Jump to content

இலங்கையை பிரதிபண்ணும் தமிழகம்


Recommended Posts


இலங்கையை பிரதிபண்ணும் தமிழகம்
 
 

article_1487144279-article_1479829797-auதமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் பதவிப் போட்டியின் போது இடம்பெற்றுள்ள ஒரு விடயத்தைப் பார்க்கும் போது, 1987ஆம் ஆண்டில் இலங்கையில் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்படும் போது இடம்பெற்ற ஒரு சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது. 

அந்த ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி, இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவும் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தைக் கைச்சாத்திட்ட போது, நாட்டில் தென் பகுதிகளில், அதற்கு எதிராகக் கடும் எதிர்ப்பு ஆரப்பாட்டங்கள் இடம்பெற்றன. 

சுமார் 140 பேர், அரச படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆளும் ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் பிரதமர் ஆர்.பிரேமதாச உள்ளிட்ட சிலர், அதனை எதிர்த்தனர்.

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் ஆளும் கட்சிக்கு இருந்த போதிலும், அந்த ஒப்பந்தத்தின் படி, மாகாண சபைகளை அறிமுகப்படுத்துவதற்கான 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தையும் மாகாண சபைகள் சட்டத்தையும் நிறைவேற்றிக்கொள்ள முடியுமா என, ஜனாதிபதி ஜயவர்தன சந்தேகித்தார். 

எனவே, அவர் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் பஸ்களில் ஏற்றி, கொழும்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களை மரியாதையுடன் சிறைவைத்தார்.

இரண்டு சட்டங்களுக்கும் தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் வரை, அவர்கள் ஏனையவர்களின் துண்டுதல்களுக்கு உள்ளாவதைத் தடுப்பதும் அவர்கள் மனதில் பீதியைத் திணித்து, தமது கட்டுப்பாட்டுக்குள் அவர்களை தொடர்ந்தும் வைத்திருப்பதும், ஜயவர்தனவின் நோக்கமாகியது. 

இன்று தமிழகத்தில் சசிகலா செய்திருப்பதும் அதுவே. முதலமைச்சராகத் தம்மை நியமிக்கும் சட்டமன்ற வாக்குப் பதிவு நடைபெறும் வரை, அவரும் சட்டமன்ற உறுப்பினர்களை ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் தங்க (தடுப்புக் காவலில்) வைத்துள்ளார்.

மத்திய அரசாங்கம் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டைத் தடைசெய்ததை அடுத்து, மாநில மக்கள் பெரும் போராட்டம் நடத்தி அவ்விளையாட்டுக்கான அனுமதியைப் பெற்றனர். இப்போது மாநிலத்தில் அரசியல் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.

ஜெயலலிதா, நோயுற்று கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி, அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 
இதற்கு முன்னர் இரண்டு முறை அவருக்காகப் பதில் முதலமைச்சராகக் கடமையாற்றியிருந்த பன்னீர்ச்செல்வம் அவரது சிபார்சின் பேரில் மீண்டும் பதில் முதலமைச்சரானார். 

ஜனவரி ஐந்தாம் திகதி ஜெயலலிதா உயிரிழந்தார். அத்துடன் ஜெயலலிதாவினால் ஒதுக்கித் தள்ளிய தமது உறவினர்களுடன் அவரது நெருங்கிய தோழியான சசிகலா ஜெயலலிதாவின் உத்தியோகபூர்வ இல்லமான போயஸ் தோட்டத்தினைக் கைப்பற்றிக் கொண்டனர். 

அவரது செல்வாக்கு எவ்வளவு என்றால் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் ஜெயலலிதாவின் மறைவுக்கான தமது அனுதாபத்தைத் தமிழக அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தலைவரான முதலமைச்சர் பன்னீர்ச்செல்வத்துக்கு தெரிவிக்காது சசிகலாவுக்கே தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

கச்சத்தீவில் புதிய ஆலயக் கட்டடத் திறப்பு விழாவுக்குத் தமிழகத்தில் இருந்து 20 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்த நிலையில் 100 பேருக்கு அனுமதி வழங்குமாறு ஒரு பதவியையும் வகிக்காத சசிகலா அனுப்பிய கடிதத்தை ஏற்று ஜனாதிபதி மைத்திரிபால அந்த அனுமதியையும் வழங்கியிருந்தார்.

