Jump to content

சசிகலா குற்றவாளி..! இனி தமிழக ஆளுநர் என்ன செய்யப் போகிறார்...? #OPSVsSasikala #DACase


Recommended Posts

சசிகலா குற்றவாளி..! இனி தமிழக ஆளுநர் என்ன செய்யப் போகிறார்...? #OPSVsSasikala #DACase

சசிகலா

ட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு அ.தி.மு.க பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஆளுநரை சந்தித்து கடிதம் கொடுத்திருந்தார். இந்த சூழலில், சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருப்பது தமிழகத்தின் அரசியல் சூழலை மேலும் சிக்கலாக்கி இருக்கிறது. இப்போதைக்கு கவர்னர் என்ன செய்யப்போகிறார் என்பதுதான் பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

இன்னொருபுறம் முதல்வர் பன்னீர்செல்வம் தமது ராஜினாமா கடித த்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாகச் சொல்லி இருக்கிறார். எனவே, முதலில் பன்னீர்செல்வத்தை அழைத்து பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் சொல்லலாம். ஓ.பி.எஸ் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால், அவர் பதவி விலக நேரிடும். அப்போது சசிகலாவால் சுட்டிக்காட்டப்படும் நபர் ஆளுநரிடம் சென்று தமக்கு இருக்கும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுப் பட்டியலை அவர் தரக்கூடும். அதன் அடிப்படையில் அவரை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கலாம். சசிகலா ஆதரவு அணி ஆட்சி அமைத்த தில் இருந்தது ஆளுநர் தரும் கெடுவுக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். அப்போதுதான் அவர் முதல்வராக ஆட்சியில் தொடர முடியும். இதுதான் மரபு.

வித்யா சாகர் ராவ்

சட்டசபையில் வாக்கெடுப்பு முறை எப்படி இருக்கும்?

மூத்த அரசியல்வாதியான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பீட்டர் அல்போன்சிடம் கேட்டோம். "ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சி தரும் எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதங்களின் அடிப்படையில் ஆட்சி அமைக்க ஆளுநர் அனுமதிப்பார். பின்னர் அந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்று எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டால், அதன் அடிப்படையில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி ஆளும் கட்சிக்கு ஆளுநர் உத்தரவிடுவார். சட்டசபையில் ஆளும் கட்சி மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை அந்த கட்சியின் அவை முன்னவர் முன்மொழிவார். அந்தத் தீர்மானம் குரல் ஓட்டெடுப்புக்கு விடப்படும். குரல் வாக்கெடுப்பில் பெரும்பான்மை இருப்பதாக சபாநாயகர் சொன்னால், அது ஏற்கப்படும்.

எதிர் அணியினர் அதை ஏற்க மறுத்து, ஆட்சிக்கு ஆதரவு அளிக்கும் எம்.எல்.ஏ-க்களை எண்ணி அதனை வெளியிட வேண்டும் என்று கேட்கலாம். அப்படிக் கேட்கும் பட்சத்தில், அவையின் கதவுகள் அடைக்கப்பட்டு, ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிப்பவர்களை கைகளை உயர்த்தச் சொல்லி அவர்களை சட்டசபை செயலகத்தின் பணியாளர்கள் எண்ணுவார்கள். அந்த எண்ணிக்கையை சபாநாயகரிடம் கொடுப்பார்கள். 117 பேரின் ஆதரவை நிரூபித்தால் அந்த ஆட்சி தொடரும். பெரும்பான்மை நிரூபிக்கப்படும் நாளில் ஒவ்வொரு கட்சி சார்பிலும் கொறடா உத்தரவு போடப்படும். தங்கள் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் அவசியம் சபையில் இருக்க வேண்டும் என்று கட்சிகளின் கொறடா  உத்தரவிடுவார்" என்றார்.

நம்பிக்கைத் தீர்மானம் முன்மொழியப்படும்போது அவையில் இருந்து ஆதரவு தரும் எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைப் பொறுத்தும் நம்பிக்கைத் தீர்மானத்தின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படுகிறது. இது குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயனிடம் பேசினோம்.
"அசாதாரண சூழலில் சட்டசபையை கூட்ட ஆளுநருக்கு அதிகாரம் உண்டு. ஆட்சி அமைக்க உரிமை கோரிய கட்சி, சபையில் பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கைத் தீர்மானத்தை முன்மொழியலாம். தீர்மானம் கொண்டு வரப்படும் சமயத்தில் சபையில் இருக்கும் எம்.எல்.ஏ-க்களில் எத்தனைபேர் நம்பிக்கைத் தீர்மானத்தினை ஆதரித்து வாக்களிக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். உதாரணத்துக்கு சபையில் இருக்கும் 50 எம்.எல்.ஏ-க்களில் 40 பேர் ஆதரவு தெரிவித்தால் கூட அந்த ஆட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது என்று அர்த்தம்தான்" என்றார்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியான நிலையில் ஆளுநர் இப்போது முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அவர் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என்பதே தற்போதைய எதிர்பார்ப்பு.

http://www.vikatan.com/news/coverstory/80725-sasikala-convicted-in-da-case--what-will-be-the-next-move-of-governor--opsvssasikala-dacase.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.