Jump to content

தமிழகத்தைப் பீடித்திருக்கும் 24x7 பரபரப்பு நோய் எப்போது நீங்கும்?


Recommended Posts

தமிழகத்தைப் பீடித்திருக்கும் 24x7 பரபரப்பு நோய் எப்போது நீங்கும்?

 
 
udagam_3134276f.jpg
 
 
 

பொதுவாக, ஊடகவியல் வகுப்பு எடுக்கும் பேராசிரியர்கள் மாணவர்களுக்குச் சொல்லும் முதல் பாடமாக இது அமையும். “எது செய்தி? மனிதனை நாய் கடித்தால் அது செய்தி அல்ல; மாறாக நாயை மனிதன் கடித்தால் அதுவே செய்தி!” ஆனால், ஒரு நல்ல ஊடகர், வணிக ஊடகவியல் புத்தி கட்டமைத்த ‘மனிதனை நாய் கடித்தால் அது செய்தி அல்ல’ எனும் மலிவான பரபரப்புச் செய்தி இலக்கணத்தை உடைத்தெறிவார். ஏனென்றால், ஆண்டுக்கு 20,000 பேர் வெறிவிலங்குக்கடியால் உயிரிழக்கும் ஒரு நாட்டில், அதுவும் ஒரு முக்கியமான செய்தி. ஆகையால், “கார்களில் பயணிப்பவர்களுக்குத் தெரு நாய்களின் ஆபத்து புரியாது; ஆனால் ஐயா, இதுவும் ஒரு முக்கியமான செய்தி!” என்று அவர் ஊடக நிறுவனத்திடம் வாதிடுவார்.

எப்போது இப்படி ஒரு ஊடகரால் வாதிட முடியும் என்றால், அவர் சிந்திக்கும்போது. சிந்திப்பதற்கான நிதானத்தில் அவர் இருக்கும்போது. அதற்கான அவகாசம் அவருக்கு வாய்க்கும்போது. சதா ஓடிக்கொண்டிருப்பவர்களால் எப்படி சிந்திக்க முடியும்? தான் சிந்திப்பதற்கே நேரம் எடுத்துக்கொள்ளாதவர்களால், சமூகத்தை எப்படிச் சிந்திக்கச் செய்ய முடியும்?

1984 அக்டோபர் 31 அன்று இந்திரா காந்தி சுடப்பட்டபோது காலை 9.20 மணி. அடுத்த பத்தாவது நிமிஷம் அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோதே, அவர் மரணம் அடைவது நிச்சயமாகிவிட்டது. அகில இந்திய வானொலி அடுத்த ஒன்றரை மணி நேரம் கழித்தே, ‘இந்திரா சுடப்பட்டார்’ என்ற செய்தியை வெளியிட்டது. இந்திரா இறந்துவிட்டதை மருத்துவர்கள் 2.20 மணிக்கு அறிவித்தார்கள். அகில இந்திய வானொலியோ மாலை 6 மணிச் செய்திகளில்தான் அத்தகவலை வெளியிட்டது; கூடவே அடுத்த பிரதமராக ராஜீவ் காந்தி பதவியேற்றார் எனும் தகவலோடு. ஏனென்றால், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு பிரதமரோ, முதல்வரோ உயிரிழக்கும்போது கூடவே அந்த அரசும் கலைந்துவிடுகிறது. நாட்டை வழிநடத்த அடுத்து ஒரு தலைமை தேவை. அதற்கான அவகாசத்தைச் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும். தவிர, சம்பவம் நடந்த வேகத்தில் செய்தி வெளியிடப்பட்டால், நாடு முழுக்க வெடிக்க வாய்ப்புள்ள கலவரங்களில் லட்சக்கணக்கான அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள். அவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்கான அவகாசம் அளிக்கப்பட வேண்டும் (அடுத்த மூன்று நாட்களில் மட்டும் 3000 பேர் கொல்லப்பட்டார்கள்).