இந்த நிலையில்; சசிகலா பல வழிகளில் அ.தி.மு.க எம்.எல்.ஏக்களைத் தம்பக்கம் வளைத்துக் கொண்டு கட்சியின் பலம் வாய்ந்த பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றிக் கொண்டார்.

 முதலமைச்சர் பன்னீர்ச்செல்வம் அப்போது வெறும் பார்வையாளராக இருந்துவிட்டார். பின்னர், கடந்த ஐந்தாம் திகதி பன்னீர்ச்செல்வம் முதலமைச்சர் பதவியையும் இராஜினாமாச் செய்து, சசிகலாவுக்கு முதலமைச்சராவதற்கான வழியை திறந்துவிட்டார். 

தம்மை, முதலமைச்சராக்குமாறு சசிகலா மாநில ஆளுநரிடம் கேட்கவிருந்தார். ஆனால், ஆளுநர் மாநிலத்தில் இருக்கவில்லை.

 அதற்கிடையே “சசிகலாவின் ஆட்கள் வற்புறுத்தி வலுக்கட்டாயமாகத் தம்மை முதலமைச்சர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வைத்தார்கள்” என்று, கடந்த ஐந்தாம் திகதி முதல் காபந்து முதல்வராகவிருக்கும் பன்னீர்ச்செல்வம் ஏழாம் திகதி கூறினார்.

அதையடுத்து, சசிகலா தமது முதலமைச்சர் கனவு நனவாகுமா என்று அச்சத்தில் உள்ளார். எனவே, அவரும் ஜயவர்தன பாணியில் சட்டமன்ற உறுப்பினர்களைச் சிறைப் பிடித்து அவர்களின் வாக்குப் பலத்தால் காரியம் சாதிக்க முனைந்துள்ளார். 

மெரினா கடற்கரையில் ஜெயலலிதாவின் சமாதியருகே 45 நிமிடங்கள் தியானத்தில் இருந்துவிட்டு ஊடகவியலாளர்களிடம் உரையாற்றும் போதே பன்னீர்ச்செல்வம் முதல் முறையாகத் தாம் வற்புறுத்தலினாலேயே இராஜினாமாச் செய்ததாகக் கூறினார். 

இது பெரும்பாலும் உண்மையாக இருக்கக்கூடிய கருத்தாகும். அதனை அடுத்து, சசிகலா ஓரிருவரைத் தவிர்ந்த அ.தி.மு.க எம்எல்ஏக்கள் சகலரையும் கூவத்தூரில் கோல்டன் பே ஹோட்டலில் தங்கவைத்து (அடைத்து வைத்து) அவர்களுக்கு வெளியுலகுடனான தொடர்புகளைத் துண்டித்துள்ளார். 

தமிழகச் செய்திகளின்படி, அவர்களுக்கு வெளியே செல்ல அனுமதியில்லை. பத்திரிகை வாசிக்கவோ, தொலைக்காட்சியைப் பார்க்வோ அனுமதியில்லை. குடும்ப உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை. 

நிலைமை எவ்வளவு பாரதூரமாகவும் கேவலமானதுமாக இருக்கிறது என்றால் ஐந்து 
அ.தி.மு.க எம்எல்ஏக்களுக்காக அவர்களது குடும்பத்தினர்கள் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்து, அதன் பிரகாரம் அவர்களைத் தேடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜே.ஆர்.ஜயவர்தன எம்.பிக்களை அடைத்து வைத்து, அவர்களது வாக்குகளைப் பெறத் திட்டமிட்டபோது, இங்கு பலர் கேட்டதைப் போல் இது என்ன கேவலமான அரசியல் என்று இப்போது தமிழகத்தைப் பார்த்து கேட்க வேண்டியுள்ளது. 

சசிகலா இந்த எம்எல்ஏக்களை குண்டர்கள் மூலம் பிடித்து அடைக்கவில்லை. அவர்கள் தாமாகவே சசிகலாவின் கட்டளைக்கு பணிந்துள்ளனர். அவர்கள் ஏன் அடிமைகளைப் போல் அவ்வாறு கீழ்ப்பட வேண்டும்?

