Jump to content

அதிமுக கதை முடிந்தது.. இனி அழிவுதான்.. கட்ஜூ ஆவேசம்


Recommended Posts

அதிமுக கதை முடிந்தது.. இனி அழிவுதான்.. கட்ஜூ ஆவேசம்

 

சென்னை: எப்போது சசிகலாவின் கைப்பாவையை முதல்வராக நியமிக்க அதிமுக முடிவு செய்ததோ அப்போதே அந்தக் கட்சியின் கதை முடிந்தது என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கோபாவேசமாக கூறியுள்ளார்.

Markandeya Katju sees the end of ADMk soon

 இதுகுறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை அவர் போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: சசிகலாவின் கைப்பாவையை சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்ந்தெடுத்ததன் மூலம் அதிமுக தனது மரணத்திற்கு அதுவே குழி தோண்டி விட்டது.

தமிழக சட்டசபைக்கு இப்போது தேர்தல் நடந்தால் சந்தேகமே இல்லாமல் திமுகதான் பெரும் வெற்றி பெறும். அதிமுக மாபெரும் தோல்வியைத் தழுவி அழிந்தே போகும் என்று ஆவேசமாக கூறியுள்ளார் கட்ஜு.

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/markandeya-katju-sees-the-end-admk-soon-274309.html

Link to comment
Share on other sites

சிறையிலிருந்து நடக்கப் போகும் ஆட்சி.. வாழ்த்துகள் தமிழர்களே.. கட்ஜு சாட்டையடி!

 

சென்னை: உலகத் தமிழர்களைப் போலவே உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவுக்கும் கூட சசிகலா தரப்பைச் சேர்ந்த எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதை சகித்துக் கொள்ள முடியவில்லை போலும். அடுத்தடுத்து இந்த அமைச்சரவையை விமர்சித்துப் பதிவு போட்டுள்ளார்.

 

கட்ஜு போட்டுள்ள இன்னொரு முகநூல் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: சிறையிலிருந்து நடக்கப் போகும் அரசு அமைந்துள்ளது தமிழகத்தில். சிறைக்குப் போகும் முன்பு சசிகலா தனது உறவினர் தினகரனை, அவர் ஜெயலலிதாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர், பொறுப்பில் நியமித்து விட்டுப் போயுள்ளார். அவரை கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக நியமித்துள்ளார். அவரே பொதுச் செயலாளராகவும் நீடிக்கிறார். இப்போது அவர்களது கைப்பாவை பழனிச்சாமி அடுத்த முதல்வராகியுள்ளார்.

Katju congratulates Tamilians for having pro Sasikala Govt

எனவே தமிழர்களே, வாழ்த்துகள்!. அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, மிகப் பெரிய ஊழல்செய்து தண்டனை பெற்ற ஒரு குற்றவாளி, சிறைக் கம்பிகளுக்கு பின்னாலிருந்து உங்களை ஆட்சி செய்யப் போகிறார்.

சிறையிலிருந்து வரும் உத்தரவுகளை பழனிச்சாமி அப்படியே செயல்படுத்துவார். ஆனால் கவலைப்படாதீர்கள் தமிழர்களே. உங்களுக்கு முன்பு ஒரு மாநிலத்தில் இதுபோல நடந்த முன்னுதாரணம் இருக்கிறது.

நீங்கள் தாமதம்தான் என்று கூறியுள்ளார் கட்ஜு. கட்ஜு சொல்வதிலும் என்ன தவறு இருக்கிறது.. இவர்களைத் தேர்ந்தெடுத்தவர்கள் நாம்தானே.. தலை நிமிர்ந்தா நிற்க முடியும்!



Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/katju-congratulates-tamilians-having-pro-sasikala-govt-274316.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்டாலின் வேலைக்காகார். இப்ப மட்டும் கட்டுமரம் ஆக்டிவாக இருந்திருந்தால், 30 அதிமுக காரர்களை மடக்கி, அரசு அமைக்க கோரிக்கை விடுத்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஸ்டாலின் வேலைக்காகார். இப்ப மட்டும் கட்டுமரம் ஆக்டிவாக இருந்திருந்தால், 30 அதிமுக காரர்களை மடக்கி, அரசு அமைக்க கோரிக்கை விடுத்திருப்பார்.

கட்டுமரம் ஆக்டிவாய் இருந்திருந்தால் இண்டைக்கு  அ....தி.....மு.....க......எண்டு நாலாய் சிதறி சிதைஞ்சிருக்கும் tw_dissapointed_relieved:

Link to comment
Share on other sites

5 hours ago, Nathamuni said:

ஸ்டாலின் வேலைக்காகார். இப்ப மட்டும் கட்டுமரம் ஆக்டிவாக இருந்திருந்தால், 30 அதிமுக காரர்களை மடக்கி, அரசு அமைக்க கோரிக்கை விடுத்திருப்பார்.

இந்த நேரத்தில் அவசரபட்டு மல்லுக்கு நிக்காமல் ADMK குழம்பி பல துண்டுகளாக உடைந்தபின்  வேறு வழியில்லை திமுகா தான் இனி தஞ்சம் என்ற சந்தர்ப்பத்துக்கு  என்று கொக்கு போல் நிக்கிறார்ஆக்கும் ஜல்லிகட்டு மூலம் நடந்த  அரசியல் சமூக விழிப்புணர்வு தூங்கும் எரிமலையாக இருபதுவும் இவர் அவசரபட்டு முடிவு எடுக்காததுக்கு காரணம் ஆக இருக்கலாம் விரலை சுழட்டி கதைபேசும் ரஜனியையே தூக்கி எறிந்துவிட்டு இருக்குதுகள் சும்மா பேச்சுக்கு முகநூலில் ரஜனியை சப்போர்ட் பண்ணி ஒரு வாழ்த்து போடுங்கள் வசைபாடி  எதிர்வினை வரும் தமிழ்நாட்டு ஜனம்களிடம் இருந்து அவ்வளவுக்கு அரசியல் சமூக விழிப்புணர்வு சமூக ஊடகங்கள் முலம் நொடிக்கு நொடி பரவுது சென்னையில் டிராபிக் கான்ஸ்டபிள்  50 ரூபா கேட்டுவிட்டார் எனும் ஒலிநாடா காட்சி கோவையில் உள்ளவர் சில நொடிகளில் தெரிந்து அடுத்த நொடி தமிழ்நாடு தேசம் எங்கும் வியாபிக்கிறது .

 

 

ஊடங்களை கட்டுபாட்டில் வைத்திருந்தால் கட்சிக்கு நல்லது என்று பெரும் ஊடகங்களில் சகட்டு மேனிக்கு செய்த முதலீடுகள் பல்லிளிக்குது இந்த சமூக ஊடகங்களால். AVயில் 50வீதத்துக்கு மேல் முதலிடு செய்து இருக்கும் DMK ஆரம்பத்தில் அப்படி இப்படி DMK ஆதரவாய் முழங்கப்போய் சமூகஊடகங்களில் வேண்டிகட்டி செர்குலேசன் வீழ்ச்சிக்கு போக வேறு வழியில்லாமல் நடுவால் வண்டி ஓடுகினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.