பொன்சேகா சுரேஸ் சாலே என்மீது அவறுதூறு தெரிவித்தால் நான் இந்த ஆவணத்தை சமூக ஊடகங்களில் வெளியிடுவேன் அது அவர் எப்படிப்பட்டவர் என்பதை வெளிப்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார் ஜஹ்ரான் ஹாசிமுடன் தொடர்பிலிருந்த இவ்வாறான நபர்களே கௌரவம் மிக்க வீரர்களாக சித்தரிக்கப்படுகின்றனர் எனவும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182029
    • 26 APR, 2024 | 01:25 PM   கிளிநொச்சி கண்டாவளை கல்லாறு பகுதியில் இயங்கிவரும் சட்டவிரோத குழு ஒன்றினால் பெண் தலைமைத்துவக் குடும்பம் உள்ளிட்ட இருவருக்கு வழங்கிய வாழ்வாதார மிளகாய் தோட்டம் ஒன்று நேற்றிரவு (25) அழிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 10 மணிக்குப் பின்னர் இருவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட மிளகாய் தோட்டத்திற்குள் நுழைந்த குறித்த சட்டவிரோத குழுவினர் காய்க்கும் நிலையில் காணப்பட்ட மிளகாய்ச் செடிகளைப் பிடுங்கி எறிந்ததோடு, தூவல் முறை நீர் விநியோக குழாய்களை உடைத்து, வெட்டியும் சேதப்படுத்தியுள்ளனர்.   பெண் தலைமைத்துவக் குடும்பம் ஒன்றுக்கும் பிரிதொரு குடும்பம் ஒன்றுக்கும் நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவி திட்டத்தின் கீழ் பல இலட்சங்கள் செலவு செய்து மேற்கொள்ளப்பட்ட மிளகாய் பயிர்ச் செய்கையே குறித்த சட்டவிரோத குழுவினால் அழிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்டவிரோத குழுவில் கல்லாறு மற்றும் பிரமந்னாறு  கிராமங்களைச் சேர்ந்த சில இளைஞர்கள் காணப்படுவதாகவும், இந்தப் பிரதேசங்களில் இடம்பெறுகின்ற சட்டவிரோத மணல் அகழ்வு, திருட்டு,  வாள் வெட்டு, உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இவர்கள் ஈட்டுப்பட்டு வருவதாகவும் பொது மக்கள் அச்சம் காரணமாக  இவர்களுக்கு எதிராக முறைப்பாடு செய்வதற்குக் கூட முன்வருவதில்லை என்றும், இருந்த போதிலும் குறித்த மிளகாய் தோட்ட உரிமையாளர்களில் ஒருவரின் மாடு களவாடப்பட்ட விடயத்தில் அவர் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததன் காரணமாக பொலிஸாரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்திய போது அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்குழுவைச் சேர்ந்த ஏனையவர்கள் ஒன்று சேர்ந்தே அவரின் மிளகாய் தோட்டத்தை அழித்துள்ளனர் எனப் பிரதேச பொது மக்கள் தெரிவித்துள்ளனர். இக் குழுவின் செயற்பாடுகள் தொடர்பில் ஒரு சிலரால் பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் செய்யப்பட்ட போதும் பொலீஸாரினால உரிய நடவடிக்கைகள் எவையும் மேற்கொள்ளவில்லை என்றும் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182011
    • விவிபேட்: 100% ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்கக் கோரிய மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி - தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 05:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்று பலதரப்புகளில் இருந்தும் தொடுக்கப்பட்ட வழக்குகளை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மீண்டும் வாக்குச் சீட்டுக்கு மாற வேண்டும் என்று கோரிய மனுவும் இத்துடன் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. எனினும் விவிபேட் இயந்திரங்களும் சீல் செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேட்பாளர்கள் விரும்பும்பட்சத்தில், வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு வாக்குப் பதிவு இயந்திரங்களில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலர் புரோகிராம்களை பொறியாளர் குழுவால் பரிசோதிப்பதற்கு வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.   நீதிபதிகள் சொன்னது என்ன? இந்த வழக்கில் மூன்று கோரிக்கைகள் இருந்தன: காகித ஓட்டுமுறைக்கே திரும்புதல் 100% விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்த்தல் ஒப்புகைச் சீட்டுகளை வாக்காளர்களிடம் கொடுத்து அதை மீண்டும் வாக்குப்பெட்டியில் போடச்செய்தல் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்ஜீவ் கன்னா மற்றும் திபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த அத்தனை மனுக்களையும் தள்ளுபடி செய்வதாகத் தீர்ப்பளித்திருக்கிறது. நடைமுறையில் இருக்கும் செயல்பாடு, தொழில்நுட்ப விஷயங்கள், தரவுகள் ஆகியவற்றைக் கலந்தாலோசித்த பிறகு இந்த முடிவை எட்டியிருப்பதாக நீதிபதி கன்னா கூறினார். இந்த வழக்கில் இரண்டு தீர்ப்புகள் உள்ளன, ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று ஒத்துப்போகின்றன என்றார் நீதிபதி கன்னா. தீர்ப்பளித்துப் பேசிய நீதிபதி கன்னா, வாக்கு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னத்தைப் பதிவேற்றியவுடன் அந்தக் கருவியை சீல் செய்து வைத்து, 45 நாட்கள் வரை அவற்றைப் பாதுகாத்து வைத்திருக்கவும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்களின் மைக்ரோகன்ட்ரோலர்களில் பதிவான 'மெமரியை' தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டபின், 2 மற்றும் 3-ஆம் எண்களில் உள்ள வேட்பாளர்களின் கோரிக்கைக்கிணங்க ஒரு பொறியாளர் குழு சரிபார்க்கலாம் என்றும் கூறினர். இந்தக் கோரிக்கை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் செயப்படவேண்டும். இந்தச் சரிபார்ப்புக்கான செலவீனத்தை கோரிக்கை விடுக்கும் வேட்பாளர் ஏற்க வேண்டும். ஒருவேளை வாக்குப்பதிவு இயந்திரம் பழுதடைந்திருந்தால், அந்தத் தொகை திருப்பித்தரப்படும், என்றார் நீதிபதி கன்னா. மேலும், "ஒரு அமைப்பின்மீது கண்மூடித்தனமாக அவநம்பிக்கை கொள்வது அடிப்படையற்ற சந்தேகங்க்களுக்கு இட்டுச்செல்லும்," என்றார் நீதிபதி தத்தா. பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம்.   பட மூலாதாரம்,ANI வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. படக்குறிப்பு,முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசி-க்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cxwvx23k0pxo
    • O/L பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். பாரா ளுமன்றத்தில் இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார். இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை மே மாதம் இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது. இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/300298
    • 26 APR, 2024 | 03:16 PM   மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை இந்திய ரஸ்ய நிறுவனங்களிடம் ஒப்படைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 30வருட காலத்திற்கு ரஸ்யா இந்தியா கூட்டு முயற்சிக்கு ஒப்படைப்பதற்கு  அமைச்சரவை தீர்மானித்துள்ளது என அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். இந்தியாவின் சௌர்யா ஏரோநட்டிக்ஸ்  ரஸ்யாவின் எயர்போர்ட் ரீஜன்ஸ் முகாமைத்துவ நிறுவனத்திடமும் மத்தல விமானநிலையத்தின் நிர்வாகத்தை  ஒப்படைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளது. https://www.virakesari.lk/article/182025
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.