Jump to content

'அடுத்த முதல்வர் யார்?' கவர்னர் சப்போர்ட் யாருக்குத் தெரியுமா?


Recommended Posts

'அடுத்த முதல்வர் யார்?' கவர்னர் சப்போர்ட் யாருக்குத் தெரியுமா?

மிழக அரசியல் தகிப்பு இன்னும் அடங்கவில்லை.! துரோகம், ஆதரவு, தீர்ப்பு, சிறை... என்று அடுத்தடுத்த திருப்பங்களை சந்தித்துவரும் தமிழக அரசியல் இப்போது, 'தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?' என்ற கட்டத்தில் வந்து நிற்கிறது.
தமிழகத்தின் காபந்து முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் கடந்த 7-ம் தேதி ஜெ. சமாதியில் திடுதிப்பென்று வந்தமர்ந்து தியானத்தில் மூழ்கியதில் ஆரம்பித்த அரசியல் பரபரப்பு இப்போதுவரையிலும் தொடர்கிறது. 'முதல்வராக அமரவைத்து அசிங்கப்படுத்தினார் சசிகலா' என்று அவர் பற்றவைத்த நெருப்பின் சூடு தாளாமல், உடனடியாக அவரை பொருளாளர் பதவியில் இருந்து தூக்கியடித்தார் சசிகலா. அடுத்தடுத்து ஓ.பி.எஸ் அணி, சசிகலா அணி என அ.தி.மு.க இரண்டாகப் பிளவுபட்டது, ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் அணி மாறியது என பஞ்சமில்லாத பரபரப்பு தமிழக அரசியலை ஆட்கொண்டது.

12_06091.jpg


இதையடுத்து, தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக்கோரி கவர்னர் வித்யாசாகரை தனித்தனியே சந்தித்த ஓ.பன்னீர்செல்வமும், சசிகலாவும், தங்களது ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் பட்டிலையும் கொடுத்துவிட்டு வந்தனர். ஆனாலும், ஆளுநர் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் வெளியாகாமல், காலம் கடத்தப்பட்டு வந்தது. கவர்னரின் காலதாமதத்துக்குப் பின்னணியில் பி.ஜே.பி இருப்பதாக சசிகலா அணியினர் உள்ளுக்குள்ளே பொருமி வந்தாலும், வெளிப்படையாக வெளியே சொல்லத் தயங்கினர். அதே நேரம், 'உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியாகவிருக்கும் சூழ்நிலையில், சசிகலாவை ஆட்சி அமைக்கச்சொல்லி  அழைக்கமுடியாது.' என்று கவர்னர் தரப்பு நியாயத்தை சுட்டிக்காட்டி வாதாடினர் சட்ட நிபுணர்கள். ஆனாலும், ஆளுநர் தரப்பு எந்தக் கருத்தும் தெரிவிக்காமல், ஆழ்ந்த மவுனத்தையே பதிலாகத் தந்துகொண்டிருந்தது.
இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் 'சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை' விதித்து அதிரடி உத்தரவை பிறப்பித்தது உச்சநீதிமன்றம். தமிழக அரசியல் பரபரப்பை ஒட்டுமொத்தமாக திசை திருப்பிய இந்தத் தீர்ப்பையடுத்து, அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்தார் சசிகலா. அன்றே, கவர்னரை சந்தித்த எடப்பாடி பழனிச்சாமியும் தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு கவர்னரை சந்தித்து கோரிக்கை வைத்தார். ஆனால், அதன்பிறகும் கவர்னர் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமான பதில் எதுவும் வெளிவரவில்லை. 

