Jump to content

'சம்பந்தன் ஏமாற்றப்பட்டார்'


Recommended Posts


'சம்பந்தன் ஏமாற்றப்பட்டார்'
 
 

article_1486195384-1.jpg-எஸ்.நிதர்ஸன்

“எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன், அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் அல்லது இராஐதந்திர ரீதியில் தோல்வியடைந்திருக்கிறார் ”என, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தினுடைய 34 ஆவது கூட்டத்தொடர், எதிர்வரும் 27 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது.

அதில் இலங்கை தொடர்பான விடயங்கள் தொடர்பாக  ஒன்றரை வருட கால அவகாசம் இலங்கை அரசால் கேட்கப்பட இருக்கின்றது. அவ்வாறு ஒன்றரை வருட கால அவகாசத்தினூடாக இலங்கை அரசாங்கம் என்ன விடயங்களைச் சாதித்துக் கொள்ளப் போகிறதென்பது மிகப்பெரும் கேள்வியாக இருக்கின்றது.

இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் தொடர்பான அந்த அலுவலகத்துக்குப் பொறுப்பாக இருக்க கூடிய முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயகக்க குமாரதுங்க, யுத்தக்குற்றங்கள் தொடர்பாக விசாரணை எதுவும் தேவையில்லை என மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார்.

அதாவது, ஐ.நா தீர்மானத்தில் யுத்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணைக்ககு ஒரு பொறிமுறை அமைக்கப்பட வேண்டுமென்றும் அதில் சர்வதேச நீதிபதிகள் வழக்கறிஞர்கள் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டுமென்றும் அதனூடாகத் தான் நம்பத்தகுந்த விசாரணை நடைபெறுமென்றும் ஐ.நா தீர்மானத்தில் ஏற்கெனவே சொல்லப்பட்டிருக்கின்றது.

ஆனால், நல்லிணக்கம் தொடர்பாக, அதற்குத் தலைமை தாங்கக் கூடிய சந்திரிகா பண்டார நாயக்க, யுத்தக் குற்ற விசாரணைகள் எதுவுமே தேவையில்லை என்றும் அறிவித்திருக்கின்றார்.

அது மாத்திரமல்லாமல் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகமானது கால நீடிப்பபைக் கொடுத்தால் கண்காணிப்பு வேண்டுமென்றும் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் தெரிவித்திருக்கின்றார்.

இதற்கு முன்னர் ஐனாதிபதி பிரதமர் வெளிவிவகார அமைச்சர் சர்வதேச விசாரணைகளை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை எனக் கூறி அதனை  மறுதலித்திருக்கின்றனர்.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் இந்தக் கால அவசாகம் ஏன் என்ற கேள்வி எழுகின்றது. என்ன விடயங்களைக் கையாள்வதற்காக அரசாங்கத்தால் கால நீடிப்பு என்ற கோரிக்கை முன்வைக்கப்படுகின்றது. எங்களைப் பொறுத்தவரையில் கால நீடிப்பு என்பது இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறையாகவே இருக்குமென்பதே எங்கள் நிலைப்பாடு.

ஏற்கெனவே இரண்டு வருடங்கள் கடந்திருக்கின்ற நிலையில் இன்னும் இரண்டு வருடங்கள் கடக்கும் என்றால் எமது பிரச்சினை, காலாவதியான பிரச்சினை அல்லது நீர்த்துப் போன பிரச்சினையாக மாற்றமடையும் என்பதுடன் சர்வதேசத்தால் கண்டு கொள்ளாத பிரச்சினையாகவே போய்விடும்.

இவ்வாறானதொரு சூழ் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராக இருக்கின்ற சம்மந்தன் அவர்கள் கால நீடிப்புக்கு எவ்வாறு சம்மதம் தெரிவிக்க முடியும்.

