Jump to content

அரசியல் வாழ்வில் மாபெரும் சரிவை சந்திக்கும் சசிகலா


Recommended Posts

அரசியல் வாழ்வில் மாபெரும் சரிவை சந்திக்கும் சசிகலா

 

 
சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ
சசிகலா | கோப்புப் படம்: பிடிஐ
 
 

கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெயலலிதாவின் நிழலாக தொடர்ந்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா, அரசியல் வாழ்வில் தற்போது மாபெரும் சரிவை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

1956 ஜனவரி 29-ம் தேதி திருத்துறைப்பூண்டியில் விவே கானந்தன் - கிருஷ்ணவேணி தம்பதியரின் 6 குழந்தைகளில் 5-வதாக பிறந்தவர் சசிகலா. எல்லா பெண்களைப் போலவே வளர்ந்த சசிகலாவின் வாழ்வில் திருமணம் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. திமுகவில் தீவிர ஈடுபாடு கொண்டவரும், மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரியுமான மன்னார்குடியைச் சேர்ந்த ம.நடராஜனை சசிகலா திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி நடத்தி வைத்தார்.

ஜெயலலிதாவுடன் அறிமுகம்

தீவிர அரசியலில் இறங்கிய ஜெயலலிதா 1983-ல் அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அப்போது கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த சந்திரலேகாவை ஜெயலலிதாவுக்கு ஆலோசனை வழங்கவும், வழிகாட்டவும் எம்ஜிஆர் கேட்டுக் கொண்டார். இதனால் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானார் சந்திரலேகா.

அந்த நேரத்தில் கடலூர் மாவட்ட பி.ஆர்.ஓ.வாக இருந்த நடராஜன் தனது மனைவி சசிகலாவை சந்திரலேகாவிடம் அறிமுகப்படுத்தினார். அப்போது சசிகலா தம்பி திவாகரனுடன் இணைந்து ஆழ்வார்பேட்டையில் வீடியோ கடை நடத்தி வந்தார். அந்த வீடியோ கடையிலிருந்து ஜெயலலிதா தனக்குப் பிடித்த படங்களின் வீடியோக்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது போயஸ் கார்டனுக்கு அடிக்கடி சென்று வந்த சசிகலா ஜெயலலிதாவின் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தார்.

முதல் அரசியல் பணி

அந்த காலகட்டத்தில் எஸ்.டி.சோமசுந்தரம், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் ஜெயலலிதாவை அழைத்து மன்னார்குடியில் பொதுக் கூட்டம் நடத்தினர். இதற்கு சசிகலாவும், திவாகரனும் ஏற்பாடு செய்தனர். இந்த பொதுக் கூட்டம் வெற்றிகரமாக அமைந்ததால் ஜெயலலிதாவும் - சசிகலாவும் நெருங்கிய தோழிகளாக மாறினர். இதுதான் சசிகலாவின் முதல் அரசியல் பணி.

அதன்பிறகு போயஸ் தோட்ட இல்லத்திலேயே சசிகலா தங்கத் தொடங்கினார். ஜெயலலிதா எங்குச் சென்றாலும் அங்கு சசிகலாவும் இருப்பார். அந்த அளவுக்கு இருவரது நட்பும் வளர்ந்தது.

எம்ஜிஆர் மறைவு தந்த வாய்ப்பு

1987-ல் முதல்வராக இருந்த எம்ஜிஆர் மறைந்ததும் அரசியலில் இருந்து ஜெயலலிதாவை ஓரங்கட்ட அதிமுக மூத்த தலைவர்கள் முயன்றனர். எம்ஜிஆரின் உடல் அருகில் கூட ஜெயலலிதாவை நிற்க அனுமதிக்காமல் அவமானப்படுத்தினர்.

அந்த நேரத்தில் ஜெயலலிதாவுக்கு ஆறுதல் தெரிவித்த சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் அவரின் அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தனர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக உடைந்தது. 1989 தேர்தலில் அதிமுக ஜெ. அணி பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார். ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றியால் அவரது தலைமையில் அதிமுக ஒன்றிணைந்தது. இரட்டை இலை சின்னம் மீண்டும் கிடைத்தது. இதுபோன்ற சோதனையான காலகட்டங்களில் ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்தவர் சசிகலா.

வளர்ப்பு மகன் திருமணம்

1991-ல் ஜெயலலிதா முதல்வரானார். சசிகலாவின் அக்கா மகன் சுதாகரனை தனது வளர்ப்பு மகனாக அறிவித்த ஜெயலலிதா, அவருக்கு ஆடம்பரமாக திருமணம் நடத்தினார். இது அவரது அரசியல் வாழ்வில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த காலகட்டத்தில்தான் சசிகலாவுக்கு அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. இந்த 5 ஆண்டுகளில் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் 1996 தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. ஜெயலலிதாவால் கூட எம்எல்ஏ ஆக முடியவில்லை.

