Jump to content

‘பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்!’ - பா.ஜ.கவுக்கு தூது அனுப்பிய தி.மு.க.


Recommended Posts

‘பெரும்பான்மையை நிரூபிக்க நாங்கள் தயார்!’ - பா.ஜ.கவுக்கு தூது அனுப்பிய தி.மு.க.

மு.க.ஸ்டாலின்

மிழகம் அரசியல் களம் அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பால் கலவர முகத்தோடு அமர்ந்துள்ளனர் ஆளும்கட்சி எம்.எல்.ஏக்கள். 'அடுத்து என்ன செய்வது?' என்ற ஆலோசனையில் இருக்கிறார் சசிகலா. 'பா.ஜ.க மேலிட நிர்வாகிகளிடம் தி.மு.க தரப்பில் இருந்து சிலர் தூது சென்றுள்ளனர். தி.மு.க தரப்பில் இருந்து சில வாக்குறுதிகளும் அளிக்கப்பட்டுள்ளன' என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில். 

அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவியை ஏற்ற பிறகு, முதலமைச்சர் பதவியை நோக்கி காய்களை நகர்த்தினார் சசிகலா. 'அதிகாரத்திற்குள் நீங்கள் வர வேண்டும் என்று விரும்பினால், உங்கள் அதிகாரம் மொத்தமும் பறிபோய்விடும்' என தொடக்கத்திலேயே எச்சரித்தார் முதலமைச்சர் பன்னீர்செல்வம். 'அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். உடனே முதல்வர் பதவியை ஏற்றாக வேண்டும்' என சசிகலா தரப்பில் நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து, முதலமைச்சர் பதவியை கடந்த 5-ம் தேதி ராஜினாமா செய்தார் பன்னீர்செல்வம். 'எம்.எல்.ஏக்கள் செல்வாக்கு யார் பக்கம்?' என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும், தி.மு.கவின் நடவடிக்கைகளையும் உற்று கவனித்து வருகின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

"தி.மு.க உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நேற்று அறிவாலயத்தில் நடந்தது. 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 'ஆளும்கட்சிக்குள் யார் முதல்வர் என்ற அதிகாரப் போட்டி நிலவுகிறது. நிலையான அரசை அமைக்க முன்வராமல் ஆளுநர் காலதாமதம் செய்து வருகிறார். அரசியல் சட்டவிதிகள் மற்றும் மரபுகளுக்கு உள்பட்டு நிலையான ஆட்சி அமைக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். 'அரசியல் சட்டப்படி, சட்டப் பேரவையில் இரண்டாவது கட்சி என்ற பலத்துடன் இருக்கும் எங்களுக்கு ஆளுநர் வாய்ப்பு அளிக்க வேண்டும்' என்பதுதான் தி.மு.கவின் கோரிக்கையாக இருக்கிறது" என விவரித்த பா.ஜ.க நிர்வாகி ஒருவர், 

கவர்னர் வித்யாசாகர் ராவ்"தமிழகத்தில் தற்போதுள்ள அரசியல் சூழல்களை தி.மு.க மிகுந்த எச்சரிக்கையோடு கையாண்டு வருகிறது. எந்தச் சூழலிலும், 'அதிகாரத்தைப் பெறுவதற்காக தி.மு.க போராடுகிறது' என்கின்ற பிம்பம் தெரியாத அளவுக்கு அரசியல் நடவடிக்கைகளை முன்வைக்கிறார் ஸ்டாலின். மத்திய அரசும் தி.மு.கவுடன் இணக்கமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 7-ம் தேதி பன்னீர்செல்வம் கொடுத்த பேட்டியில், 'தனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு ராஜினாமா பெறப்பட்டது' என்றார். கடந்த ஒரு வார காலமாக அரசியல் சூழல்களை ஆளுநர் முடிவுக்குக் கொண்டு வரவில்லை. 'ஆளுநர் தாமதிப்பது கட்சியை பிளவுபடுத்தும்' என சசிகலா பகிரங்கமாக பேட்டி அளித்தாலும், ஆளுநர் அலுவலகம் எந்த எதிர்வினையும் காட்டவில்லை. 'அரசியல் சட்டப்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி வருகிறார் ஸ்டாலின். தற்போதுள்ள சூழலில் மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்வதையே அவர் விரும்புகிறார்.