ஒரோயொரு பதில்தான் அதற்கு இருக்கிறது. பதவிஆசை என்பதே அப்பதிலாகும். பன்னீர்ச்செல்வம் தொடர்ந்தும் விடடுக் கொடுத்துக் கொண்டே போனதால், சசிகலாவின் கையோங்கும் என்று நினைத்த எம்எல்ஏக்கள் தாமாகவே அவருக்கு அடிமையாகியுள்ளனர்.

இங்கும் மஹிந்த ராஜபக்ஷவோடு இணைந்து, மைத்திரியைப் புலிகளின் ஏஜன்டு எனக் கூறிக் கொண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பலர், தேர்தலின் பின்னர் மைத்திரியுடன் சேர்ந்து இருப்பதும் பதவி ஆசைக்கே.

 2015 ஆம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு இல்லாத ரணில் விக்கிரமசிங்கவை மைத்திரி பிரதமராக நியமிக்கும் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்காரர்கள் அதற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வராமல் இருந்ததும் பதவி ஆசையினாலும் பயத்தினாலுமேயாகும்.

பன்னீர்ச்செல்வமும் ஒரு கோழை என்றே கூற வேண்டும். ஜெயலலிதா எவ்வளவு பெரிய ஊழல் பேர்வழியாக இருந்தாலும், அவர் அதனை அறிந்தே ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தார்.அதற்கு நியாயமான காரணங்கள் இருந்தன. வெறும் தேநீர்க் கடை நடத்தி வந்த பன்னீர்ச்செல்வத்தை செல்வந்தராக்கி, முதலமைச்சராக்கியவர் ஜெயலலிதாவே. 

ஆட்சியாளர்களின் ஆதரவைப் பெறும் அரசியல்வாதிகளிடம் செல்வம் வருவது எவ்வாறு என்பது உலகம் அறிந்த இரகசியம். 
இலங்கையிலும் மோட்டார் சைக்கிளில் நாடாளுமன்றத்துக்கு வந்தவர்கள், இன்று கொடி கட்டி பறக்கிறார்கள். 

ஒரு கட்சித் தலைவருக்கு சாரதியாக வந்த ஒருவர், தாமும் அரசியலில் குதித்து, இன்று யானைகளையும் வைத்திருக்கிறார். எனவே, பன்னீர்ச்செல்வம் தம்மை வளர்த்துவிட்ட  ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருப்பதை விளங்கிக் கொள்ள முடியும். 

ஆனால் ஜெயலலிதாவின் மரணததின் பின்னர் அவர் ஏன் சசிகலாவுக்கு பணிந்து நடக்க வேண்டும்? ஜெயலலிதா மரணிக்கும் போது, அவர்தான் முதலமைச்சர். அவர் மாநிலத்தில் எவருக்கும் பணிந்து நடக்கத் தேவையில்லை.  

ஜெயலலிதா உயிருடன் இருக்கும் போது, சசிகலா எப்போதும் அவருடன் இருந்தார். எனவே, அப்போது சசிகலாவுக்குப் பணிந்து ஜெயலலிதாவின் விசுவாசத்தை மேலும் பெற, பன்னீர்ச்செல்வம் செயற்பட்டு இருக்கலாம். 

ஜெயலலிதா மரணித்தபோது, உடனடியாகச் சசிகலாவுக்குப் பணிந்து நடப்பதை அவரால் நிறுத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது போலும். இறுதியில் இந்தக் கோழைத்தனத்தால் அவர் அவரது கழுத்திலேயே சுருக்கிட்டுக் கொண்டார். 

கட்சியில் பெரும் அதிகாரமுள்ள பொதுச் செயலாளர் பதவியை முதலில் பறிகொடுத்தார். அவரே சசிகலாவின் பெயரை அப்பதவிக்கு முன்மொழிந்துள்ளார். 

அதனை அடுத்து முதலமைச்சர் பதவியை இராஜினாமாச் செய்துவிட்டுப் பின்னர் திடீரென விழித்துக் கொள்கிறார். 
இப்போது, அவர் காட்டும் துணிவை ஜெயலலிதா மரணித்தவுடன் காட்டியிருந்தால் சசிகலாவால் எதனையும் செய்துவிட முடியாது.

