Jump to content

இந்தியா எதிர் அவுஸ்திரேலியா டெஸ்ட் போட்டி செய்திகள்


Recommended Posts

3-வது நாள் தேனீர் இடைவேளை: 4 விக்கெட்டை இழந்து இந்தியா 35 ரன்கள் முன்னிலை

பெங்களூரு டெஸ்டில் 3-வது நாள் தேனீர் இடைவேளை வரை இந்தியா 4 விக்கெட்டுக்களை இழந்து 35 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

3-வது நாள் தேனீர் இடைவேளை: 4 விக்கெட்டை இழந்து இந்தியா 35 ரன்கள் முன்னிலை
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் அள்ளினார்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் சேர்த்திருந்தது. வடே 25 ரன்னுடனும், ஸ்டார்க் 14 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா 276 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இந்தியாவை விடை 87 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ஜடேஜா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

51D212D9-B8F5-419F-A577-2AAD836537DA_L_s
அரைசதம் அடித்த லோகேஷ் ராகுல்

87 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. அபிநவ் முகுந்த், லோகேஷ் ராகுல் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார்கள். 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 10 ஒவரில் விக்கெட் இழப்பின்றி 38 ரன்கள் எடுத்திருந்தது. ராகுல் 20 ரன்னுடனும், முகுந்த் 16 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கியதும் அபிநவ் முகுந்த், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஹசில்வுட் பந்தில் க்ளீன் போல்டானார். ரிவர்ஸ் ஸ்விங் மூலம் ஹசில்வுட் இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தினார்.

612191FD-6CA1-4745-B6B2-1EF4823C200D_L_s
ஹசில்வுட் பந்தில் ஸ்டம்பை பறி்கொடுத்த அபிநவ் முகுந்த்

அடுத்து புஜாரா களம் இறங்கினார். இவர் ராகுலுடன் இணைந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைசதம் அடித்த ராகுல் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஓ'கீபே பந்தில் தேவையில்லாமல் அவுட் ஆனார்.

அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (15), ஜடேஜா (2) ஆகியோரை அடுத்தடுத்து வெளியேற்றினார் ஹசில்வுட். இவரது அபார பந்து வீச்சால் 3-வது நாள் தேநீர் இடைவேளை வரை இந்தியா 122 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்துள்ளது.

6220CDA3-5A9E-4417-B30B-F2D7153C446A_L_s
ஸ்டார்க் பந்தை கட்ஷாட் ஆட முயற்சி செய்யும் புஜாரா

தற்போது வரை இந்தியா 35 ரன்கள் மட்டுமே முன்னிலைப் பெற்றுள்ளது. புஜாரா 34 ரன்னுடனும், ரகானே 2 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். புஜாரா நீண்ட இன்னிங்ஸ் விளையாடி, இந்தியா 150 ரன்கள் முன்னிலைப் பெற்றால் ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுக்கலாம்.

http://www.maalaimalar.com/News/TopNews/2017/03/06144516/1072134/INDvAUS-3rd-day-tea-india-4-wicket-loss-lead-just.vpf

Link to comment
Share on other sites

  • Replies 136
  • Created
  • Last Reply

பெங்களூரு டெஸ்ட்: இந்திய அணி 122 ரன்னுக்கு 4 விக்கெட்கள் இழப்பு

 

 
 
 
இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் | படம்: ராய்ட்டர்ஸ்
இந்திய தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் | படம்: ராய்ட்டர்ஸ்
 
 

பெங்களூரு டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி 122 ரன்னுக்கு 4 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. இதன் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலியாவைவிட 35 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 237 ரன்கள் சேர்த்தது.

இந்நிலையில் இன்று (திங்கட்கிழமை) மூன்றவது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி 276 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இந்தியாவை விட 87 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 6 விக்கெட்களை வீழ்த்தினார்.

Jadejajpg_3140522a.jpg

6 விக்கெட்டுகளை வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா

இதனையடுத்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபினவ் முகுந்த், லோகேஷ் ராகுல் இறங்கினர்.

இந்திய அணியின் ஸ்கோர் 39ஆக இருக்கும்போது அபினவ் முகுந்த் 16 ரன்னில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து லோகேஷ் ராகுல் 51 ரன்னிலும் ஆட்டமிழக்க, இந்திய கேப்டன் விராத் கோலி 15 ரன்னிலும், ரவீந்திர ஜடேஜா 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் ஜோஷ் ஹாஸ்லிவுட் 3 விக்கெட்களையும், ஸ்டீவ் ஓ கீஃப்பி (Steve O'Keefe) விக்கெட்டையும் எடுத்தனர்.

உணவு இடைவேளைக்கு முன்புவரை இந்தியா 39 ஓவர் முடிவில், 122 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியாவைவிட 35 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் புஜாரா 44 ரன்னுடமும், ரஹானே 15 ரன்னுடன் நிதானமாக விளையாடி வருகின்றனர்.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நாதன் லயனின் சுழலில் 71.2 ஓவரில் 189 ரன்களுக்கு சுருண்டது குறிப்பிடத்தக்கது.

http://tamil.thehindu.com/sports/பெங்களூரு-டெஸ்ட்-இந்திய-அணி-122-ரன்னுக்கு-4-விக்கெட்கள்-இழப்பு/article9572085.ece?homepage=true

India 189 & 213/4 (72.0 ov)
Australia 276
India lead by 126 runs with 6 wickets remaining
Link to comment
Share on other sites

தொடர்ந்து ஸ்லெட்ஜிங்: இந்திய கேப்டன்  கோலி மீது இயன் ஹீலி கடும் தாக்கு

 

 
 

பெங்களூருவில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடர்ந்து ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டதற்கு இயன் ஹீலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
தொடர்ந்து ஸ்லெட்ஜிங்: இந்திய கேப்டன் விராம் கோலி மீது இயன் ஹீலி கடும் தாக்கு
 
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆஸ்திரேலியா பேட்டிங் செய்யும்போது இரு அணி வீரர்களும் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டனர்.

குறிப்பாக ஸ்மித் - இசாந்த் சர்மா இடையே ஸ்லெட்ஜி்ங் அதிக அளவில் நடைபெற்றது. ஸ்மித் பந்தை எதிர்கொண்ட பின்னர் இரண்டு தோள்பட்டைகளையும் சற்று அங்குமிங்கும் அசைப்பார். இசாந்த் சர்மா பந்து வீசிய பின்னர் தனது முகத்தை வித்தியாசமாக வைத்துக் கொண்டு ஸ்மித்தை போன்று உடல்அசைவை ஏற்படுத்தி வெறுப்பேற்றினார். இப்படி அடிக்கடி நடந்தது. அதேபோல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தொடக்க வீரர் ரென்ஷாவிடம், புனே டெஸ்டில் அவர் ‘டாய்லெட் பிரேக்’ எடுத்ததை ஞாபகப்படுத்தினார். மேலும் இந்திய ரசிகர்களை சத்தம் போடச் சொல்லி நெருக்கடியை ஏற்படுத்தினார்.

ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்ட விராட் கோலியின் செயலுக்கு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி கண்டனம் தெரிவித்துள்ளார்.

16111EFF-AFA2-4CC6-ADD6-DFAFF50DF9AB_L_s

இதுகுறித்து இயன் ஹீலி கூறுகையில் ‘‘நெருக்கடி விராட் கோலியை இப்படி ஸ்லெட்ஜிங்கில் கொண்டு வந்து சேர்த்துள்ளது. எதிரணியின் மரியாதையை பெரிய அளவில் விராட் கோலி பெற வேண்டும். ஸ்மித் உடன் அவர் மேற்கொண்ட மோதல் ஏற்கத்தக்கதல்ல.

E4DCE7D6-D6E5-40E2-8165-A42FC153D732_L_s

நான் பார்த்ததிலேயே சிறந்த பேட்ஸ்மேன் விராட் கோலி என்று இதற்கு முன் தெரிவித்துள்ளேன். அவருடைய ஆற்றல் மற்றும் உண்மையான ஆக்ரோஷம் இதற்கு முன் எதிரணியை நோக்கி இருக்கும்போது சிறந்ததாக இருந்தது. குறிப்பாக அவர் கேப்டனாக இல்லாதபோது ஆக்ரோஷம் சிறப்பாக இருந்தது. ஆகவே, கோலியின் ஆக்ரோஷம் அவர்களுக்கு சிறந்ததாக இருந்தது.

C5FFD8D2-3A99-4988-8272-15E4B3B1A16B_L_s

ஆனால் தற்போதைய அவரது ஸ்லெட்ஜிங் அவர்களுக்கு நல்லதாக இல்லை. தங்களுடைய அணி வீரர்கள் மீது நெருக்கடியை திணிக்கிறார். உங்களால் அஸ்வின் நெருக்கடிக்கு உள்ளானதை அவரது முகத்தை பார்த்திருந்தால் அறிய முடிந்திருக்கும். கோலியிடம் பெரிய அளவில் விரிசல்கள் உள்ளன’’ என்றார்.

ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பராக கில்கிறிஸ்ட் வருவதற்கு முன் அந்த அணியின் தலைசிறந்த விக்கெட் கீப்பராக இருந்தவர் இயன் ஹீலி என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணிக்காக 119 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/06210109/1072205/India-vs-Australia-2nd-Test-Virat-Kohli-slammed-by.vpf

Link to comment
Share on other sites

ஆஸ்திரேலியாவுக்கு 188 ரன் வெற்றி இலக்கு!

aus_test_team_11015.jpg

பெங்களூரில் நடந்துவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி இலக்காக 188 ரன்களை  நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

முதல் இன்னிங்ஸில், இந்திய அணி 189 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, ராகுல் 90 ரன்கள் குவித்தார். கேப்டன் கோலி 12 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலிய வீரர் லயான் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி, 276 ரன்கள் குவித்தன. அதிகபட்சமாக, மார்ஷ் 66 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் ஜடேஜா ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

87 ரன்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி வீரர்கள், ஆஸ்திரேலிய வீரர் ஹாலில்வுட் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். நான்காவது நாள் ஆட்டத்தில், 97.1 ஓவரில் இந்திய அணி 274 ரன்னில் ஆட்டம் இழந்தது. அதிகபட்சமாக, புஜாரா 92 ரன்களும், ராகுல் 51 ரன்களும், ரஹானே 52 ரன்களும் எடுத்தனர். கேப்டன் கோலி, இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பினார். இவர்,  15 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஆஸ்திரேலிய வீரர் ஹாலில்வுட் ஆறு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

India 189 & 274
Australia 276 & 110/8 (35.0 ov)
Australia require another 78 runs with 2 wickets remaining
Link to comment
Share on other sites

அஸ்வின் சுழலில் மிரண்டது ஆஸ்திரேலியா! இந்தியா அபார வெற்றி

பெங்களூரில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 75 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியது. அஸ்வின் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்டார்.

Ashwin

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூரில் நடந்தது.  இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில்  276 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 274 ரன்கள் எடுத்து. புஜாரா 92, ரஹானே 52, ராகுல் 51 ரன்கள் எடுத்தனர்.  இதையடுத்து 188 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 112 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இந்திய அணி சார்பில் அஸ்வின் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, சுழல் ஜாலம் செய்தார். யாதவ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஸ்மித் 28 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில், இரு அணிகளும் 1-1 என்ற சமநிலையில் உள்ளன.

http://www.vikatan.com/news/sports/82937-india-beats-australia-in-second-test-match.html

Link to comment
Share on other sites

ரிவியூ: டிரஸ்ஸிங் ரூமில் ஆலோசனைக் கேட்டு நடுவர், இந்திய வீரர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஸ்மித்

பதிவு: மார்ச் 07, 2017 17:19

 
 

எல்.பி.டபிள்யூ. ரிவியூ குறித்து டிரஸ்ஸிங் ரூமில் ஆலோசனைக் கேட்டதால் நடுவர் மற்றும் இந்திய வீரர்களிடம் ஸ்மித் வசமாக வாங்கி கட்டிக் கொண்டார்.

 
 
 
 
ரிவியூ: டிரஸ்ஸிங் ரூமில் ஆலோசனைக் கேட்டு நடுவர், இந்திய வீரர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஸ்மித்
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த தொடரில் நடுவர் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால், அதை தெளிவுப்படுத்துவதற்காக ரிவியூ முறை பயன்படுத்தப்படுகிறது.

80 ஓவருக்கு ஒருமுறை இரு அணிகளுக்கும் தலா இரண்டு ரிவியூ வாய்ப்பு வழங்கப்படும். வார்னர் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழக்கும்போது, நடுவர் தீர்ப்பை எதிர்த்து ஆஸ்திரேலியா ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தியது. அப்போது நடுவர் தீர்ப்பு உறுதியானதால் அந்த அணியின் ஒரு ரிவியூ வீணானது.

15-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ஷேன் மார்ஷ் எல்.பி.டபிள்யூ ஆனார். தங்களிடம் ஒரேயோரு ரிவியூ இருந்ததால் அந்த அணி ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தவில்லை. ஆனால் வீடியோ ரீபிளேயில் பந்து ஸ்டம்பை தாக்காமல் சென்றது. இதனால் இந்தியாவிற்கு அதிர்ஷ்டம் இருந்தது.

21-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஸ்மித் எல்.பி.டபிள்யூ ஆனார். நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் 15 வினாடிக்குள் பேட்ஸ்மேன் ரிவியூ வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். தன்னுடைய எல்.பி.டபிள்யூ அவுட் சரியானது என்று தெரிந்த ஸ்மித் மீதமிருக்கும் ஒரு ரிவியூ வாய்ப்பை வீணாக்க விரும்பவில்லை.

அதற்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் டிரஸிங் ரூமில் இருந்து கொண்டு டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப அதிகாரிகளிடம் ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தலாமா? என்று சாடையில் கேட்டார்.

விதிமுறைக்கு மாறாக இப்படி ஸ்மித் செய்ததை நடுவர் பார்த்து விட்டார். அதேசமயத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் ரகானே ஆகியோரும் பார்த்துவிட்டனர். ஸ்மித்தின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த நடுவர், அவரை களத்தில் இருந்து உடனடியாக வெளியேற வலியுறுத்தினார்.

இந்திய வீரர்களும் ஸ்மித்தை சுற்றி வளைத்தனர். அப்போது நடுவர் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தார். அப்போது அவர்கள் நடுவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


B7C15298-1B1B-4F5E-B935-87CAF1B01319_L_s
இந்த சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ‘‘DRS என்பது டிரெஸ்ங் ரூம் ரிவியூ சிஸ்டமா?’’ என்று கேலியாக பதிவு செய்துள்ளது.

E4416C6C-6F39-459A-B545-9505EB70C55A_L_s

ஸ்மித் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் ‘‘நான் அவுட்டான நேரத்தில் சற்று மூளை மழுங்கி விட்டது. நான் அப்படி செய்திருக்கக்கூடாது.

7C4A73DE-8CE6-4747-BAE7-00BF5E87703A_L_s

நல்ல நோக்கத்திற்காக இந்த போட்டி விளையாடப்படுகிறது என்ற அக்கறை உள்ளது. யாரும் விதிமுறையை மீறவில்லை’’ என்று பதிவு செய்துள்ளார்.

 

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/07171904/1072364/Steven-Smith-Apologises-to-Virat-Kohli-for-Dressing.vpf

 

 

Link to comment
Share on other sites

பெங்களூரு டெஸ்ட் சாதனைத் துளிகள்

பெங்களூரு டெஸ்ட் மூலம் இந்தியா பல சாதனைகள் படைத்துள்ளது. ஆஸ்திரேலியா மோசமாக சாதனைகள் படைத்துள்ளது. அதை விரிவாக பார்ப்போம்.

 
பெங்களூரு டெஸ்ட் சாதனைத் துளிகள்
 
பெங்களூருவில் நடைபெற்ற இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவிற்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலியா 112 ரன்னில் சுருண்டு 75 ரன்னில் தோல்வியடைந்தது.

இதன்மூலம் அந்த அணி பல்வேறு மோசமான சாதனைகளுக்கு சொந்தமாகியுள்ளது. இந்தியா பல சாதனைகளை படைத்துள்ளது.

அதை இங்கே காண்போம்:-

1. 200 ரன்களுக்குள் இலக்கு நிர்ணயித்து அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது இது 3-வது முறையாகும். இதற்கு முன் 1996-97-ல் அகமதாபாத்தில் தென்ஆப்பிரிக்காவிற்கு 170 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. அதில் இந்தியா 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 1980-81-ல் மெல்போர்ன் மைதானத்தில் 143 ரன்கள் இலக்காக நிர்ணயித்திருந்தது.

2. முதல் இன்னிங்சில் இந்தியா 87 ரன்கள் பின்தங்கியிருந்தது. இந்த வெற்றியின் மூலம் அதிக ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்து வெற்றி பெறுவது இது நான்காவது முறையாகும். இதற்கு முன் 2001-ல் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 274 ரன்கள் பின்தங்கியிருந்தது. 2004-ல் மும்பை வாங்கடே மைதானத்தில் 99 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது.

3. ஆஸ்திரேலியா அணி கடைசி 6 வி்க்கெட்டுக்களை 12 ரன்னில் இழந்தது. இது விரைவாக விக்கெட்டை இழப்பதில் 3-வது இடமாகும். 12 ரன்னில் 7 விக்கெட்டுக்களை இழந்து இந்தியா 2-வது இடத்தில் உள்ளது.

