Jump to content

யாழில் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து காலாவதியான மருந்துகள் கண்டுபிடிப்பு


Recommended Posts

யாழில் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து காலாவதியான மருந்துகள் கண்டுபிடிப்பு
 
யாழில் பிரபல தனியார் மருத்துவமனையிலிருந்து காலாவதியான மருந்துகள் கண்டுபிடிப்பு
யாழ் நகரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் (கிளினிக்) காலாவதியான மருந்துகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிரு ந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. 
 
யாழ் நகரில் வைத்தியசாலை வீதியில்  உள்ள பிரபல்யமான தனியார் மருத்துவமனையில் உள்ள மருந்தகத்தில் காலாவதியான நிலையில் உள்ள மருந்துகளே நோயாளிகளுக்கு விற்பனை செய்வதாக யாழ்மாவட்ட பாவனையாளர் அதிகாரசபைக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து இடம்பெற்ற சோதனை நடவடிக்கையில் நூற்றுக்கு மேற்பட்ட மருந்துவில்லைகள் கண்டு பிடிக்கப்ப ட்டுள்ளன. 
 
இதில் நீரிழிவுக்குப் பாவிக்கும் மருந்துவில்லைகளே அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டவையாகும். இதனையடுத்து குறித்த மருத்துவ மனையில் இருந்து மருந்து வில்லைகள் அப்புறப்படுத்தப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

http://onlineuthayan.com/news/24013

Link to comment
Share on other sites

இந்த பிரச்சினை அங்கு மட்டும் அல்ல இங்கும் மிக மோசம் காலாவதியான மீன் டின்களில் பழைய திகதியை அழித்துவிட்டு புது திகதியை அடித்து குறைந்த விலையில் விற்ப்பது பிஸ்கட்டுகள் போன்றவை

 

Turkey Mackerel Tin Fish - 425g - Kapruka Product grocery0068US$ 2.47( 2.47US$ ≈ 1.95 Pounds )இது 

சாதரான விலை இலங்கையில் விற்க்கும் விலை௧1.95

No automatic alt text available.

சிலோனில் 1.95 பவுண்ட் மீன் டின்

லண்டனில் ஒரு பவுன் ?

 

அதி உயர் ரசாயன கலப்புள்ள மீன் டின் கள் ஒரு குறிபிட்ட காலம் மாத்திரம் இருக்கலாம் அதன்பின் புற்றுநோய் ஊக்கிகளாக மாற்றம் ஏற்படும் இதனால் 55வயதுக்கு முன் திடிரென புற்றுநோய் தாக்கத்துக்கு உட்பட்டு பரலோகம் போகும் புலம்பெயர் நம்மவர்கள் தொகை மற்ற புலம்பெயர்வாசிகளை விட கூட இலங்கையில் இருந்து வரும் அநேகமான பொருட்கள் 70வீதமானவை இங்கு மறு திகதி போடபட்டு மீண்டும் சந்தையில் விடப்படுகின்றன.

 

Link to comment
Share on other sites

லங்காவில் லெமன் பப் லண்டன் காசு .85பென்ஸ்  லிங்க் http://www.kapruka.com/shops/deliveryProductPreview.jsp?id=grocery00151&type=specialGifts

ஆனால் லண்டனில் மூன்று லெமன் பப் ஒரு பவுன் எப்படி இவ்வளவு மலிவாக கிடைக்கிறது என்று மனது சிந்திக்க மறந்து வியாதிகளை இலகுவாக வேண்டிகொள்கிறம்.

மொத்தத்தில் புலம்பெயர் தமிழர் நாம் ஏமாளிகளாக மாற்றபட்டுள்ளம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

54 minutes ago, TNT said:

லங்காவில் லெமன் பப் லண்டன் காசு .85பென்ஸ்  லிங்க் http://www.kapruka.com/shops/deliveryProductPreview.jsp?id=grocery00151&type=specialGifts

 

ஆனால் லண்டனில் மூன்று லெமன் பப் ஒரு பவுன் எப்படி இவ்வளவு மலிவாக கிடைக்கிறது என்று மனது சிந்திக்க மறந்து வியாதிகளை இலகுவாக வேண்டிகொள்கிறம்.

 

மொத்தத்தில் புலம்பெயர் தமிழர் நாம் ஏமாளிகளாக மாற்றபட்டுள்ளம்.

 

இலங்கையில் ஒரு பொருள் நேரடியாக சில்லறை கடைகளுக்கு போவதில்லை, பிராந்திய  மொத்த கொள்வனவாளர்கள் 2/3 பேருக்கு கைமாறியே சில்லறைக்கடைகளுக்கு செல்கிறது.

ஆனால் ஏற்றுமதியாகும் பொருள் நேரடியாக உற்பத்தி நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி செய்யும் நிறுவனம் கொள்வனவுக் கட்டளையும் காசையும் செலுத்தி ஓரிரு மாதங்களின் பின்னரே பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தினால் வழங்கப்படும். மொத்த வியாபாரிகளின் இலாபம் இல்லை.

அத்துடன் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் தாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான சுங்கத்தீர்வையையும் வரியையும் ( duty & tax) Inland revenue விடம் இருந்து கழித்து கொள்ளும் அதனாலேயே விலை குறைவாக இங்கு இருக்கிறது.