தமக்குப் பதவி ஆசையில்லை எனப் பன்னீர்ச்செல்வம் கூறினாலும், அது உண்மையல்ல; கோழைத்தனத்தில் சசிகலாவுக்கு பிடி கொடுத்துவிட்டு, பின்னர் வருவது வரட்டும் என இப்போது துணிவை வரவழைத்துக் கொண்டுள்ளார். 

அவரது கோழைத் தனத்தினாலேயே ஜெயலலிதா அவரை மூன்று முறை தமக்காக பதில் முதலமைச்சராகக் கடமையாற்ற இடமளித்தார். ஏனென்றால் இவரிடம் கொடுத்தால் பதவி பறிபோகாது என்பதை ஜெயலலிதா நன்கு உணர்ந்திருந்தார். 

இதைத்தான் இலங்கையில் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாசவும் மஹிந்த ராஜபக்ஷவும் செய்தனர். 

இலங்கையில் சில சமயங்களில் பிரதமர் பதில் ஜனாதிபதியாகக் கடமையாற்ற வேண்டி வரும். எனவே, பிரேமதாசவும் மஹிந்தவும் தமக்கு எந்த வகையிலும் சவால் விடும் ஆற்றலோ தைரியமோ இல்லாதவர்களையே பிரதமர்களாக நியமித்தனர். பிரேமதாச, டி.பி. விஜேதுங்கவை நியமித்தார். மஹிந்த, ரத்னசிறி விக்கிரமநாயக்கவையும் 
டி.எம். ஜயரத்னவையும் நியமித்தார்.

விஜேதுங்க எந்தளவு பிரேமதாசவுக்கு பணிவானவர் என்றால், இரண்டும் இருண்டும் எத்தனை எனப் பிரேமதாச கேட்டால், “ஐயா சொல்லுற கணக்குத் தான்” என விஜேதுங்க கூறுவார் என்பார்கள். 

ஜெயலலிதாவுக்கு பன்னீர்ச்செல்வமும் அவ்வாறுதான். அவரும் வேறு பலரைப் போல் ஜெயலலிதாவின் காலைத் தொட்டு கும்பிட்டவர்.இப்போது, சசிகலா தம்மை முதலமைச்சராக நியமிக்குமாறு ஆளுநர் வித்தியாசாகர் ராவிடம் கோரிக்கை விடுத்துள்ள போதிலும் ஆளுநர் அதற்கு சாதகமான பதிலை வழங்கவில்லை. 

அதேவேளை அவர் பன்னீர்ச்செல்வத்தை ஆதரிப்பதாகவும் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவர் நிச்சமாக யாரோ ஒருவர் பக்கம் இருக்கிறார். அனேகமாக அது பன்னீர்ச்செல்வம் பக்கமாக இருக்கலாம். ஆனால், சட்டப்படி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் தமது சட்டமன்றத் தலைவியாகச் சசிகலாவை தேர்ந்தெடுத்துள்ளனர். 

சட்டப்படி அதற்கு எவரும் சவால் விடுக்காத பட்சத்தில், அவரை முதலமைச்சராக நியமிப்பது ஆளுநரின் கடமையாகும். ஆனால், தமிழக மக்கள் அதனை ஆதரிக்கவில்லை என்று ஆளுநருக்குத் தெரியும். 

அவரும் அதனை ஆதரிக்கவில்லைப் போல்தான் தெரிகிறது. இது அவருக்குன திரிசங்கு நிலையை உருவாக்கியிருக்கிறது என்றே கூற வேண்டும். இது போன்றதோர் நிலைமை 1994 ஆம் ஆண்டு இலங்கையில் மாகாண ஆளுநர் ஒருவருக்கு ஏற்பட்டது. 

அந்த ஆண்டு நடைபெற்ற தென் மாகாண தேர்தலில், அதுவரை பதவியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி ஓர் ஆசன வித்தியாசத்தால் தோல்வியடைந்தது. அப்போது தென் மாகாண சபையின் ஆளுநராக எம்.ஏ. பாக்கீர் மாக்காரே இருந்தார்.

