Jump to content

ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினராக 42ம் வட்டார இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற நீதன் சான்


Recommended Posts

ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினராக
42ம் வட்டார இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற
நீதன் சான்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சரி ஒரு வாழ்த்தை சொல்லிவிடுவம் வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்  நீதன் ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் 

இவரைப:பற்றி  ஒரு அறிமுகம் தரலாமே  கனடிய  உறவுகளே..

Link to comment
Share on other sites

17 minutes ago, விசுகு said:

வாழ்த்துக்கள் 

இவரைப:பற்றி  ஒரு அறிமுகம் தரலாமே  கனடிய  உறவுகளே..

Neethan Shan (born December 24, 1978 in Jaffna, Sri Lanka)[1] is a Canadian politician, who was elected to Toronto City Council in a by-election on February 13, 2017.[2] He will be the first Tamil Canadian to serve on Toronto's city council.[2]

Prior to his election to council, he served as a trustee on York Region District School Board from 2006 to 2010,[1] and on Toronto District School Board from 2016 to 2017.[3] He was previously an Ontario New Democratic Party candidate in Scarborough—Guildwood in the provincial election of 2007, and in Scarborough—Rouge River in the provincial elections of 2011 and 2014 and a by-election in 2016.[1] He also served as president of the Ontario NDP from 2012 to 2014.[1]

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொறன்ரோ மாநகரசபை உறுப்பினராக...தேர்ந்தெடுக்கப்பட்ட  நீதனுக்கு வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவராலே தமிழர்களுக்கு எதாவது ஆதாயம் உண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, ரதி said:

இவராலே தமிழர்களுக்கு எதாவது ஆதாயம் உண்டா?

கொஞ்ச பேருக்கு அகதி அந்தஸ்து கொடுப்பாரோ ரதி :rolleyes::unsure:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, முனிவர் ஜீ said:

கொஞ்ச பேருக்கு அகதி அந்தஸ்து கொடுப்பாரோ ரதி :rolleyes::unsure:

அகதி அந்தஸ்துக்கும்

மாநகரசபை உறுப்பினருக்கும் என்ன சம்பந்தம் ராசா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, விசுகு said:

அகதி அந்தஸ்துக்கும்

மாநகரசபை உறுப்பினருக்கும் என்ன சம்பந்தம் ராசா??

ரதி கேட்டதற்க்காக சும்மா பகிடிக்கு அண்ண 

மாந்கர சபை உறுப்பினரால் தமிழருக்கு என்ன பலன் என்று கேட்டதற்கு கிடைப்பதை பெற்றுகொள்ள வேண்டும் பேந்து அது எதற்க்காவது உதவலாம் அல்லவா   அடுதத கட்ட ந்கர்வுக்கு உதவலாம் அவரது ரசியல் வாழ்வுக்கு 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, முனிவர் ஜீ said:

  அடுதத கட்ட ந்கர்வுக்கு உதவலாம் அவரது ரசியல் வாழ்வுக்கு 

சரியாகச் சொன்னீர்கள் tw_blush:

Link to comment
Share on other sites

16729359_193546397792629_295150779498351

ரொரன்ரோ- ரூச்றிவர் சிற்றி கவுன்சிலர் 42ம் வட்டாரத்தின் இடைத்தேர்தலில் 13-02-2017ல் வெற்றி பெற்ற நீதன் சாண் அவர்கள் இன்று காலை 15-02-2017ல் ரொரன்ரோ சிற்றி ஹோலில் பதவியேற்று உரையாற்றினார்.

Link to comment
Share on other sites

நீதனின் வெற்றி : 25,000 இருந்து 112,000 வரையா ?

ரொரன்ரோ நகர சபைக்கு முதலாவது தமிழ் நகர சபை உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ் மக்களுக்கு நன்கு அறிமுகமான நீதன் சான் அவர்களே ரொரன்ரோ நகர சபைக்கு தெரிவான முதலாவது தமிழர் என்ற பெருமையினை பெற்றுள்ளார்.