சசிகலா வெளியேற்றம்

அதனைத் தொடர்ந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார். சுதாகரனைத் தனது வளர்ப்பு மகன் இல்லை என்றும் அறிவித்தார். கட்சிப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். ஆனால், சில மாதங்களிலேயே போயஸ் தோட்ட இல்லத்துக்கு சசிகலா திரும்பினார்.

அதன்பிறகு சசிகலாவின் அக்கா மகன் டிடிவி தினகரனை ஜெயலலிதா எம்பியாக்கினார். சசிகலாவின் அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேசன் சில ஆண்டுகள் கட்சிப் பொறுப்பில் இருந்தார். இவர்களைத் தவிர சசிகலா குடும்பத்தில் யாருக்கும் ஜெயலலிதா பதவி அளிக்கவில்லை.

2-வது முறையாக வெளியேற்றம்

2011-ல் ஜெயலலிதா முதல்வ ரானதும் சில மாதங்களிலேயே சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரையும் கட்சியை விட்டு நீக்கியதுடன் போயஸ் கார்டனில் இருந்தும் வெளியேற்றினார். ஆனால், சசிகலா மன்னிப்பு கடிதம் கொடுக்க 10 மாதங்களில் அவரை மட்டும் போயஸ் கார்டன் வீட்டில் ஜெயலலிதா அனுமதித்தார். மற்றவர்கள் யாரையும் ஜெயலலிதா கட்சியிலும், வீட்டிலும் அனுமதிக்கவில்லை.

தலைமை செயற்குழு உறுப்பினர் தவிர வேறு எந்த பொறுப்பும் சசிகலாவுக்கு வழங்கப்படவில்லை. ஆனால், அதிமுகவில் ஜெயலலிதாவுக்கு அடுத்த அதிகார மையமாக அவரே இருந்தார். அதுவும் கடந்த 5 ஆண்டுகளில் கூட்டணி பேச்சு, அதிமுக நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர் தேர்வு, அமைச்சர்கள் நியமனம், நீக்கம் என அனைத்தையும் சசிகலாவே மேற்கொண்டார் என பேசப்பட்டது. அந்த அளவுக்கு அதிகாரம் மிக்கவராக சசிகலா இருந்தார்.

ஜெ. மறைவுக்குப் பிறகு..

கடந்த செப்டம்பர் 22-ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதனைத் தொடர்ந்து கடந்த டிசம்பர் 29-ம் தேதி சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். அதிகாரப்பூர்வமாக அதிமுக சசிகலாவின் கட்டுக்குள் வந்தது. சசிகலாவின் அரசியல் வாழ்வில் பெற்ற மிகப்பெரிய ஏற்றம் இது.

கட்சியை கட்டுக்குள் கொண்டு வந்த அவர் முதல்வர் பதவியை நோக்கி காய்களை நகர்த்தினார். கடந்த 5-ம் தேதி அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். 7 அல்லது 9 ஆகிய தேதிகளில் அவர் முதல்வராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். இதனால் அவரது அரசியல் வாழ்வில் சறுக்கல் தொடங்கியது. முதல்வர் பதவியேற்பு தள்ளிப்போனது.

தற்போது சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் 4 ஆண்டுகள் சிறையில் இருக்க வேண்டியிருக்கும். 10 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் சசி கலாவின் முதல்வர் கனவு தகர்ந்துள்ளது. அரசியல் ஏற்ற இறக்கங்களை சந்தித்த சசிகலா, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு கட்சியை கைப்பற்றி உச்சத்துக்குச் சென்றார். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் மிகப்பெரிய சரிவைச் சந்தித்துள்ளார்.

http://tamil.thehindu.com/tamilnadu/அரசியல்-வாழ்வில்-மாபெரும்-சரிவை-சந்திக்கும்-சசிகலா/article9543529.ece?homepage=true

Link to comment
Share on other sites

ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்.. மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்!

 

 
sasi_jaya_3133215f.jpg
 
 
 

சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது; மரணம் அவரை விடுவித்துவிட்டாலும், அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள் சுதாகரன், இளவரசி ஆகியோர் நான்காண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று பலரும் கூறுகிறார்கள். இருக்கலாம். கூடவே இந்திய நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களையும் இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது.

இருண்ட காலம் 1991-96

ரூ.1 லட்சம் கோடி ஊழல், ரூ.4 லட்சம் கோடி ஊழல் என்றெல்லாம் செய்திகள் அடிபடும் இக்காலகட்டத்தில், வெறும் ரூ.66.6 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு தண்டனை இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியமாகவும், சிலருக்கு அதீதமாகவும்கூடத் தோன்றலாம். 1991-96 காலகட்டத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு இந்த வழக்கின் முக்கியத்துவம் புரியும்.

