Jump to content

ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்களை... விண்ணில் ஏவி, இந்தியா உலக சாதனை படைத்துள்ளது.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ISRO creates World record by launching 104 satellites

ஒரே நேரத்தில்.. 104 செயற்கைக்கோ ள்களை விண்ணில் ஏவி இஸ்ரோ உலக சாதனைபடைத்துள்ளது.

ஸ்ரீஹரிகோட்டா: பிஎஸ்எல்வி - சி37 ராக்கெட் மூலம் ஏழு நாடுகளை சேர்ந்த, 104 செயற்கைக் கோள்கள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 9.28 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டன.

ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம், ரஷ்யாவின் விண்வெளி சாதனையொன்று முறியடிக்கப்பட்டது.

 2014 ம் ஆண்டு ரஷ்யா ஒரே நேரத்தில் 37 செயற்கைகோள்களை விண்ணிற்கு அனுப்பியது தான் சாதனையாக கருதப்படுகிறது. 

இஸ்ரோ இதற்கு முன்பு ஒரே நேரத்தில் 20 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி யதுதான் அதிகபட்சமாக இருந்தது. ஒரே நேரத்தில் 104 செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தியது இஸ்ரோ வரலாற்றில் இது முதல்முறை.

நன்றி தற்ஸ் தமிழ்.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை செயற்கைக்கோள்களா.. தீக்குச்சிப் பெட்டிகளா..??! tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bild könnte enthalten: Text

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 15.2.2017 at 6:24 AM, nedukkalapoovan said:

இவை செயற்கைக்கோள்களா.. தீக்குச்சிப் பெட்டிகளா..??! tw_blush::rolleyes:

 

1 hour ago, TNT said:

femtosat-1_1024.jpghttp://www.sciencealert.com/this-tiny-satellite-could-be-your-own-personal-spacecraft-from-just-1-000

சொந்தமாய் செய்மதி கனக்க இல்லை 1000 டொலர் தான் 

இதுக்கு, உலக சாதனை என்று.... தமக்குத் தாமே, பாராட்டிக் கொள்ளும்....
தமிழ் ஊடகங்களை... நினைக்க, சிரிப்பாக இருக்கின்றது.

இவர்களுக்கு.... சினிமாவும், கிரிக்கெட்டும்..... பார்த்து...
கபாலிடா... நெருப்புடா... என்று,  
மாறி... மாறி... முதுகு சொறிந்து கொண்டு,  இருக்கத் தான் லாயக்கானவர்கள். :shocked:

Link to comment
Share on other sites

2 hours ago, TNT said:

femtosat-1_1024.jpghttp://www.sciencealert.com/this-tiny-satellite-could-be-your-own-personal-spacecraft-from-just-1-000

சொந்தமாய் செய்மதி கனக்க இல்லை 1000 டொலர் தான் 

ஓஓஓ இதே அளவிலதான் அந்த 104 செய்மதியும் இருக்குமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Surveyor said:

ஓஓஓ இதே அளவிலதான் அந்த 104 செய்மதியும் இருக்குமோ?

இதனை... இட்லி, என்றால்.... 
அதனை... சட்னி, கூட நம்பாது. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு போடும் குப்பை காணாது ...
இனி மேலேயும் கொண்டு சென்று கொட்டுவது என்று முடிவு பண்னனிட்ட்ங்கள் !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Maruthankerny said:

ஏதாவது ஒன்றாவது வேலை செய்கிறதா ??

ராக்கெட்...  விடும் போது ,
அண்ணாந்து, வாயை... பிளந்து கொண்டு, பார்க்க வேண்டுமே தவிர,
குறுக்குக் கேள்வி எல்லாம், கேட்கப் படாது. :D:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

   
இந்தியா ஏவியது  நனோ ஷட்டர் லைட், இது 1முதல் 10 கிலோ கிராம் எடை கொண்டது.

இவற்றில் ...