vidyasa13_06596.jpg


இந்த நிலையில், நேற்று மாலை கர்நாடகாவில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் சசிகலா. அதேநாள் இரவு 8 மணி அளவில் அமைச்சர் ஜெயக்குமார், ராஜ்யசபா உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட 10 பேரோடு மீண்டும் கவர்னரை சந்தித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அடுத்த 10 நிமிடங்களுக்குள்ளாக சந்திப்பு முடிந்து வெளியே வந்த குழுவினர் முகத்தில் சந்தோஷக் களை எதுவும் இல்லை.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரும், ''எங்களுக்கு 124 எம்.எல்.ஏ-க்கள் ஆதரவாக உள்ளனர். ஓ.பி.எஸ் அணியில் 8 எம்.எல்.ஏ-க்கள்தான் உள்ளனர். 8 பெருசா? 124 பெருசா?'' என்று செய்தியாளர்களிடம் கேள்வி கேட்டவர் ''கவர்னர் ஜனநாயகத்தை காப்பார் என்ற நம்பிக்கை உள்ளது'' என்று சொல்லியபடியே கிளம்பிப்போனார்.
அடுத்ததாக 8.45 மணிக்கு அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மதுசூதனன், பொன்னையன் என  தனது ஆதரவாளர்களோடு கவர்னரை சந்தித்துப் பேசினார் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 15 நிமிடங்கள் தொடர்ந்த இந்த சந்திப்பை அடுத்து இக்குழுவினர் நேராக க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வரது இல்லத்துக்கு விரைந்தனர். மலர்ந்த முகத்துடன் காரை விட்டு இறங்கிய பொன்னையன், அங்கிருந்த ஆதரவாளர்களிடம் கைகொடுத்து நம்பிக்கை விதைத்தவர் தனது ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டி, ''வெற்றி நமதே'' என்று சிரித்தார்.
இது குறித்துப் பேசும் கவர்னர் வட்டாரத்தினர், ''சசிகலா தரப்பினர் எம்.எல்.ஏ-க்களை கூவத்தூரில் சிறை வைத்துவிட்டதால் ஓ.பி.எஸ் அணிக்கு எதிர்பார்த்த எம்.எல்.ஏ-க்கள் வந்து சேர்வதில் சிக்கல் நீடிக்கிறது. எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் யாருடைய கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல், சுதந்திரமாக சிந்தித்து செயல்படவேண்டும் என்றே கவர்னர் விரும்புகிறார். அதனால்தான் இந்த விஷயத்தில் இவ்வளவு காலம் தாமதம் ஆகிறது.  
ஆனாலும், ஓ.பி.எஸ் அணிக்கு மத்திய அரசின் ஆதரவு பலமாக இருக்கிறது. 
சசிகலா தரப்பு அ.தி.மு.க-வினரிடம் இதுகுறித்துப் பேசியவர், 'எம்.எல்.ஏ-க்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காதவரையில் இவ்விஷயத்தில் எந்தவொரு உறுதியான முடிவையும் என்னால் அறிவிக்க இயலாது. இரண்டு தரப்பினரும் விட்டுக்கொடுத்துப்பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள். தனிப்பட்ட ஒரு குடும்ப ஆதிக்கத்தின் பேரில், எம்.எல்.ஏ-க்களை கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டிக் கொண்டிருந்தால், ஒட்டுமொத்தமாக ஆட்சியைக் கலைத்துவிட்டு கவர்னர் ஆட்சியைக் கொண்டுவருவதோடு இந்த நிலைக்கு காரணமான அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டி வரும்.' என்று கடுமையான வார்த்தைகளில் எச்சரிக்கவே செய்துவிட்டார். இதில், கடுப்பாகிப்போன எடப்பாடிக் குழுவினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிட்டனர். அந்தக்கோபத்தில்தான் ஜெயக்குமாரும் '8 பெருசா? 124 பெருசா?' என்றெல்லாம் கேட்டு வார்த்தைகளில் சூடு காட்டினார். 

4_17575_06273.jpg

 

அதேசமயம், ஓ.பி.எஸ் அணியோடு நெருக்கம் காட்டிய கவர்னர், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் நிதானமாக விவாதித்திருக்கிறார். நிறைவாக, 'நம்பிக்கை தளரவேண்டாம். மத்திய அரசு உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகள் ஒவ்வொன்றாக எடுக்கப்பட்டு வருகிறதே. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுகிற சூழல் ஏற்பட்டாலும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான முதல் வாய்ப்பு உங்களுக்குத்தான் முதலில் வரும். நல்லதே நடக்கும்' என்ற ரீதியில் நம்பிக்கை கொடுத்திருக்கிறார். இதுவல்லாமல், ஓ.பி.எஸ்-ஸிடம் தனியாக சில விஷயங்களையும் பகிர்ந்துகொண்டிருக்கிறார். ஒட்டுமொத்தமாக கவர்னர் காட்டிய சப்போர்ட் ஓ.பி.எஸ் அணியை ரொம்பவே உற்சாகப்படுத்திவிட்டது.
தமிழக சட்டசபையில், பலத்தை நிரூபிப்பது தொடர்பான அறிக்கை ராஜ்பவனிலிருந்து விரைவில் வெளியாகும். எப்படிப் பார்த்தாலும் அது ஓ.பி.எஸ் அணிக்கு சாதகமான அறிவிப்பாகவே இருக்கும்.'' என்று கூறி கண்சிமிட்டுகிறார்கள். 
பொறுப்பு கவர்னர், காபந்து முதல்வர், காலியாக இருக்கும் உள்ளாட்சி நிர்வாகம் என தமிழகமே ஸ்தம்பித்து நிற்கும் நிலையில், 'தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார்?' என்ற கேள்விக்கு விரைவில் விடை கிடைத்தாகவேண்டும்!