அவர் ஐதேககாரர். வித்தியாசாகர்ராவைப் போலவே அவரும் தாம் விரும்பாதததைச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. 

அவர் ஒருவருக்கும் தெரியாமல் மாகாணத்தில் இருந்து வெளியேறி ஒரிரு நாட்கள் தலைமறைவானார். பின்னர் அவர் ஸ்ரீலயசுக உறுப்பினர் அமரசிறி தொடங்கொடவை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ள வேண்டியதாயிற்று.

சசிகலா, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த போதிலும், இதற்கு முன்னர் அவர் கட்சிப் பணிகளில் ஈடுபட்டதாகவோ கட்சியின் கிளையொன்றில் கடமையாற்றியதாகவோ தெரியவில்லை. 

இது இலங்கையில் மற்றொரு சம்பவத்தை, அதாவது முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் மறைவை அடுத்து, அவரது மனைவி கட்சித் தலைவியாவதற்கு எடுத்த முயற்சியை ஞாபகப்படுத்துகிறது. 

அஷ்ரபின் மனைவியாக பெய்ரியல் இருந்த போதும் மு.காவின் உறுப்பினராக ஒருபோதும் இருக்கவில்லை. 
ஆனால், 2000 ஆவது ஆண்டு செப்டெம்பர் மாதம் ஹெலிகொப்டர் விபத்தொன்றில அஷ்ரப் கொல்லப்பட்டவுடன் அவர் கட்சித் தலைவியாக முயற்சித்தார். 

அதனால் மு.கா பிளவுபட்டது. அ.தி.மு.கவும் அது போன்றதோர் பிளவை நோக்கி நகர்வதாகவே பல ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். 

சசிகலாதான் முதலமைச்சராக வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான சர்ச்சைக்குரிய அரசியல்வாதி சுப்பிரமணியம் சுவாமி கூறுகிறார். 

அவர், அதற்காக ஆளுநர் மீது நெருக்குவாரத்தைப் பாவிப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன. சுவாமி வேறு கட்சியைச் சேர்ந்வராக இருந்த போதிலும், சாதாரண பிரஜை என்ற வகையில் தம்மை ஆள வேண்டியவர் யார் என்ற விடயத்தில் கருத்துத் தெரிவிக்க அவருக்கும் உரிமை இருப்பது உண்மைதான். 

ஆனால், ஓர் அரசியல்வாதி என்பதால் அவர் ஒரு வகையில் மற்றொரு கட்சியின் உள் விவகாரங்களில் தலையிடும் உரிமையை இழக்கிறார். 

இதனையும் இலங்கையில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோர்கள் மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைக்கு கொண்டு வர முயற்சிப்பதைப் போன்ற அரசியல் நோக்கம் கொண்ட செய்லாகும். அதில் இருப்பதே சுயநலம் தான்.

 இங்கு தனித்துப் போட்டியிட்டால் ஓர் ஆசனத்தையேனும் பெற முடியாத தமது கட்சியின் இருப்பைப் மஹிந்தவின் மீது தொற்றி பாதுகாத்துக் கொள்வதே விமல் போன்றோர்களின் நோக்கமாக இருக்கிறது.  

அங்கு சசிகலாவுக்காக பரிந்து பேசி அதி.மு.க உட்கட்சிப் பூசலை மேலும் வளர்த்து அக்கட்சியைப் பிளவுபடச் செய்தால் பா.ஜ.கவுக்கே சாதகமாக அமையும். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் அரசியல், மக்கள் நலன் சார்ந்தது அல்ல என்பதையே தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் சம்பவங்கள் மேலும் வலியுறுத்துகின்றன. 

குறிப்பு: நேற்று (14.02.2017), இந்திய உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட ஊழல்களுக்கு எதிரான தீர்ப்புக்கு முன்னர் எழுதப்பட்ட கட்டுரை இது.