 

25 ஆண்டுகளாக ரொரன்ரோ நகரசபையில் 42ம் வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ரேமண்ட் சோ மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டதை அடுத்து ரொரன்ரோ மாநகர சபை உறுப்பினரை தெரிவு செய்வதற்கான இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Scarborough-Rouge River தொகுதியின் 42 ஆவது வட்டாரத்தின் நகர சபை உறுப்பினரை தெரிவு செய்வதற்கான இந்த இடைத்தேர்தல் கடந்த 13ம் திகதி நடைபெற்றது. மூன்று தமிழர்கள் உட்டபட மொத்தம் 29 வேட்டபாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டிருந்தனர்.4765 வாக்குகளை பெற்று நீதன் சான் இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்.அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளில் 45 வீதமான வாக்குகள் நீதன் சானுக்கு கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் யோர்க் பிராந்திய கல்விச் சபை உறுப்பினராகி தனது அரசியல் பயணத்தை நீதன் வெற்றிகரமாக ஆரம்பித்தார்

அதன் பின்னர் கனடாவின் பிரதான அரிசயல் கட்சிகளில் ஒன்றான புதிய ஜனநாயகக் கட்சியின் ஒன்ராறியோ மாகாண பிரிவின் தவிசாளர் என்ற உயர் நிலையை பெற்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்தவர். கனடா முழுவதிலும் தமிழ் மரபுரிமை மாதாமாக தை மாதம் அங்கீகரிக்கப்படுவதற்கு காரணமான தமிழ் மரபுரிமைத் திங்கள் என்ற முன்னெடுப்பின் பிரதான பாத்திரம் நீதன் சான் என்பதும் மிக முக்கியமானது.

தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு வலுச் சேர்க்கும் வகையில் கனடாவில் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளிலும் நீதனின் பங்கும் ஈடுபாடும் தமிழ் இளையவர்கள் பலரை அவர் பக்கம் ஈர்த்திருக்கின்றது.

தொடர் தேர்தல்களில் பங்கெடுத்தாலும் அவரை அங்கீகரித்து அவருக்காக தன்னார்வத் தொண்டர்களாக செயல்பட பலர் முன்வந்திருந்தமையும் அவருடை தேர்தல் நிதி சேகரிப்பிற்கு தமது பங்களிப்பை தமிழ் சமூகம் வழங்கியிருந்தமையும் இந்த தேர்தல் வெற்றிக்கு மிக முக்கியமானது.

2014ம் ஆண்டு நடைபெற்ற கல்விச் சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நீதன் சான் இப்போது நகரசபை உறுப்பினராக தெரிவாகியுள்ளதன் மூலம் கல்விச் சபையில் வெற்றிடம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு மீண்டும் ஒரு இடைத் தேர்தலை ரொரன்ரோ கல்விச் சபை நடத்த வேண்டும் அல்லது கல்விச் சபை உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தேர்தல்களில் போட்டியிடுவது ஒருவரின் தனிப்பட்ட நிலைப்பாடு சார்ந்த ஒன்று என்ற போதிலும் கனடாவின் தேர்தல் முறையில் ஒருவர் தனது சொந்தப் பணத்தை தேர்தல் செலவீனங்களுக்கு பயனப்டுத்த முடியாது என்ற விதி பொதுமக்களின் நிதிப்பங்களிப்பை ஒவ்வொரு தேர்தலிலும் வேண்டி நிற்கின்றது.

