Jump to content

போராட்டத்திலீடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகள் யாவும் விடுவிக்கப்படும் : பாதுகாப்பு அமைச்சு


Recommended Posts

போராட்டத்திலீடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகள் யாவும் விடுவிக்கப்படும் : பாதுகாப்பு அமைச்சு

 

 

விமானப்படையினர் கையகப்படுத்தியுள்ள கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகளை விடுவிக்கவேண்டுமெனக்கோரி பிலக்குடியிருப்பு மக்கள்  விமானப்படைத்தளம் முன்பாக கடந்த 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

7777.jpg

இந்த நிலையில் குறித்த போர்டடாக்களத்துக்கு சற்றுமுன்னர் (ஒரு மணியளவில்) வருகைதந்த முல்லை மாவட்ட அரச அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் குணபாலன் ஆகியோர் மக்களிடம் உங்களின் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்படும் என தெரிவித்தனர்.

இதில் மக்களிடம் கருத்து தெரிவித்த  அரச அதிபர்,

சற்றுமுன்னர் எனக்கு மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் அவர்கள் தொலைபேசி அழைப்பைமேற்கொண்டு கேப்பாபுலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் யாவும் விடுவிக்கப்படும் என பாதுகாப்பு செயலருடன் தான் மேற்கொண்ட கலந்துரையாடலின் படி முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இந்த தகவலை போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களிடம் தெரிவிக்குமாறு தெரிவித்தார்.

இதேவேளை போராட்டத்தை கைவிட்டு செல்லுமாறும் கேட்டுக்கொண்டார். 

இந்த நிலையில் அரச அதிபரின் கோரிக்கையை நிராகரித்த மக்கள் எமது காணிகளில் கால்பத்தித்த பின்னர்தான் இந்த போராட்டத்தை கைவிடுவோமென உறுதியாக தெரிவித்தனர்.

http://www.virakesari.lk/article/16622

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

மக்கள் போராட்டம் வென்றது! காணிகளை விடுவிக்க ஜனாதிபதி நடவடிக்கை!

09-e1436888118374-1024x648-300x190.jpgஎமது காணிகளுக்குள், செல்ல அனுமதிக்கப்பட்ட பின்னரே நாங்கள் போராட்டத்தைகைவிடுவோம் என தற்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்கள்முல்லைத்தீவு மாவட்டச் செயலர் ரூபவதி கேதீஸ்வரனிடம் செவ்வாய்க்கிழமை (14)தெரிவித்துள்ளனர்.

கொழும்பில், ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்ற அமைச்சின்அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து நிலங்களை விடுவிக்க துரிதநடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார் எனவும், போராட்டத்தைகைவிடுமாறும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களைச்சந்தித்த மாவட்டச் செயலர் தெரிவித்துள்ளார்.

எனினும், காணிகளுக்குள் எம்மை செல்ல அனுமதித்ததன் பின்னரே நாம் போராட்டத்தைகைவிடுவோம். அதுவரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என அம்மக்கள் மாவட்டச்செயலரிடம் தெரிவித்துள்ளனர்.

இப்பகுதியில் 54 குடும்பங்களுக்குச் சொந்தமான 42 ஏக்கர் காணி வான்படையினரின்முகாமுக்குள் உள்ளடங்கியுள்ளது.

42 ஏக்கர் காணியில் 25 ஏக்கர் காணியைவிடுவிக்க கொழும்பில், ஜனாதிபதி, பாதுகாப்பு பிரிவினர், மீள்குடியேற்றஅமைச்சின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் வான்படையினர்சம்மதித்துள்ளனர்.

எனினும் உறுதிமொழியையடுத்து போராட்டத்தை கைவிட மாட்டோம்எனவும், காணிகளை விடுவித்தால் மாத்திரமே போராட்டத்தை கைவிடுவோம் என மக்கள்தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.newsvanni.com/archives/4961

Link to comment
Share on other sites

கேப்பாபுலவு காணிகளை விடுவிக்க அரசு நடவடிக்கை – முல்லை அரச அதிபர்

குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
rupawathy.jpg
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு – பிலக்குடியிருப்பு மக்கள் தமது காணிகளை விடுவிக்குமாறு கடந்த 14 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபாவதி கேதீஸ்வரன் மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் பகுதிக்கு  சென்றுள்ளார்.

