Jump to content

'சம்பந்தன் ஏமாற்றப்பட்டார்'


Recommended Posts


'சம்பந்தன் ஏமாற்றப்பட்டார்'
 
 

article_1486195384-1.jpg-எஸ்.நிதர்ஸன்

“எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் அல்லது இராஐதந்திர ரீதியில் தோல்வியடைந்திருக்கிறார் ”என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினுடைய 34 ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

அதில் இலங்கை தொடர்பான விடயங்கள் தொடர்பாக  ஒன்றரை வருட கால அவகாசம் இலங்கை அரசால் கேட்கப்பட இருக்கின்றது. அவ்வாறு ஒன்றரை வருட கால அவகாசத்தினூடாக இலங்கை அரசாங்கம் என்ன விடயங்களைச் சாதித்துக் கொள்ளப் போகிறதென்பது மிகப்பெரும் கேள்வியாக இருக்கின்றது.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் தொடர்பான அந்த அலுவலகத்துக்குப் பொறுப்பாக இருக்க கூடிய முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயகக்க குமாரதுங்க, யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை எதுவும் தேவையில்லை என மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார்.

அதாவது, ஐ.நா தீர்மானத்தில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணைக்ககு ஒரு பொறிமுறை அமைக்கப்பட வேண்டுமென்றும் அதில் சர்வதேச நீதிபதிகள் வழக்கறிஞர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் அதனூடாகத் தான் நம்பத்தகுந்த விசாரணை நடைபெறுமென்றும் ஐ.நா தீர்மானத்தில் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆனால், நல்லிணக்கம் தொடர்பாக, அதற்குத் தலைமை தாங்கக் கூடிய சந்திரிகா பண்டார நாயக்க, யுத்தக் குற்ற விசாரணைகள் எதுவுமே தேவையில்லை என்றும் அறிவித்திருக்கின்றார்.

அது மாத்திரமல்லாமல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகமானது கால நீடிப்பபைக் கொடுத்தால் கண்காணிப்பு வேண்டுமென்றும் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கு முன்னர் ஐனாதிபதி பிரதமர் வெளிவிவகார அமைச்சர் சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனக் கூறி அதனை  மறுதலித்திருக்கின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்தக் கால அவசாகம் ஏன் என்ற கேள்வி எழுகின்றது. என்ன விடயங்களைக் கையாள்வதற்காக அரசாங்கத்தால் கால நீடிப்பு என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. எங்களைப் பொறுத்தவரையில் கால நீடிப்பு என்பது இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறையாகவே இருக்குமென்பதே எங்கள் நிலைப்பாடு.

ஏற்கெனவே இரண்டு வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையில் இன்னும் இரண்டு வருடங்கள் கடக்கும் என்றால் எமது பிரச்சினை, காலாவதியான பிரச்சினை அல்லது நீர்த்துப் போன பிரச்சினையாக மாற்றமடையும் என்பதுடன் சர்வதேசத்தால் கண்டு கொள்ளாத பிரச்சினையாகவே போய்விடும்.

இவ்வாறானதொரு சூழ் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்ற சம்மந்தன் அவர்கள் கால நீடிப்புக்கு எவ்வாறு சம்மதம் தெரிவிக்க முடியும்.

ஏற்கெனவே ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக அரசாங்கம் சில முன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால் கால நீடிப்பை நாங்கள் அங்கீகரிக்க முடியுமென்ற கருத்தைக் கூறியிருந்தார்.

இப்போது சம்மந்தன் அவர்களும் கால நீடிப்பை வழங்குவதானால் ஐ.நா கண்காணிக்க வேண்டுமென்று கோரியுள்ளார். இதன் பொருள் என்னவெனில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி கால நீடிப்பை ஏதோவொரு வகையில் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதாகும்.

ஆனால் கூட்டமைப்பின் இணைப்புக் குழுக் கூட்டத்தில் எங்கள் கட்சி கால நீடிப்பை வழங்கக் கூடாதென்று தெளிவாக கூறியிருக்கிறோம். கடந்த சில தினங்களிற்கு முன்னர் ரெலோ வின் செயலாளரும் கால நீடிப்பை வழங்க முடியாதென்று கூறியிருக்கின்றார்.