தமிழகத்தின் இருண்ட காலகட்டங்களில் ஒன்று அது. வீதிக்கு வீதி சுவர்களில் ‘அன்னையே’, ‘மேரி மாதாவே’, ‘துர்க்கையே’ என்ற பட்டங்களோடும் அந்தந்தக் கடவுளர் தோற்றங்களோடும் ஜெயலலிதா சிரித்த காலகட்டம். ஊர்கள்தோறும் ஐம்பதடி, நூறடி கட் அவுட்களில் ஜெயலலிதா நின்ற காலகட்டம். துறைகள்தோறும் ஜெயலலிதாவின் பெயரால் லஞ்சமும் ஊழலும் மலிந்திருந்த காலகட்டம். கொஞ்சம் பெரிதாக வீடு கட்டுபவர்கள் “ஜெயலலிதா சசிகலா கும்பல் கண்ணுல இது பட்டுடாம இருக்கணும்” என்று கிண்டலாகக் கூறிக்கொண்ட அளவுக்கு தோழியர் பெயரால் சொத்துக்குவிப்புகள் நடந்த காலகட்டம். எதிர்த்த அரசியல் செயல்பாட்டாளர்கள், விமர்சித்த பத்திரிகையாளர்கள், அடக்குமுறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த வழக்குரைஞர்கள் கொடூரத் தாக்குதலுக்குள்ளான காலகட்டம். அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் தோற்கும் அளவுக்கு மக்களிடத்தில் அதிருப்தியும் கோபமும் கொந்தளித்திருந்த காலகட்டம். சசிகலா குடும்பத்தின் மீதான தமிழக மக்களின் வெறுப்பு அந்தக் காலகட்டத்தில் வேரூன்றிய விருட்சம்.

சுமார் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் அப்போது ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்டன. பல வழக்குகளில் சசிகலாவும் கூட்டாளி. ஊழல் குற்றச்சாட்டுகள் பலவும் ஏதோ ஒரு புதிய திட்டத்தின்போது தரகுத் தொகையாக ஒரு தொகையை ஆட்சியாளர் வாங்கிக்கொள்வது போன்ற வழமையான குற்றச்சாட்டின் நீட்சி அல்ல; மாறாக, ஊழலின் நிமித்தம் அத்துமீறலில் ஈடுபடும் இயல்பைக் கொண்டவை. ஒரு உதாரணம், கொடைக்கானல் ‘பிளஸன்ட் ஸ்டே விடுதி’ வழக்கு. “இந்த விடுதிக்கு அனுமதி கொடுப்பதற்காக, விதியையே சட்டப்பேரவையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்து மாற்றினார்” என்பது ஜெயலலிதா மீதான குற்றச்சாட்டாக இருந்தது. வழக்கு விசாரணை, தீர்ப்புகளுக்கான அதிமுகவினரின் எதிர்வினையும் மோசமானது. இந்த வழக்கில் கீழ் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ஜெயலலிதா தண்டனைக்குள்ளானபோது, அதைக் கண்டித்து தமிழகம் எங்கும் கலவரத்தில் இறங்கினார்கள் அதிமுகவினர். தருமபுரியில் கல்லூரி மாணவிகள் வந்த ஒரு பஸ்ஸுக்கு தீ வைக்கப்பட்டது. உயிரோடு மூன்று மாணவிகள் எரிக்கப்பட்டார்கள். பிற்காலத்தில் இந்த வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுபட்டார். இப்படி தன் மீதான ஒவ்வொரு வழக்கையும் தவிடுபொடியாக்கினார்.

ஒரு வழக்கு, ஒரு வரலாறு!

ஜெயலலிதா மீதான வழக்குகளில் சொத்துக்குவிப்பு வழக்கு மட்டும் அவர் காலைச் சுற்றிய பாம்பாக நீடித்தது. நீதிபதிகளே வெளிப்படையாக நொந்து கொள்ளும் அளவுக்குக் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இந்த வழக்கை அவர் இழுத்தடித்தார். வழக்கை விரைந்து முடிக்க விரைவு நீதிமன்றம் கூடாது என்று வாதிட்டவர் அவர். 2014 செப்டம்பர் 27 அன்று பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி' குன்ஹா இந்த வழக்கில் தீர்ப்பளித்தார். ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவித்ததோடு, நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் விதித்து அவர் தீர்ப்பளித்தபோது, ஜெயலலிதா நான்காவது முறையாக தமிழக முதல்வர் ஆகியிருந்தார். ‘நாட்டிலேயே பதவியிலிருக்கும்போது ஊழல் வழக்கில் தண்டனைக்குள்ளாகி சிறை செல்லும் முதல் முதல்வர்’ என்ற பெயர் ஏற்கெனவே அவருக்கு இருந்தது.

