Jump to content

பன்னீர் செல்வத்தின் ‛ஆபரேஷன் கூவத்தூர்'


Recommended Posts

 

 

Tamil_News_large_1710725_318_219.jpg
 

பன்னீர் செல்வத்தின் ‛ஆபரேஷன் கூவத்தூர்'

 

சென்னை: சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில், தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை அதிகரிக்க பன்னீர் தரப்பில் அதிரடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
 

 

பொங்கிய பன்னீர்:


கட்சியையும், ஆட்சியையும் கைப்பற்ற, சசிகலா செய்த சதியை, கடந்த 7ம் தேதி ஜெயலலிதா சமாதி முன், முதல்வர் பன்னீர்செல்வம் போட்டுடைத்தார். அவரிடம் இருந்து, முதல்வர் பதவியை பறிக்க, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதம் வாங்கியதையும், அவர் அம்பலப்படுத்தினார். அவருக்கு ஆதரவாக அ.தி.முக., தொண்டர்களும், தமிழக மக்களும் அணி வகுத்துள்ளனர். இதுவரை ஓ.பி.எஸ்., அணியில் எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை 8 ஆகவும், ஆதரவு எம்.பி.,க்களின் எண்ணிக்கை 12 ஆகவும் உள்ளது.
 

 

அதிரடி திட்டம்:


இந்நிலையில் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களின் பலத்தை அதிகரிக்க சசிகலா அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்களை இழுக்க பன்னீர் தரப்பில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதன் முதல்கட்டமாக சசி தரப்பிற்கு ஆதரவான கூடுதல் எஸ்.பி., ஜெயச்சந்திரன் கன்னியாகுமரிக்கு நேற்று அதிரடியாக மாற்றப்பட்டார். தொடர்ந்து உளவுத்துறையில் உள்ள தனது ஆதரவு அதிகாரிகள் மூலம், கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் தற்போதைய செல்போன்கள் சேகரிக்கப்பட்டு, ரகசிய பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையின் பலனாகவே மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., சரவணன், பன்னீர் தரப்பில் இணைந்தார். தொடர்ந்து கூவத்தூரிலுள்ள எம்.எல்.ஏ.,க்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
 

 

அபரேஷன் கூவத்தூர்:

 

இன்று(பிப்.,14) சசிகலாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. இதில் சசிக்கு எதிராக தீர்ப்பு வரும் பட்சத்தில், கூவத்தூர் சொகுசு விடுதியில் அதிரடி ஆய்வு செய்து, அங்கிருந்து வெளியேற விரும்பும் எம்.எல்.ஏ.,க்களை அழைத்து செல்ல பன்னீர் தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருவேளை சசிக்கு ஆதவாக தீர்ப்பு வரும் பட்சத்தில், சட்டசபையில் பலத்தை நிரூபிக்க கவர்னர் உத்தவரவிடுவார். அப்போது தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, சசி கட்டுப்பாட்டில் உள்ள எம்.எல்.ஏ.,க்களை சட்டசபையில் தனக்கு ஆதரவாக ஓட்டளிக்கவும் பன்னீர் தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710725

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.