ஏற்கெனவே ஓரிரு வாரங்களுக்கு முன்னதாக அரசாங்கம் சில முன் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளுமாக இருந்தால் கால நீடிப்பை நாங்கள் அங்கீகரிக்க முடியுமென்ற கருத்தைக் கூறியிருந்தார்.

இப்போது சம்மந்தன் அவர்களும் கால நீடிப்பை வழங்குவதானால் ஐ.நா கண்காணிக்க வேண்டுமென்று கோரியுள்ளார். இதன் பொருள் என்னவெனில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக் கட்சி கால நீடிப்பை ஏதோவொரு வகையில் ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதாகும்.

ஆனால் கூட்டமைப்பின் இணைப்புக் குழுக் கூட்டத்தில் எங்கள் கட்சி கால நீடிப்பை வழங்கக் கூடாதென்று தெளிவாக கூறியிருக்கிறோம். கடந்த சில தினங்களிற்கு முன்னர் ரெலோ வின் செயலாளரும் கால நீடிப்பை வழங்க முடியாதென்று கூறியிருக்கின்றார்.

அதே போன்று இதற்கு முன்பாக புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தனும் கூட கால நீடிப்பை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் ஏற்றுக் கொள்வது சுமந்திரனின் கருத்து என்றும் கூறியிருக்கின்றார்.

ஆகவே, கூட்டமைப்பில் அங்கம் வகிக்கக் கூடிய கட்சிகள் இந்தக் கால நீடிப்பை நிராகரித்திருக்கக் கூடிய சூழ்நிலையில் கூட்டமைப்பு கால நீடிப்பை ஏற்றுக் கொள்ளவில்லை. கால நீடிப்பு தொடர்பில் சம்மந்தனோ சுமந்திரனோ பேசுவதாக இருந்தால் அது தமிழரசுக் கட்சி சார்ந்ததாகவே இருக்க வேண்டுமே தவிர கூட்டமைப்பு சார்ந்ததாக இருக்க முடியாது.
சம்மந்தன், இந்த விடயத்தில் அரசாங்கத் தரப்பினர்கள் மீது பல நம்பிக்கைகளை கொண்டிருந்தார். முக்கியமாக சந்திரிகா போன்றவர்கள், இந்தப் பிரச்சினையில் ஒத்துழைப்பார் என்று நம்பியிருந்தார். ஆனால் அவர் கூட, யுத்தக் குற்றங்கள் தொடர்பில் விசாரணை தேவையில்லை என்று கூறியிருக்கின்றார்.

உங்கள் எல்லோருக்கும் தெரியும் புதிய அரசாங்கத்தை புதிய ஜனாதிபதியை கொண்டு வந்ததில் சம்மந்தன் பெரிய பங்கை ஆற்றியிருந்தார் என்று. அதனை அவர்களே மீண்டும் மீண்டும் கூறியிருந்தனர்.

ஆனால், இன்று அவர்களது சகல கோரிக்கைகளும் நிராகரிக்கப்பட்டு அந்தக் கோரிக்கைககள் எவையும் ஏற்றுக் கொள்ளப்படாது அரசாங்கம் தான் விரும்பியவாறே செயற்பட்டு வருகின்றது. இதனை எந்த விடயத்திலும் கையாள முடியாத சூழ் நிலை தோன்றியிருக்கின்றது. இதில் ஒன்றில் சம்மந்தன் அரசாங்கத்தால் ஏமாற்றப்பட்டிருக்கின்றார் அல்லது இராஐதந்திர ரீதியில் தோல்வியடைந்திருக்கிறார் என்றே கருத வேண்டியிருக்கிறது.

ஏனெனில், நீண்டகாலமாக அரசுடன் இணக்கப்பாட்டுடன் இன்றுவரை செயற்பட்டு வருகின்ற போதும் கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசின் ஒப்புதலுடன் கொண்டு வரப்பட்ட தீர்மானமாக இருந்த போதும் கூட அது எவையுமே நடைமுறைப்படுத்தப்படாமல் கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்ட நிலையில் இன்று கால நீடிப்பைக் கோருவதானது அரசாங்கம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் விடயாகத் தான் நாங்கள் கருதுகின்றோம்.