கனடாவில் உள்ள பல்வேறு தொழில் முனைவோரும் வர்த்தக நிறுவனங்களும் நலன் விரும்பிகள் ஆதரவாளர்களும் தமது விருப்பத்திற்குரிய வேட்பளாருக்கான நிதிப்பங்களிப்பை வழங்கி வருகின்றார்;கள்.
ஆனால் பெரும் பணச் செலவீனத்தோடு நடத்தி முடிக்கப்படும் தேர்தல் ஒன்றில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் அந்த பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் வேறு தேர்தல்லகளில் ஈடுபடுவது அவருக்கு வாக்களித்த மக்களை விரக்கதியடைச் செய்யும் என்ற உண்மையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

கல்விச் சபை உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட பின்னர் நீதன் சான் மாகண சபை உறுப்பினருக்கான தேர்தல்களிலும் தற்போது மாநகர சபை உறுப்பினருக்கான தேர்தலிலும் கலந்து கொண்டுள்ளார்.

இது நீதன் சான் தொடர்பில் தவறான தோற்றப்பாடுகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடும் அபாயத்தை கொண்ட ஒரு விடயம்.
இந்த தேர்தல் வெற்றியை தனது நடவடிக்கைகளுக்கான நியாயம் கற்பித்தலாக நீதன் சான் கருதக் கூடாது என்பதே பலரினதும் எதிர்பார்ப்பாகும்.
ஓன்ராறியோவில் நடைபெறும் தேர்தல்கள் எல்லாவற்றிலும் போட்டியிடும் ஒருவர் என்ற பெயர் நிச்சயம் பெருமைக்குரியதல்ல.
இந்த கருத்துரைப்புகளுக்கு காரணம் 2018ம் ஆண்டு ஒன்ராறியோக மாகணத்தில் தேர்தல் ஆண்டாக அமையவிருக்கின்றது.
ஓன்ராறியோ மகாண சபைக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 7ம் திகதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் 2018 ஆண்டு ரொரன்ரோ நகர சபை மற்றும் கல்விச் சபைகளுக்கான தேர்தலும் நடைபெறவுள்ளது.
கல்விச் சபை உறுப்பினர் பதவி உன்பது பகுதி நேரமானது என்றும் ஒரு கல்விச் சபை உறுப்பினர் ஒருவருக்கு ஆண்டொன்றிற்கு 25000 டொலர்கள் பொடுப்பனவாக வழங்கப்படும் என்றும் நகர சபை உறுப்பினர் ஒருவர் வருடம் ஒன்றிற்கு 112,000 டொலர்களை பெறுவார் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இதுவரை பல தடவைகள் மாகாண சபை உறுப்பினராவதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட நீதன் சான் அடுத்த ஆண்டை எவ்வாறு எதிர் கொள்வார் என்ற கேள்வி தன்னிச்சையாகவே எழுகின்றது.

கடந்த 14 ஆண்டுகளில் 11 தடவைகள் தேர்தல்களில் போட்டியிட்டவர் என நீதன் சான் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டிருந்த நிலையில் இந்த வெற்றி அவர் மீதான விமர்சனங்களுக்கு தற்காலிக ஓய்வினை வழங்கியிருக்கும்.

கடந்த 13 மாதங்களில் அவர் எதிர் கொண்டமூன்றாவது தேர்தல் இது என்பதும் கவனிப்பிற்குரியது.

.அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் பற்றிக் பிரவுண் தலைமையிலான கொன்சவேற்றி கட்சி ஆட்சியமைக்கும் கனவுடன் பல நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது.

மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெறும் தகுதி கொண்ட தமிழ் வேட்பாளர்களை ‘தெரிவு’ செய்வதில் தமிழ் கொன்சவேற்றிகள் கடுமையாக ஈடுபட்டுள்ளார்கள்.

ஏற்கனவே மார்க்கம் நகர சபை உறுப்பினராக விளங்கும் முன்னாள் லிபரல் கட்சியின் தீவிர செயற்பாட்டாளரான லோகன் கணபதியை கொன்சவேற்றிக் கட்சி தனது மாகாண சபை உறுப்பினராக தெரிவு செய்துள்ள நிலையில் மற்றுமொரு நகர சபை உறுப்பினரையும் அவர்கள் வளைக்க முயற்சிக்கிறார்கள் அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள் .