அதே போன்று இதற்கு முன்பாக புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும் கூட கால நீடிப்பை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ஏற்றுக் கொள்வது சுமந்திரனின் கருத்து என்றும் கூறியிருக்கின்றார்.

ஆகவே, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடிய கட்சிகள் இந்தக் கால நீடிப்பை நிராகரித்திருக்கக் கூடிய சூழ்நிலையில் கூட்டமைப்பு கால நீடிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. கால நீடிப்பு தொடர்பில் சம்மந்தனோ சுமந்திரனோ பேசுவதாக இருந்தால் அது தமிழரசுக் கட்சி சார்ந்ததாகவே இருக்க வேண்டுமே தவிர கூட்டமைப்பு சார்ந்ததாக இருக்க முடியாது.
சம்மந்தன், இந்த விடயத்தில் அரசாங்கத் தரப்பினர்கள் மீது பல நம்பிக்கைகளை கொண்டிருந்தார். முக்கியமாக சந்திரிகா போன்றவர்கள், இந்தப் பிரச்சினையில் ஒத்துழைப்பார் என்று நம்பியிருந்தார். ஆனால் அவர் கூட, யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை தேவையில்லை என்று கூறியிருக்கின்றார்.

உங்கள் எல்லோருக்கும் தெரியும் புதிய அரசாங்கத்தை புதிய ஜனாதிபதியை கொண்டு வந்ததில் சம்மந்தன் பெரிய பங்கை ஆற்றியிருந்தார் என்று. அதனை அவர்களே மீண்டும் மீண்டும் கூறியிருந்தனர்.

ஆனால், இன்று அவர்களது சகல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு அந்தக் கோரிக்கைககள் எவையும் ஏற்றுக் கொள்ளப்படாது அரசாங்கம் தான் விரும்பியவாறே செயற்பட்டு வருகின்றது. இதனை எந்த விடயத்திலும் கையாள முடியாத சூழ் நிலை தோன்றியிருக்கின்றது. இதில் ஒன்றில் சம்மந்தன் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் அல்லது இராஐதந்திர ரீதியில் தோல்வியடைந்திருக்கிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது.

ஏனெனில், நீண்டகாலமாக அரசுடன் இணக்கப்பாட்டுடன் இன்றுவரை செயற்பட்டு வருகின்ற போதும் கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் ஒப்புதலுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானமாக இருந்த போதும் கூட அது எவையுமே நடைமுறைப்படுத்தப்படாமல் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று கால நீடிப்பைக் கோருவதானது அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் விடயாகத் தான் நாங்கள் கருதுகின்றோம்.

இவ்வாறான நிலையில் இலங்கை தொடர்பாக விடயத்தை ஐ.நா பொதுச் சபைக்குப் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டுமென்பது எங்கள் கோரிக்கை. ஆகவே மீண்டும் கால அவகாசம் வழங்கி இலங்கை அரசைப் பாதுகாப்பதை விடுத்து இதனை ஐ.நா பொதுச் சபைக்கு கையளிப்பதனூடாக எந்தவொரு கால கட்டத்திலும் விசாரணை நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தோன்றும். ஆகவே கால நீடிப்பை விடுத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை தொடர்பான விடயத்தை பொதுச் சபைக்கு கையளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/191730/-சம-பந-தன-ஏம-ற-றப-பட-ட-ர-#sthash.naWcp9vX.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழ் மக்களை ஏமாற்றி சிங்களவனை காப்பாற்றி வந்ததே... இவர் அரசியலில் செய்த சாதனை.  இவர் நாங்க எப்பவும் சொல்வது போல.. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அரசியல் தோல்வியடைந்த ஒரு தலைவர். இவர் சனநாயக..அரசியலில் இருக்கவே அருகதையற்றவர்.:rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

கூட்­ட­மைப்பை சின்­னா­பின்­ன­மாக்­கி­ய­வ­ராக சம்பந்தன் கரு­தப்­ப­டுவார் : சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

 

 

