Jump to content

54 ஆண்டுகளாக சீன வீரரை சீனாவுக்கு அனுப்பாத இந்திய அரசு!


Recommended Posts

54 ஆண்டுகளாக சீன வீரரை சீனாவுக்கு அனுப்பாத இந்திய அரசு!

வாங் க்யூ

'தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதால் சிறைப்பிடிப்பு' என்பது நமக்கு ரொம்பவே பழக்கப்பட்ட சர்வ சாதாரணமான செய்தியாகிவிட்டது. சில நேரங்களில் சிறைப்பிடிக்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர் என்ற விஷயத்தையும் சின்னப் பெட்டிச் செய்தியாக கடந்துசெல்கிறோம். ஆனால், எல்லை தாண்டிய குற்றத்துக்கு விடுதலை, அவ்வளவு எளிதாக அனைவருக்கும் கிடைத்துவிடுவதில்லை. வழிதவறி இந்திய எல்லைக்குள் வந்த சீனாவைச் சேர்ந்த வாங் க்யூ என்பவர், கிட்டத்தட்ட 54 ஆண்டுகளை இங்கேயே கழித்துள்ளார். அதுபற்றிய சுவையான சம்பவம் இதோ...

சீனாவைச் சேர்ந்த இந்த ராணுவ வீரர், 1963-ம் ஆண்டு இந்தோ - சீனப் போரின் பணியில் இருந்த சமயத்தில்... வழிதவறி நம் எல்லைக்குள் நுழைந்ததால் நம் நாட்டு ராணுவத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு 7 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார். அந்தத் தண்டனை முடிந்ததும் தன் நாட்டுக்குச் சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையுடன் இருந்தவரை ராணுவத்தினர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள டிரோடி என்னும் கிராமத்தில் கொண்டு போய்விட்டனர். பாஸ்போர்ட், விசா போன்ற எந்த ஆவணங்களும் இல்லாத நிலையில் அவர் அங்கேயே வாழ ஆரம்பித்தார். அந்த ஊரைச் சேர்ந்த பெண்மணியையே திருமணம் செய்துகொண்டார். காலச்சக்கரம் சுழன்றோடியது, வாங் க்யூ 4 பிள்ளைகளுக்கு தந்தையானார். கொஞ்ச காலம் சென்றதும்... பேரப்பிள்ளைகளுக்குத் தாத்தாவும் ஆனார். தன் குடும்பத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்தாலும், அவர் உள்ளத்தின் ஓரத்தில் ஓர் ஆசை அவரைத் தூங்கவிடாமல் செய்தது. தான் பிறந்த மண்ணையும், தன் ரத்த சொந்தங்களையும் காண வேண்டும் என்று அவர் ஏங்க ஆரம்பித்தார். 1980-களில் சீனாவில் உள்ள தன் சொந்தங்களுடன் கடிதப் போக்குவரத்தை அமைத்துக்கொண்டார். இது, அவரது சொந்தங்களைக் காண வேண்டும் என்ற ஆசையை இன்னும் தூண்டியது. பல மனுக்கள் கொடுத்தும் இந்திய அரசுக்கு இந்தச் சீன வீரனின் கதறல் கேட்கவே இல்லை.

2009-ல் வாங் க்யூவின் மைத்துனர் இந்தியா வந்து அவரைச் சந்தித்துச் சென்றுள்ளார். 2013-ல் சீன அரசு, வாங் க்யூவுக்கு பாஸ்போர்ட் வழங்கி அனுமதித்தது. ஆனால், இந்திய தரப்பில் அவருக்கு விசா வழங்கப்படவில்லை. தன்னால் சீனா போய் தான் பிறந்த ஊரின் காற்றைச் சுவாசிக்க முடியவில்லையே என்ற பரிதவிப்புடன் இருந்த வாங் க்யூவை, பிரபல செய்தி நிறுவனம் ஒன்று அடையாளம் கண்டு அவரின் 54 ஆண்டுக் கால போராட்டத்தைச் செய்தியாக வெளியிட்டது. இந்தச் செய்தி, இரண்டு நாடுகளிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. சீனாவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் வாங் க்யூவுக்கு ஆதரவுக் குரல்கள் கூடின. இதனையுணர்ந்த இந்திய வெளியுறவுத் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தை அணுகி... வாங் க்யூவை, சீனாவுக்கு அனுப்புவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுத்தது.