4. அஸ்வின் 47 டெஸ்டில் 25 முறையாவது 5 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் விரைவாக 25 முறை ஐந்து வி்க்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். ரிச்சர் ஹாட்லி 62 போட்டிகள் மூலம் 2-வது இடத்திலும், முரளீதரன் 63 போட்டிகள் மூலம் 3-வது இடத்திலும் உள்ளனர். அனில் கும்ப்ளே 86 போட்டிகளிலும், ஹர்பஜன் சிங் 93 போட்டிகளிலும் இந்த சாதனையை பெற்றுள்ளனர்.

5. அஸ்வின் மொத்தம் 269 விக்கெட்டுக்கள் கைப்பற்றியுள்ளார். இதன் மூலம் அதிக வி்க்கெட்டுக்கள் வீழ்த்திய ஐந்தாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மேலும் இந்திய மண்ணில் 30 போட்டிகளில் 200 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.

6. பெங்களூரு டெஸ்டில் நான்கு பந்து வீச்சாளர்கள் (லயன், ஜடேஜா, ஹசில்வுட், அஸ்வின்) 6 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். இப்படி நடப்பது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் முதன்முறை.

7. இந்தியாவின் கடைசி ஐந்து விக்கெட்டுக்களின் சராசரி 33 மற்றும் 36 ஆகும். புனே டெஸ்டில் 10 மற்றும் 18 ஆகும்.

201E49B0-3D39-4E5D-86A3-1CA3A55F35DA_L_s

8. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவர் (ஹசில்வுட் 6 விக்கெட் வீழ்த்தியிருந்தார்) இந்திய மண்ணில் அதிக வி்க்கெட்டுக்கள் வீழ்த்தியிருப்பது இது 2-வது முறையாகும். இதற்கு முன் 1979-ல் ஜெஃப் டைமோக் 67 ரன்கள் விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.  ஒட்டுமொத்தமாக அவரது சிந்த பந்து வீச்சு இதுவாகும்.

9. ஆசிய மண்ணில் நாதன் லயன் முதல் இன்னிஙசில் 38 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். சராசரி 30.84 ஆகும். ஆனால் 2-வது இன்னிங்சில் 17 விக்கெட்டுக்கள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். சராசரி 47.82 ஆகும். இந்திய மண்ணில் முதல் இன்னிங்சில் 20 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 8 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.

90 ரன்களுக்கு மேல் சென்று சதம் அடிக்காமல் அவுட்டாவது புஜாராவிற்கு இதுவே முதல் முறையாகும். இன்றைய போட்டியில் அவர் 92 ரன்னில் ஆட்டம் இழந்து சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/07194423/1072394/Bengalur-test-good-record-and-bad-record-list.vpf

Link to comment
Share on other sites

ரகானே- புஜாரா ஜோடி எங்களை புண்படுத்தி விட்டது: தோல்வி குறித்து ஸ்மித் கருத்து

 

 
 

பெங்களூருவில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் ரகானே - புஜாரா ஜோடி எங்களை புண்படுத்திவிட்டது என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.

 
 
 
 
ரகானே- புஜாரா ஜோடி எங்களை புண்படுத்தி விட்டது: தோல்வி குறித்து ஸ்மித் கருத்து
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்தியா 87 ரன்கள் பின்தங்கியிருந்தது. ஒரு கட்டத்தில் இந்தியா 120 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுக்களை இழந்திருந்தது. அப்போது இந்தியா 37 ரன்கள்தான் முன்னிலைப் பெற்றிருந்தது.

ஐந்தாவது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி ஐந்தாவது வி்க்கெட்டுக்கு 118 ரன்கள் குவித்தது. இந்த தொடரில் இதுதான் ஒரு ஜோடியின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்த ஜோடியின் சிறந்த ஆட்டத்தால்தான் இந்தியா 187 ரன்கள் முன்னிலைப் பெற முடிந்தது. புஜாரா 92 ரன்னும், ரகானே 52 ரன்னும் சேர்த்தனர்.

இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டம்தான் எங்களை தோல்விக்குக்குள் தள்ளிவிட்டது என்று ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் கூறியுள்ளார்.

இதுகுறித்து ஸ்மித் மேலும் கூறுகையில் ‘‘இது ஒரு சிறந்த டெஸ்ட் போட்டி. எங்கள் வீரர்கள் ஆட்டத்தை பார்த்து பெருமையடைகிறேன். ரகானே - புஜாரா ஜோடி எங்களை புண்படுத்திவிட்டது. அவர்கள் மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இன்று எங்களுக்கு சிறந்த நாட்களாக இல்லை. இந்த ஆடுகளத்தில் விளையாடுவதற்கு மிகவும் கடினமாக இருந்தது.

70049CCB-B74D-4D60-88D6-3E4B7C8CBFF5_L_s

போட்டி முழுவதும் பந்து திடீர் திடீர் என பவுன்சராகவும், மிகத்தாழ்வாகவும் வந்தது. ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே ஆடுகளம் மிகவும் கரடு முரடாக இருந்தது. மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், டெஸ்ட் போட்டி மிகவும் எளிதாக இருக்காது. இதுபோன்ற ஆடுகளத்தில் அதிக அளவில் நடுவர்கள் முடிவை எதிர்த்து ரிவியூ கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

எந்தவொரு நடுவராக இருந்தாலும் சில நேரம் தவறு செய்வார்கள். ஆனால் அவர்கள் தவறு செய்வதாக நான் சொல்ல வரவில்லை. தொடர் சிறப்பாக உள்ளது. இன்னும் உயிரோட்டத்துடன்தான் இருக்கிறது. 3-வது டெஸ்டில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/07180157/1072381/The-partnership-between-Rahane-and-Pujara-hurt-us.vpf

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:

ரிவியூ: டிரஸ்ஸிங் ரூமில் ஆலோசனைக் கேட்டு நடுவர், இந்திய வீரர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஸ்மித்

பதிவு: மார்ச் 07, 2017 17:19

 
 

எல்.பி.டபிள்யூ. ரிவியூ குறித்து டிரஸ்ஸிங் ரூமில் ஆலோசனைக் கேட்டதால் நடுவர் மற்றும் இந்திய வீரர்களிடம் ஸ்மித் வசமாக வாங்கி கட்டிக் கொண்டார்.

 
 
 
 
ரிவியூ: டிரஸ்ஸிங் ரூமில் ஆலோசனைக் கேட்டு நடுவர், இந்திய வீரர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஸ்மித்
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 188 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா.

இந்தியாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இந்த தொடரில் நடுவர் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால், அதை தெளிவுப்படுத்துவதற்காக ரிவியூ முறை பயன்படுத்தப்படுகிறது.

80 ஓவருக்கு ஒருமுறை இரு அணிகளுக்கும் தலா இரண்டு ரிவியூ வாய்ப்பு வழங்கப்படும். வார்னர் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழக்கும்போது, நடுவர் தீர்ப்பை எதிர்த்து ஆஸ்திரேலியா ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தியது. அப்போது நடுவர் தீர்ப்பு உறுதியானதால் அந்த அணியின் ஒரு ரிவியூ வீணானது.

15-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் ஷேன் மார்ஷ் எல்.பி.டபிள்யூ ஆனார். தங்களிடம் ஒரேயோரு ரிவியூ இருந்ததால் அந்த அணி ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தவில்லை. ஆனால் வீடியோ ரீபிளேயில் பந்து ஸ்டம்பை தாக்காமல் சென்றது. இதனால் இந்தியாவிற்கு அதிர்ஷ்டம் இருந்தது.

21-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஸ்மித் எல்.பி.டபிள்யூ ஆனார். நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் 15 வினாடிக்குள் பேட்ஸ்மேன் ரிவியூ வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். தன்னுடைய எல்.பி.டபிள்யூ அவுட் சரியானது என்று தெரிந்த ஸ்மித் மீதமிருக்கும் ஒரு ரிவியூ வாய்ப்பை வீணாக்க விரும்பவில்லை.

அதற்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் டிரஸிங் ரூமில் இருந்து கொண்டு டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப அதிகாரிகளிடம் ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தலாமா? என்று சாடையில் கேட்டார்.

விதிமுறைக்கு மாறாக இப்படி ஸ்மித் செய்ததை நடுவர் பார்த்து விட்டார். அதேசமயத்தில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் ரகானே ஆகியோரும் பார்த்துவிட்டனர். ஸ்மித்தின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த நடுவர், அவரை களத்தில் இருந்து உடனடியாக வெளியேற வலியுறுத்தினார்.

இந்திய வீரர்களும் ஸ்மித்தை சுற்றி வளைத்தனர். அப்போது நடுவர் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தார். அப்போது அவர்கள் நடுவரிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


B7C15298-1B1B-4F5E-B935-87CAF1B01319_L_s
இந்த சம்பவம் குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ‘‘DRS என்பது டிரெஸ்ங் ரூம் ரிவியூ சிஸ்டமா?’’ என்று கேலியாக பதிவு செய்துள்ளது.