- See more at: http://www.tamilmirror.lk/191588/இலங-க-ய-ப-ரத-பண-ண-ம-தம-ழகம-#sthash.6eX28R3h.dpuf
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கெஹெலிய உள்ளிட்ட 7 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு! தரமற்ற மருந்து கொள்வனவு தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேர் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (28) மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது, கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக ஸ்ரீ சந்திரகுப்த மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன் ரத்நாயக்கவும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/297480
    • பல்லைக் காட்டியது யார், வெள்ளைக் குடை பிடித்தது ஏன்? - தமிழ்நாடு தேர்தல் களத்தில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,X/UDHAY/ANI 28 மார்ச் 2024, 05:54 GMT தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைகளை கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் தொடங்கிவிட்ட நிலையில், திமுக அதிமுக இடையிலான புது மாதிரியான போட்டோ விவாதம் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. பிரச்சாரத்தின் முக்கிய அங்கமாக சமூக ஊடகங்கள் மாறியுள்ள நிலையில், களத்தில் நடைபெறும் பரப்புரைகள் சமூக வலைதளங்களிலும், எதிரொலிக்கின்றன. தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது பிரச்சாரங்களில் போட்டோக்களை பயன்படுத்தி பரப்புரை செய்து வருகிறார். அதிமுகவும் பாஜகவும் ஒரே கூட்டணி என்பதை காட்ட, பிரதமர் மோதியும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பொது நிகழ்வுகளில், சந்திப்புகளில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை கையில் கொண்டு வந்து மக்கள் மத்தியில் எடுத்துக் காட்டி பரப்புரை செய்கிறார். இதற்கு பதிலடியாக எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினும் பிரதமர் மோதியும் அரசு நிகழ்வுகளில், விழாக்களில் அருகில் நின்று சிரித்து பேசிக் கொண்ட புகைப்படங்களை எடுத்துக் காட்டி, திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி கொண்டுள்ளனர் என்று சுட்டிக் காட்டுகிறார்.   பட மூலாதாரம்,X/UDHAY 'கல்லு பல்லு' என நீளும் விமர்சனம் அதே போன்று, உதயநிதி ஸ்டாலின், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது என்பதை சுட்டிக் காட்டும் வகையில் கடந்த தேர்தலில், ஒற்றை செங்கலைக் காட்டி பரப்புரை செய்தார். இந்த முறையும் அதே போன்ற பரப்புரையை மேற்கொண்ட போது, “ஸ்கிரிப்டை மாத்து பா” என்று எடப்பாடி தனது பிரச்சாரத்தில் பதில் கொடுத்துள்ளார். “செங்கலை தூக்கிக் கொண்டு வித்தை காட்டுகிறாயா” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் அழுத்தம் கொடுத்திருந்தால் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்திருக்கும் என்றார். இந்த விவாதங்கள் பிரச்சாரக் களத்தில் மட்டுமல்லாமல், சமூக ஊடகங்களில் இடம் பெற்றுள்ளன. “நானாவது எய்ம்ஸ் -ல் வைத்த கல்லை காட்டினேன். இவர் பல்லை காட்டுகிறார் பாருங்கள்” என எடப்பாடி மோதியுடன் எடப்பாடி பழனிசாமி சிரித்துக் கொண்டு நிற்கும் புகைப்படத்தைக் காட்டி உதயநிதி ஸ்டாலின் பேசியது சமூக ஊடகங்களில் கல்லு பல்லு என்ற புதிய ஹேஷ் டேக்கை உருவாக்கிவிட்டது. இரு தரப்பினரும் மாறி மாறி, கல்லு பல்லு என்று பல உதாரணங்களை எடுத்து விமர்சித்து கேலி செய்து வருகின்றனர்.   