இந்நிலையில், பா.ஜ.கவின் முன்னாள் தேசியத் தலைவராகவும் தற்போது மத்திய அமைச்சராக இருக்கும் முக்கியப் புள்ளியை சந்தித்துப் பேசினார் தி.மு.கவின் முன்னாள் மத்திய இணை அமைச்சர் ஒருவர். இந்த சந்திப்பில், பா.ஜ.கவின் விருப்பங்களை எந்த வகையில் நிறைவேற்றுவது என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. ' 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தென்மண்டலம் மற்றும் மேற்கு மண்டலத்தில் 12 தொகுதிகளை அடையாளம் காட்டுகிறோம். அதில் 5 தொகுதிகளை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு தி.மு.கவால் தீர்வைக் கொடுக்க முடியும். பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க அழைத்தால், அ.தி.மு.கவின் கணிசமான எம்.எல்.ஏக்களும் எங்கள் பக்கம் வருவார்கள். எளிதாக எங்கள் பலத்தை நிரூபிக்க முடியும்' என விவரித்திருக்கிறார். இதற்கு பா.ஜ.க தரப்பில் இருந்து எந்த வாக்குறுதிகளும் வழங்கப்படவில்லை. தி.மு.கவின் கோரிக்கையை பா.ஜ.க ஏற்றால், அடுத்தகட்டத்தை நோக்கி தமிழக அரசியல் களம் நகரும்" என்றார் விரிவாக. 

"சசிகலாவை ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் இருப்பதற்கு, சொத்துக் குவிப்பு வழக்கு மட்டும் காரணமல்ல. அவர் மீது நான்கு பெரா வழக்குகள் இருப்பதும் ஒரு காரணம். தவிர, அவர் எம்.எல்.ஏவாகவும் இல்லை. இதற்காகத்தான் ஆளுநர் அமைதி காத்தார். கூடவே, எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒரே இடத்தில் குவிந்திருப்பதில் ஆளுநருக்கு உடன்பாடு இல்லை. அங்கிருந்து தப்பி வருகின்றவர்களும், 'அடைத்து வைத்திருப்பதாகச்' சொல்கின்றனர். அ.தி.மு.கவில் நிலவும் உச்சகட்ட குழப்பத்தால், கட்சித் தொண்டர்கள் பல அணிகளாக சிதறியுள்ளனர். இதில், பன்னீர்செல்வத்தின் பலத்தை அதிகரிக்க வைத்து, நிரந்தர முதலமைச்சராக்குவது; அது நடக்காதபட்சத்தில் தி.மு.கவுக்கு ஒரு வாய்ப்பை அளிக்கலாமா என்பது குறித்து பா.ஜ.க மேலிடம் விவாதித்து வருகிறது. அ.தி.மு.க சிதறி இருப்பதால், தி.மு.கவை பலம் பொருந்திய கட்சியாக அவர்கள் பார்க்கிறார்கள். அதை மனதில் வைத்துத்தான், கனிமொழி வெளிநாடு செல்ல சி.பி.ஐ விதித்திருந்த தடையை நீக்கினார்கள். தி.மு.கவும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டியது. கருணாநிதி உடல்நிலை குறித்தும் கவலைப்படுகிறார் மோடி. வரும் காலங்களில் தி.மு.கவுடனான கூட்டணி வாய்ப்பையும் பரிசீலனையில் வைத்திருக்கிறார் பிரதமர் மோடி" என்கிறார் அரசியல் விமர்சகர் ஒருவர். 

