Jump to content

கூவத்தூரில் 9 நாட்கள்! - ஒரு எம்.எல்.ஏ-வின் வாக்குமூலம் #Tnpolitics #VikatanExclusive


Recommended Posts

கூவத்தூரில் 9 நாட்கள்! - ஒரு எம்.எல்.ஏ-வின் வாக்குமூலம் #Tnpolitics #VikatanExclusive

சசிகலா

சிகலா மற்றும் பன்னீர்செல்வம் இருவருக்குமிடையே ஏற்பட்ட பதவி மோதலில், எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள ’கோல்டன் பே’ நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டனர். இவர்களில், மதுரை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ சரவணன் மட்டும் தாங்கள் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் மாறுவேடத்தில் வந்ததாகவும் கூறி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவளித்த எம்.எல்.ஏக்கள் கூட்டணியில் சேர்ந்துகொண்டார். இதற்கு அடுத்து, கூவத்தூரைச் சுற்றி போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது. பன்னீர்செல்வம் தனது ராஜினாமாவை வாபஸ் பெறுவதாகவும், சசிகலா தரப்பு தங்களை ஆட்சி அமைக்க உரிமை கோரியும்  ஆளுநரைச் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். ஆனால், சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறப்படவிருந்த நிலையில் ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பதில் தாமதித்து வந்தார். 

கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்

இந்த  நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு மூன்று நாட்களுக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதையடுத்து, கட்சி முன்மொழிந்ததன் பேரில் எடப்பாடி பழனிச்சாமியை ஆட்சி அமைக்கக் கோரி ஆளுநர் அழைப்பு விடுத்தார். பழனிச்சாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றுக்கொண்டது. ஒன்பது நாட்கள் வரை கூவத்தூர் நட்சத்திர விடுதியிலேயே தங்கியிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், பதவியேற்புக்காக ராஜ்பவன் விரைந்தனர். அவர்களில் தி.நகர் தொகுதி அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சத்யநாராயணனிடம் கூவத்தூர் முகாமில் எம்.எல்.ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தார்களா என்று கேட்கப்பட்டது.

சத்யநாராயணன்

“பிஸ்லெரி கிடைக்காததுதான் சின்ன குறையா இருந்துச்சு!”

அதற்கு பதிலளித்த சத்யநாராயணன்,”கடவுள் மற்றும் மறைந்த அம்மாவின் புண்ணியத்தில் நாங்கள் அங்கே இன்றுவரை நிம்மதியாக இருந்தோம். ஒன்பது நாட்களும் சிறப்பாகப் போச்சு. நல்ல சாப்பாடு, சைவம் அசைவம் என இரண்டும் கொடுத்தார்கள். ஒரு ரூமுக்கு இரண்டு எம்.எல்.ஏக்கள் தங்கியிருந்தோம். எங்க வீட்டுல இருக்கிறவங்களும் அங்கே வந்து எங்களைப் பார்த்துட்டுப் போனாங்க. எல்லா எம்.எல்.ஏக்களும் அவங்க வீட்டில் இருக்கிறவங்களைக் கூட்டிட்டு வந்தாங்க. ஒரே ஒரு சின்னக் குறைதாங்க” என்று நிறுத்தியவர், நாம் என்னவாக இருக்கும் என்று யோசிப்பதற்குள் மீண்டும் தொடர்ந்தார்.

”குடிக்கிறதுக்கு பிஸ்லெரி, அக்வாஃபினா கிடைக்கலை சாதாரண தண்ணிதான் கிடைச்சது. மத்தபடி நாங்க எல்லோருமே ஹேப்பி. இப்போ கூட பதவியேற்பு நிகழ்வை முடிச்சிட்டு நாங்க கூவத்தூர்தான் திரும்பவும் போறோம். சனிக்கிழமைதான் நாங்க திரும்புறதா இருக்கோம்!” என்றார்.

பிஸ்லெரியா? காவிரியா?

நமக்கு பிஸ்லெரிதான் முக்கியம்.

http://www.vikatan.com/news/tamilnadu/81092-one-admk-mlas-comical-confession-on-his-stay-at-golden-bay-resort-during-sasikala-or-panneerselvam-stint.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.