இதன்போது, மக்களின் காணிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தனக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளதாக முல்லை அரச அதிபர் தெரிவித்தார். மீள்குடியேற்ற  அமைச்சர் இவ் விடயம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சருடன் உரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன்போது காணிகளை விடுவிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக மீள்குடியேற்ற அமைச்சர் கூறியதாகவும் தெரிவித்தார்.  தமது காணிகளை விடுவிக்குமாறு தொடர்போராட்டத்தில் ஈடுபடும் மக்களிடம் இந்த விடயத்தை தெரிவிக்கவே, கேப்பாபுலவுக்கு விஜயம் மேற்கொண்டதாக முல்லை அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/17666

Link to comment
Share on other sites

கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க ஜனாதிபதி உறுதி

P4-063e61aa122877cdf5068bb28be5deddb961582e.jpg

 

சுவாமிநாதனின் தலையீட்டையடுத்து நடவடிக்கை; காணிகளில்  கால்வைத்தாலே போராட்டத்தை நிறுத்துவோம் என மக்கள் திட்டவட்டம்
  (ரொபட் அன்­டனி, கண்­டா­வளை நிருபர்)

கேப்­பாப்­பு­லவு மக்­களின் காணி­களை விடு­விப்­ப­தற்கு விரைவில் நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன

நேற்­றைய தினம் மீள் குடி­யேற்ற அமைச்சர் டி.எம்.சுவா­மி­நா­த­னிடம் உறு­தி ­வ­ழங்­கி­ய­போ­திலும் அதனை ஏற்று போராட்­டத்தை கைவிட கேப்­பா­ப்பு­லவு மக்கள் மறுத்­து­விட்­டனர்.

அமைச்சர் சுவா­மி­நாதன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை நேற்­றைய தினம் சந்­தித்து கேப்­பா­ப்புலவு மக்­களின் போராட் டம் தொடர்­பாக கலந்­து­ரை­யா­டி­ய­போது காணி­களை விடு­விக்க நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி உறு­தி­மொ­ழியை வழங்­கி­யி­ருந்தார்.

இந்­நி­லையில் ஜனா­தி­ப­தியின் காணி விடு­விப்பு தொடர்­பான உறு­தி­மொ­ழியை முல்­லைத்­தீவு மாவட்ட செய­லாளர் ரூப­வதி கேதீஸ்­வரன் நேற்று போராட்டம் நடத்­து­கின்ற மக்­க­ளிடம்

 எடுத்­துக்­கூ­றி­ய­துடன் போராட்­டத்தை கைவி­டு­மாறு கோரிக்கை விடுத்தார். எனினும் மக்கள் அதனை நிரா­க­ரித்­து­விட்­டனர்.

எமது காணி­க­ளுக்குள் செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட பின்­னரே போராட்­டத்தை கைவி­டுவோம் என கேப்­பாப்­பு­லவில் போராட்­டத்தை மேற்­கொண்­டுள்ள மக்கள் தெரி­வித்­துள்­ளனர்.

கடந்த 15 தினங்­க­ளாக கேப்­பாப்­பு­லவு மக்கள் விமா­னப்­ப­டை­யினர் வச­முள்ள தமது காணி­களை விடுக்­கு­மாறு வலி­யு­றுத்தி தொடர் போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

 இந்த மக்­களின் போராட்­டத்­திற்கு வடக்கு, கிழக்கின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்தும் ஆத­ரவு அதி­க­ரித்து வரு­கி­றது. இந்த சூழ­லி­லேயே நேற்­றை­ய­தினம் சிறைச்­சா­லைகள் மற்றும் புனர்­வாழ்வு அளிப்பு மீள்­கு­டி­யேற்றம், மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் நேற்­றைய தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை சந்­தித்து இந்த விவ­காரம் தொடர்பில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யி­ருந்தார்.

இதன்­போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன உட­ன­டி­யா­கவே இரா­ணு­வத்­த­ள­ப­தி­யுடன் தொடர்பு கொண்டு இது குறித்து கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­கிறார்.

அப்­போது கேப்­பாப்­பு­லவு மக்­களின் காணி­களை வெகு­வி­ரைவில் விடு­விப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுப்­ப­தாக ஜனா­தி­ப­தி­யிடம் இரா­ணுவத் தள­பதி உறு­தி­ய­ளித்­தி­ருக்­கிறார்.

அத­னை­ய­டுத்து ஜனா­தி­ப­தியின் இந்தத் தீர்­மா­னத்தை முல்­லைத்­தீவு மாவட்ட செயலர் ரூப­வதி கேதீஸ்­வரன் கேப்­பாப்­பு­ல­வுவில் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்ள மக்­க­ளிடம் அறி­வித்­த­துடன் போராட்­டத்தை கைவி­டு­மாறும் கோரி­யுள்ளார்.

எனினும் தமது காணி­க­ளுக்கு செல்லும் வரை போராட்­டத்தை கைவி­டப்­போ­வ­தில்லை என மக்கள் தெரி­வித்­துள்­ள­துடன் மாவட்ட செய­லா­ளரின் கோரிக்­கையை நிரா­க­ரித்­துள்­ளனர்.

""எமது காணி­க­ளுக்குள் செல்ல அனு­ம­திக்­கப்­பட்ட பின்­னரே நாங்கள் போராட்­டத்தை கைவி­டுவோம். அது­வரை போராட்டத்தை தொடர்வோம். காணிகளை விடுவித்தால் மாத்திரம் போராட்டத்தை கைவிடுவோம்"" என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.