இந்தியாவில் தயாரிக்கப்பட்டது = 3
அமெரிக்கா தயாரிப்பு = 96
மிகுதி = 5 (நெதர்லாந்து, இஸ்ரேல், கசாகிஸ்தான், ஐக்கிய அரபு ராஜ்ஜியம், சுவீஸ்)

ஷட்டர் லைட்டின் அளவில் வந்துள்ள மாற்றங்களே இந்த முயற்சி வெற்றி அடைந்ததற்கான காரணம்.

எனினும் பாராட்டலாம். எங்கள் நாடு அகதிகளை தானே அனுப்பிக்கொண்டு இருக்கிறது..

இதற்கு முன்னர் ரஸ்யாவினால் ஏவப்பட்ட சாட்டர்லைட் 2014 இல் - மொத்தம் 37 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முல்லைத்தீவில் புத்தாண்டை முன்னிட்டு இராணுவத்தின் மாபெரும் விளையாட்டு ! (புதியவன்) இலங்கை இராணுவத்தின் ஏற்பாட்டில் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் மாபெரும் விளையாட்டு விழா முன்னாயத்த கலந்துரையாடல். மலர இருக்கும் 2024 ஆம் ஆண்டு தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட இலங்கை இராணுவத்தின் 59 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் முள்ளியவளை பிரதேசம் மாமூலை டைமன் விளையாட்டுக் கழக மைதானத்தில் (07.04.2024) அன்று மாபெரும் விளையாட்டு நிகழ்வு நடைபெறவுள்ளது. அத்தோடு அன்றைய தினம் காலையில் மரதன் ஓட்டம், துவிச்சக்கரவண்டி ஓட்டம், ஏனைய மைதான விளையாட்டுக்கள், இரவு மாபெரும் இன்னிசை நிகழ்வும் இடம்பெறவுள்ளது. இதன் முன்னாயத்த கலந்துரையாடல் இன்றைய தினம் (28) மு.ப 10.00 மணியளவில் மாவட்ட செயலக பண்டாரவன்னியன் மாநாட்டு மண்டபத்தில் முல்லைத்தீவு மாவட்ட 59 வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி மேஜர்ஜென்ரல் பிரசன்ன விஜயசூரிய தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் பிரதம அதிதியாக மேலதிக மாவட்ட செயலாளர் திரு.எஸ்.குணபாலன் கலந்து சிறப்பித்தார். இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ம.உமாமகள், முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி , வலயக்கல்வி பணிமனையின் அதிகாரிகள், கலாசார உத்தியோகத்தர், மாவட்ட மருத்துவர்கள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.   https://newuthayan.com/article/புத்தாண்டை_முன்னிட்டு_இராணுவத்தின்_மாபெரும்_விளையாட்டு_கலந்துரையாடல்!  
    • மக்கள் தொகை முதன்முறையாக வீழ்ச்சி!   புதியவன் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் சனத்தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று இலங்கை பதிவாளர் பணியக புள்ளி விவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2023 ஜூன் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஓராண்டு காலப்பகுதியில் மக்கள் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இந்த மக்கள் தொகை ஒரு இலட்சத்து 44 ஆயிரத்து 395 ஆல் குறைவடைந்துள்ளது. கடும் பொருளாதார நெருக்கடி நிலைமைகளால் நாட்டை விட்டு வெளியேறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.  அத்துடன், பிறப்பு வீதமும் குறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்தக் காரணிகளால் நாட்டின் மொத்த சனத்தொகை எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.(க) https://newuthayan.com/article/மக்கள்_தொகை_முதன்முறையாக_வீழ்ச்சி!
    • முதலிலேயே சொல்லிவிட்டார்தானே
    • நெடுக்காலபோவான், இவை நீங்களே எடுத்த படங்கள் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள்.  கேடுகெட்ட சொறிலங்காவுக்குள் உங்களைப் போன்ற மானமுள்ள வீரப் புலம்பெயர்ந்த தமிழர் யாராவது கால் வைப்பார்களா ? நினைக்கவே கால் கூசுகிறது. 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.