Jump to content

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்


Recommended Posts

 

 

காதலர் தினம் எப்படி வந்தது தெரியுமா?... அந்த கதையைக் கேட்டால் உங்கள் கண்களிலும் நிச்சயம் கண்ணீர் வரும்...

 

Image

காதலர் தினம் ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் நாள் அனைவராலும் சந்தோஷமாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் உண்மையிலேயே அந்த தினம் யாருடைய நினைவாகக் கொண்டாடப்படுகிறது என்று தெரிந்து கொண்டால், அந்த தினத்தின் உண்மையான அர்த்தம் புரியும் உங்களுக்கு..

நாம் இன்று கொண்டாடுவது போல், மகிழ்ச்சியான நாளாக அந்த நாள் இல்லை. ஆம். அது ஒரு காதல் ஜோடியின் பிரிவில் உருவான கதை. 

வாலண்டைன் என்னும் பாதிரியார் கல்லால் அடித்துக் கொல்லபட்ட நாளைத்தான் நாம் காதலர் தினமாகக் கொண்டாடுகிறோம்.

கி.பி. 270 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் தான் அந்த நிகழ்வு நடைபெற்றது. 

கொடூரமாக ஆட்சிபுரிந்து வந்த ரோமானியச் சக்ரவர்த்தி கிளாடி என்பவர் அவ்வப்போது வெளியிடும் முட்டாள்தனமான கட்டளைகளால் அவரைவிட்டு அவருடைய ராணுவ வீரர்கள் பிரிந்து போய்விட்டார்கள். புதிய ராணுவ வீரர்களையும் அவரால் படையில் சேர்க்க முடியவில்லை. 

ஒரு நாள் தனது அந்தரங்கக் காதலியுடன் சல்லாபமாக இருந்தார். அப்போது ஏற்பட்ட சின்ன சண்டையால் எரிச்சலடைந்த கிளாடியின் மனதில் ஒரு முட்டாள்தனமான எண்ணம் உதித்தது. 

திருமணமானவர்கள் தனது அன்பு மனைவியை விட்டுவிட்டு வரமுடியாமலும் திருமணமாகாதவர்கள் காதலியைப் பிரிய மனமில்லாமலும் இருக்கிறார்கள். அதனாலேயே ராணுவத்தில் சேர முன்வரவில்லை என்று நினைத்துக்கொண்டு, முட்டாள்தனமாக ஒரு கட்டளை விடுக்கிறார்.

இனி ரோமாபுரி நாட்டில் யாரும் திருமணம் செய்துகொள்ளக் கூடாது. ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் ரத்து செய்யப்பட வேண்டும். யாராவது இதை மீறினால் கைது செய்யப்பட்டு கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை கேட்டு அதிர்ந்து மக்கள் சோகத்தில் மூழ்கியிருந்த சமயத்தில், அரசனின் இந்த முடிவு அநியாயம் என்று பொங்கிய வாலண்டைன் என்னும் பாதிரியார் அரசக் கட்டளையை மீறி பல ரகசியத் திருமணங்களை நடத்தி வைத்தார். 

இந்த செய்தி அரசனுக்கு எட்டிவிட, பாதிரியார் இருட்டுச்சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார். 

அவ்வாறு அவர் சிறை வைக்கப்பட்ட காலத்தில் சிறைக்காவல் தலைவனின் கண் தெரியாத மகளான அஸ்டோரியசுக்கும் பாதிரியாருக்கும் இடையே காதல் என்னும் அன்பு மலரத் தொடங்கியது. 

சிறையிலிருக்கும் வாலண்டைனை எப்படியாவது மீட்க வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருந்தாள். இதையறிந்த அரசன் அஸ்டோரியஸை வீட்டுச் சிறையில் அடைத்தான். தனக்கு மீண்டும் கண் வந்தது போல் உணர்ந்த அஸ்டோரியஸ் மீண்டும் கவலையில் ஆழ்ந்து போனாள்.