பட மூலாதாரம்,X/EPSTAMILNADU மேலும் உதயநிதி ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்த போது எடுத்த புகைப்படத்தை காட்டி, “இவர் சிரிச்சா தப்பு இல்ல, நான் சிரிச்சா தப்பா. சிரிச்சா என்ன தெரியுது, பல்லு தானே” என்று மீண்டும் இந்த விவகாரத்தை கையில் எடுத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தப் புகைப்படம் கேலோ இந்தியா நிகழ்வுகள் குறித்து பேசும் போது எடுத்தது என்று பதிலளித்தப் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி சசிகலாவின் காலில் விழும் போட்டோவை காண்பித்து, “நான் இப்படி ஒருவர் காலில் விழும் புகைப்படத்தை காண்பித்தால் நான் அரசியலை விட்டு விலகிவிடுகிறேன்” என சவால் விடுத்துள்ளார்.   பட மூலாதாரம்,X/ANI பிரதமர் நரேந்திர மோதி சென்னை வந்த போது கருப்பு குடைக்கு பதிலாக வெள்ளை குடை பிடித்ததை விமர்சனம் செய்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நடிகர் வடிவேலுவின் 23ம் புலிகேசி திரைப்படத்தில், எதிரி நாட்டவர்கள் படை எடுத்து வரும் போது வெள்ளை கொடி எடுத்து செல்வார். அதே போல, கருப்பு குடை பிடித்தால் பிரதமருக்கு கோபம் வரும் என்பதால், அவர் சென்னை வரும் போது, வெள்ளை குடை பிடிக்கப்பட்டது. வெள்ளை குடை ஏந்தும் பொம்மை வேந்தர் என்று முதல்வரை மக்கள் சொல்கிறார்கள்” என்று கூறியிருந்தார்.   பட மூலாதாரம்,X/ANNAMALAI_K 'கோட்டா அரசியல்' - விமர்சனத்தில் சிக்கியுள்ள அண்ணாமலை அண்ணாமலை கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசும் போது,தன்னை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளரான சிங்கை ராமச்சந்திரன், சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவரது தந்தை கோவிந்தராசுவின் உதவியால் தான் உயர்படிப்பு படித்தார் என்றும் விமச்சித்திருந்தார். “2002ம் ஆண்டு எம் எல் ஏ கோட்டாவின் கீழ் கல்லூரியில் இடம் பெற்றவர் அவர், வாரிசு அரசியலில் வந்தவர் அவர். ஆனால் நான், எனது தந்தையுடன் கிராமத்திலிருந்து மூன்று பேருந்துகள் மாறி, தகரப்பெட்டியுடன் இந்த நகரத்துக்குள் நுழைந்தேன். கோட்டா அரசியலில் வரவில்லை நான்.” என்று அண்ணாமலை தெரிவித்திருந்தார். பட மூலாதாரம்,X/RAMAAIADMK இதற்கு பதிலளித்த சிங்கை ராமச்சந்திரன், “எனக்கு 11 வயது இருக்கும் போதே என் தந்தை இறந்துவிட்டார். நான் பெற்ற மதிப்பெண்கள் காரணமாகவே எனக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவர்களுடைய மோதியின் குஜராத்-ல் உள்ள ஐஐஎம்-ல் மீண்டும் மதிப்பெண்கள் மூலமாகவே இடம் பெற்றிருந்தேன். அவருக்காவது தகரப்பெட்டியை உடன் தூக்கி வர அப்பா இருந்தார், ஆனால் எனக்கு அதுவும் இல்லை. இது போன்ற கஷ்டங்களை அனைவரும் தங்கள் வாழ்வில் சந்தித்திருப்பார்கள். எனவே நான் தான் துன்ப்பப்பட்டேன் என்று கூறிக் கொள்ள எதுவும் இல்லை” என்று பதில் கூறியிருந்தார். இதை அடுத்து கோட்டா அரசியல், இட ஒதுக்கீடு குறித்த விவாதம் சமூக ஊடகங்களில் பரப்பரப்பாக நடைபெற்று வருகின்றன. திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், அண்ணாமலை தான் வளர்ந்து வந்த பாதையை மறந்துவிடக் கூடாது என்று கூறியுள்ளார். இதற்கிடையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விழுப்புரம் தொகுதியில் பேசும் போது அதிமுக போட்ட பிச்சை தான் தமிழகத்தில் பாஜகவுக்கு