மேல்முறையீட்டிற்கு அவர் சென்றார். வெறும் 21 நாட்களில் அவருக்கு ஜாமீன் அளித்தது உச்ச நீதிமன்றம். கூடவே, 18 ஆண்டுகள் நீதித் துறையை இழுத்தடித்தவரின் மேல்முறையீட்டை அடுத்த மூன்று மாதங்களுக்குள் விரைந்து முடிக்குமாறும் உத்தரவிட்டது. அடுத்த சில மாதங்களில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி நால்வரையும் நிராபராதி என்று சொல்லி விடுவித்தார். அவருடைய தீர்ப்பின் வாதங்கள் ஒவ்வொன்றும் குன்ஹாவின் வாதங் களுடன் ஒப்பிடுகையில் அதிர்ச்சியளிக்கக் கூடிய வகையில் இருப்பதாக சட்டத் துறை வல்லுநர்கள், முன்னாள் நீதிபதிகள் பலரும் அப்போதே சொன்னார்கள். எல்லாவற்றையும் தாண்டி, குமாரசாமியின் தீர்ப்பின் அஸ்திவாரமாக எது அமைந்திருந்ததோ, அந்த நியாயத்துக்கான கூட்டுத்தொகைக் கணக்கில் அவர் தவறிழைத்திருந்தார். தீர்ப்பு வந்த மறுநாளே அவர் செய்த தவறு அம்பலத்திற்கு வந்தது. ஆக, தீர்ப்பின் மையம் எதுவோ, அதுவே கேள்விக்குள்ளாகிவிட்ட நிலையில், ஜெயலலிதா விடுவிக்கப்பட்டதற்கு எதிராக கர்நாடக அரசுத் தரப்பு மேல்முறையீட்டுக்குச் சென்றபோது, அதை அவசர வழக்காகக் கருதி உச்ச நீதிமன்றம் செயல்பட்டிருக்க வேண்டும். ஏனென்றால், இது ஒரு தனிப்பட்ட நபர் சார்ந்த வழக்கல்ல. மாறாக ஒரு மாநிலத்தின் ஏழரைக் கோடி மக்களின் நிகழ்காலம், எதிர்காலம் தொடர்பிலானது.

இந்திய நீதித் துறையின் சாபக்கேடான தாமதம் இந்த வழக்கிலும் தொடர்ந்தது. இடையிலேயே மீண்டும் தேர்தல் வந்தது. ஜெயலலிதா மீண்டும் வென்றார். ஆறாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். வெகு விரைவிலேயே உடல்நலம் குன்றி இறந்தும்போனார். இதையடுத்து, அடுத்த முதல்வர் ஆவதற்கான எல்லாக் காய்களையும் நகர்த்தி ஆட்சி அமைக்கக் கோரும் கடிதத்தையும் ஆளுநருக்குக் கொடுத்துவிட்டார் இந்த வழக்கின் அடுத்த குற்றவாளியான சசிகலா. இந்தத் தீர்ப்பு இன்னும் சில ஆண்டுகள் கழித்து வந்திருந்தால், யார் அதைக் கேள்வி கேட்க முடியும்? இன்னும் என்னென்னவெல்லாம் நடந்திருக்கக் கூடும்?

தாமத நீதி எனும் அநீதி

உலகிலேயே அதிகமான எண்ணிக்கையில், மூன்று கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக்கிடக்கின்றன. இவற்றில் உச்ச, உயர் நீதிமன்றங்களில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் தேங்கியிருக்கின்றன. இந்திய நீதித் துறையின் தாமதம் தொடர்பில் பேசும்போதெல்லாம் நீதித் துறைக்கான ஆட்கள் பற்றாக்குறை தொடர்பில் பேசுவது இயல்பானது. இந்தியாவில் 10 லட்சம் பேருக்கு, 17 பேர் எனும் விகிதத்திலேயே நீதிபதிகள் இருக்கின்றனர். நீதிபதிகளின் இந்த எண்ணிக்கை அமெரிக்காவில் 151, சீனாவில் 170 என்ற சூழலோடு ஒப்பிடும்போது நம்முடைய உள்கட்டமைப்பின் போதாமை புரியும் என்று கூறப்படுவதுண்டு. பிரச்சினைக்கான அடிப்படை இந்த எண்ணிக்கையில் அல்ல; மாறாக நோயின் வெளி அறிகுறிகளில் ஒன்று அது என்று நான் கருதுகிறேன்.

அரசியலமைப்புச் சட்டப்படி, ஒவ்வொரு குடிமகனுக்கும் நீதி உறுதிசெய்யப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் சரியான நேரத்தில் அளிக்கப்படாத நீதியானது அநீதி எனும் அறவுணர்வு நம்முடைய ஆட்சியாளர்களின் பிரக்ஞையிலேயே இல்லை. இந்நாட்டு மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்து, நீதிப் பரிபாலனம் நடத்திய ஆங்கிலேயே அரசின் காலனியாதிக்க மனோபாவத்திலிருந்து விடுபடாத மனோநிலையின் தொடர்ச்சி இது. சாமானிய மனிதனை நீதிக்காக அலைக்கழிக்கும் தாமதம்தான் மறைமுகமாக ஆட்சியாளர்களை அவர்களுடைய தவறுகளிலிருந்தும் பாதுகாக்கும் கவசமாகவும் இருக்கிறது.

ஆட்சியாளர் தனி மனிதரா?

