Jump to content

மீண்டும் வருகிறது நோக்கியா 3310


Recommended Posts

மீண்டும் வருகிறது நோக்கியா 3310


மீண்டும் வருகிறது நோக்கியா 3310
 

அனைவராலும் அதிகம் விரும்பப்பட்ட செல்பேசியான 3310 இனை மீண்டும் வெளியிட நோக்கியா நிறுவனம் தீர்மானித்துள்ளது.

செல்பேசி வரலாற்றில் நெகிழ்திறன் கொண்ட செல்பேசியாக நோக்கியா 3310 திகழ்கிறது.

2000 ஆம் ஆண்டில் முதன்முதலில் இந்த செல்பேசி மாடல் வெளியானது.

இதன் நீடித்த பேட்டரி பாவனை மற்றும் எளிதில் உடையாத வடிவம் காரணமாக மக்கள் இதனைப் பெரிதும் விரும்பியதுடன், இன்றும் நினைவில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், மீண்டும் வெளியாகவுள்ள இந்த செல்பேசியினை 59 யூரோக்களுக்கு விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வழமைபோல், கடிகாரம், கால்குலேட்டர், ரிமைன்டர் ஆகிய வசதிகளுடன் நான்கு விளையாட்டுக்களும் இந்த செல்பேசியில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

புதியரக ஸ்மார்ட்போன்களை உருவாக்குவதில் தோல்வியைத் தழுவிய நோக்கியா நிறுவனம், தமது பழைய மாடல்களை மீண்டும் களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

http://newsfirst.lk/tamil/2017/02/மீண்டும்-வருகிறது-நோக்கி/

 

 

 

ரீ-என்ட்ரி ஆகிறது நோக்கியா 3310!

நோக்கியாவின் க்ளாசிக் மாடலான 3310 ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளது. மெகா பேட்டரி லைஃப், ஸ்நேக் கேம் என சக்கை போடு போட்ட நோக்கியா 3310 மாடலை யாரும் மறந்திருக்க மாட்டார்கள். வருகின்ற 26-ம் தேதி, ஸ்பெயினில் நடைபெறும் நோக்கியாவின் சர்வதேச மொபைல் மாநாட்டில் இந்த போனின் மாடர்ன் வெர்ஷன் அறிமுகமாகிறது. 

Nokia 3310 

இந்திய மதிப்பில் சுமார் ரூ.4,200க்கு விற்பனைக்கு வருகிறது. மேலும், அன்றைய தினமே நோக்கியாவின் மூன்று ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களும் உலகுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது. பழைய 3310 போனின் பாசிட்டிவ் அம்சங்கள் புதிய மாடலிலும் இருக்கும் என்கிறார்கள் டெக் நபர்கள். 

http://www.vikatan.com/news/viral-corner/80807-nokias-3310-model-all-set-for-relaunch.html

Link to comment
Share on other sites

 

நோக்கியா 3310-ன் கம்பேக்..! அதன் வசதிகள் நினைவிருக்கிறதா?

12 கோடிக்கும் அதிகமான எண்ணிக்கையில் விற்பனையான நோக்கியா நிறுவனத்தின் மிக வெற்றிகரமான மொபைல்களில் ஒன்றான “நோக்கியா 3310”, இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில், கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளியிடப்படுகிறது.

நோக்கியா 3310

எத்தனை புதிய வசதிகளுடன் கூடிய ஆப்பிளின் ஐபோன்கள், கூகுளின் பிக்ஸல் மொபைல்கள், சாம்சங்னின் காலக்ஸிகள், சோனியின் எக்ஸ்பீரியாக்கள் உள்ளிட்ட பல நிறுவனங்களின் மொபைல்கள் சந்தையில் அறிமுகமானாலும் நோக்கியா மொபைல்களில் கிடைத்த எந்த சூழ்நிலையையும் தாங்கும் வடிவமைப்பும், பல நாட்கள் நீடித்துழைக்கும் பேட்டரியும், அதற்கும் மேலாக அளிக்கும் பணத்திற்கு நிறைவான திருப்தியும், முதன்முதலாக விளையாடிய ‘சினேக்’ கேமையும் எவராலும் மறக்கவியலாது எனலாம்.