இவ்வாறான நிலையில் இலங்கை தொடர்பாக விடயத்தை ஐ.நா பொதுச் சபைக்குப் பாரப்படுத்தி சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு பாரப்படுத்த வேண்டுமென்பது எங்கள் கோரிக்கை. ஆகவே மீண்டும் கால அவகாசம் வழங்கி இலங்கை அரசைப் பாதுகாப்பதை விடுத்து இதனை ஐ.நா பொதுச் சபைக்கு கையளிப்பதனூடாக எந்தவொரு கால கட்டத்திலும் விசாரணை நடைபெறுவதற்கான சாத்தியப்பாடுகள் தோன்றும். ஆகவே கால நீடிப்பை விடுத்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கை தொடர்பான விடயத்தை பொதுச் சபைக்கு கையளிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

- See more at: http://www.tamilmirror.lk/191730/-சம-பந-தன-ஏம-ற-றப-பட-ட-ர-#sthash.naWcp9vX.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தமிழ் மக்களை ஏமாற்றி சிங்களவனை காப்பாற்றி வந்ததே... இவர் அரசியலில் செய்த சாதனை.  இவர் நாங்க எப்பவும் சொல்வது போல.. தமிழ் மக்களைப் பொறுத்தவரை அரசியல் தோல்வியடைந்த ஒரு தலைவர். இவர் சனநாயக..அரசியலில் இருக்கவே அருகதையற்றவர்.:rolleyes:tw_angry:

Link to comment
Share on other sites

கூட்­ட­மைப்பை சின்­னா­பின்­ன­மாக்­கி­ய­வ­ராக சம்பந்தன் கரு­தப்­ப­டுவார் : சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

 

 

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பை­விட்டு வெளி­யே­று­வது தொடர்பில் நாம் சரி­யான நேரத்தில் சரி­யான காலத்தில் முடி­வெ­டுப்போம். மேலும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பா­னது இவ்­வா­றான பாதை­யி­லேயே பய­ணிக்­கு­மாயின் அக் கட்­சியை சின்­னா­பின்­ன­மாக்­கி­யதன் மூல கர்த்­தா­வாக சம்­பந்­தனே காணப்­ப­டுவார் என ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்­சியின் தலை­வரும் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சுரேஷ்­பி­ரே­ம­சந்­திரன் தெரி­வித்­துள்ளார்.

suresh-premachandran-r.sampanthan.jpg

 தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் இருந்து அதனை பிழை­யாக வழி­ந­டத்­து­கின்­ற­வர்கள் வெளி­யேற வேண்­டுமா அல்­லது அதில் அங்கம் வகிக்கக் கூடிய ஏனைய கட்­சிகள் வெளி­யேற வேண்­டுமா என்ற கேள்வி எழுந்­துள்­ள­தாக அவர்  மேலும் தெரி­வித்­துள்ளார்.

முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுரேஷ்­பி­ரே­மச்­சந்­தி­ரனால் நேற்­றைய தினம் யாழ்.ஊடக அமை­யத்தில் நடத்­தப்­பட்ட  பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்­பின்­போது ஊட­க­வி­ய­லாளர்கள் எழுப்­பிய கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

தமிழ் மக்கள் பேரவை வைத்­துள்ள குறிக்­கோ­ளுக்கு எதி­ராக செயற்­ப­டு­கின்ற தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் இருந்து தமிழ் மக்கள் பேர­வையின் கொள்­கையை ஏற்று அதில் அங்­கத்­துவம் வகிக்­கின்ற ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் கட்­சிகள் வெளி­யேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் குறிப்­பிட்­டுள்­ளமை தொடர்­பாக  ஊட­க­வி­ய­லா­ளர்கள் கேள்வி எழுப்­பினர். 

 சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்  தொடர்ந்து பதி­ல­ளிக்­கையில்,

தமிழ் மக்கள் பேர­வை­யென்­பது அர­சியல் கட்­சி­யல்ல என்றும் அது அழுத்தம் கொடுக்­கின்ற ஓர் குழு­வா­கவே எப்­போதும் செயற்­படும் என்றும் அதன் இணைத் தலை­வர்­களால் தொடர்ச்­சி­யாக கூறப்­பட்டு வரு­கின்­றது. அத்­துடன் இவ் அழுத்த குழு­வி­னூ­டாக மக்கள் பிர­தி­நி­திகள் மக்கள் நலன் சார்ந்து எவ்­வா­றான தீர்­மா­னங்­களை எடுக்க வேண்டும் என்­பது தொடர்­பா­கவும் இக் குழு அழுத்­தத்தை மேற்­கொண்டு வரு­கின்­றது.

ஆனால் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பென்­பதுஇ ஓர் அர­சியல் கட்சி. இது மக்­களால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட தலை­வர்­களை கொண்ட ஓர் கட்சி. எனினும் இக் கட்­சியில் பல தவ­றுகள் உள்­ள­தென்­பது ஏற்­றுக்­கொள்ள கூடிய ஒன்­றாகும். இத்­த­கைய தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்குள் உள்ளே இருக்­கின்ற தவ­று­களை அல்­லது அக் கட்­சியின் தலை­மை­யா­னது தொடர்ச்­சி­யாக விட்­டு­வ­ரு­கின்ற தவ­றுகள் தொடர்­பாக நாம் தொடர்ச்­சி­யா­க சுட்­டிக்­காட்­டியே வரு­கின்றோம்.

உதா­ர­ண­மாக கேப்­பா­ப்பு­ல­விலே மக்கள் மேற்­கொண்டு வரு­கின்ற நில மீட்பு போராட்­டத்தின் மக்­களை கொழும்­புக்கு வாருங்கள் இது தொடர்­பான பேச்­சு­வார்த்­தை­களை மேற்­கொள்­ளலாம் என மக்கள் பிர­தி­நி­திகள் கூறு­வதை நாம் கண்­டித்­துள்ளோம். மக்கள் பிர­தி­நி­திகள், தமிழ் மக்­க­ளது வாக்­கு­களை பெற்ற தமிழ் பிர­தி­நி­திகள் போராட்­டத்தில் ஈடு­ப­டு­கின்­ற­வர்­களை கொழும்­புக்கு அழைத்து பேசு­வதோ, அங்கே வைத்து அவர்­களை குழப்­பு­வதோ, அதனை நிறுத்­து­வதோ, தவறு என்று சுட்­டிக்­காட்­டி­வ­ரு­கின்றோம். இ தமிழ் மக்­க­ளது பிர­தி­நி­திகள் போராட்­டத்தில் ஈடு­ப­டு­கின்ற மக்­க­ளோடு அவர்­க­ளது பக்­க­மி­ருந்து போராட்­டத்­திற்கு ஆத­ரவு வழங்கி மக்­க­ளது கோரிக்­கை­களை வெற்­றி­பெறச் செய்­ய­வேண்டும். இவ்­வா­றான விட­யங்­களை நாம் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்குள் இருந்து கொண்டே அவர்­க­ளுக்கு சுட்­டிக்­காட்டி வரு­கின்றோம்.