E4416C6C-6F39-459A-B545-9505EB70C55A_L_s

ஸ்மித் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டரில் ‘‘நான் அவுட்டான நேரத்தில் சற்று மூளை மழுங்கி விட்டது. நான் அப்படி செய்திருக்கக்கூடாது.

7C4A73DE-8CE6-4747-BAE7-00BF5E87703A_L_s

நல்ல நோக்கத்திற்காக இந்த போட்டி விளையாடப்படுகிறது என்ற அக்கறை உள்ளது. யாரும் விதிமுறையை மீறவில்லை’’ என்று பதிவு செய்துள்ளார்.

 

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/07171904/1072364/Steven-Smith-Apologises-to-Virat-Kohli-for-Dressing.vpf

 

 

 

ரிவியூ: டிரஸ்ஸிங் ரூமில் ஆலோசனைக் கேட்டு நடுவர், இந்திய வீரர்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட ஸ்மித்

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 13/02/2017 at 9:26 PM, நவீனன் said:

நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸி. அணி இந்தியா வந்தது

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணி இன்று மும்பை வந்தடைந்துள்ளது.

 
நான்கு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸி. அணி இந்தியா வந்தது
 
இந்தியா - வங்காள தேசம் அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடர் இன்று முடிவடைந்தது. அடுத்து இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. முதல் போட்டி வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது.

இதற்காக ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி இன்று இந்தியா வந்துள்ளது. துபாயில் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்த அந்த அணி துபாயில் இருந்து மும்பை வந்தடைந்தது. பின்னர் அவர்கள் தெற்கு மும்பையில் உள்ள ஓட்டலுக்குச் சென்றனர். இந்திய ‘ஏ’ அணிக்கெதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. அதுவரை மும்பையில் தங்கியிருக்கும் ஆஸ்திரேலிய அணி பின்னர் முதல் போட்டி நடைபெறும் புனேயிற்குச் செல்லும். பயிற்சி ஆட்டம் 15-ந்தேதி தொடங்குகிறது.

ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் விவரம்:-

1. பிப்ரவரி 17-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை: இந்தியா ‘ஏ’ - ஆஸ்திரேலியா - மும்பை
2. பிப்ரவரி 23-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை: முதல் டெஸ்ட் - புனே
3. மார்ச் 4-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை: 2-வது டெஸ்ட் - பெங்களூரு
4. மார்ச் 16-ந்தேதி முதல் 20-ந்தேதி வரை: 3-வது டெஸ்ட் - ராஞ்சி
5. மார்ச் 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை: 4-வது டெஸ்ட் - தரம்சலா

http://www.maalaimalar.com/News/Sports/2017/02/13205313/1068126/Australian-team-arrives-for-four-Test-series.vpf

இந்தியா அதிர்ச்சி வெற்றி.என்றாலும் அந்த வெற்றிக்கு நம்ம அஷ்வின் காரனம் என்னும் போது மனது ஏனோ தானாக துள்ளுது.நன்றி நவீனன் உங்கள் தொடர் பதிவுகளுக்கு.

Link to comment
Share on other sites

4 minutes ago, சுவைப்பிரியன் said:

இந்தியா அதிர்ச்சி வெற்றி.என்றாலும் அந்த வெற்றிக்கு நம்ம அஷ்வின் காரனம் என்னும் போது மனது ஏனோ தானாக துள்ளுது.நன்றி நவீனன் உங்கள் தொடர் பதிவுகளுக்கு.

அவனவன் குட்டி சிங்கம் பெங்களூர்ல இருக்கிறதால என்கிறான்.
நீங்கள் அஸ்வின் என்கிறீர்களே! :grin:

Link to comment
Share on other sites

பெங்களூரு டெஸ்ட்: இந்திய அணிக்கு திருப்பம் தந்த விக்கெட்

பதிவு: மார்ச் 08, 2017 08:59

 
 

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷ் செய்த தவறால் ஆட்டத்தின் போக்கு இந்தியாவுக்கு சாதகமாக மாறுவதற்கு வழிவகுத்தது. இது குறித்த செய்தியை விரிவாக பார்க்கலாம்.

 
 
 
 
பெங்களூரு டெஸ்ட்: இந்திய அணிக்கு திருப்பம் தந்த விக்கெட்
 
பெங்களூரு :

இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலியா செய்த தவறு, ஆட்டத்தின் போக்கு இந்தியாவுக்கு சாதகமாக மாறுவதற்கு வழிவகுத்தது. ஷான் மார்ஷ் 9 ரன்னில் (19 பந்து) ஆடிக்கொண்டிருந்த போது, வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் ஆப்-கட்டராக வீசிய பந்தை அடிக்காமல் மட்டையை மேலே உயர்த்தினார். அது நேராக அவரது காலுறையை தாக்கியது. இந்திய வீரர்கள் அப்பீல் செய்ததும் நடுவர் விரலை உயர்த்தி விட்டார்.

பிறகு ஷான் மார்ஷ் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின் படி அப்பீல் செய்யலாமா? என்று எதிர்முனையில் நின்ற கேப்டன் ஸ்டீவன் சுமித்திடம் ஆலோசனை கேட்டார். அப்போது ஆஸ்திரேலியாவுக்கு மேற்கொண்டு ஒரு டி.ஆர்.எஸ். அப்பீல் மட்டுமே பாக்கி இருந்தது.

1E02F6C8-B3F4-4C86-AF2C-7297BCC18B06_L_s

அதுவும் வீணாகி போனால், முக்கியமான தருணத்தில் எல்.பி.டபிள்யூ.க்கு அப்பீல் செய்ய வாய்ப்பு இல்லாமல் போய் விடக்கூடும் என்று கணக்கு போட்ட ஸ்டீவன் சுமித், ஷான் மார்ஷிடம் வேண்டாம் என்று கூறி விட்டார். இதையடுத்து ஷான் மார்ஷ் நடையை கட்டினார். ஆனால் ரீப்ளேயில் பந்து ஆப்-சைடுக்கு வெளியே செல்வது தெளிவாக தெரிந்தது.

அப்பீல் செய்திருந்தால் அவர் அவுட்டில் இருந்து நிச்சயம் தப்பித்து இருப்பார். முதலாவது இன்னிங்சில் ஷான் மார்ஷ் 66 ரன்கள் எடுத்தது நினைவு கூரத்தக்கது. ஸ்டீவன் சுமித்தும், ஷான் மார்சும் மிகப்பெரிய தவறு இழைத்து விட்டதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது இணையதளத்தில் சுட்டிகாட்டியுள்ளது.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/08085905/1072438/Bangalore-Test-Indian-team-changed-that-wicket.vpf

Link to comment
Share on other sites

மூர்க்கத்தனமான குற்றச்சாட்டு: விராட் கோலியை `விளாசும்' ஆஸ்திரேலிய ஊடகங்கள்

 
 

ஆட்டக்களத்தில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி கேப்டன் மற்றும் அணியினர் நடந்துகொண்ட விதம் குறித்து விமர்சித்த இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட்கோலியின் குற்றச்சாட்டுக்கள் மூர்க்கத்தனமானவை என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளன.

கோலியின் கருத்து: மீண்டும் இந்தியா- ஆஸி., கிரிக்கெட் போர் துவக்கமா?படத்தின் காப்புரிமைREUTERS

நேற்று செவ்வாய்க்கிழமைமுடிவடைந்த டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், எல்.பி.டபிள்யு முறையில் அவுட் ஆனார். அவர் எதிர்முனை வீரரை கலந்தாலோசித்த பிறகு, ஆஸ்திரேலிய வீரர்கள் ஓய்வெடுக்கும் அறையை நோக்கி தான் ஆட்டமிழந்தது தொடர்பாக மறுபரிசீலனை செய்யலாமா என்று சைகையில் கேட்டதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

இது பெரும் சர்ச்சையைத் தொடங்கி வைத்துள்ளது.

ஆஸ்திரேலிய வீரர்கள் மீதான கோலியின் விமர்சனம்

இந்நிலையில், போட்டி முடிந்தபின், செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணித்தலைவர் விராட் கோலி, ''நான் பேட்டிங் செய்த போதே அவர்கள் இவ்வாறு இருமுறை செய்ததைப் பார்த்தேன். . அதாவது டி.ஆர்.எஸ். கேட்க ஓய்வறையை ஆஸ்திரேலிய வீரர்கள் பார்ப்பதை நான் இருமுறை கண்டேன். அதனால்தான் நடுவர் ஸ்மித்தை நோக்கி வந்து அவரை அனுப்பி வைத்தார்'' என்று கூறினார்.

''கடந்த 3 நாட்களாகவே ஆஸ்திரேலியர்கள் ஓய்வறை உதவியை நாடி வந்ததைக் குறிப்பிட்டேன். ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்மித் தனது எல்லையை மீறி விட்டார்'' என்று மேலும் தெரிவித்தார்.