http://www.vikatan.com/news/tamilnadu/80742-we-can-show-our-majority---dmk-tells-bjp.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வ‌ள‌ந்து வ‌ரும் க‌ட்சி தொட‌ர்ந்து பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில்   ஆண்க‌ளுக்கு 20 / பெண்க‌ளுக்கு 20  ச‌ட்ட‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஆண்க‌ளுக்கு 120 / பெண்க‌ளுக்கு 120 இதில் யார் ஒட்டை எப்ப‌டி பிரிப்ப‌து வெற்றிய‌ இல‌க்காக‌ ப‌ய‌ணிக்கும் க‌ட்சி புல‌வ‌ர் அண்ணா தேர்த‌ல் ஆணைய‌த்தின் கூத்துக‌ளை விப‌ர‌மாய் எழுதி இருக்கிறார் முடிந்தால் ப‌தில் அளியுங்கோ இந்த‌ தேர்த‌ல் விதிமுறை இந்த‌ முறை தான் பார்க்கிறேன் த‌மிழ் நாட்டில் ஒரே நேர‌த்தில் ம‌ற்ற‌ மானில‌ங்க‌ளில் பிரித்து பிரித்து வைப்ப‌து...................2019க‌ளிம் இந்த‌ விதிமுறை இருந்த‌ மாதிரி தெரிய‌ வில்லை................................ அண்ணாம‌லையில் ஆட்க‌ள் காசு கொடுக்க‌ போன‌ இட‌த்தில் பிடி ப‌ட்டு த‌லைய‌ காட்டாம‌ தெறிச்சு ஓடின‌வை ஓம் யூன்4ம் திக‌தி பாப்போம்...............................
    • இப்படிக்கு இந்த தரவுகள் அனைத்தும்  தமிழ்நாட்டில் நேரடியாக இரு கண்களாலும் பார்த்து சேகரிக்கப்பட்டது. 🤣
    • நீங்கள் மீள மீள பொய்யை சொல்வதால் உண்மை ஆகாது. 1.தேசிய அல்லது குறைந்தது  மாநில கட்சி அந்தஸ்து இருந்தால் மட்டுமே நிரந்தர சின்னம். 2. மாநில கட்சி அந்தஸ்துக்கு ஒன்றில் 10% வாக்கு அல்லது 2% வாக்கும் இரு லோக்சபா சீட்டில் வெற்றியும் அடைந்திருக்க வேண்டும். 3. இது இரெண்டும் நாதக வுக்கு இல்லை. 4. மாநில கட்சி அந்தஸ்து இல்லாவிடின் - தேர்தல் அறிவிக்கப்பட்டு யார் முதலில் கோருகிறார்களோ அவர்களுக்கே சின்னம் கொடுக்கப்படும். 5. சீமான் அசட்டையாக தூங்கி கொண்டிருக்க ஏனையோர் (திமுக) தந்திரமாக சுயேட்சை மூலம் அந்த சின்னத்தை கோரி விட்டது. 6. வாசனுக்கு இப்படி யாரும் செய்யவில்லை. 7. திருமாவின் சின்னத்தையும், வைகோவின் சின்னத்தையும் இன்னொரு தக்க காரணம் சொல்லி மடக்கினாலும், திருமா போராடி வென்றார். வைகோ விட்டு விட்டார். 8. சீமானும் சுப்ரீம் கோர்ட் வரை போனார். முடியவில்லை. 9. தேர்தல் ஆணையம் களவு செய்கிறதெனில் சுப்ரீம் கோர்ட்டும் அதை ஆமோதித்ததா? உண்மையில் இதில் ஆணையத்தின் எந்த பாரபட்சமும் இல்லை, சீமானின் சோம்பேறித்தனத்தை பாவித்து திமுக சின்னத்தை சுயேட்சை மூலம் தந்திரமாக முடக்கி விட்டது. இதை பற்றி யாழில் பல்வேறு திரிகளில் பல பக்கம் எழுதியுள்ளேன். தங்களை அப்பக்கங்கள் நோக்கி பணிவுடன் திசை காட்டி அமைகிறேன்.
    • திருநெல்வேலி மக்களவை தொகுதியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன் வெற்றிபெறுவார் என ஊகிக்கின்றேன்.
    • ஏன் அந்தக்கவலை? தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் அப்படி என்ன பெரிதாக கெடுதல் நடந்து விடும்?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.