இதற்கிடையில், வாலண்டைனுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டது. அப்போது, தன்னுடைய காதலி அஸ்டோரியசுக்காக ஒரு காகித அட்டையை வரைந்து அதில் கவிதை ஒன்றை எழுதி அனுப்பிவிட்டு, மரண தண்டனையையை ஏற்றார் வாலண்டைன். 

இந்த நிகழ்வு நடந்து ஏறத்தாழ 200 வருடங்களுக்குப் பின், இந்த பிப்ரவரி 14 ஆம் தேதி போப்பாண்டவரால் வாலண்டைன் புனிதராக அறிவிக்கப்பட்டு, வாலண்டைன்ஸ் டே கொண்டாடப்பட்டது. இதுவே காதலர் தினம் உருவான கதை.

 

valentine%282%29.jpg

ValentineDayCards10%282%29.JPG

http://www.tamilsguide.com/blog/articles/5922

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருக்குற பிரச்சனையில இதுங்க வேற... காதலர் தினம், கண்றாவி தெனமுன்னு கொண்டாடுதுங்க ..tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:

C4mRC1CUEAIvINW.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, குமாரசாமி said:

இருக்குற பிரச்சனையில இதுங்க வேற... காதலர் தினம், கண்றாவி தெனமுன்னு கொண்டாடுதுங்க ..tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:

ஏன் அம்மாச்சி பரிமளத்தை மறந்திட்டியலே:unsure::rolleyes:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Chennai_jasmine_vendor.jpg

Bildergebnis für அல்வா

அனைவருக்கும்... இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.
இண்டைக்கு வேலை முடிந்து... வீட்டிற்கு   போகும் போது,
ஒரு முளம்  மல்லிகைப் பூவும், அல்வா துண்டு....  ஒன்றும் வாங்கிக் கொண்டு போக வேணும். :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யாரிட்டிடை சொல்லி அழ ....!

மனைவி : என்னங்க இண்டைக்கு வாலண்டைன் டே .... ஒரு பூ கூட வாங்கிக் குடுக்க தோணலையா உங்களுக்கு ...!

சுவி : (யாழில் இருந்த பிராக்கில்)   பூவென்ன பூ ....ஒரு பொக்கேயே வாங்கிக் குடுக்கலாம்தான் ...ஆனால் எங்க இருக்கிறாள் என்று தெரியேல்லையே ...!

அர்ச்சனை ஆரம்பம் , அபிஷேகத்துக்கு முன் போய் படுத்திட வேண்டும் ....!  :unsure:  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, குமாரசாமி said:

இருக்குற பிரச்சனையில இதுங்க வேற... காதலர் தினம், கண்றாவி தெனமுன்னு கொண்டாடுதுங்க ..tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:tw_dissapointed_relieved:

C4mRC1CUEAIvINW.jpg

அண்ணா,இன்டைக்கு தன்னும் அண்ணிக்கு ஒரு பூவை,சொக்கிலேட்டை வேண்டிக் கொடுக்கலாம் தானேtw_angry:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 14.2.2017 at 0:02 PM, முனிவர் ஜீ said:

ஏன் அம்மாச்சி பரிமளத்தை மறந்திட்டியலே:unsure::rolleyes:tw_blush:

 

On 14.2.2017 at 9:53 PM, ரதி said:

அண்ணா,இன்டைக்கு தன்னும் அண்ணிக்கு ஒரு பூவை,சொக்கிலேட்டை வேண்டிக் கொடுக்கலாம் தானேtw_angry:

தங்கச்சி! நான் என்ன அவ்வளவுத்துக்கு ஈவு இரக்கமில்லாதவனா? :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, குமாரசாமி said:

 

தங்கச்சி! நான் என்ன அவ்வளவுத்துக்கு ஈவு இரக்கமில்லாதவனா? :grin:

அதானே முதல் காதலியை மறக்க இயலுமோ  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 16.2.2017 at 5:15 PM, முனிவர் ஜீ said:

அதானே முதல் காதலியை மறக்க இயலுமோ  tw_blush:

ரால் போட்டு சுறா பிடிக்கிறதிலையே கவனமாய் இருக்கிறாங்கள். tw_yum:

 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

                                                                           Image associée

                                                                           இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.....!  🌺

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இனிய காதலர் தின வாழ்த்துக்கள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது முன்னாள்,இன்னாள் காதலர்களுக்கு இனிய காதலர் தின நாள் வாழ்த்துக்கள்😃

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் காதலர் தின வாழ்த்துக்களுக்கு.....  நன்றி, நன்றி, நன்றி...  😋

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, தமிழ் சிறி said:

உங்கள் காதலர் தின வாழ்த்துக்களுக்கு.....  நன்றி, நன்றி, நன்றி...  😋

என்ர பெயரை போடுவதற்கோ,அல்லது என்ர கருத்தை குவேட் பண்ண பயமாக்கும் 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ரதி said:

என்ர பெயரை போடுவதற்கோ,அல்லது என்ர கருத்தை குவேட் பண்ண பயமாக்கும் 🤣

ஆம்... உண்மை. ரதி.
இன்று காலை 5  மணியளவில் 🕔 முதலில், உங்கள் பதிவை.... 
மேற்கோள் காட்டி விட்டு, பெயரை குறிப்பிடாமல்... கருத்து  எழுதி விட்டு... ✒️
இதனை... பதியாவா... வேண்டாமா.... என்று இரண்டு நிமிடம்  யோசித்தேன்.  😏

பிறகு...  வெள்ளிக்கிழமை,  வார விடுமுறை நாள்.... 🌛
ரதி... ஏற்கெனவே....  "கிராக்" 🌟 பிடிச்ச ஆள்.. என்று நினைத்து  விட்டு,.  
என்னத்துக்கு... எனது நிம்மதியை, நானே இழக்க  வேண்டும், என்று, 
எனது "மதி" சொல்ல,  விதியை... வென்று விட்டேன்... ரதி. 🤪 😝

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für valentines day gif

திருமணம் முடித்த பின்பு.... 💓 மனைவியை 💋 காதலிப்பவர்களுக்கு,
இனிய.... காதலர் தின வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 2/15/2019 at 9:58 PM, தமிழ் சிறி said:

ஆம்... உண்மை. ரதி.
இன்று காலை 5  மணியளவில் 🕔 முதலில், உங்கள் பதிவை.... 
மேற்கோள் காட்டி விட்டு, பெயரை குறிப்பிடாமல்... கருத்து  எழுதி விட்டு... ✒️
இதனை... பதியாவா... வேண்டாமா.... என்று இரண்டு நிமிடம்  யோசித்தேன்.  😏

பிறகு...  வெள்ளிக்கிழமை,  வார விடுமுறை நாள்.... 🌛
ரதி... ஏற்கெனவே....  "கிராக்" 🌟 பிடிச்ச ஆள்.. என்று நினைத்து  விட்டு,.  
என்னத்துக்கு... எனது நிம்மதியை, நானே இழக்க  வேண்டும், என்று, 
எனது "மதி" சொல்ல,  விதியை... வென்று விட்டேன்... ரதி. 🤪 😝

போன வருசமும்.. :rolleyes: வெள்ளிக்கிழமை தான்....  💓காதலர் தினம் வந்தது. 
இந்த வருசமும்...  வெள்ளிக்கிழமை வந்திருக்குது.... 🥰
வாற வருசமும்... வெள்ளிக்கிழமை காதலர் தினம் வந்தால்,  💯 நல்லது.  💋 :grin:

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of tree and outdoors

இனிய... காதலர் தின, வாழ்த்துக்கள். 💖
பிற்குறிப்பு: காதலர்கள் எங்கு நிற்கிறார்கள் என்று கண்டு பிடிப்பவர்கள்,
அடுத்த 5 வருடத்துக்கு...  மூக்கு கண்ணாடி போட வேண்டியதில்லை. 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனைவருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள் 💕💕💕💕💕💕🌹

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Kanmani Anbodu Kadhalan - Guna Tamil Song - Kamal Haasan, Roshini on Make a  GIF

இனிய காதலர்தின வாழ்த்துக்கள்.......!  🌹

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கு மிகவும் நன்றி.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.