இந்த நிலையில், கடந்த 9-ம் தேதி  தன் மகன், மருமகள் மற்றும் பேத்தியுடன் சீனாவுக்குப் பறந்தார் வாங் க்யூ. சீன விமான நிலையத்தில் அவரின் உறவினர்கள், பத்திரிகையாளர்கள் எனப் பலர் காத்திருந்தனர். அன்றைய தினம் சீனர்களின் முக்கியப் பண்டிகையான lantern festival என்றழைக்கப்படும் விளக்குத் திருவிழா நடைபெற்றது. விமான நிலையம் சென்ற வாங் க்யூவை அவரின் உறவினர்கள், சகோதரர்கள் கட்டித் தழுவிக்கொண்டனர். 54 வருட ஏக்கங்கள், ஆசைகள் அங்கே சிறு கண்ணீர்த் துளிகளால் கரைக்கப்பட்டது. 

பத்திரிகைக்கு பேட்டி அளித்த வாங் க்யூ, "இந்த நாள் என் வாழ்வில் சந்தோஷமான நாள். என் பால்ய நண்பர்களை, என்னுடன் ராணுவத்தில் பணியாற்றிய சகவீரர்களை நான் தேடிப்போய்  சந்திக்கப் போகிறேன்" என்றார். அவருக்கு சீன அரசாங்கம் அவரின் சொந்த ஊரில் வாழ்வதற்கு இலவசமாக நிலம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளது.

வாங் க்யூ சீனாவுக்குத் திரும்பியதை, சீன - இந்திய நல்லுறவை வலுப்படுத்தும் ஒரு நிகழ்வாக இரு நாடுகளும் நினைக்கின்றன. ஆனால், பரவலாக எழுப்பப்படும் கேள்வி என்னவென்றால், 40 வருடங்களுக்கு மேலாக வாங் க்யூவின் போராட்டம் சமூக வலைதளங்களை எட்டியதும், அரசு நடவடிக்கை எடுத்து 10 நாட்களில் அவரின் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. சாமான்ய மக்கள் போடும் மனுக்கள் அனைத்தும் சாமான்யமான ஒன்று என்ற எண்ணப்போக்கை அரசு அலுவலகங்கள் விட்டொழித்து இருந்தால் வாங் க்யூ, அரை நூற்றாண்டுகள் தன் தாய்மண்ணையும், தன் உறவினர்களையும் பிரிந்து இருக்க நேர்ந்திருக்காது. வாங் க்யூவின் தாயும் மரணப்படுக்கையின் கடைசி நிமிடம்வரை தன் செல்ல மகனின் வருகையை நோக்கிக் காத்திருந்து உயிர் விட்டிருக்க மாட்டார். ஆம், வாங் க்யூவின் தாய் தன் மகனை 43 ஆண்டுகளாகப் பார்க்காமலேயே இறந்துபோனார்.

மத்தியப் பிரதேச நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், 'டிரோடி கிராமத்தில் மேலும் ஒரு சீன ராணுவ அகதியான லியு ஸுரோங், சீனாவில் உறவினர்கள் யாரும் இல்லாத நிலையில் இங்கே திருமணம் செய்துகொண்டு பெரிய குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாகக் கூறியுள்ளது. இவரைப் பற்றி இன்றுவரை எந்த அரசு அமைப்புகளுக்கும் தெரியவில்லை. இன்னும் எத்தனை வாங் க்யூக்களும், லியு ஸுரோங்க்களும் தன் வாழ்நாள் முழுக்க அரசின் இரும்புக் கதவுகளுக்குள் அடைபட்டிருக்கிறார்களோ?

http://www.vikatan.com/news/india/81123-chinese-military-man-goes-home-after-50-years-trapped-in-india.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.