இந்தப் பிரக்ஞையும் சுயக்கட்டுப்பாடும் எப்போது சாத்தியம் என்றால், சிந்திப்பதற்கான அவகாசம் மூளைக்குக் கிடைக்கும்போதுதான் சாத்தியம். 2016 டிசம்பர் 4 மாலை ‘ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடம்’ எனும் தகவல் வந்தடைந்தது முதலாக டிசம்பர் 6 மாலை ஜெயலலிதாவின் சடலம் மண்ணுக்குள் இறக்கப்படுவது வரையிலான தமிழக ஊடகங்களின் அமளியை இங்கே நினைவுகூர்வோம். இரவு பகல் பாராமல் அப்போலோ மருத்துவமனையின் வாயிலிலேயே காத்துக் கிடந்து, ஒட்டுமொத்த தமிழக மக்களின் கவனத்தையும் அங்கு குவித்த ஊடகங்கள் உச்சபட்சமாக அங்கு சாதிக்க விரும்பியது என்ன? நண்பர் சஞ்சீவி சொல்லிக்கொண்டிருந்தார், “இரவு பகல் பாராமல் செய்தியாளர்கள் வதைக்கப்படுகிறார்கள். இன்னும் ஓரிரு நாட்கள் கழித்து ஜெயலலிதா இறந்திருந்தால் அதற்குள் இரண்டு மூன்று காட்சி ஊடகச் செய்தியாளர்களின் உயிர் போயிருக்கும்” என்று. ‘முதல்வர் காலமானார்’ எனும் செய்தி மருத்துவர்களால் அறிவிக்கப்படுவதற்குப் பல மணி நேரங்கள் முன்னரே, தொலைக்காட்சிகள் அப்படி ஒரு செய்தியை வெளியிட்டு, திரும்பப் பெற்றது, வெளிப்படையாக ஒரு மரணத்துக்காகக் காத்துக் கிடந்ததன் அப்பட்டமான வெளிப்பாடுதானே?

அது ஒரு சந்தர்ப்பம். ‘பரபரப்பு வியாதி பார்வையாளர்களை மட்டும் பீடிப்பதல்ல; மாறாக நம்மையும் தின்றுகொண்டிருக்கிறது’ என்று ஊடக நிறுவனங்கள் உணர்ந்துகொள்வதற்கும்; நம்முடைய அன்றாட வாழ்க்கையையும் இயல்பையும் எவ்வளவு மோசமானதாக இன்றைய பணிக் கலாச்சாரம் மாற்றிக்கொண்டிருக்கிறது என்று ஊடகர்கள் உணர்ந்துகொள்வதற்குமான சந்தர்ப்பம்! ஊடகங்கள் துளி யோசித்தாகத் தெரியவில்லை. அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காகக் காத்திருந்தன அல்லது வாய்ப்புகளை உருவாக்கின. அடுத்து, ஜல்லிக்கட்டு போராட்டம். அதற்கடுத்து, ஆளும் அதிமுகவுக்குள் நடந்த பிளவும் அதிகாரச் சண்டையும்.

முதல்வர் பதவியிலிருந்து பன்னீர்செல்வம் விலகிய நாள் முதலான 10 நாட்களாகத் தமிழக அரசு நிர்வாகத்தில் என்னென்ன நடந்திருக்கின்றன, என்னென்ன நடக்கவில்லை? தெரியாது. வரலாறு காணாத வறட்சிப் பாதிப்பு இப்போது தமிழக விவசாயிகளை எந்த நிலையில் தள்ளியிருக்கிறது? தெரியாது. மாநிலக் கல்வி வாரியத்தில் படிக்கும் மாணவர்களை மத்தியக் கல்வி வாரியப் பாடத்திட்ட அடிப்படையில் மருத்துவ நுழைவுத் தேர்வு (நீட்) எழுதச் சொல்லும் மத்திய அரசின் முடிவிலிருந்து மாறுபட்டு, தமிழகச் சட்டப்பேரவை ஒரு சட்டம் இயற்றியதே, அதற்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்ததா? தெரியாது. அடுத்து, பொறியியல் படிப்புக்கும் பொது நுழைவுத் தேர்வை அறிவித்திருக்கிறதே மத்திய அரசு, என்ன செய்யப்போகிறோம்? தெரியாது.

அரியலூர், சிறுகடம்பூரைச் சேர்ந்த பதினாறு வயது சிறுமி நந்தினி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்ட சம்பவமும் தொடர்ந்து, சென்னையில் ஏழு வயதுச் சிறுமி ஹாசினி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் எவ்வளவு துச்சமாக அணுகப்பட்டன? இதே சென்னையில் சில மாதங்களுக்கு முன் இளம்பெண் சுவாதி கொல்லப்பட்ட சம்பவம் எவ்வளவு பரபரப்பாக அணுகப்பட்டது? இதெல்லாம் நம் மனசாட்சியின் முன்னின்று நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள். பிரச்சினைகள் அல்ல; அந்தந்த நேரத்தின் பரபரப்புக்கான தேவைதானே ஊடகங்களை வழிநடத்துகிறது?