டிஆர்எஸ் முடிவெடுக்க ஓய்வறையின் கருத்தை அறிய முற்பட்டாரா ஸ்மித்?படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடிஆர்எஸ் முடிவெடுக்க ஓய்வறையின் கருத்தை அறிய முற்பட்டாரா ஸ்மித்?

ஆஸ்திரேலிய ஊடகங்களின் மறுப்பும், விமர்சனமும்

விராட் கோலியின் இந்த விமர்சனம் குறித்து கருத்துத் தெரிவித்த ஆஸ்திரேலிய ஊடகஙகள், இந்தியாவுக்கு வருகை புரிந்து டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் வெளிநாட்டு அணி மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை கோலி கூறுவதாக தெரிவித்துள்ளன.

'தி சிட்னி மார்னிங் ஹெரால்ட்' பத்திரிக்கை தனது தலைப்புச் செய்தியில், ''வரலாற்றுப் புகழ் மிக்க இந்தியாவின் வெற்றிக்கு பிறகு, ஏமாற்றுவதாக ஆஸ்திரேலியா மீது குற்றம் சாட்டுகிறார் கோலி'' என்று குறிப்பிட்டுள்ளது.

இதே போல, வேறு சில ஆஸ்திரேலிய பத்திரிக்கைகளும், இந்திய கேப்டன் விராட் கோலி கடுமையான கருத்தை வெளியிட்டதாக விமர்சித்துள்ளன..

ஆஸ்திரேலியா மீதான குற்றச்சாட்டுக்கள் ''மூர்க்கத்தனமானது''

நேர்மையற்ற முறையில் ஆஸ்திரேலியா விளையாடியதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ''மூர்க்கத்தனமானவை'' என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பின் தலைமை நிர்வாகியான ஜேம்ஸ் சதர்லேண்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

கோலி மீது ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் விமர்சனம்படத்தின் காப்புரிமைAP Image captionகோலி மீது ஆஸ்திரேலிய பத்திரிக்கைகள் விமர்சனம்

கடந்த 2007-2008 காலகட்டத்தில், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில், இந்திய சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய வீரரான சைமண்ட்ஸ் குறித்து குரங்கு போல் இருப்பதாக கேலி செய்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதனை ஹர்பஜன் சிங்கும், அப்போது களத்தில் இருந்த மற்ற இந்திய வீரர்களும் மறுத்தனர்.

இதற்கு பிறகு, தற்போது ஸ்மித் மற்றும் ஆஸ்திரேலிய வீரர்கள் குறித்து தெரிவித்த கருத்துக்களும், அதற்கு ஆஸ்திரேலிய ஊடகங்களின் எதிர்வினை கருத்துக்களும், மீண்டும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களிடையே மோதலை உருவாக்குமா என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, இந்திய கிரிக்கெட் அணி கேப்டன், விராட் கோலி, நேர்த்தியாகவும், அதேசமயம் முதிர்ச்சியுடனும் செயல்படுவதாக, பிசிசிஐ எனப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் கோலிக்கு ஆதரவுக்கரம் நீட்டியுள்ளது.

முன்னதாக, நேற்று முடிவடைந்த பெங்களூரு கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 75 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வென்றது.

http://www.bbc.com/tamil/sport-39207166

Link to comment
Share on other sites

‘மூளை மழுங்கிய’ செயலா? நேர்மையின்மையா?: ஸ்மித்துக்கு மைக்கேல் கிளார்க் கேள்வி

 

 
 
மைக்கேல் கிளார்க். | கோப்புப் படம். | ஏ.எஃப்.பி.
மைக்கேல் கிளார்க். | கோப்புப் படம். | ஏ.எஃப்.பி.
 
 

ஸ்மித் ஆட்டமிழந்த பிறகு டி.ஆர்.எஸ்.-க்காக பெவிலியன் உதவியை நாடியது பெரிய சர்ச்சைகளை கிளப்பியுள்ளது, கோலியின் குற்றச்சாட்டு இழிவானது என்று கிரிக்கெட் ஆஸ்திரேலியா கூற கோலிக்கு பிசிசிஐ-யும் கங்குலியும் ஆதரவு தர தற்போது மைக்கேல் கிளார்க் ஆஸ்திரேலிய அணியின் நேர்மையை கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

இந்திய ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு மைக்கேல் கிளார்க் கூறும்போது, “வீடியோ பதிவைப் பார்க்கும் போது, எதிர்முனையில் இருந்த பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப் பெவிலியன் நோக்கி செய்கை புரியுமாறு ஸ்மித்துக்கு அறிவுறுத்தியது தெரிகிறது. கோலி கூறியது போல் இது 3-வது முறையாக இல்லாமல் ஒரே முறைதான் என்றாலும் கூட இப்படிச் செய்திருக்கக் கூடாது என்பதே என் கருத்து.

ஸ்டீவ் ஸ்மித் ஆட்டத்தை மதிப்பவர் என்றால், அது ஒரே முறை நிகழ்ந்த தவறென்றால், மூளை மழுங்கிய செயல்பாடு என்பதை ஏற்கலாம்.

ஆனால் நான் இதில் மேலும் ஆதாரங்களைப் பார்க்க விரும்புகிறேன், விராட் கோலி கூறியது சரியெனில், ஆஸ்திரேலிய அணியினர் டி.ஆர்.எஸ். முறையை இப்படிப் பயன்படுத்துவது இது முழுக்க முழுக்க ஏற்க முடியாதது, இப்போது இது மூளை மழுங்கிய செயல் மட்டுமல்ல” என்றார்.

இந்திய முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறும்போது, “ஆஸ்திரேலிய பயிற்சியாளர்கள், துணைப் பயிற்சியாளர்களை ஸ்டாண்ட்ஸுக்கு அனுப்பி களத்தில் வீரர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுறுத்த பணிப்பதை நான் பார்த்திருக்கிறேன். அதனால்தான் இப்படி கூற வேண்டியுள்ளது” என்றார்.

http://tamil.thehindu.com/sports/மூளை-மழுங்கிய-செயலா-நேர்மையின்மையா-ஸ்மித்துக்கு-மைக்கேல்-கிளார்க்-கேள்வி/article9575858.ece

Link to comment
Share on other sites

ஜென்டில்மேன் ஆட்டத்தில் ‘ஏமாற்றுக்காரர்’ ஸ்மித்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வக்காலத்து வாங்குகிறது

 

 
 
 
ஸ்மித். | படம்.| ஏ.எஃப்.பி.
ஸ்மித். | படம்.| ஏ.எஃப்.பி.
 
 

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் சிறந்த முன்மாதிரி வீரர், இந்தியாவுக்கு எதிரான பெங்களூரு டெஸ்ட் போட்டியில் டிஆர்எஸ் முறையை பயன்படுத்திய விவகாரத்தில் அவர் மீதும் அணியினர் மீதும் மூர்க்கத்தனமான குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பெங்களூரு டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் ஸ்மித் 28 ரன்களில் உமேஷ் யாதவ் பந்தில் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது அவர் களத்தில் இருந்தபடி ஓய்வறையில் இருந்த தங்களது அணியின் தொழில்நுட்ப குழுவினர், வீரர்களிடம் டிஆர்எஸ் வாய்ப்பை பயன்படுத்தலாமா என சைகையில் கேட்டார்.

விதிமுறைக்கு மாறாக ஸ்மித் செயல்பட்டதை களநடுவரான இங்கிலாந்தின் நைஜல் லாங்கும் உடனடியாக கவனித்தார். அதே வேளையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட வீரர்களும் இதை பார்த்தனர். இதனால் இந்திய வீரர்கள் ஸ்மித்தை சூழ்ந்தனர். ஆனால் நடுவர் தலையிட்டு ஸ்மித்தை களத்தில் இருந்து வெளியேற்றினார்.

ஐசிசி விதிகளின்படி டிஆர்எஸ் முறையை எதிர்முனையில் உள்ள பேட்ஸ்மேனிடம் மட்டுமே ஆலோசனை செய்து பயன் படுத்த வேண்டும். இதை தவிர்த்து வெளியில் இருந்து எந்தவித ஆலோசனைகளையும் பெறக் கூடாது. போட்டி முடிவடைந்த பிறகு இந்த விவகாரம் தொடர்பாக விராட் கோலி கூறும்போது, “ஸ்மித் எல்லை தாண்டி நடந்து கொண்டதாக’’ குறிப்பிட்டார்.

ஆனால் ஸ்மித்தோ, “அந்த சமயத்தில் எனக்கு புத்தி மங்கி விட்டது. நான் பெவிலியனை பார்த் திருக்கக்கூடாது. யாரும் ஆட்ட விதி களை மீறும் நோக்கில் விளையாடு வதில்லை’’ என்று தெரிவித்தார்.