 உறுதிமொழியை நம்பி போராட்டத்தை கைவிடமுடியாது என்றும் காணிகளை விடுவித்தால் மாத்திரமே போராட்டத்தை கைவிடமுடியும் என்றும் மக்கள் உறுதியாக தெரிவித்துள்ளனர். 

http://content.epaper.virakesari.lk/newspaper/Daily/main/2017-02-15#page-1

Link to comment
Share on other sites

 

கேப்பாபுலவு விமானப்படை தளத்துக்குள் மக்களின் காணிகள் !!

எமது மக்களின் வாழ்விடங்கள் அனைத்தும் படையினரால் தரைமட்டமாக்கப்பட்டு நாசப்படுத்தப்பட்டிருப்பதையும், மக்கள் தமக்கான சுய வாழ்வாதாரத்திற்காக தாம் நாட்டிய பயன்தரும் தென்னை,பனை, மா, பலா,கொய்யா,கமுகு,உள்ளடங்கலான பலவகையான பயன்தரு மரங்கள் தேடுவாரற்ற காடுகளாக வளர்ந்து காட்சிதருவதையும் இந்த காணொளி ஊடாக நாம் அவதானிக்கமுடிகின்றது.

மேலும் கேப்பா புலவில் விமானப்படை கைப்பற்றி வைத்திருக்கும் இந்த பெரும் நிலப்பரப்பை அவதானித்தால் இங்கே பாரிய படைத்தளம் ஒன்றையோ,இல்லையேல் பாரிய சிங்கள குடியேற்றம் ஒன்றையோ இவர்கள் நிறுவுவதற்கான தூரநோக்கோடுதான் இப்பிரதேசத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதையே அவதானிக்கமுடிகின்றது.

எமது நிலத்தில் சிங்களவன் கொக்கட்டம் இட்டு வாழ்கிறான்.. நாம் தான் இதனை போராடி எடுத்துக்கொள்ள வேண்டும்..

EeLam MPK BoYs !!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.    CSK, KKR, RR,LSG 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.       #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) LSG     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) CSK 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) PSK 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team RR 5)    மே 22, புதன் 19:30அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team LSG 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator LSG 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 RR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி   CSK 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) RCB 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறானபெயருக்கு -2 புள்ளிகள் Riyan Parag  11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Mustafizur Rahman 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kholi 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli 19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) CSK 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) DC ——— @ஈழப்பிரியன் அண்ணா, @கிருபன் ஜி @பையன்26 அன்புக்காக🙏. டெம்பிளேட்டுக்கு நன்றி @வாதவூரான்
    • "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி"     "இருபது இருபத்திநாலு ஒரு பெண்ணாகி தனக்கு தானே நிகரென கூக்குரலிட்டு இருபது இருபத்திமூன்றை எட்டி உதைத்து தன்னை அழகியென எமக்கு காட்டுகிறாள் !"   "அருகே வந்து எம்மை ஆரத்தழுவி தன் இதழால் முத்தம் பகிர்ந்து கருத்த வானில் புத்தாண்டு தொடக்கத்தில் தலை காட்டும் விண்மீண் தானாம் !"   "சற்றும் சலிப்புத்தரா அழகிய கண்ணுடனும் பெருத்த மார்புடனும் நீண்ட கழுத்துடனும் அற்புத ஒளிவீசும் தளிர் மேனியுடனும் . பெட்டி பாம்பாக்கி கண்டவரையும் மயக்குகிறாள் !"   "ஏற்றம் கொண்ட அழகிய பிட்டத்துடனும் பெரிய பட்டை சுற்றிய இடையுடனும் நெற்றி பொட்டும் குளிர் கன்னத்துடனும் பெண்டு வந்து போதை அள்ளிவீசுகிறாள் !"   "தன்தழுவலில் எம் இதயத்தை கவர்ந்து இருபது இருபத்திமூன்றை குறை கூறி பொன்னாய் வாழ்வை மீட்டு தருவேனென்று இறுமாப்புடன் எமக்கு சத்தியம் செய்கிறாள் !"   "என்றென்றும் பெருமையுடன் நிலைத்து வாழ இன்பம் பொங்கி ஒற்றுமை ஓங்க தன் நலமற்ற தலைவர்கள் தந்து இருளை நீக்கி ஒளியைத் தருவாளாம் !"   "மானிடர் செழிக்க மலரும் ஆண்டே நம்பிக்கை விதைத்து பேதம் ஒழித்து பனி விலத்தி துணிவு தந்து எம்மை காத்து அருள் புரியாயோ !"   "கூனிக் குறுகி நொடிந்த தமிழனுக்கு தும்பையும் கயிறாக்கி பிடித்து எழும்ப இனி ஒருதெம்பு அள்ளிக் கொடுவென எம் உறவுகளுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் !"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]             
    • 17. MI என்று எழுதி  விடுங்கோ.  நன்றி 
    • வெற்றி பெற‌ வாழ்த்துக்க‌ள் ச‌கோ🙏🥰..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.