பின்லாந்து நாட்டை சேர்ந்த நிறுவனமான நோக்கியா, மொபைல் போன்கள் அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் அதாவது 1987-லேயே தனது முதல் மொபைல் போனை வெளியிட்டு சந்தையில் நுழைந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் புதுப்புது மொபைல்களை வெளியிட்ட நோக்கியா தனது 3310, 1100, 6600, N73 உள்ளிட்ட பல வெற்றிகரமான போன்களை வெளியிட்டது. ஆனால் 2008-ல் வெளியிடப்பட்டு பின்பு மெதுவாக மொபைல் சந்தையை தன்னை நோக்கி இழுக்க ஆரம்பித்த ஆண்ட்ராய்டின் முன்பு நோக்கியாவின் முயற்சிகள் எடுபடாமல் போனது. அப்போது தொடங்கிய நோக்கியாவின் வீழ்ச்சி 2011-ல் மைக்ரோசாப்ட்டுடன் இணைந்து பணியாற்றியபோதும் தொடர்ந்தது.

இந்நிலையில் கடுமையான விற்பனை வீழ்ச்சியின் காரணமாக திணறிய நோக்கியாவை மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2013ல் $7.6 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியது. அதன் பிறகு லுமினா என்ற பெயரில் மைக்ரோசாப்ட் வெளியிட்ட மொபைல்களும் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை எனலாம். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு நோக்கியா நிறுவனம் பின்லாந்தை சேர்ந்த HMD Global என்னும் நிறுவனத்திற்கு தனது பெயரையும், மொபைல் தயாரிப்பு உரிமங்களையும் அடுத்த 10 ஆண்டுகளுக்கு பயன்படுத்த ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு மக்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்டு மொபைல் கடந்த மாதம் சீனாவில் மட்டும் இதுவரை விற்பனைக்கு வந்து மிகுந்த வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்நிலையில், கிட்டத்தட்ட வெளியிடப்பட்டு 16 வருடங்கள் ஆனாலும் மக்களிடையே நீங்கா இடத்தை பிடித்த 3310 மாடல் மொபைலை மீண்டும் இம்மாத இறுதியில் பார்சிலோனாவில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்ட் காங்கிரஸில் வெளியிடவிருப்பதாக HMD Global நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கியா 3310

நோக்கியாவின் வடிவமைப்பாலும், சிறப்பசங்கள் மற்றும் பேட்டரி திறனாலும் கவரப்பட்டவர்கள், நோக்கியா அதன் அதிகாரப்பூர்வ தயாரிப்பை நிறுத்திய சூழலிலும், அதிகாரபூர்வமற்ற நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்யும் 1100, 3310 மொபைல்களை வாங்குவோர் இன்றும் உள்ள நிலையில் HMD Global நிறுவனத்தின் இந்த அறிவிப்பு இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாட்டு மக்களினாலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 

நோக்கியா 1100 மற்றும் ஐபோன் ஒப்பீடு எப்போதும் பிரபலமான ஒன்று. அதேபோல் நோக்கியா 3310-ன் வசதிகள் மற்றும் தற்போதைய ஐபோன் 7 இடையேயான ஒப்பீடு இதோ...       

 
சிறப்பம்சங்கள்     

நோக்கியா 3310   

ஐபோன் 7
எடை   133 கிராம்     138 கிராம் 
தாங்கும் திறன் 10 அடி தூரத்திலிருந்து தூக்கியடித்தாலும் தாங்கும்!

பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்தாலே திரை உடையும் வாய்ப்பு உண்டு.

விலை

 ரூ. 3500 (எதிர்பார்க்கப்படும் விலை)

ரூ. 60000
கேமரா இல்லை.   12MP
சிறந்த கேம்     சினேக்           போக்கிமேன் கோ

http://www.vikatan.com/news/information-technology/81030-nokia-3310-to-be-relaunched-in-upcoming-mobile-world-congress.html

Link to comment
Share on other sites

எல்லோருக்கும் ஐபோனை தவிர மற்றதுகள் தெரிவதில்லை HTC10 நோக்கியவுடன் சண்டைக்கு நிக்குது இதுவரை என் தெரிவு அதுதான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நவீனன் said:
 
சிறப்பம்சங்கள்     

நோக்கியா 3310   

ஐபோன் 7
எடை   133 கிராம்     138 கிராம் 
தாங்கும் திறன் 10 அடி தூரத்திலிருந்து தூக்கியடித்தாலும் தாங்கும்!

பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்தாலே திரை உடையும் வாய்ப்பு உண்டு.