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு இங்கு ஒரு குறியீடு. லாலு பிரசாத் யாதவ் வழக்கில் என்ன நடந்தது? 1996-ல் பீகார் முதல்வராக அவர் இருந்தபோது, ரூ. 37.7 கோடி முறைகேடு நடந்ததாக வழக்குத் தொடர்ந்தார்கள். 2014-ல் இந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, ஐந்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டபோது, 75 நாள் சிறைவாசத்திற்குப் பின், ஜாமீன் வாங்கிக்கொண்டு வெளியே வந்துவிட்டார் லாலு. வழக்கு இப்போது மேல்முறையீட்டில் இருக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பிந்தைய இடைப்பட்ட காலகட்டத்தில், இரண்டு பிரதமர்களைத் தேர்ந்தெடுக்கும் இடத்தில் அவர் இருந்தார். ஒரு முறை அவரே பிரதமராக முற்பட்டார். பிறகு, ஐந்தாண்டுகள் ரயில்வே துறை அமைச்சராக இருந்தார். இப்போதும் பிகாரில் நிதிஷ்குமாரின் ஆட்சி லாலுவின் தயவில்தான் நடக்கிறது.

ப.சிதம்பரம் 2009 மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு வென்றார். “இந்த வெற்றி செல்லாது” என்று அறிவிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்தார் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர். என்னவானது வழக்கு? இடைப்பட்ட காலகட்டத்தில், மத்திய நிதியமைச்சர், உள்துறை அமைச்சர் பொறுப்புகளில் மிக முக்கியமான முடிவுகளை எடுப்பவராகச் செயல்பட்டு, ஒருகட்டத்தில் நாட்டின் தலையெழுத்தையே தீர்மானிக்கும் பிரதமர் பதவிக்கான பரிசீலனையிலும் சிதம்பரத்தின் பெயர் அடிபட்டது. அவரது வெற்றி நியாயமானதாகவே இருக்கலாம். அதை உறுதிப்படுத்துவதும், நிராகரிப்பதும் உடனடியாக நடந்திருக்க வேண்டியது இல்லையா?

கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் மக்கள் பிரதிநிதிகள். ஆட்சியோடு தொடர்புடைய அவர்கள் சார்ந்த வழக்குகள் இழுத்தடிக்கப்பட நீதிமன்றங்கள் அனுமதிக்கக் கூடாது. ஒரு குற்றவாளியிடம் மக்கள் ஆட்சிப் பரிபாலனம் பெறுவதைக் காட்டிலும் கொடுமை இல்லை. “ஜெயலலிதாவும் சசிகலாவும் முறைகேடாக சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்து சேர்த்த சொத்துகளைப் போலக் காட்டுவதற்கு போயஸ் தோட்ட இல்லத்தில் சதி செய்து செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தம் தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கின்றனர். அந்தச் சதியின் நீட்சிதான் நிழல் அதிகார மையமே நிஜ அதிகார மையமாக உருவெடுக்கும் கனவிலும் ஒளிந்திருக்கிறது. எது ஒரு குற்றவாளிக்கு இந்த அசாத்திய துணிச்சலைத் தந்தது? நீதியின் மீதான பயமின்மைக்கு அதில் முக்கியமான பங்கு உண்டு. தாமத நீதிப் பரிபாலனத்துக்கு அதில் முக்கியமான பங்கு உண்டு. தாமதமான இந்தத் தீர்ப்பு ஒருவகையில் ஜெயலலிதாவுக்கு விடுதலையைத் தந்துவிட்டது; ஆனால், தண்டனையை ஏழரைக் கோடி மக்கள் இன்று சுமக்கிறார்கள். இந்திய நீதித் துறை தன்னை ஆழமான சுயபரிசீலனைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டும்!

http://tamil.thehindu.com/opinion/columns/ஜெயலலிதா-விடுதலையாகிவிட்டார்-மக்கள்-தண்டனையைச்-சுமக்கிறார்கள்/article9543638.ece?ref=popNews

Link to comment
Share on other sites

நல்ல எச்சரிக்கையாக அமையட்டும்!

 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரைச் சார்ந்தவர்கள் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க தீர்ப்பை அளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா, சசிகலாவின் அண்ணி இளவரசி, சசிகலாவின் அக்காள் மகன் சுதாகரன் மீது தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கில், முன்னதாகக் கர்நாடக விசாரணை நீதிமன்றம் 2014 செப்டம்பரில் அளித்த தீர்ப்பு செல்லத்தக்கது என்று தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால் இந்தத் தீர்ப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்; மற்ற மூவரும் விசாரணை நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டுகள் சிறைவாசத்தில் எஞ்சிய காலத்தைச் சிறையில் கழிக்க வேண்டும், ஒவ்வொருவரும் ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டும். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவின் பொதுச்செயலாளராக அவருடைய இடத்துக்கு வந்ததுடன் புதிய முதல்வராகவும் தன்னை முன்னிறுத்திக்கொண்டு ஆட்சி அதிகாரத்தை நோக்கி சசிகலா சென்ற நிலையில் இத்தீர்ப்பை அளித்திருக்கிறது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.சி.கோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு. ஊழல் அரசியல்வாதிகளுக்கும் ஆட்சியாளர்களைப் புற்றீசல்போலச் சூழ்ந்து அவர்களைச் சீரழிக்கும் நிழல் அதிகார மையங்களுக்கும் விடுக்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை என்றே இந்தத் தீர்ப்பைக் கருத வேண்டும்!