ஆனால் கோலியோ, “இது முதன் முறையாக நடைபெற வில்லை. கடந்த 3 நாட்களாகவே இந்த செயலில் அவர்கள் ஈடுபட் டனர். இதுதொடர்பாக நான் ஏற்கெனவே களநடுவரிடம் புகார் செய்தேன். இதுபோன்ற செயல் களை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு வேறு பெயர் உண்டு, அந்த வார்த்தையை (ஏமாற்று வேலை) நான் பயன் படுத்த விரும்பவில்லை’’ என்றும் ஸ்மித் மீதான குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இவரது குற்றச்சாட்டுக்கு வலு சேர்ப்பதாக ஹேண்ட்ஸ்கம்பின் ட்விட்டர் பதிவு அமைந்தது. சர்ச்சை எழுந்தபோது ஸ்மித்துடன் களத்தில் இருந்த அவர் இதுதொடர் பாக தனது பதிவில், “டிஆர்எஸ் முறையை பயன்படுத்துவது தொடர்பாக ஸ்மித் என்னிடம் கேட்டார். ஆனால் நான் விதிகளை முறையாக அறிந்திருக்கவில்லை என்பதால் பெவிலியனை பார்க்கு மாறு கூறினேன். இதனால் ஆட்டத் தின் அழகு குலைந்துவிடாது’’ என்று தெரிவித்துள்ளார்.

டிஆர்எஸ் முறையை ஆஸ்தி ரேலிய அணி ஒன்றும் முதன் முறையாக தற்போது பயன்படுத்த வில்லை. அந்த அணி இந்த முறை, அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே இதை அணுகி வருகிறது. ஜென்டில்மேன் ஆட்டமாக கருதப்படும் கிரிக்கெட் ஸ்மித்தின் செயல் ஏமாற்றும் வேலையாகவே அமைந்துள்ளதாக பார்க்கத் தோன்றுகிறது.

ஆனால் ஆஸ்திரேலிய கிரிக் கெட் வாரியமோ ஸ்மித்துக்கு ஆதர வாக கருத்து தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் ஆஸ்தி ரேலியாவின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் சுதர்லேண்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘‘ஸ்மித்தின் ஒருமைப்பாட்டின் மீதும், ஆஸ்திரேலிய அணி மற்றும் ஓய்வறை மீது மூர்க்கத்தமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளோம். ஸ்மித் தலை சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் மனிதர் ஆவார். வளரும் வீரர்களுக்கு அவர் முன்னுதாரணமாக இருந்து வருகிறார். அவரது நடவடிக்கை களில் தவறான நோக்கம் இருந்திருக்காது என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

எங்கள் ஒருமைப்பாட்டை இழிவு படுத்தும் வகையில் எழும் கருத்து களையும், நியாயமற்ற தந்திரங் களை கையாண்டதாக கூறுவதை யும் நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த விஷயத்தில் ஸ்மித்துக்கு துணையாக இருப்போம். ஆஸ்தி ரேலிய கிரிக்கெட் வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை பெறுமையாகவே கருதுகிறார்கள்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லேமனும், ஸ்மித் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது,

‘‘டிஆர்எஸ் முறையில் ஓய்வறையின் உதவியை நாங்கள் ஒருபோதும் அணுகவில்லை. இதை கேட்ப தற்கே ஆச்சர்யமாக இருக்கிறது. கோலி அவருடைய கருத்தை தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் கருத்தை தெரிவித்துள்ளோம். ஆனால் ஆட்டத்தை சரியான வழியிலேயே நாங்கள் விளையாடினோம்’’ என்றார்.

கிளார்க் கவலை

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறும்போது, “டிஆர்எஸ்-ஐ பயன்படுத்த ஆஸ்தி ரேலிய அணி இந்த வழிமுறையை கையாண்டதா என்பதை கண்டறிய வேண்டும். அவர்கள் அதை செய்திருந்ததால் அது ஏற்றுக்கொள்ளக்கூடிய விஷயம் அல்ல’’ என்றார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விசாரணை நடத்த வேண் டும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ் கரும், தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கங்குலியும் வலி யுறுத்தி உள்ளனர்.

மதி மயங்கிய ஸ்மித்தை ஐசிசி பார்த்துக்கொள்ளும்

ஸ்மித்தின் செயலை மையப்படுத்தி டிஆர்எஸ் என்பது “ஓய்வறை மேல்முறையீடு முறையா என பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தின் காட்சியும் அதில் இடம் பெற்றுள்ளது.

ஸ்மித்தின் செயலுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஆதரவு அளித்த சில மணிநேரங்களில் பிசிசிஐ தனது நிலையை தெளிப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

‘‘விராட் கோலி முதிர்ந்த கிரிக்கெட் வீரர். பக்குவப்பட்ட வீரரும் கூட. களத்தில் அவரது நடத்தை உதாரணமாக உள்ளது. கோலியின் செயலுக்கு ஐசிசி எலைட் பேனல் நடுவர் நைஜல் லாங் உதவியாக இருந்துள்ளார்.

அவர்தான் விரைந்து செயல்பட்டு ஸ்டீவ் ஸ்மித்தை களத்தில் இருந்து வெளியேற்றி உள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பின்போது மதி மயங்கி நடந்து கொண்டதாக ஸ்மித் தெரிவித்துள்ளார். ஐசிசி இதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என பிசிசிஐ வலியுறுத்துகிறது. தொடரின் எஞ்சிய ஆட்டங்கள் உண்மையான விளையாட்டு உணர்வுடன் நடைபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கோலியின் முடிவில் நாங்கள் தெளிவாக உள்ளோம். அவருக்கும் அணிக்கும் ஆதரவாக இருப்போம்’’ என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதுவும் நடந்ததா?

முதல் டெஸ்ட் போட்டி நடை பெற்ற புனே ஆடுகளத்தின் புகைப்படங்கள் மிக நெருக்கமாக ஆஸி. பத்திரிகைகளில் வெளி யானது. கேப்டன் ஸ்மித்தும் ஆடுகளத்தின் தன்மையை புட்டு புட்டுவைத்தார். அதிக பாதுகாப்பு நிறைந்த ஆடுகள பகுதியை ஆஸி. ஊடகத்தை சேர்ந்தவர்தான் புகைப்படம் எடுத்தாரா என்பதிலும் தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

http://tamil.thehindu.com/sports/ஜென்டில்மேன்-ஆட்டத்தில்-ஏமாற்றுக்காரர்-ஸ்மித்-ஆஸ்திரேலிய-கிரிக்கெட்-வாரியம்-வக்காலத்து-வாங்குகிறது/article9577143.ece

Link to comment
Share on other sites

டெஸ்ட் தொடரில் இருந்து மிட்செல் ஸ்டார்க்கும் விலகினார்!

Mitchell Starc

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கும், இந்தியத் தொடரில் இருந்து விலகியுள்ளார். வலது காலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக, அவர் தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து சிகிச்சைக்காக அவர் ஆஸ்திரேலியா செல்கிறார். முன்னதாக, காயம் காரணமாக, அந்த அணியின் மிட்செல் மார்ஷும் இந்தியத் தொடரில் இருந்து விலகி இருந்தார். 4 போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது, இரு அணிகளும் தலா 1-1 என்ற சமநிலையில் உள்ளன. இந்நிலையில், இரு முக்கிய வீரர்களின் விலகல் ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

http://www.vikatan.com/news/sports/83255-mitchell-starc-ruled-out-from-test-series.html

Link to comment
Share on other sites

ராஞ்சி டெஸ்டிலும் அஸ்வின், ஜடேஜா முத்திரை பதிப்பார்கள்: விராட் கோலி

பெங்களூர் டெஸ்டை போலவே ராஞ்சி டெஸ்டிலும் சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜா முத்திரை பதிப்பார்கள் என்று இந்திய அணி கேப்டன் வீராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 
 
 
 
ராஞ்சி டெஸ்டிலும் அஸ்வின், ஜடேஜா முத்திரை பதிப்பார்கள்: விராட் கோலி
 
புதுடெல்லி:

ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் போட்டித் தொடரில் புனேயில் நடந்த முதல் டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 333 ரன் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 75 ரன் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில் பெங்களூர் டெஸ்டை போலவே ராஞ்சி டெஸ்டிலும் சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடேஜா முத்திரை பதிப்பார்கள் என்று இந்திய அணி கேப்டன் வீராட் கோலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

C9D42A31-8824-4D58-8875-41A0ACBCF104_L_s

முதல்முறையாக டெஸ்ட் நடைபெறும் ராஞ்சி ஆடுகளம் பற்றி நாங்கள் அதிகமாக எதுவும் கருத இயலாது. பந்து மெதுவாகவும், மிகவும் தாழ்ந்து தான் எப்போதும் வரும். ஆடுகளத்தை எப்படி சந்திப்பது என்பது பற்றி மனரீதியாக நாங்கள் தயாராகி விட்டோம். உள்ளூர் மைதானம் என்பது எங்களுக்கு சவாலானதே.