அது மட்­டு­மல்­லாமல் தமிழ் மக்கள் மத்­தியில் ஓர் அபிப்­பி­ராயம் உள்­ளது.  தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு என்­பது ஒற்­று­மை­யாக இருந்து செயற்­பட வேண்டும் என்ற நிலைப்­பாடு  உள்­ளது. அந்த அபிப்­பி­ரா­யத்தின் பிர­கா­ரமும் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் 2016 ஆண்­டுக்குள் தீர்­வினை பெற்றுத் தரு­வ­தாக கூறி அதற்­கான கால அவ­கா­சத்தை கோரி­யி­ருந்தார். நாமும் அதற்கு ஆத­ரவை வழங்­கி­யி­ருந்தோம். ஆனால், இன்­றைய தினம் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலைவர் மாத்­தி­ர­மல்ல ஒட்­டு­மொத்த தமிழ் மக்­க­ளுமே ஏமாற்­றப்­பட்­டி­ருக்­கின்றனர். அத்­துடன் இது­வரை காலமும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­புக்குள் இருக்­கின்ற தமி­ழ­ரசு கட்­சி­யினர் தாம் இரா­ஜ­தந்­திர ரீதியில் செயற்­ப­டு­கின்றோம் வெளி­நா­டு­க­ளுடன் பேசு­கின்றோம், அவ்­வா­றாக விட­யங்­களை கையாள்­கின்றோம் எனக் கூறிய நிலையில் இன்று அவை எல்லாம் ஏமாற்­றுப்­பட்டு விட்­ட­னவா  அல்­லது தோல்­வி­ய­டைந்து விட்­ட­னவா என்ற கேள்­வியும் எழுந்­துள்­ளது.

தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்­பென்­ப­திலும் அதன் உரு­வாக்கம் என்­ப­திலும் ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் பங்­குள்­ளது. இவ்­வா­றா­ன­தொரு நிலையில் தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யேற வேண்­டி­ய­வர்கள் யார் என்ற கேள்­வியும் எழுந்துள்ளது. அதாவது தமிழ் தேசிய கூட்டமைப்பை பிழையாக வழிநடத்துகின்றவர்கள் வெளியே போக வேண்டுமா அல்லது அக் கட்சியில் அங்கத்துவம் வகிக்கின்ற எனையோர் வெளியேற வேண்டுமா என்ற கேள்வியெழுந்துள்ளது. எனவே தொடர்ச்சியாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது இவ்வாறான பாதையிலேயே பயணிக்குமாயின் அக் கட்சியை சின்னாபின்னமாக்கியதன் மூல கர்த்தாவாக சம்பந்தனே காணப்படுவார். மேலும் இக் கட்சியில் இருந்து வெளியேறுவது தொடர்பாக நாம் சரியான நேரத்தில் சரியான காலத்தில் அதற்கான முடிவை எடுப்போம் என்றார் 

http://www.virakesari.lk/article/16785

Link to comment
Share on other sites

 50 வருட அரசியல் அனுபவமுள்ள கைக்குழந்தை சம்பந்தன் ஏமாற்றப்பட்டுவிட்டது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ச்சனம்தான் ஏமாற்றப்படுதே தவிர சம்பந்தன் கோஷ்டி எங்கை ஏமாந்தது???

எங்கடை பழுத்த/புளுத்த அரசியல்வாதிகளின்ரை தொழிலே அதுதானே....

ஐமீன் இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்பவர்கள். :cool:

Link to comment
Share on other sites

3 hours ago, குமாரசாமி said:

தமிழ்ச்சனம்தான் ஏமாற்றப்படுதே தவிர சம்பந்தன் கோஷ்டி எங்கை ஏமாந்தது???

எங்கடை பழுத்த/புளுத்த அரசியல்வாதிகளின்ரை தொழிலே அதுதானே....

ஐமீன் இவர்கள் அரசியல் விபச்சாரம் செய்பவர்கள். :cool:

சம்பந்தருக்கு தெரியாமல் இது நடந்தால் தான் அதிசயம்.அமிரின் பாசறைக்குள் வளர்ந்த சம்பந்தர், மாவையால் அறியாமல் எதுவுமில்லை.
சிங்கள அரசு தமிழ் மக்களை பேக்காட்டுவதை விட கூட்டமைப்பின் பேய்க்காட்டுகள்  கூட்டமைப்புக்கு வாக்களித்த மக்களை மிகப்பெரிய மடையர்களாக்கி விட்டது என்பதே நிதர்சனமானது.tw_dissapointed:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.