காரணம் கடந்த வாரம் நடைபெற்று முடிந்த இடைத் தேர்தலில் நீதனின் பதாதைகளில் ஏற்பட்டிருந்த நிறமாற்றம் பலரையும் ஆச்சரியப்படவைத்திருந்து. தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து நீல நிறபதாதைகளில் நீதன் சிரித்துக் கொண்டிருந்தார்.

ஏற்கனவே செம்மஞ்சள் நிற பதாதைகளில் இடம்பெற்றிருந்த நீதன் நீலநிறப் பின்னணியில் சிரிப்பது சில பல கேள்விகளை எழுப்பியது.
இந்த கேள்விகள் சமூக வலைத் தளங்களில் அதிர்வுகளை ஏற்படுத்தியதை தொடர்ந்து அவர் செம்மஞ்சள் பின்னணியிலும் சிரிக்கத் தொடங்கினார்.
மாநாகர சபைத் தேர்தல் கட்சி சார்பற்ற தேர்தல் என்றாலும் மாகாண சபைத் தேர்தலுக்கான வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான ஆள்பிடிக்கு உதவும் தேர்தலாகத் தான் பிரதான கட்சிகள் நோக்குகின்றன.

ஏற்கனவே 25 ஆண்டுகாலம் நகரசபை உறுப்பினரான இருந்த ரேமண்ட் சோவை தமது வேட்பாளராக நியமித்து வெற்றி பெற வைத்துள்ள கொன்சவேற்றிக் கட்சி அடுத்த தேர்தலுக்கான ஆயத்தங்களில் புதிய ஜனநாயக் கட்சியின் தமிழ் முககமாக விளங்கும் நீதனை குறிவைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் தமிழ் கொன்சவேற்றிக்கள் நீதனின் தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளில் தம்மை அதிகமாக ஈடுபடுத்தியிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.
எனவே தான் ராதிகா சிற்சபையீசனை தொடர்ந்து புதிய ஜனநாயகக் கட்சியின் நீதன் சானும் கட்சி மாறக் கூடும் என்ற ஊகங்கள் பரவலாக எழுந்திருந்தன.

எனினும் ஆடுத்த ஆண்டு மீண்டும் தான் நகரசபைத் தேர்தலில் போட்டியிடுவதாக நீதன் உறுதியளித்துள்ளார்.

நீதன் மீது இன்னமும் தமிழ் மக்களுக்கு உள்ள நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் தான் இந்த தேர்தலில் அவரை வெற்றி பெற வைத்துள்ளது. அந்த நம்பிக்கை இன்னும் தொடர்வதும் அதனை மேலும் மேலும் பெருக்கிக் கொள்வதும் அவரின் எதிர்கால அரசியில் நகர்வுகளில் பெரிதும் தங்கியுள்ளது.

ரொரன்ரோ நகர சபைக்கு தெரிவான முதலாவது தமிழர் நீதன் சான் என்ற பெருமையோடு கனடாவின் 150 ஆவது ஆண்டை கொண்hடுவோம்.