1991-1996 காலகட்டத்தில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா தனது வருவாய்க்குப் பொருந்தாத வகையில் ரூ.66.65 கோடி மதிப்புக்குச் சொத்து குவித்ததாகத் தொடரப்பட்ட வழக்கு இது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் 2014-ல் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பளித்தார். ஜெயலலிதாவும் ஏனைய மூவரும் குற்றவாளிகள் என்று அவர் தீர்ப்பளித்தார். நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் அவர் அளித்தார். தமிழக அரசியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்திய தீர்ப்பு அது. மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறைத் தண்டனை பெறுபவர், அரசுப் பதவியில் நீடிக்க முடியாது என்பதால் ஜெயலலிதா முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. குன்ஹாவின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, குன்ஹாவின் முந்தைய தீர்ப்பை ரத்துசெய்தும், நால்வரையும் விடுவித்தும் தீர்ப்பளித்தார். அதை எதிர்த்து அரசுத் தரப்பு செய்த மேல் முறையீட்டில்தான் இப்போது தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். இந்த வழக்கில் எதிரிகளுக்கு எதிராக வாதாடிய மூத்த வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா பாராட்டப்பட வேண்டியவர். தனிப்பட்ட முறையில் எத்தனையோ அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்ட போதும் தனது நிலையிலிருந்து பின் வாங்காமல் நீதிக்காகப் போராடியவர் அவர். நாட்டையே அதிரவைக்கும் ஒரு தீர்ப்பை முன்னதாக கீழமை நீதிமன்றத்தில் வழங்கிய நீதிபதி குன்ஹா இந்நேரத்தில் நினைவுகூரப்பட வேண்டியவராகிறார்.

ஆளும் அதிமுகவினர் இந்தத் தீர்ப்புக்கு முகம் கொடுக்க வேண்டும். “ஜெயலலிதாவும் சசிகலாவும் முறைகேடாகச் சேர்த்த சொத்துகளை, முறையாகச் சம்பாதித்து சேர்த்த சொத்துகளைப் போலக் காட்டுவதற்கு போயஸ் தோட்ட இல்லத்தில் சதி செய்து செயல்படுத்தியுள்ளனர். இது ஆழ்ந்த சதியின் விளைவு. வருவாய்க்குப் பொருந்தாமல் ஈட்டும் முறைகேடான பணத்தைச் செலுத்துவதற்காகவே முகமூடி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர்” என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குறிப்பிட்டிருப்பதை அதிமுகவினர் ஊன்றிப் படிக்க வேண்டும். இதுநாள் வரை “இது எதிர்க்கட்சிகளின் சதி” என்று சொல்லிக் கடந்ததைப் போல இனியும் இந்த வழக்கையும் தீர்ப்பையும் அவர்கள் கடக்க முடியாது. இது சசிகலா தலைமையில் இருப்பவர்களுக்கும் சரி; பன்னீர்செல்வம் தலைமையில் இருப்பவர்களுக்கும் சரி; இரண்டு தரப்பினருக்குமே பொருந்தும். அதிகாரப் போட்டியின் விளைவாக அதிமுகவுக்குள் ஏற்பட்டிருக்கும் உட்கட்சி சண்டைகள் தமிழக மக்களைக் கொதிநிலைக்குக் கொண்டுபோயிருக்கின்றன. கட்சிக்குள் நடந்துவரும் அதிகாரச் சண்டைகள் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பெரும் தலைவலியை உருவாக்கியிருக்கின்றன. ஆனால், தீர்ப்பைப் போகிறபோக்கில் கடந்தபடி, அடுத்தடுத்து அதிகாரப் போட்டிக்கான நகர்வுகளிலேயே அவர்கள் மும்முரமாகச் செயல்படுவது மிக ஆபத்தான போக்கு. மக்களிடத்திலிருந்து அவர்களை வெகுவாக அந்நியப்படுத்திவிடக் கூடிய போக்கு இது. அதிமுக ஊழலுக்கு எதிரான நீதிமன்றத்தின் பிரகடனத்துக்கு ஆக்கபூர்வமான ஒரு எதிர்வினையை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். இந்தத் தீர்ப்பிலிருந்து பாடம் கற்கவும் புதியதொரு சூழலுக்கு உருமாறவும் வேண்டும். ஏழரைக் கோடி மக்களின் பிரதிநிதியாக, ஒரு ஆளும்கட்சியாக இருக்கும் அதிமுக தார்மிகரீதியில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படைக் கடமை இது.