இருக்கும் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் என்று காட்டமாக கூறியிருந்தார். தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் டிடிவி தினகரன், பாஜகவின் சாதனைகளை குறித்தோ அல்லது காங்கிரஸ் மீதுள்ள விமர்சனங்கள் குறித்து குறிப்பிட்டு எதையும் பேசுவதில்லை. தனது கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களை மறைமுகமாக தாக்கிப் பேசும் அவருக்கு, பிரதான அரசியல் பிரச்னைகள் குறித்து பேசுவதை விட தனது குக்கர் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே முக்கியத்துவம் பெறுகிறது.   பட மூலாதாரம்,X/DRARAMADOSS பாமக மாறி மாறி கூட்டணி வைத்துக் கொள்வதை விமர்சித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீர் இருக்கும் இடத்தை தேடிச் செல்லும் வேடந்தாங்கல் பறவை போல் பா.ம.க.,வினர் தேவைக்கேற்ப சென்று விடுவர். பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை” என்று கூறியிருந்தார். தருமபுரியில் வேட்பாளர் சௌம்யா அன்புமணியை அறிமுகம் செய்து பேசிய அன்புமணி ராமதாஸ் “நாங்கள் வேடந்தாங்கல் பறவை அல்ல, சரணாலயம்” என்று பதில் கூறியுள்ளார். “யார் வந்தாலும் பாதுகாப்பு கொடுப்போம். வெற்றி பெற செய்வோம். எங்களை நம்பி வருபவர்களை வாழ வைப்போம். யாருக்கும் துரோகம் செய்ய மாட்டோம்” என்று தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/articles/cjkd7v517z2o
    • 😀..... உங்களுக்காக 'கோப்பிக் கணக்கு' என்ற தலைப்பில் ஒன்று எழுத வேண்டும்....🤣 நீங்கள் இலகுவாக கடந்து விடுகிறீர்கள்........👍
    • உங்களின் சிறுகதைப் புத்தகம் வந்தவுடன் சொல்லுங்கள், நான் வாசிப்பில் கொஞ்சம் ஆர்வம் உள்ளவன். நீங்கள் அகரமுதல்வனின் எழுத்துகளை பற்றி இன்னொரு திரியில் எழுதியிருந்ததை பார்த்தேன். எனக்கும் அவரின் எழுத்துகளை பற்றி சில அபிப்பிராயங்கள் இருக்கின்றது. ஆனால், இந்த மாதம் தான் இங்கே களத்தில் இணைந்தேன், அதனால் உடனேயே எல்லா இடமும் போய் கருத்து எழுத ஒரு சின்ன தயக்கமாக இருக்கின்றது. போகப் போக தயக்கம் போய்விடும்.........😀 கலிபோர்னியாவின் பெரும் நகரங்களில் நீங்கள் கண்ட விடயம் மிகச் சாதாரண ஒரு நிகழ்வு. அமெரிக்காவின் பல பெரு நகரங்களிலும் இதே நிலையே.  மினசோட்டாவிற்கு வந்திருக்கின்றேன். அந்த நாட்களில் Kevin Garnett அங்கு கூடைப்பந்து விளையாடும் போது, அது பிடித்த அணிகளில் ஒன்றாக இருந்தது. இந்த வருடம் மீண்டும் ஒரு நல்ல அணி மினசோட்டாவில் உருவாகியுள்ளது. Vikings அணியும் பிடித்த ஒரு அணியே.
    • நன்றி... நாங்கள் அழகிய ஏரிகள் சூழ்ந்த மினசோட்டாவில் வசிக்கின்றோம். மிகவும் பிடித்தமான மகிழ்வான வாழ்வுக்குரிய இடம். தொடக்கத்தில் பனி கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் குழந்தைகளுடன் குழந்தையாக அதையும் ரசித்து வாழப் பழகி விட்டோம்.  இந்த இடத்தில் இன்னொன்றும் சொல்ல வேண்டும், போன வருடம் வட அமெரிக்க பேரவையின் தமிழ் பெரு விழாவுக்காக சாக்கிரமென்டோ போயிருந்தேன். இடையில் சான்பிரான்ஸ்சிஸ்கோவில் இரண்டு நாட்களை களித்தோம், கோல்டன் கேட் பாலத்துக்கு அருகில் கார் கண்ணாடிகளை உடைத்து பட்டப்பகலில் கொள்ளையர் புரியும் அட்டகாசத்தை நேரில் கண்டு பயந்தேன். இது பற்றி "தங்க வாசல்" என்ற தலைப்பில் ஒரு சிறுகதை எழுதியுள்ளேன், இன்னும் ஓரிரு மாதங்களில் வரவுள்ள எனது சிறுகதை புத்தகத்தில் அது இடம்பெறுகிறது.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.