http://ekuruvi.com/nthanin-verri-2017/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நன்றி  "பத்தினி தெய்வோ கண்ணகியை வணங்கி  உத்வேகம் கொள்ளும் இலங்கைத் தீவில்  யுத்தமென்ற ஒரு போர்வையை சாட்டாக்கி  கொத்துக் கொத்தாய் பாலியல் வல்லுறவு எத்தனை ?" "பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு  மண்டபம் அதிர சலங்கை உடைத்து  உண்மை நாட்டினாள் அன்று, இன்றோ   கண்ணீர் அபலையாக்கி வேடிக்கை பார்க்கிறார்கள் ?"  
    • எனது பார்வையில் - ஈரான் தாக்கும் என்பது கிட்டதட்ட ஈபி காரைநகர் அடித்தது போல் - நடக்க முதலே எல்லாரும் ஊகித்த விடயம். ஆகவே தாக்குதலுக்கு சரியாக ஒரு நாள் முதல் விலை கூடி local peak ஐ அடைந்தது. அதவாது தாக்குதல் நடக்கும் போது ஏலவே price factored-in நிலை. தாக்குதல் முடிந்ததும் profit taking ஆல் விலை கொஞ்சம் இறங்கியது. ஆனால் இஸ்ரேல் தாக்கலாம், சண்டை பெரிதாகலாம் என வாய்ப்பு இருந்த படியால் 84 இல் தரித்து நின்றது. அதற்கு உடனடி வாய்ப்பு இல்லை என்றதும் 82க்கு வந்து விட்டது. ஆனால், இஸ்ரேல் ஈரானிய அதிகாரிகளை தாக்கு முன் இருந்த நிலைக்கு வீழவில்லை. ஆகவே இன்னும் ஒரு சிறிய பதட்டநிலைக்காவது வாய்ப்புள்ளது என சந்தை கருதுவதாகப்படுகிறது எனக்கு. இது ஒரு டைமன்சன் பார்வை மட்டுமே. இன்னொரு வளமாக - அமெரிக்காவின் எண்ணைகுதங்கள் எல்லாம் நிரம்பு நிலைக்கு வந்துவிட்டதால் - கேள்வி குறைவதாகவும் தெரிகிறது. இதை விட வேறு ஒன்று அல்லது பல காரணிகள் எமக்கு தெரியாமல் விலையை தீர்மானிக்க கூடும்.
    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) RIYAN PARAG 15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • நீங்க‌ள் சொல்லுவ‌து புரியுது அண்ணா இந்த‌ திரியில் நேற்றே நான் எழுதி விட்டேன் பிஜேப்பி த‌மிழ் நாட்டில் வ‌ள‌ந்தால் அது ஒட்டு மொத்த‌ த‌மிழ் நாட்டுக்கே ஆப‌த்து என்று த‌மிழ் நாட்டின் விச‌ச் செடி பிஜேப்பி..................இவ‌ர்க‌ள் ஊழ‌ல காட்டி மிர‌ட்டி தான் பாம‌காவை கூட்ட‌ணியில் சேர்த்த‌வை...............ம‌ருத்துவ‌ர் ஜ‌யா ராம‌தாஸ் போன‌ வ‌ருட‌ம் சொன்னார் த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு   பூச்சிய‌த்துக்கு கீழ‌ என்று  அதாவ‌து த‌மிழ் நாட்டில் பிஜேப்பிக்கு ம‌க்க‌ள் ஆத‌ர‌வு இல்லை என்று........... ப‌ல‌ வ‌ருட‌மாய் நோட்டாவுக்கு கீழ‌ நின்று கொண்டு இருந்த‌ பிஜேப்பி த‌மிழ் நாட்டில் ம‌ற்ற‌ க‌ட்சிக‌ளை உடைச்சு முன்னுக்கு வ‌ருவ‌து த‌மிழ் நாட்டுக்கு ஆப‌த்து கோவையில் வ‌ட‌ நாட்டானின் ஆதிக்க‌ம்  அதிக‌ம் த‌மிழ‌ன் மாத‌ம் 18ஆயிர‌ம் ரூபாய்க்கு வேலை செய்த‌ இட‌த்தில் வ‌ட‌க்க‌னின் வ‌ருகைக்கு பிற‌க்கு த‌மிழ‌ர்க‌ளுக்கு வேலை இல்லை வ‌ட‌க்க‌ன் மாத‌ம் 9ஆயிர‌த்துக்கு  வேலை செய்வான்  த‌மிழ‌னே த‌மிழ‌னை நீக்கி விட்டு வ‌ட‌க்க‌னை வேலைக்கு அம‌த்தின‌ம் கார‌ண‌ம் வ‌ட‌க்க‌ன் குறைந்த‌ ச‌ம்ப‌ல‌த்துக்கு வேலை செய்வான்............................