இன்னொருவிடயம், இத்தகைய பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்கள்  தமது சொந்த பொருட்களுக்கு (own brand) அதிக இலாபத்தையும் இப்படியான மற்றைய பொருட்களுக்கு குறைந்த இலாபத்தையும் வைக்கிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் பிரஸ் மீன் வேண்டிச் சமைக்கிற பஞ்சியில உந்த ரின் மீன் தான் வேண்டி சமைக்கிறது.இனி மேல் நிப்பாட்ட வேண்டும்

Link to comment
Share on other sites

5 hours ago, MEERA said:

 

இலங்கையில் ஒரு பொருள் நேரடியாக சில்லறை கடைகளுக்கு போவதில்லை, பிராந்திய  மொத்த கொள்வனவாளர்கள் 2/3 பேருக்கு கைமாறியே சில்லறைக்கடைகளுக்கு செல்கிறது.

ஆனால் ஏற்றுமதியாகும் பொருள் நேரடியாக உற்பத்தி நிறுவனத்திடம் கொள்வனவு செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஏற்றுமதி செய்யும் நிறுவனம் கொள்வனவுக் கட்டளையும் காசையும் செலுத்தி ஓரிரு மாதங்களின் பின்னரே பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தினால் வழங்கப்படும். மொத்த வியாபாரிகளின் இலாபம் இல்லை.

அத்துடன் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் தாம் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கான சுங்கத்தீர்வையையும் வரியையும் ( duty & tax) Inland revenue விடம் இருந்து கழித்து கொள்ளும் அதனாலேயே விலை குறைவாக இங்கு இருக்கிறது.

இன்னொருவிடயம், இத்தகைய பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் நிறுவனங்கள்  தமது சொந்த பொருட்களுக்கு (own brand) அதிக இலாபத்தையும் இப்படியான மற்றைய பொருட்களுக்கு குறைந்த இலாபத்தையும் வைக்கிறார்கள். 

Meera உங்கள் தயாரிப்புகளுக்கு நீங்கள் போடும் கணக்கு சரியாய் வரும் இந்த மீன் டின் போன்ற தகர அடைத்தல் பொருள்கள் மிக ஆபத்தானவை தெரிந்தும் உங்கள் பகுதி தமிழ் வியாபாரி குச்ச்ட்டன் ஏரியா ஆள் அசராமல் அடித்து விடுறார் முக்கியமாய் சுவிஸ், ஜெர்மன் ,பிரான்ஸ் வாழும் தமிழர்கள் கவனம் சுவிசில் இருப்பவர்களை கேளுங்கள் இளவயது மரணம்கள் கூட ஏன்? டொக்டர் மாரும் தலையை பிக்கினம் கொஞ்சம் சிந்தியுங்கள்.

அந்தாளின் முக்கிய இலாப பகுதிகள் இந்த சுவிஸ் ,ஜெர்மன் ,பிரான்ஸ் இங்கு லண்டனில் பெரிதாய் செய்தால் மாட்டுப்பட்டுவிடுவம் என்ற முனெச்சரிக்கை ஆளுக்கு.

முக்கிய தமிழ் தயாரிப்பாளர்களின் குப்பைகளை காசாக்கும் சந்தை இந்த ஜெர்மன் ,சுவிஸ்,பிரான்சஸ் போன்ற தமிழ் கடைகள் இதில் TRS விதி விலக்கல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பிய யூனியனிலை தடைசெய்யப்பட்ட சிறிலங்கன் சாப்பாட்டு சாமான்கள் கனடா போய்....அங்கையிருந்து கனேடியன்  மேட்டோடை நலமே இங்கிலாந்து வந்து ஐரோப்பியயூனியன் முழுக்க ஊடுருவி நாசமறுக்குது.
கதைக்க வெளிக்கிட்டால்...இன்னும் கனக்க வரும்.:cool:

ஆனால் நேற்று இன்று நடந்த ஒருசில ஒப்பந்தங்கள் தமிழ்சிங்கள நாசகாரிகளுக்கு ஒரு முடிவை தரும் என நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, ரதி said:

நான் பிரஸ் மீன் வேண்டிச் சமைக்கிற பஞ்சியில உந்த ரின் மீன் தான் வேண்டி சமைக்கிறது.இனி மேல் நிப்பாட்ட வேண்டும்

நாங்கள் 90ம் ஆண்டு அந்த கூப்பன்கடையில்  கொடுத்த டின்மீனோடு விட்டுட்டம்  இப்ப பிரஷ் மீன் மட்டுமே ரதி tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
    • ஓம். உணர்வு இல்லவே இல்லை என சொல்லவில்லை.  ஆனால் சதவீதம் வீழ்ந்துள்ளது என நினைக்கிறேன்.
    • வருகை, கருத்துக்கு நன்றி நெடுக்ஸ். இப்போ ஊபரும் வந்துள்ளது. ஆனால் கார் மட்டும்தான். ஆட்டோ என்றால் பிக் மிதான். கொழும்பில் பிக் மி யில் மோட்டார் சைகிளிலும் ஏறி போகலாம். அந்த பகுதி ஒரு இராணுவ கண்டோன்மெண்ட் போல இருக்கிறது என சொல்லி உள்ளேனே? நேவி வியாபாரம் செய்வதையும் சொல்லி உள்ளேன். நான் போன சமயம் சுத்தமாக இருந்தது. சிலவேளை முதல் நாள் துப்பரவு செய்தனரோ தெரியவில்லை🤣. கொழும்பில் இது முன்பே வழமை. யாழில் இந்த போக்கு புதிது. நாம் இருக்கும் போது சேவை என இருந்த்ஃ துறை இப்போ சேர்விஸ் என ஆகி வருகிறது. ஆனால் நாடெங்கும் இதுவே நிலை என எழுதியுள்ளேன்.
    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.