Jump to content

கூவத்தூர் ரிசார்ட்டில் இப்போது என்ன நடக்கிறது? - லைவ் ரிப்போர்ட் #VikatanExclusive


Recommended Posts

கூவத்தூர் ரிசார்ட்டில் இப்போது என்ன நடக்கிறது? - லைவ் ரிப்போர்ட் #VikatanExclusive

Uvadur_goldan_17515.jpg

கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்டுக்குள் தங்கியிருக்கும் சசிகலா அணி எம்.எல்.ஏ.க்கள் தற்போது எப்படி இருக்கிறார்கள், அவர்களின் மனநிலை எப்படி உள்ளது என்று விசாரிக்க அங்கு பயணித்தோம். அப்போது கிடைத்த தகவல்கள் ருசிகரமானது. 

 'அல்வா'வுக்கு பெயர் பெற்ற ஊரிலிருந்து சென்னை வந்திருக்கும் எம்.எல்.ஏ. அவர். ஏதோ பிக்னிக் ஸ்பார்ட்டுக்கு வந்ததைப் போல ரிசார்ட்டுக்குள் செல்ஃபி எடுத்துக் கொண்டு இருந்தார். அரசியல் பரபரப்பும், தொகுதி மக்கள் குறித்த எந்தவித அக்கறையும் அந்த எம்.எல்.ஏ.க்கு இல்லை. 'மகிழ்ச்சி' என்று ரஜினியின் கபாலி டயலாக்கை சக ஆதரவாளர்களுடன் சொல்லிக் கொண்டு இருந்தார். அடுத்து தமிழ்ச்சங்க நகரத்திலிருந்து வந்திருந்த எம்.எல்.ஏ. ஒருவர், அல்வா ஊர் எம்.எல்.ஏ.வை விட அதிக மகிழ்ச்சியில் இருந்தார். 'நான் ரொம்ப பிஸி' போல ரிசார்ட்டை சுற்றி வலம் வந்து கொண்டு இருந்தார். கையிலிருந்த செல்போனில் வாட்ஸ்அப் மூலம்  தொகுதி நிலவரத்தை கேட்டுக் கொண்டு இருந்தார். பன்னீர்செல்வத்துக்கு உள்ள ஆதரவு குறித்து எம்.எல்.ஏ.விடம் தகவலைத் தெரிவித்தவரிடம், 'என்னய்யா நடக்குது' என்று ஆர்வமாக கேட்டார் எம்.எல்.ஏ. 'நம்ம ஆளுங்க யாராவது ஓ.பி.எஸ் பக்கம் போயிட்டாங்களா என்று கேட்க.. அப்படியெதும் இல்ல. ஒன்றியம்தான் அந்தப்பக்கம் போகப்போவதா தகவலண்ணா' என்று கட்சி நிலவர விவாதம் நடந்து கொண்டு இருந்தது. அடுத்து நம் கண்ணில்பட்டவர் வாழும் எம்.ஜி.ஆராக கருதும் அமைச்சர். கட்சியின் முன்னணி நிர்வாகிகளிடம் கலந்து ஆலோசித்த அவர், ஓ.பி.எஸ். நிலைமையைச் சொல்லி கமென்ட்ஸ் அடித்துக் கொண்டு இருந்தார். அதைக் கேட்டவர்களும் அந்த ஆளும் இங்கிருந்தா... என்று இழுத்தார். அதற்குள் இடைமறித்த இன்னொரு அமைச்சர், 'அவரு மட்டும் இப்படி போகலண்னா நம்மள இப்படி கவனிப்பார்களா... அமைச்சரா இருந்தபோது கப்பம் கட்டிய நமக்கு இப்போது அவர்களிடமிருந்து தயவு கிடைத்திருப்பதை... சொல்லும்போதே அவரது முகம் பளீச்' என்று மாறியது.