வ‌ட‌ நாட்டில் வேலை இல்லாம‌ தான் ஹிந்தி கார‌ங்க‌ள் அதிக‌ம் த‌மிழ் நாட்டுக்கு ப‌டை எடுத்து வ‌ருகின‌ம்😮 ஆனால் ஹிந்தி ப‌டிச்சா வேலை கிடைக்கும் என்று பிஜேப்பி கூட்ட‌ம் பொய் ப‌ர‌ப்புரைய‌ த‌மிழ் நாட்டில் அவுட்டு விட்ட‌வை 5வ‌ருட‌த்துக்கு முத‌ல்.........................த‌மிழ‌ர் அல்லாத‌வ‌ர்க‌ள் த‌மிழ் நாட்டில் ஒரு கோடி பேர் வாழுகின‌ம் அதில் அதிக‌ம் வ‌ட‌க்க‌ன் இதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ஆவ‌த்தில் போய் முடியும்..................... சீமானுக்கு அர‌சிய‌லில் எதிர் கால‌ம் இருக்கு ப‌ய‌ணிக்க‌ நீண்ட‌ தூர‌ம் இருக்கு அண்ணா சீமான் கூட்ட‌னி வைச்சா க‌ட‌சியில் விஜ‌ய‌காந்துக்கு ந‌ட‌ந்த‌து தான் ந‌ட‌க்கும்.......................ச‌ம‌ர‌ச‌ம் செய்யாம‌ எவ‌ள‌வு கால‌ம் தேர்த‌ல‌ ச‌ந்திக்கிறாரோ அவ‌ள‌வ‌த்துக்கு சீமானுக்கும் க‌ட்சிக்கும் ந‌ல்ல‌ம்........................சீமான் போட்ட‌ விதையை அவ‌ரின் த‌ம்பிக‌ள் ச‌ரி செய்வார்க‌ள் ..................... என‌து க‌ணிப்பு நாம் த‌மிழ‌ர் க‌ட்சி இந்த‌ பாராள‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் 7/9 ச‌த‌வீத‌ம்  பெற‌ அதிக‌ வாய்ப்பு..................... ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் போட்டியிட்ட‌ தொகுதியில் ஒரு ஆளுக்கு 2000ரூபாய் ஆளும் அர‌சு கொடுக்குது அப்ப‌டி வீஜேப்பி ஆதிமுக்கா என்று இந்த‌ மூன்று க‌ட்சியும் ஓட்டுக்கு காசு கொடுக்கின‌ம் காசு கொடுக்காம‌ தேர்த‌ல‌ ச‌ந்திக்கும் ஒரே க‌ட்சி நாம் த‌மிழ‌ர் க‌ட்சிம‌ட்டும் தான் 🙏🥰......................................................
    • அதுக்கு நன்றி கடனாக சின்னத்தை முடக்கி மாற்றாக கேட்ட சின்னங்களையும் தேர்தலில் போட்டியிடாத சுயேட்சைகளுக்கு ஒதுக்கி தனது புலனாய்வுப்பிரிவை வீட்டுக்கு அனுப்பி  வாக்கு எந்திரத்தில் சின்னத்தை மங்கலாக்கி மைக் சின்னத்துக்கு மேலையே விவசாயி சின்னத்தை வைத்து தாம் கொஞ்சம் மெருகேற்றி வரைந்து கேட்ட விவசாயி சின்னத்தை போனவாட்டி சமதிக்காமல் இந்த வாட்டி போட்டியிடாத சுயேட்சைக்கு அதே வரைந்த சின்னத்தை அப்படியே கொடுத்து நன்றிக்கடனை சீமானுக்கு பிஜேபி செய்துள்ளது.... அடேங்கப்பா எவ்வளா ஒரு அன்பு பிஜேபிக்கு...
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.