அஸ்வினும், ஜடேஜாவும் உள்ளூர் ஆடுகளத்தில் இந்த சீசனில் மிகவும் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். பெங்களூர் டெஸ்டை போலவே ராஞ்சி டெஸ்டிலும் அவர்கள் முத்திரை பதிப்பார்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு வீராட் கோலி கூறியுள்ளார்.

ராஞ்சி ஆடுகளத்தை இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், டெஸ்டில் ஓய்வு பெற்ற வருமான டோனி சமீபத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்து இருந்தார்.

இந்த டெஸ்ட் தொடரில் சுழற்பந்து வீரர்களே அதிகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். புனேயில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய வீரர் ஒகீபே 12 விக்கெட் கைப்பற்றினார்.

2-வது டெஸ்டில் முதல் இன்னிங்சில் நாதன் லயன் 8 விக்கெட் கைப்பற்றினார். இந்தியா தரப்பில் ஜடேஜா முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் அஸ்வின் 6 விக்கெட்டும் எடுத்தனர். இதனால் ராஞ்சி ஆடுகளத்திலும் சுழற்பந்து வீரர்கள் ஆதிக்கம் செலுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த டெஸ்ட் தொடரில் ஒகீபே, அஸ்வின் தலா 15 விக்கெட்டை கைப்பற்றி முன்னிலையில் உள்ளனர். லயன் 13 விக்கெட்டும், ஜடேஜா 12 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/12104031/1073260/Virat-kohli-hope-Ashwin-and-Jadeja-achieve-in-Ranchi.vpf

Link to comment
Share on other sites

டி.ஆர்.எஸ். சர்ச்சை விவகாரம்: விராட் கோலிக்கு ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக் ஆதரவு

ஆஸ்திரேலிய கேப்டன் சுமித்தின் டி.ஆர்.எஸ். சர்ச்சை விவகாரத்தல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நடந்து கொண்ட விதம் சரியானதே என்று அவருக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் பிராட் ஹாக் ஆதரவு தெரிவித்துள்ளார்.

 
டி.ஆர்.எஸ். சர்ச்சை விவகாரம்: விராட் கோலிக்கு ஆஸி. முன்னாள் வீரர் பிராட் ஹாக் ஆதரவு
 
புதுடெல்லி:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. புனேயில் நடந்த முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், பெங்களூரில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

2-வது டெஸ்ட் போட்டியில் இரு அணி வீரர்கள் இடையே அதிக அளவில் ‘சிலெட்ஜிங்’ நடைபெற்றது. வீரர்களின் உசுப்பேற்றல் இந்த டெஸ்டில் உச்ச கட்டமாக இருந்தது. அதோடு டி.ஆர்.எஸ் முறையை ஆஸ்திரேலிய கேப்டன் சுமித் தவறாக பயன்படுத்தியதால் இந்த விவகாரம் பூதாகரமானது.

டி.ஆர்.எஸ். முறையை கேட்கலாமா வேண்டாமா? என்பது பற்றி களத்தில் இருந்த சுமித் வீரர்களின் அறையை நாடியது. விதிமுறை மீறலாம்.

இந்திய அணி கேப்டன் விராட் கோலி, சுமித்தின் இந்த செயலை கடுமையாக சாடினார். நடுவரிடம் முறையிட்டார். தன்னுடைய புத்தி அந்த நேரத்தில் மழுங்கி விட்டதாகவும், தான் அப்படி செய்தது தவறு என்றும் சுமித் கூறி இருந்தார்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) வரை இந்த பிரச்சினை சென்றது. ஆனால் ஐ.சி.சி.யோ இந்த பிரச்சினையில் சுமித் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.

இந்த விவகாரத்தில் ஆஸ்திரேலிய மீடியாக்கள் விராட் கோலியை கடுமையாக விமர்சித்தன. சமூக வலைதளத்தில் நடத்திய கருத்து கணிப்பில் விலங்குடன் கோலியின் படத்தை வைத்து கேலி செய்தது இருந்தது.

இந்த நிலையில் டி.ஆர்.எஸ். சர்ச்சை விவகாரத்தல் இந்திய அணி கேப்டன் விராட் கோலி நடந்து கொண்ட விதம் சரியானதே என்று அவருக்கு ஆஸ்திரேலிய முன்னாள் சுழற்பந்து வீரர் பிராட் ஹாக் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

0C3438AD-351D-4E43-97EE-39A45CC20C81_L_s

விராட்கோலி ஆர்வமிக்க மற்றும் உணர்ச்சிமிக்க கிரிக்கெட் வீரர். தனது கடுமையான பயிற்சி மூலம் அவர் இதை பெற்றிருக்கிறார். ஆடுகளத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்று கருதுகிறாரே அதன்படி நடக்க விரும்புகிறவர்.

விராட் கோலியுடன் மோதும் போது ஆஸ்திரேலியர்கள் அதற்கு அதிகமான திறமையை பெற்றிருக்க வேண்டும். இல்லையென்றால் சிலெட்ஜிங்கில் புகழ்பெற்ற அவர்கள் அதை மறந்துவிட வேண்டும்.

டி.ஆர்.எஸ். சர்ச்சையின் கோலியின் ஆக்ரோ‌ஷம் நியாயமானதே. அவர் சுமித்துடன் மோதியது எனக்கு பிடித்திருந்தது. இது ஒரு வன்முறையோ அல்லது தனிப்பட்ட மோதல் இல்லை. அவர் வெளிப்படுத்திய விதம் சரியானதே. இது ஒரு நல்ல தொடர். நல்ல டெஸ்ட் போட்டியாகும்.

இந்த விவகாரத்தில் விராட் கோலியோ, சுமித்தோ மற்ற எந்த வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்காது சரியான முடிவே. இதற்காக ஐ.சி.சி.யை பாராடுகிறேன்.

இவ்வாறு பிராட் ஹாக் கூறியுள்ளார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/13105338/1073398/DRS-issue-Australia-player-Brad-Hogg-support-to-Virat.vpf

Link to comment
Share on other sites

கோஹ்லிக்கு எச்சரிக்கை விடுக்கும் மிச்சல் ஜோன்சன்

Published by Pradhap on 2017-03-13 22:27:59

 

இந்தியா - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் விராட் கோஹ்லி மிகவும் ஆக்ரோஷமாக செயற்பட்டு வருகின்றார்.

fasfafafcopy.jpg

இதனை அவதானித்துவந்த அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிச்சல் ஜோன்சன் கோஹ்லியின் செயற்பாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஒவ்வொரு வீரரும் ஆட்டமிழந்து செல்லும் போது கோஹ்லியின் சைகைகள், முக பாவனைகள் மற்றும் வார்த்தை பிரயோகங்கள் என்பவற்றில் அவதானமாக இருக்க வேண்டும்.

எவ்வாறாயினும் ஆட்டமிழக்கும் வீரரை வார்த்தை பிரயோகங்கள் மூலம் வழியனுப்பிவைப்பது எச்சரிக்கைக்குறியது என தெரிவித்துள்ளார்.

அதுமாத்தரமின்றி கோஹ்லி இவ்வாறு நடந்துக்கொள்ளவதற்கு காரணம், அவர் இந்த டெஸ்ட் தொடரில் ஓட்டங்களை பெறாத விரக்தி என்றும் குறிப்பிட்டுள்ளார். 

 கோஹ்லி முதல் டெஸ்டில் 0, 13 ஓட்டங்களையும், 2 ஆவது டெஸ்டில் 12, 15 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயம்.

http://www.virakesari.lk/article/17736

Link to comment
Share on other sites

ராஞ்சி டெஸ்டில் இந்தியாவிற்குத்தான் நெருக்கடி, எங்களுக்கல்ல: லயன் சொல்கிறார்

 

ராஞ்சி டெஸ்டில் இந்தியாவிற்குத்தான் நெருக்கடி. எங்களுக்கு அல்ல என்று ஆஸ்திரேலியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் லயன் தெரிவித்துள்ளார்.

 
 
 
 
ராஞ்சி டெஸ்டில் இந்தியாவிற்குத்தான் நெருக்கடி, எங்களுக்கல்ல: லயன் சொல்கிறார்
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இரண்டு டெஸ்ட்கள் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

3-வது போட்டி ராஞ்சியில் 16-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை தக்க வைத்துக் கொள்ளும். இதனால் இரு அணிகளுக்கும் நெருக்கடி இருக்கும். ஆனால் எங்களை விட இந்தியாவிற்குத்தான் அதிக நெருக்கடி என்று ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நான் லயன் கூறுகையில் ‘‘டெஸ்ட் தொடரை தக்க வைத்துக் கொள்ள எங்களுக்கு ஒரு வெற்றிதான் தேவையுள்ளது. அதை ஏன் நாங்கள் ராஞ்சியில் செய்யக் கூடாது. நெருக்கடி இந்தியா மீது தான் உள்ளது. எங்கள் மீது எந்தவித நெருக்கடியும் இல்லை.
C535148C-8EED-4058-A638-182D10879CFD_L_s
இந்த தொடர் தொடங்குவதற்கு முன் ஒவ்வொருவரும் ‘ஆஸ்திரேலியா தொடரை 4-0 என இழக்கும். அவர்கள் சிறந்த அணி இல்லை. அந்த அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் உள்ளனர். அவர்கள் இந்தியாவில் சிறப்பாக விளையாடமாட்டார்கள்’ என்று சொன்னார்கள்.