Uvadur_goldan_1_17208.jpg

ரிசார்ட்டில் உள்ள டைனிங் ஹாலில் லெக்பீஸ் சிக்கனுடன் போராடிக் கொண்டு இருந்தார் அந்த சட்டம் படித்த எம்.எல்.ஏ. ஒருவர். அருகில் இருந்த இன்னொரு எம்.எல்.ஏ.விடம் சட்ட ரீதியான விவரத்தை விளக்கிக் கொண்டு இருந்தார். அவரும் அதை ஆமோதித்தப்படியே பிரியாணியை உள்ளே தள்ளினார். எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் ஆகியோரின் நெருக்கமானவர்களும் டைனிங் ஹாலில் டிஸ்கவரி சேனல்களில் பலவற்றை மேஜையில் வைத்திருந்தனர். சிலர் போதையில்  உளறிக் கொண்டு இருந்தனர். வீடியோ கேம்களிலும் எம்.எல்.ஏ.க்களும், அவரது ஆதரவாளர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர். காலை முதல் இரவு வரை தொடரும் இந்த நிகழ்வில் அவ்வப்போது மீட்டிங்கிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் முன்னணி நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றனர். எம்.எல்.ஏ.க்களுக்கு எல்லாம் அரணாக இருக்கும் மன்னார்குடி தரப்புக்கு நெருக்கமான அமைச்சரின் குண்டர்கள்தான் அங்கு ஆல்இன்ஆள். அந்த அமைச்சரின் வழிகாட்டுதலின்பேரில் ரிசார்ட்டில் உள்ளவர்கள் செயல்படுகின்றனர். டிபனாக இட்லி, தோசை என தென்னிந்திய உணவுகளுடன் வடமாநில உணவுகளும் பட்டியலில் உள்ளன. பெரும்பாலான எம்.எல்.ஏ.க்களுக்கும், அமைச்சர்களுக்கும் உணவுக்கட்டுப்பாடு இருப்பதால் டயட் கண்ட்ரோலில் இருக்கின்றனர். ஆனால் அவர்களின் டிரைவர்கள், ஆதரவாளர்கள் 'ஒரு பிடி' பிடிக்கின்றனர். மதியமும் சைவ, அசைவ உணவுகளுடன் பழ வகைகளும் இடம் பிடிக்கின்றன. வடமாநில உணவுகள் விரைவில் காலியாகி விடுகிறதாம். இதற்காக தனி சமையல் டீம் களம் இறக்கப்பட்டுள்ளன.

பெண் எம்.எல்.ஏ.க்களைப் பொறுத்தவரைக்கும் குடும்பத்தினருடன் அவர்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அனைத்து எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்களுக்குத் தனித்தனியாக அறைகள் வழங்கப்பட்டு இருந்தாலும் யாருமே தனியாக தங்குவதில்லையாம். ஆனால், சில எம்.எல்.ஏ.க்கள் தங்களுக்குப் பிடித்தமானவர்களுடன் ஒரே அறையில் தங்கி உள்ளனர். சிலர் அங்குள்ள கேளிக்கை விடுதிகளிலேயே பொழுதைக் கழித்து வருகிறார்களாம். பெரும்பாலான எம்.எல்.ஏ.க்கள் காலை, மாலையில் உடற்பயிற்சி மேற்கொள்கின்றனர். ஒரே இடத்தில் தமிழகத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் ஒன்பது நாட்களாக தங்க வைக்கப்பட்டு இருப்பதால் அரட்டைகள் தொடர்கிறது. அனைத்து அரட்டையிலும் ஓ.பி.எஸ் டாப்பிக் ஓடுகிறது. அடுத்து ரிசார்ட்டில் உள்ள படகு சவாரி, நீச்சல் குளம் ஆகிய இடங்களில் அதிகளவில் எம்.எல்.ஏ.க்கள் பொழுதைக் கழிக்கின்றனர்.

Uvadur_goldan_1a_17479.jpg

ரிசார்ட்டில் உள்ள சி.சி.டி.வி. கேமரா மூலம் எம்.எல்.ஏ.க்களின் செயல்பாடுகளை கண்காணிக்க தனி டீம் உருவாக்கப்பட்டுள்ளதாம். அந்த டீம் கேமராவில் பதிவாகும் காட்சிகள் மூலம் எம்.எல்.ஏ.க்களை கண்காணிக்கும் குழுவுக்கு அவ்வப்போது தகவல் கொடுக்கிறது. சில நாள்கள் சுதந்திரமாக பேசிய எம்.எல்.ஏ.க்கள் இப்போது சி.சி.டி.வி கேமரா கண்காணிக்கப்படும் தகவலுக்குப் பிறகு அமைதியாகி விட்டார்களாம்.  முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்தப்பிறகு ரொம்பவே அமைதியாகி விட்டார்களாம் எம்.எல்.ஏ.க்கள். கான்பரன்ஸ் அறையில் நடக்கும் கூட்டம் குறித்த தகவல் எம்.எல்.ஏ.க்களுக்கு நேரிடையாக சொல்லப்படுவதில்லை. அவர்களை கண்காணிக்கும் குழு மூலமே தெரிவிக்கப்படுகிறது. கூட்ட அரங்குக்குள் யாரும் செல்போன் கொண்டுச் செல்ல அனுமதியில்லையாம். ரிசார்ட்டுக்குள் சிக்னல் சரிவர கிடைப்பதில்லை என்று எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் சொல்கின்றனர். ஆனால், அதற்கு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