இந்த வழக்கில் ஏற்பட்ட தாமதம் மக்களுக்குக் கசப்பைத் தருவது, அது இந்திய நீதித் துறையின் பெரிய பலவீனம் என்றாலும், ஊழல் செய்யும் அரசியல் தலைவர்களும் அவர்கள் உடனிருக்கும் நிழல் அதிகார மையங்களும் என்றாவது ஒருநாள் நிச்சயம் நீதியின் முன்னர் தண்டனையை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் எனும் நம்பிக்கையை மக்கள் மனதில் இத்தீர்ப்பு விதைத்திருக்கிறது. அரசியல் தூய்மை எனும் பதம் வெறுமனே வாய் வார்த்தையாக இல்லாமல் இனியேனும் நனவாகும் என்ற நம்பிக்கையும் மக்கள் மனதில் எழுவதற்கு இந்தத் தீர்ப்பு ஒரு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது. இந்திய அரசியல்வாதிகள் இத்தீர்ப்புக்கு முகங்கொடுக்க வேண்டும். அவர்களுடைய மாற்றம் அதிமுகவிடமிருந்து தொடங்க வேண்டும்!

http://tamil.thehindu.com/opinion/editorial/நல்ல-எச்சரிக்கையாக-அமையட்டும்/article9543634.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

இணையகளம்: தமிழகம் என்ன நினைக்கிறது?

 

 
அப்பவே புரிஞ்சிருக்க வேண்டாமா?
அப்பவே புரிஞ்சிருக்க வேண்டாமா?
 
 

கருப்பு கருணா

ஓரளவுக்குத்தான் பொறுத்துக்க முடியும்ன்னு அந்த நீதிபதிகளுக்கே தெரிஞ்சிப்போச்சிப்பா!

 

கருந்தேள் ராஜேஷ்

kunha_3133247a.jpg - குன்ஹா

தினம் தினம் ஆயிரத்தெட்டுப் பிரச்னைகளைச் சந்திச்சிட்டு இருக்கோம். நம்மைச் சுத்தியே லஞ்சம், ஊழல்லாம் கொடிகட்டிப் பறந்துட்டு இருக்கு. இப்போதைய இந்தியாவில் எப்படியெல்லாம் பதவிகள் துஷ்பிரயோகம் செய்யப்படுதுன்னு பார்த்துட்டுதான் இருக்கோம். நீதி, நியாயம்லாம் அரசியல்வாதிகளுக்கு ஒரு மேட்டரே இல்லைன்னுதான் எத்தனையோ சம்பவங்கள் நம்மை நினைக்கவெச்சி, சோர்வைக் கொடுத்துட்டே இருக்கு. இந்த நிலையில்தான், சொத்துக்குவிப்பு வழக்கோட தீர்ப்பு, ஓரளவாவது மனசை நிம்மதி அடையவைக்குது. எப்போதோ பிறக்கக்கூடிய அரிய மனிதர்கள்ல ஜான் மைக்கேல் டி குன்ஹா ஒருத்தர் என்பதில் சந்தேகமே இல்லை.

செய்யும் வேலைக்கு நியாயமா இருப்பது என்பதற்கு இனி குன்ஹா பேரைச் சொன்னாலே போதும். பலருக்கும் ஒரு ரோல்மாடல் வேணும்னா குன்ஹாவை தாராளமா ஃபாலோ செய்யலாம். ஒரு மிகப்பெரிய கும்பலுக்கு எதிரா, என்ன நடந்தாலும் பின்வாங்காமல் செயல்பட்ட மனிதன். சமகால இந்தியாவுல இப்படி ஒரு தீர்ப்பு ஆச்சரியப்படத்தான் வைக்குது. நினைச்சிப் பார்க்கமுடியாத பணம், பதவிகள், வசதிகள் எல்லாம் கிடைக்க வாய்ப்பு இருந்தும், கடமையைக் கச்சிதமா நிறைவேற்றிய மனிதன். விருப்பு வெறுப்பு இல்லாமல், எடுத்துகிட்ட வழக்குக்கு மட்டும் சின்சியரா இருந்து தீர்ப்பைப் பக்காவா வெளியிட்ட நபர். இப்போவரை அந்தத் தீர்ப்பு நங்கூரம் போல நிக்குது.

நம்மளைச் சுத்தி இருக்கும் பல கொடூரங்களை எதிர்க்க இந்தத் தீர்ப்பு ஒரு மெல்லிய நம்பிக்கைக் கீற்று. இப்பவும் கட்டாயம் நல்லது நடக்கும் என்பதற்குக் குன்ஹா போன்றவர்கள் நம்மைபோன்ற சாதாரண ஆட்களுக்குக் கொடுத்திருக்கும் தைரியம் இது.

 

விஜயசங்கர் ராமசந்திரன்

அரசியல்வாதி பேசுவதற்கும், அரசியல்வாதியுடன் இருந்தவர் பேசுவதற்கும் உள்ள வேறுபாட்டைக் கடந்த சில நாட்களில் தெளிவாக உணர முடிந்தது.

 

ஜே. பிஸ்மி கான்

சசிகலா - நான் ஒரு சிங்கம்

நீதிபதி - சரி கூண்டுக்குள்ள போ

# தீர்ப்புடா

 

முத்து ராம்

எதிர்பார்த்த தீர்ப்புதான். - சு.சுவாமி.