முதல் டெஸ்டில் நாங்கள் சிறந்த அணி என்பதை நிரூபித்தோம். 2-வது போட்டியில் நாங்கள் வெற்றியை நெருங்கி வந்தோம். அதன்பின் தோல்வியடைந்து விட்டோம். எனவே உண்மையிலேயே இந்திய அணிக்குத்தான் கூடுதல் நெருக்கடி இருக்கும்’’ என்றார்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/13221812/1073577/India-vs-Australia-Nathan-Lyon-says-the-pressure-is.vpf

Link to comment
Share on other sites

ராஞ்சியில் விவாதத்திற்குரிய பிட்சில் 3-வது டெஸ்ட்: பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஆஸ்திரேலியா

 
ராஞ்சி பிட்சை சோதிக்கும் ஆஸி. கேப்டன் ஸ்மித். | படம்.| பிடிஐ.
ராஞ்சி பிட்சை சோதிக்கும் ஆஸி. கேப்டன் ஸ்மித். | படம்.| பிடிஐ.
 
 

இந்திய உள்நாட்டு சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் குறிப்பாக விராட் கோலி கேப்டனான பிறகு பிட்ச் சர்ச்சைகள் அதிகம் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் வியாழக்கிழமையன்று மீண்டும் விவாதத்திற்குரிய ஒரு பிட்சில் ராஞ்சியில் இந்திய-ஆஸ்திரேலிய 3-வது டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

ராஞ்சியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் ராஞ்சியில் இன்னொரு ரஞ்சி தர பிட்சையே எதிர்பார்க்கலாம்.

இந்திய அணிக்கு முரளி விஜய் மீண்டும் திரும்ப வாய்ப்புள்ளது. அதே போல் சுழல் பிட்ச் என்றால் கருண் நாயர் நீக்கப்பட்டு ஜெயந்த் யாதவ் அணிக்குத் திரும்ப வாய்ப்புள்ளது.

ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் ஸ்டார்க் காயத்தினால் இல்லாதது பெரும் பின்னடைவுதான், அவருக்குப் பதிலாக கம்மின்ஸ் தேர்வு செய்யப்படுவாரா அல்லது ஸ்டாய்னிஸ், மெக்ஸ்வெல், உஸ்மான் கவாஜா, ஆஸ்டன் ஆகர் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படுவாரா என்பது நாளை காலை மேட்ச் தொடங்கும்போதுதான் தெரியும்.

கடந்த சில நாட்களாக ராஞ்சி பிட்ச் குறித்த விவாதம் நடைபெற்று வருகிறது. பிட்ச் நிறம் வழக்கத்துக்கு மாறாக டார்க்காக இருப்பது வீரர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித் ராஞ்சி பிட்சைப் பற்றி கூறும்போது, ‘சேற்றை அப்பி ரோலர் போட்டு உருட்டியது போல் தெரிகிறது’ என்றார்.

முதல் நாளே திரும்பினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை, அப்படி இல்லையென்றாலும் 2ம் நாளில் பிட்ச் உடையும் என்று தெரிகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பவுன்ஸ் இருக்காது. பெங்களூரு பிட்ச் போல், அல்லது பொதுவாகவே இந்திய பிட்ச் போல் பந்துகள் எழும்பியும் தாழ்ந்தும் வரும் என்றே தெரிகிறது.

இந்தத் தொடரில் இந்திய ஸ்பின்னர்களை ஆஸ்திரேலியர்கள் நன்றாக ஆடியது போல் இந்திய வீரர்கள் ஆஸி. ஸ்பின்னர்களை நன்றாக ஆடவில்லை. கேப்டன் விராட் கோலி இந்தத் தொடரில் இதுவரை, 0, 13, 12, 15 என்று சொதப்பி வருகிறார். எனவே அவர் நிச்சயம் ஒரு பெரிய இன்னிங்ஸிற்குத் தயாராக இருப்பார்.

டி.ஆர்.எஸ். சர்ச்சைக்குப் பிறகு ஆஸ்திரேலியா நிச்சயம் இந்திய அணிக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஆடும், இந்திய அணியும் பெங்களூரு வெற்றிக்குப் பிறகு உத்வேகமான மன நிலையில் களமிறங்கும் என்பதால் விறுவிறுப்பான மற்றுமொரு டெஸ்ட் போட்டி ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது என்று கூற முடியும்.

http://tamil.thehindu.com/sports/ராஞ்சியில்-விவாதத்திற்குரிய-பிட்சில்-3வது-டெஸ்ட்-பதிலடி-கொடுக்கும்-முனைப்பில்-ஆஸ்திரேலியா/article9585631.ece?homepage=true

Link to comment
Share on other sites

#INDvsAUS : இந்திய அணி பந்துவீச்சு!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 3-வது டெஸ்ட், ராஞ்சி ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங்கைத் தேர்வுசெய்துள்ளது.

INDvsAUS
 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, மொத்தம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. தற்போது, இரு அணிகளும் 1-1 என்ற சமநிலை வகிக்கின்றன. எனவே, இந்தப் போட்டி முன்னிலை பெறுவதற்கான பலப்பரீட்சையாக அமையும். 

Link to comment
Share on other sites

3-வது டெஸ்ட் போட்டி: மதிய தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 194/4

ராஞ்சியில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா முதல்நாள் மதிய தேனீர் இடைவேளை வரை 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது.

 
3-வது டெஸ்ட் போட்டி: மதிய தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 194/4
 
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ரென்ஷா, வார்னர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.

சரியாக 50 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. வார்னர் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து கேப்டன் ஸ்மித் களம் இறங்கினார். மறுமுனையில் விளையாடிய ரென்ஷா 44 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் வெளியேறினார்.

3-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய ஷேன் மார்ஷை (2) வந்த வேகத்திலேயே அஸ்வின் வெளியேற்றினார். இதனால் மதிய உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் எடுத்திருந்தது.

174FEA2E-D72D-4DE1-9910-D32BD2D76BFC_L_s

ஸ்மித் 34 ரன்னுடனும் ஹேண்ட்ஸ்காம்ப் 6 ரன்கள் எடுத்த நிலையிலும் களத்தில் இருந்தனர். மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஹேண்ட்ஸ்காம்ப் 19 ரன்கள் எடுத்த நிலையில் உமேஷ் யாதவ் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

5-வது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் மேக்ஸ்வெல் ஜோடி சேர்ந்தார். ஸ்மித் சிறப்பாக விளையாடி 104 பந்தில் 6 பவுண்டரியுடன் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி தேனீர் இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

30BBEDEA-D6BB-468B-B16D-C05492A8DF77_L_s

முதல் நாள் தேனீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்துள்ளது. ஸ்மித் 80 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 19 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

http://www.maalaimalar.com/News/Sports/2017/03/16141916/1074127/3rd-test-1st-day-tea-australia-194-for-4-smith-80.vpf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதையே தான் நானும் சுட்டிக் காட்டியிருக்கிறேன்: தமிழ் நாட்டில் தமிழின் நிலை, யூ ரியூபில் சீமான் தம்பிகளின் பிரச்சார வீடியோக்கள் பார்ப்போரைப் பொறுத்த வரையில் கீழ் நிலை  என நினைக்க வைக்கும் பிரமை நிலை. உண்மை நிலை வேறு. இதை அறிய நான் சுட்டிக் காட்டியிருக்கும் செயல் திட்டங்களை ஒரு தடவை சென்று தேடிப் பார்த்து அறிந்த பின்னர் எழுதுங்கள். மறு பக்கம், நீங்கள் மௌனமாக சீமானின் பாசாங்கைக் கடக்க முயல்வதாகத் தெரிகிறது. மொழியை வளர்ப்பதென்பது ஆட்சியில் இருக்கும் அரசின் கடமை மட்டுமல்ல, ஆட்சிக்கு வர முனையும் எதிர்கட்சியின் கடமையும் தான். தமிழுக்கு மொளகாய்ப் பொடி லேபலில் இரண்டாம் இடம் கொடுத்தமைக்குக் கொதித்த செந்தமிழன் சீமான், தானே மகனுக்கு தமிழ் மூலம் கல்வி கொடுக்கத் தயங்குவதை "தனிப் பட்ட குடும்ப விவகாரம்" என பம்முவது வேடிக்கை😂!
    • அதைத்தானே ராசா  நானும் சொன்னேன் அதே கம்பி தான்...
    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.