Jump to content

திருநாவுக்கரசரை விளாசும் இளங்கோவன்!


Recommended Posts

திருநாவுக்கரசரை விளாசும் இளங்கோவன்!

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக வாக்களிப்போம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதை திருநாவுக்கரசர் மறுத்தார். 'வாக்களிப்பது குறித்து நான் எதுவும் கூறவில்லை. அதுகுறித்து கட்சி மேலிடம்தான் முடிவு எடுக்கும்'. என்று திருநாவுக்கரசர் கூறினார்.

Elangovan

இந்நிலையில் திருநாவுக்கரசரின் கருத்துக்கு, இளங்கோவன் அவரை கடுமையாக சாடியுள்ளார்.  இதுகுறித்து கூறிய இளங்கோவன், 'திருநாவுக்கரசர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். திமுகவின் நிலையே காங்கிரஸின் நிலை என ராகுல்காந்தி ஏற்கெனவே கூறியிருந்தார். திருநாவுக்கரசர் வேண்டுமென்றே திரித்துக் கூறுகிறார். அவர் தொடர்ந்து சசிகலாவுக்கு ஆதரவாகவே பேசி வருகிறார். அவர்  விரைவில் அதிமுகவில் இணைந்து விடுவார். நாளை நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில், காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகதான் வாக்களிப்பார்கள்' என்றார்.

http://www.vikatan.com/news/tamilnadu/81189-elangovan-slams-thirunavukkarasar.html

Link to comment
Share on other sites

சும்மா கோயில் கோயிலாக ஏறி தேவாரம் திருவாகசம் பாடிக்கொண்டு இருந்த திருநாவுக்கரசர் தேவையில்லாமல் அரசியலுக்குள் நுழைந்தால் இப்படித்தான் பேச்சு வாங்க வேண்டி வரும் :117_eyes:

Link to comment
Share on other sites

திருநாவுக்கரசரின் எடப்பாடி ஆதரவு மன நிலை.. நடராஜன் தரப்பினருடனான சமூக ரீதியிலான நட்பு காரணமா?

 

சென்னை: அதிமுக விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சசிகலா தரப்புக்கு சாதகமாகவே பேசி நடந்து வருகிறார் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர். இதற்கு நடராஜன் தரப்பினருடனான சமூக ரீதியிலான நட்புதான் காரணமா என்ற கேள்விகளை பலரும் எழுப்பத் தொடங்கி விட்டனர்.

காரணம் ஆரம்பத்திலிருந்தே சசிகலா தரப்பைச் சேர்ந்தவர் போலவே திருநாவுக்கரசர் செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சிக்காரர் போலவே அவர் செயல்படவில்லை என்ற பெரும் குற்றச்சாட்டை இளங்கோவன் போன்றோர் வலுவாக வைத்து வருகினறனர். அதற்கு விளக்கம் கூட கொடுப்பதில்லை திருநாவுக்கரசர்.

The reasons behind Thirunavukkarasar's pro Edappadi govt

 

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து சசிகலா தரப்புடன் படு நெருக்கமானார் திருநாவுக்கரசர். அப்போதே அதை இளங்கோவன் விமர்சித்தார். பழைய அதிமுககாரராக மாறி விட்டாரா திருநாவுக்கரசர் என்றும் கேள்வி எழுப்பினார். திருநாவுக்கரசரும் கூட கிட்டத்தட்ட சசிகலா தரப்புக்கு உதவிகள் செய்வது போலவே நடந்து வந்தார்.

 

தற்போது கூட கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்களை கொண்டு போய் அடைத்து வைத்திருப்பதும் கூட திருநாவுக்கரசர் கொடுத்த ஐடியாதான் என்றும் சிலர் சொல்கிறார்கள். முன்பு ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாக அதிமுக உடைந்தபோதும் திருநாவுக்கரசர் மற்றும் சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர்தான் ஜெ. ஆதரவு எம்.எல்.ஏக்களை பஸ்களில் ஏற்றிப் பதுக்கி வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.

சசிகலா சிறைக்குப் போன பின்னரும் கூட திருநாவுக்கரசரின் நிலைப்பாடு மாறவில்லை. தற்போது அவர் எடப்பாடி அரசைக் காக்க தீவிரமாக முயன்று வருவதாக கூறப்படுகிறது. இதனால்தான் இன்று கூடிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் எடப்பாடி அரசுக்கு எதிரான முடிவை அவர் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

திருநாவுக்கரசர் தொடர்ந்து இதுபோல சசிகலா தரப்புக்கு ஆதரவாக செயல்பட, நடராஜன்- சசிகலாவுடனான சமூக ரீதியிலான நட்புதான் காரணமா.. அதனால்தான் இப்படி எடப்பாடி அணிக்கு சாதகமான மன நிலையில் அவர் உள்ளாரா என்று பொதுமக்கள் உள்பட பலரும் கேட்க ஆரம்பித்து விட்டனர்.


Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/the-reasons-behind-thirunavukkarasar-s-pro-edappadi-govt-274427.html

Link to comment
Share on other sites

முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்: முகுல் வாஸ்னிக் அறிவிப்பு

சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார்.

 
 
முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக காங். எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்: முகுல் வாஸ்னிக் அறிவிப்பு
 
சென்னை:
 
தமிழக சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆளுநர் உத்தரவிட்டுள்ள 
நிலையில் அவருக்கு எதிராக வாக்களிக்க தி.மு.க முடிவு செய்தது.
 
இருப்பினும், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் நாளை தனது முடிவை அறிவிக்கும் என அக்கட்சியின் தமிழக தலைவர் 
திருநாவுக்கரசர் நேற்று தெரிவித்து இருந்தார். இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கல் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று சிறிது குழப்பம் 
 
ஏற்பட்டது.
 
இந்நிலையில், சட்டப்பேரவையில் நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக காங்கிரஸ் 
 
எம்.எல்.ஏ.க்கள்  வாக்களிப்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் அறிவித்துள்ளார். துணைத் தலைவர் 
 
ராகுல்காந்தியின் உத்தரவின் பேரில் இந்த அறிவிப்பு வெளியாவதாக கூறப்படுகிறது
 
திருநாவுக்கரசர் சசிகலாவுக்கு ஆதரவாகவே தொடர்ந்து பேசி வருகிறார் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் 
 
இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
 
இதனிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாக்களிக்க மனித நேய மக்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் 
 
தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/02/18002423/1069007/Congress-MLAs-will-vote-against-CM-Palanisami-Mukul.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.