நேத்துதான் சசிகலாவ முதல்வராக்கலனா கவர்னர் மேல கேஸ் போடுவேன்னு சொன்னாரு. சார் மாதிரி ஒரு ஜென்டில்மேனை துபாய்ல கூடப் பார்க்க முடியாது.

 

முத்து ராம்

# தனக்கு எதிரான தீர்ப்பை அதிமுகவினரையே பட்டாசு வெடித்துக் கொண்டாட வைக்கும்னு கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் ஜெயலலிதா. காலம் ஒரு சுவாரஸ்மான, ரசனைக்கார வில்லன்!

# அம்மாவின் வழியில் நடந்தால் நேரா ஜெயில்தான் வரும். வேற எதாவது நல்ல வழி இருக்கானு பாருங்க மிஸ்டர் ஓபிஎஸ்.

# ஜென் நிலைக்கு மேல ஒரு நிலை இருக்குன்னா, அது ஜெயா ப்ளஸ் நிலைதான். தெய்வீக லெவல்!

 

புஹாரி ராஜா

எடப்பாடி பழனிச்சாமியை என்னா உறவுமுறை சொல்லிக் கூப்பிடணும் சொல்லுங்கய்யா. பெரியப்பாவா?

 

முகில் சிவா

தப்புத்தப்பா கணக்கு சொன்ன நீதியரசர் குமாரசாமிக்கு தண்டனை எதுவும் கிடையாதா மைலார்ட்?

 

டிமிட்ரி இவ்நோவ்ஸ்கி

முதல்வர் ஓபிஎஸ்சின் 2 மகன்களின் பெயர் ரவீந்திரநாத், பிரதீப் # இனி அடிக்கடி தேவைப்படும்.

 

நாகரீகக் கோமாளி

ஆகவே, எடப்பாடிக்கும் தங்கள் ஆதரவை நல்குமாறு வைகோ அவர்களை அன்போடு கேட்டுக்கொள்கிறோம்!

 

அன்பு ராஜா

குற்றவாளி (ஜெ) படத்தை அரசு அலுவலங்களிலிருந்து அகற்று!! அகற்று!!!

 

தினகரன் ராஜாமணி

அடுத்த பொம்மை தேர்வு # எடப்பாடி பழனிச்சாமி

 

வேல் குமார்

அம்மாவின் ஆன்மா நல்ல தீர்ப்பை வழங்கியிருக்கிறது ஓ.பி.எஸ்.

# ஆமா அவங்க குத்தவாளின்னு அவங்களுக்கே தீர்ப்பு கொடுத்துக்கிட்டாங்க...!

 

மஹாராஜன் கிருஷ்ண பிள்ளை

இந்த மாசம் ஏதாவது கவர்மெண்ட் ஹாலிடே இருக்கான்னு கேக்குறான்.. இந்த மாசம் கவர்மெண்ட்டே ஹாலிடேல தான்டா இருக்கு.. # அடேய்ய்!!!

 

ஜ்யோவ்ராம் சுந்தர்

ஜெயலலிதாதான் முதல் குற்றவாளி - அக்யூஸ்ட் 1. அவர் இறந்ததால் தண்டனையிலிருந்து மட்டுமே விடுவிக்கப்பட்டிருக்கிறார். இதில் தெளிவாய் இருப்போம்.

 

ராஜகோபால் சுப்ரமணியம்

தன் கட்சித்தலைவிக்குத் தீரா களங்கம் விளைவித்த தீர்ப்புக்கு வெடி வெடிச்சு கொண்டாடுற மனசு இருக்கு பாருங்க அதுதான் சார் கடவுள்!

 

சுகுணா திவாகர்

புதைக்கப்பட்டதாலேயே ஒருவர் புனிதராகிவிட மாட்டார் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு. மகிழ்ச்சிகரமான காதலர் தின வாழ்த்துகள்!

 

யாரோ..

ஆளுனர் கூப்டுவார்னு பார்த்தா ஜட்ஜையா கூப்ட்டுட்டாரு.

#நீதி இருக்கு கொமாரு.

 

கிருஷ்ண குமார் அப்பு

நோபல் பரிசு இல்லனாலும் பாரத ரத்னா விருது குடுங்கனாச்சும் கேட்டோமே.. இனிமே விஜய் அவார்ட்சு கூட கேக்க முடியாத மாதிரி தீர்ப்பு குடுத்துட்டிங்களேய்யா!!

 

ச.ந.கண்ணன்

ஜல்லிக்கட்டு, சசிகலா என இரு முக்கியமான விஷயங்களிலும் தமிழக மக்கள் நினைத்ததே நடந்துள்ளது!

 

யாரோ..

singam_3133244a.jpg

நோ கமென்ட்ஸ்..

 

யாரோ..

RESORT_3133245a.jpg

வாடகை வசூலிக்க ரிசார்ட் ஓனர் காத்திருந்தபோது..

http://tamil.thehindu.com/opinion/blogs/இணையகளம்-தமிழகம்-என்ன-நினைக்கிறது/article9544229.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.