தமிழகத்தின் வறட்சி தொடர்பில் ஒரு தொடரை ‘தி இந்து’வில் திட்டமிட்டோம். தொடர்ந்து, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு தொடர்பில் தொடர் கட்டுரைகள் வெளியிடத் திட்டமிட்டோம். மக்களின் கவனம் முழுக்க அதிமுக உட்கட்சி சண்டையில் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்போது அவை வெளியானால், எதிர்பார்க்கும் எந்தத் தாக்கத்தையும் சமூகத்தில் உருவாக்காது என்று கருதி இப்போது தள்ளிவைத்திருக்கிறோம். காட்சி ஊடகங்களும் சமூக வலைதளங்களும் முன்னத்திஏர்களாக உருமாறிவிட்ட நிலையில், மக்களின் எண்ணவோட்டத்துக்கு ஏற்பப் பின்னத்திஏர்களாகப் போக வேண்டிய நிலைக்கு அச்சு ஊடகங்கள் இன்று தள்ளப்பட்டிருக்கின்றன.

பிரெஞ்சு சிந்தனையாளர் பியர் பூர்தியு ஒன்று சொல்வார், “காட்டுவதன் மூலம் மறைப்பது.” ஒன்றை மறைப்பதற்காக மற்றொன்றைக் காட்டுவது ஆளும் அமைப்புகளின் உத்தி. பரபரப்புக்காக ஊடகங்கள் நிமிஷத்துக்கு நிமிஷம் ஒரே விஷயத்தில் கவனம் செலுத்தி, மக்களின் கவனத்தையும் அதிலேயே உறைய வைக்கும்போதும் அதுவே நடக்கிறது. நாட்டின் ஏனைய முக்கியமான மக்கள் பிரச்சினைகள் பல இருட்டடிக்கப்படுகின்றன. மேலும், இவர்கள் திரும்பத் திரும்பக் காட்டும் அந்தப் பிரச்சினையிலும்கூடச் செய்தியைத் தாண்டிய உள் அரசியல் நோக்கி இவர்களால் விவாதத்தைக் கொண்டுசெல்ல முடிவதில்லை.

சொத்துக்குவிப்பு வழக்குத் தீர்ப்பில் சசிகலா குற்றவாளி என்று தீர்ப்பு வந்த அடுத்த கணம் சசிகலா என்ன செய்யப்போகிறார், பன்னீர்செல்வம் என்ன செய்யப்போகிறார், பழனிச்சாமி என்ன செய்யப்போகிறார் என்றுதான் ஊடகங்கள் நகர்கின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க அந்தத் தீர்ப்புக்குள்ளோ, இருபது வருஷங்களாக அது இழுக்கடிக்கப்படக் காரணமான இந்திய நீதித் துறையின் தாமதத்தின் பின்னுள்ள சங்கதிகளுக்குள்ளோ, ஜெயலலிதாவின் பிம்ப அரசியலின் பின்னிருந்த சக்திகள், பிம்ப அரசியல் மேலும் தொடர்வதால் ஏற்படும் அபாயங்கள் தொடர்பிலோ யாரும் நகரவில்லை. ‘உடனுக்குடன் செய்திகள்’ கலாச்சாரத்தில், உடனுக்குடன் விமர்சனங்களும் எதிர்பார்க்கப்படுவதால், யூகங்களே விமர்சனங்கள் என்றாகிவருகின்றன. ஆக, மக்கள் நாள் முழுவதும் செய்தியைப் பார்த்தாலும் அரசியலை நோக்கி அவர்களை அது நகர்த்துவதில்லை; மாறாக செய்தியே ஒரு பொழுதுபோக்காகிவிடுகிறது. அரசியலையும் அது பொழுதுபோக்காக்கிவிடுகிறது.

ஃபேஸ்புக்கில், “இப்போதெல்லாம் அரை மணி நேரத்துக்கு ஒரு முறை ‘பிரேக்கிங் நியூஸ்’ ஏதும் வரவில்லை என்றால், கைகள் நடுங்க ஆரம்பித்துவிடுகின்றன” என்று எழுதியிருந்தார் நண்பர் ஒருவர். அது பொய் அல்ல. நம்முடைய கைகள் நம்மைத் தாண்டி ரிமோட் கன்ட்ரோலைத் தேடுகின்றன. பரபரச் செய்திகளைச் சதா நம் மூளைகள் தேடுகின்றன. ரிமோட் கன்ட்ரோலை நாம் இயக்குவதாக நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம்; மாறாக, ரிமோட் கன்ட்ரோலே நம்மை இயக்கிக்கொண்டிருக்கிறது. நம்மை என்றால், பார்வையாளர்களை மட்டும் அல்ல; ஊடகங்களையும்தான்!

http://tamil.thehindu.com/opinion/columns/தமிழகத்தைப்-பீடித்திருக்கும்-24x7-பரபரப்பு-நோய்-எப்போது-நீங்கும்/article9548260.ece?ref=popNews

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.