http://www.vikatan.com/news/tamilnadu/80972-who-is-the-next-chief-minister-if-you-know-about-governor-support-.html

Link to comment
Share on other sites

16730287_751219535044180_298664043759864

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அவரும் வரம்பு மீறவில்லை. நானும் மீறவில்லை.  சீமானை எதிர்த்து எழுதுவோர் பயத்தில் எழுதுவதாக எழுதினார் - அதை மறுத்து நான் கருத்து எழுதியுள்ளேன். அதே போல் யாழில் நாம் குத்தி முறிவது வீண் வேலை என்றார் - ஆம் இரு பக்கத்திலும் அது வீண்வேலையே என அவருடன் உடன்பட்டேன். ஏன் எண்டால் நான் திமுக அனுதாபியோ அல்லது கருணாநிதி குடும்ப வக்கீலோ அல்ல. ஆகவே அவர்களை defend பண்ணி மினெக்கெட நான் தயாரில்லை. சீமானை எதிர்ப்பவர் = திமுக ஆதவாளர் என்பது நீங்கள் போட்ட தவறான சமன்பாடு. நான் சீமானை எதிர்க்க ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உண்டு, திமுக ஆதரவு அதில் ஒன்றல்ல.
    • ◌தமிழுக்கும் யாழுக்கும் எமக்கும் தேவையான  உறவு வாருங்கள்  கூடுவோம் பேசுவோம்  மகிழ்ந்திருப்போம்..
    • ஒவ்வொரு பொது த‌ள‌ங்க‌ளிலும் காணொளி பார்த்து முடிந்தது வாசிப்ப‌து உண்டு..................... சீமானுக்கு ஆத‌ர‌வாக‌ 180க்கு மேலான‌ யூடுப் ச‌ண‌ல் இருக்கு......................... புதிய‌த‌லைமுறை ம‌ற்றும் வேறு ஊட‌க‌ங்க‌ளில் ம‌க்க‌ளின் ம‌ன‌ நிலை என்று கீழ‌ வாசிப்ப‌துண்டு நீங்க‌ள் மேல‌ ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணாவுக்கு எழுதின‌தில் என‌க்கு உட‌ன் பாடு இல்லை ஈழ‌ப்பிரிய‌ன் அண்ணா யாழில் யார் கூட‌வும் வ‌ர‌ம்பு மீறி எழுதும் ந‌ப‌ர் கிடையாது நீங்க‌ள் சீமானில் ஒரு குறை க‌ண்டு பிடிச்சால் க‌ருணாநிதி குடும்ப‌த்தில் ப‌ல‌ நூறு குறைக‌ள் என்னால் க‌ண்டு பிடிக்க‌ முடியும் அதில் பாதி தான் நேற்று உங்க‌ளுக்கு எழுதின‌து ஆனால் நீங்க‌ள் ப‌தில் அளிக்க‌ முடியாம‌ ந‌க‌ர்ந்து விட்டீங்க‌ள்...................................
    • தே. ஆணையம் ஒரு கட்சி அல்ல. அதற்கு ஆதரவாக யூடியூப்பில் எழுத யாரும் இல்லை. ஆனால் - பிஜேபி உட்பட அதை எல்லா கட்சி ஆட்களும் விமர்சிகிறனர். எனவே கட்சி சார்பான காணொளிகளில் தே.ஆ விமர்சிக்கபடுவதை வைத்து த.நா மக்களின் கருத்து அதுவே என சொல்ல முடியாது.  
    • இவரின் செவ்வி பாடப் புத்தகமாக்கப்பட வேண்டும்.    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.