mixker_18264.jpg



ரிசார்ட்டுக்குள் போலீஸ் படை நுழைந்தபோது சசிகலா அணியில் விசுவாசமாக இருப்பவர்கள் மட்டுமே முன்னால் வந்து நின்றனர். மதில் மேல் பூனை மனநிலையில் இருந்த எம்.எல்.ஏ.க்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை என்று சொல்லப்படுகிறது. வடக்கு மண்டல ஐ.ஜி செந்தாமரைக் கண்ணன், காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. முத்தரசியிடம், போலீஸ் உயரதிகாரி ஒருவர் எப்படி விசாரணை நடத்த வேண்டும் என்று முன்கூட்டியே தெரிவித்துள்ளார். அதை மீறி அவர்களால் செயல்பட முடியவில்லை என்கின்றனர் போலீஸ் தரப்பில். எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடரும் பட்சத்தில் விசுவாசமாக இருந்த ஐ.பி.எஸ். மற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு முக்கியப் பதவி கொடுக்கப்படவுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. முதல்வர் பதவி ஏற்பு கொண்டாட்டத்தில் மன்னார்குடி கும்பலும், எம்.எல்.ஏ.க்களை கண்காணிக்கும் கும்பலும் பிஸியாக இருந்தனர். பதவி ஏற்பு விழா முடிந்ததும்  நம்பிக்கை வாக்கெடுப்பு என்று ஆளுநர் அறிவித்ததுள்ளதால் மீண்டும் ரிசார்ட்டுக்குள் சென்று விட்டனர் எம்.எல்.ஏ.க்கள். கோல்டன் பே ரிசார்ட்க்குள் அரங்கேறும் இன்னும் பல காட்சிகள் மர்மமாகவே இருக்கின்றன. நான்கு சுவருக்குள் அந்த ரகசியம் அரங்கேறுவதால் அவைகள் எதுவும் நம்கண்ணில் தென்படவில்லை. 

http://www.vikatan.com/news/tamilnadu/81158-whats-happening-at-kuvathur-resort-now-live-report.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சீமானை எதிர்ப்பவர்கள் தங்களை அதிபுத்திசாலிகளாகவும் சீமானை ஆதரிப்பவர்கள்  கண்மூடித்தனமாக உணர்ச்சிகரமான பேச்சுக்களுக்கு மயங்கி சீமானை ஆதரிப்பது போலவும் ஒரு மாயை நிலவுகிறது.நாங்கள் சீமானை ஆதரிப்பதற்கு காரணம் தமிழ்த்தேசியத்தின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் .அதை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டும்.இல்லாவிட்டால் ஆரியத்தை விட திராவிடமே தற்போதைய நிலையில் தமிழ்த்தேசியத்தை அழிப்பதில் முன்நிற்கிறார்கள்.ஆரியம் வட இந்தியாவில் நிலை கொண்டிருப்பதால் அதன் ஆபத்து பெரிய அளவில் இருக்காது.ஆனால் தமிழ்நாட்டுக்குள் இருந்து கொண்டு தமிழ்ப்பற்றாளர்களாக காட்டிக்கொண்டு தமிழ்த்தேசியத்தை இல்லாதொழிப்பதற்கு திராவிடம் அயராது வேலை செய்கிறது.சீமானின் எழுச்சி அவர்களின் இருப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.முன்பும் ஆதித்தனார் சிலம்புச்செல்வர் கிபெவிசுவநாதம் பழ நெடுமாறன் போன்றோர் தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்திருந்தாலும் அவர்கள் இயக்கமாக இயங்கினார்களே ஒழிய தேர்தல் அரசியலில் கவனத்தை பெரிய அளவில் குவிக்க வில்லை.திராவிடத்திற்கும் தமிழ்த்தேசிய இயக்கங்கள் இருப்பதில் பிரச்சினை இல்லை.அவர்கள் தேர்தல் அரசியலில் ஈடுபடுவது தமது தேர்தல் அரசியலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலே தமிழ்த்தேசியத்தை மூர்க்கமாக எதிர்க்கிறார்கள்.
    • நல்ல கருத்து எனது  கேள்விக்கு உங்களிடமிருந்து  தான்  சரியான  பதில் வந்திருக்கிறது   ஆனால் நீங்கள்  குறிப்பிடும்  (ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள்) இவர்கள்  எத்தனை  வீதம்?? இவர்கள் 50 க்கு  அதிகமான  வீதம்இருந்தால் மகிழ்ச்சியே...  
    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.