விலை

 ரூ. 3500 (எதிர்பார்க்கப்படும் விலை)

ரூ. 60000
கேமரா இல்லை.   12MP
சிறந்த கேம்     சினேக்           போக்கிமேன் கோ

http://www.vikatan.com/news/information-technology/81030-nokia-3310-to-be-relaunched-in-upcoming-mobile-world-congress.html

இந்தக்காலத்திலை கமரா இல்லாத ரெலிபோனும் ஒரு ரெலிபோனே? :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, குமாரசாமி said:

இந்தக்காலத்திலை கமரா இல்லாத ரெலிபோனும் ஒரு ரெலிபோனே? :cool:

அதானே குழந்தை முதல் குமர் வரைக்கும்  பாட்டி முதல் தாத்தா வரைக்கும்  தடவி திரியுறாங்க கமறா போணை tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, முனிவர் ஜீ said:

அதானே குழந்தை முதல் குமர் வரைக்கும்  பாட்டி முதல் தாத்தா வரைக்கும்  தடவி திரியுறாங்க கமறா போணை tw_blush:

காதுக்கை ரெலிபோனை வைச்சு கதைச்சுக்கொண்டே பக்கத்திலை இருக்குற குமரை படம்புடிச்சு பேஸ்புக்கிலை ஏத்தி அழகு பாக்கிறாங்களப்பா.....tw_astonished:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, குமாரசாமி said:

காதுக்கை ரெலிபோனை வைச்சு கதைச்சுக்கொண்டே பக்கத்திலை இருக்குற குமரை படம்புடிச்சு பேஸ்புக்கிலை ஏத்தி அழகு பாக்கிறாங்களப்பா.....tw_astonished:

நமக்கும் அதுக்கும் ரொம்ப தூரம் அண்ண tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீழ்ச்சியில் இருந்து மீண்டெழுவது நோக்கி.. மைக்குரா சாவ்ட்.. நொக்கியா விடும் கதை போலவே தெரிகிறது. tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • 2 months later...

பழசு, ஆனா புதுசு! மீண்டும் கலக்க வருகிறது நோக்கியா 3310

பல நாள் காத்திருப்புக்குப் பின்னர், நோக்கியாவின் 3310 மாடல் மொபைல் போன்கள் விரைவில் சந்தைகளில் கலக்க வருகிறது.

நோக்கியா

நோக்கியாவின் பழைய 3310 மாடலை மீண்டும் விற்பனைக்குக் கொண்டுவர இருப்பதாக, மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் அறிவித்திருந்தது நோக்கியா. மொபைல் வேர்ல்டு காங்கிரஸில் அறிமுகம்செய்யப்பட்ட மற்ற மொபைல்களைவிடவும் அதிக கவனம் ஈர்த்தது, இந்த மொபைல்தான். ஆனால், எப்போது விற்பனைக்கு வரும் என்ற விவரங்களை நோக்கியா நிறுவனம் அறிவிக்கவில்லை. இந்த நிலையில், நேற்று இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அந்த நிறுவனம், '17 வருட காத்திருப்பு முடிந்துவிட்டது. மொபைல்களை சந்தைக்கு அனுப்பும் பணிகள் துவங்கிவிட்டன' என ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. 

மேலும், இது எப்போது கிடைக்கும் என கமென்ட்டில் கேட்ட ரசிகர்களுக்கு, 'இன்னும் சில மாதங்களில் எங்கள் போன்களை வெளியிடுவோம். மே மற்றும் ஜூன் மாதங்களில் எங்கள் தயாரிப்புகள் வெளியிடப்படும். மேலும் தகவல்களுக்கு, எங்களோடு இணைந்திருங்கள்' எனப் பதில் அளித்துள்ளது நோக்கியா. 

 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
    • வேடிக்கையை விட, இதில் யதார்தத்தை குறும்பாக சொல்வதுதான் தொனிக்கிறது. என்னதான் வெளி உலகில் கணவன் ஆண்டான் மனைவி அடிமை என அன்றைய சமூகம் கட்டமைத்து வைத்திருந்தாலும், நிஜ வாழ்வில், வீட்டுள், இந்த இறுக்கங்கள் இருப்பதில்லை என்ற முரண்நகையை கேலியாக சொல்கிறதென நான் நினைக்கிறேன். டெல்லிக்கு ராஜா, வீட்ல வேலைக்காரன் என்பதை போல. Nobody is perfect; I am nobody. இதை நெப்போலியனின் கூற்று என்பார்கள். இதன் அர்த்தம் I am perfect என்பதாக வரும். இதுவும் வார்த்தை ஜாலம் wordplay யே ஒழிய சிரிப்பு வரும் விசயம் இல்லை. தத்தக்க பித்தக்க நாலு கால், தாவி நடக்க இரெண்டு கால், ஒட்டி முறிந்தால் மூன்று கால், ஊருக்கு போக எட்டுக் கால்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.