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பை­விட்டு வெளி­யே­று­வது தொடர்பில் நாம் சரி­யான நேரத்தில் சரி­யான காலத்தில் முடி­வெ­டுப்போம். மேலும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பா­னது இவ்­வா­றான பாதை­யி­லேயே பய­ணிக்­கு­மாயின் அக் கட்­சியை சின்­னா­பின்­ன­மாக்­கி­யதன் மூல கர்த்­தா­வாக சம்­பந்­தனே காணப்­ப­டுவார் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்­சியின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ்­பி­ரே­ம­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

suresh-premachandran-r.sampanthan.jpg

 தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் இருந்து அதனை பிழை­யாக வழி­ந­டத்­து­கின்­ற­வர்கள் வெளி­யேற வேண்­டுமா அல்­லது அதில் அங்கம் வகிக்கக் கூடிய ஏனைய கட்­சிகள் வெளி­யேற வேண்­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ள­தாக அவர்  மேலும் தெரி­வித்­துள்ளார்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­தி­ரனால் நேற்­றைய தினம் யாழ்.ஊடக அமை­யத்தில் நடத்­தப்­பட்ட  பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்­பின்­போது ஊட­க­வி­ய­லாளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

தமிழ் மக்கள் பேரவை வைத்­துள்ள குறிக்­கோ­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்ற தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் இருந்து தமிழ் மக்கள் பேர­வையின் கொள்­கையை ஏற்று அதில் அங்­கத்­துவம் வகிக்­கின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் கட்­சிகள் வெளி­யேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் குறிப்­பிட்­டுள்­ளமை தொடர்­பாக  ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பினர். 

 சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்  தொடர்ந்து பதி­ல­ளிக்­கையில்,

தமிழ் மக்கள் பேர­வை­யென்­பது அர­சியல் கட்­சி­யல்ல என்றும் அது அழுத்தம் கொடுக்­கின்ற ஓர் குழு­வா­கவே எப்­போதும் செயற்­படும் என்றும் அதன் இணைத் தலை­வர்­களால் தொடர்ச்­சி­யாக கூறப்­பட்டு வரு­கின்­றது. அத்­துடன் இவ் அழுத்த குழு­வி­னூ­டாக மக்கள் பிர­தி­நி­திகள் மக்கள் நலன் சார்ந்து எவ்­வா­றான தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும் என்­பது தொடர்­பா­கவும் இக் குழு அழுத்­தத்தை மேற்­கொண்டு வரு­கின்­றது.

ஆனால் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பென்­பதுஇ ஓர் அர­சியல் கட்சி. இது மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட தலை­வர்­களை கொண்ட ஓர் கட்சி. எனினும் இக் கட்­சியில் பல தவ­றுகள் உள்­ள­தென்­பது ஏற்­றுக்­கொள்ள கூடிய ஒன்­றாகும். இத்­த­கைய தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்குள் உள்ளே இருக்­கின்ற தவ­று­களை அல்­லது அக் கட்­சியின் தலை­மை­யா­னது தொடர்ச்­சி­யாக விட்­டு­வ­ரு­கின்ற தவ­றுகள் தொடர்­பாக நாம் தொடர்ச்­சி­யா­க சுட்­டிக்­காட்­டியே வரு­கின்றோம்.

உதா­ர­ண­மாக கேப்­பா­ப்பு­ல­விலே மக்கள் மேற்­கொண்டு வரு­கின்ற நில மீட்பு போராட்­டத்தின் மக்­களை கொழும்­புக்கு வாருங்கள் இது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­ளலாம் என மக்கள் பிர­தி­நி­திகள் கூறு­வதை நாம் கண்­டித்­துள்ளோம். மக்கள் பிர­தி­நி­திகள், தமிழ் மக்­க­ளது வாக்­கு­களை பெற்ற தமிழ் பிர­தி­நி­திகள் போராட்­டத்தில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­களை கொழும்­புக்கு அழைத்து பேசு­வதோ, அங்கே வைத்து அவர்­களை குழப்­பு­வதோ, அதனை நிறுத்­து­வதோ, தவறு என்று சுட்­டிக்­காட்­டி­வ­ரு­கின்றோம். இ தமிழ் மக்­க­ளது பிர­தி­நி­திகள் போராட்­டத்தில் ஈடு­ப­டு­கின்ற மக்­க­ளோடு அவர்­க­ளது பக்­க­மி­ருந்து போராட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்கி மக்­க­ளது கோரிக்­கை­களை வெற்­றி­பெறச் செய்­ய­வேண்டும். இவ்­வா­றான விட­யங்­களை நாம் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்குள் இருந்து கொண்டே அவர்­க­ளுக்கு சுட்­டிக்­காட்டி வரு­கின்றோம்.

அது மட்­டு­மல்­லாமல் தமிழ் மக்கள் மத்­தியில் ஓர் அபிப்­பி­ராயம் உள்­ளது.  தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு என்­பது ஒற்­று­மை­யாக இருந்து செயற்­பட வேண்டும் என்ற நிலைப்­பாடு  உள்­ளது. அந்த அபிப்­பி­ரா­யத்தின் பிர­கா­ரமும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 2016 ஆண்­டுக்குள் தீர்­வினை பெற்றுத் தரு­வ­தாக கூறி அதற்­கான கால அவ­கா­சத்தை கோரி­யி­ருந்தார். நாமும் அதற்கு ஆத­ரவை வழங்­கி­யி­ருந்தோம். ஆனால், இன்­றைய தினம் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் மாத்­தி­ர­மல்ல ஒட்­டு­மொத்த தமிழ் மக்­க­ளுமே ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்றனர். அத்­துடன் இது­வரை காலமும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்குள் இருக்­கின்ற தமி­ழ­ரசு கட்­சி­யினர் தாம் இரா­ஜ­தந்­திர ரீதியில் செயற்­ப­டு­கின்றோம் வெளி­நா­டு­க­ளுடன் பேசு­கின்றோம், அவ்­வா­றாக விட­யங்­களை கையாள்­கின்றோம் எனக் கூறிய நிலையில் இன்று அவை எல்லாம் ஏமாற்­றுப்­பட்டு விட்­ட­னவா  அல்­லது தோல்­வி­ய­டைந்து விட்­ட­னவா என்ற கேள்­வியும் எழுந்­துள்­ளது.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பென்­ப­திலும் அதன் உரு­வாக்கம் என்­ப­திலும் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் பங்­குள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யேற வேண்­டி­ய­வர்கள் யார் என்ற கேள்­வியும் எழுந்துள்ளது. அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பை பிழையாக வழிநடத்துகின்றவர்கள் வெளியே போக வேண்டுமா அல்லது அக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்ற எனையோர் வெளியேற வேண்டுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. எனவே தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது இவ்வாறான பாதையிலேயே பயணிக்குமாயின் அக் கட்சியை சின்னாபின்னமாக்கியதன் மூல கர்த்தாவாக சம்பந்தனே காணப்படுவார். மேலும் இக் கட்சியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக நாம் சரியான நேரத்தில் சரியான காலத்தில் அதற்கான முடிவை எடுப்போம் என்றார் 

http://www.virakesari.lk/article/16785

Link to comment
Share on other sites

 50 வருட அரசியல் அனுபவமுள்ள கைக்குழந்தை சம்பந்தன் ஏமாற்றப்பட்டுவிட்டது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்சனம்தான் ஏமாற்றப்படுதே தவிர சம்பந்தன் கோஷ்டி எங்கை ஏமாந்தது???

எங்கடை பழுத்த/புளுத்த அரசியல்வாதிகளின்ரை தொழிலே அதுதானே....

ஐமீன் இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்பவர்கள். :cool:

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

தமிழ்ச்சனம்தான் ஏமாற்றப்படுதே தவிர சம்பந்தன் கோஷ்டி எங்கை ஏமாந்தது???

எங்கடை பழுத்த/புளுத்த அரசியல்வாதிகளின்ரை தொழிலே அதுதானே....

ஐமீன் இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்பவர்கள். :cool:

சம்பந்தருக்கு தெரியாமல் இது நடந்தால் தான் அதிசயம்.அமிரின் பாசறைக்குள் வளர்ந்த சம்பந்தர், மாவையால் அறியாமல் எதுவுமில்லை.
சிங்கள அரசு தமிழ் மக்களை பேக்காட்டுவதை விட கூட்டமைப்பின் பேய்க்காட்டுகள்  கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களை மிகப்பெரிய மடையர்களாக்கி விட்டது என்பதே நிதர்சனமானது.tw_dissapointed:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.