Jump to content

எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள 'உல்லாச சிறை'யில் நடப்பதென்ன?


Recommended Posts

எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள
'உல்லாச சிறை'யில் நடப்பதென்ன?
 
 
 
 

சென்னை அருகே கூவத்துாரில் உள்ள சொகுசு விடுதியில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். விடுதியின் உள்ளே நடந்த நிகழ்வுகள் குறித்து, கொங்கு மண்டல எம்.எல்.ஏ., ஒருவர், மனக்குமுறலுடன் நேற்று கூறியதாவது:

 

Tamil_News_large_1710399_318_219.jpg


இப்படியொரு இழிநிலை வரும் என, நினைக்கவில்லை. அடிமைகள் போன்று ஆள்பிடித்து வாகனத்தில் அழைத்துச் சென்று, ஆடம்பர விடுதியில் அடைத்து வைத்துள்ளனர். மனைவி, மக்களிடம் பேசக்கூட அனுமதி கிடையாது; இதை என்னவென்று சொல்வது?
'எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் கட்டாயம் பங்கேற்க வேண்டும்' என்ற உத்தரவு, போயஸ் கார்டனில் இருந்து வந்தது. அதனால், 'கூட்டம் முடிந்ததும் உடனடியாக திரும்பி விடுவேன்' என, குடும்பத்தினரிடம் கூறிவிட்டு, பிப்., ௭ல், சென்னைக்கு காரில் வந்தேன். மறுநாள் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில் பங்கேற்றேன். கூட்டம் முடிந்ததும், அனைவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக கூறி, பஸ்சில் ஏற்றினர்.

'எங்களின் சொந்த காரிலேயே வருகிறோம்; இடத்தை மட்டும் சொல்லுங்கள்' என்றனர் சிலர். 'அதற்கு வாய்ப்பில்லை; எல்லாரும் பஸ்சில் ஏறுங்கள்' என்றார், அமைச்சர் ஒருவர். அவர் சொல்லியபடி பஸ்சில் ஏறினோம். எங்கு அழைத்துச் செல்கின்றனர் என்றெல்லாம் தெரியாது; குழப்பத்தில் ஆழ்ந்தோம். பெண் எம்.எல்.ஏ.,க்கள் அதிகம் குழம்பினர். நீண்ட துார பயணத்துக்குப் பின் கூவத்துார், சொகுசு விடுதியை அடைந்தோம்.
 

இதற்கு முன் நான் தங்கியதே இல்லை.



இரவு உணவு முடிந்ததும், மீண்டும் அவரவர் இருப்பிடத்துக்கு திரும்பி விடலாம் என, அப்போது நினைத்தோம். ஆனால், அழைத்துச் சென்றவர்கள் வேறு விதமான முடிவை தெரிவித்தனர். விடுதியில், எங்களுக்கான அறைகளை திறந்து காட்டினர். அப்படியொரு ஆடம்பர அறையில், இதற்கு முன் நான் தங்கியதே இல்லை.
'சாப்பிட்டதும் சென்று விடலாமே; அப்புறம் எதற்காக இந்த அறைகள்' என, சீனியர் எம்.எல்.ஏ., ஒருவர் கேட்டார். 'இங்கு தான் தங்கப்போகிறோம்' என, புன்முறுவலுடன் சொன்னார் அருகிலிருந்த அமைச்சர் ஒருவர். அவர், கார்டனுக்கு மிகவும் வேண்டப்பட்டவர், செல்வாக்கானவர்; மறுத்து எதுவும் கூற முடியவில்லை.'துணிமணி எடுத்து வரவில்லையே அண்ணே' என்றோம். 'அதற்கென்ன, எல்லாம் இங்கேயே இருக்கிறது' எனக் கூறி, புத்தம் புது வேட்டி, சட்டை மற்றும் உள்ளாடைகள் வழங்கினர். பெண்

எம்.எல்.ஏ.,க்களுக்கு சேலை வழங்கப்பட்டது; டெய்லர்கள் வந்து ஜாக்கெட்டிற்கு அளவெடுத்தனர்.
 

விடிய விடிய 'குடி'


விடுதிக்கு சென்ற நாங்கள் குளித்து முடிந்ததும், குடி விருந்து குதுாகலம் துவங்கியது. ஆடு, கோழி, மீன் என, சகலமும் தட்டில் அணிவகுத்தன. வெளிநாட்டு மது பாட்டில்கள் வந்திறங்கின. ௫௦க்கும் மேற்பட்ட, 'பார்' சிப்பந்திகள் மது பரிமாறினர். விடிய விடிய ஆட்டம், பாட்டத்துக்கு அளவில்லை. சினிமா பாடல்கள் இசைக்க, எம்.எல்.ஏ.,க்கள் பலர் குத்தாட்டம்போட்டனர்.
சிலர் போதை அதிகமாகி வாந்தி எடுத்து மயங்கி சரிந்தனர். ஈரெழுத்து 'இனிசியல்' உடைய அமைச்சர் அளவுக்கு அதிகமாக குடித்து சாய, அருகில் இருந்தவர்கள், அவரை அலேக்காக தாங்கிப் பிடித்து, அறைக்கு கூட்டிச் சென்று படுக்க வைத்தனர்.
மது போதையில் சிலர், முதல்வர் பன்னீரை திட்டித் தீர்த்தனர். மது அருந்தாத சிலர் மவுனமாக வேடிக்கை பார்த்தனர். நள்ளிரவு கடந்தும் மது விருந்து தொடர்ந்தது. மறுநாள் மதியம் தான், பலர் துாக்கத்தில் இருந்து எழுந்தனர். நான் விடுதியைச் சுற்றிப் பார்க்க கிளம்பினேன்.
நாலைந்து தனித்தனி கட்டடங்கள்; 30, 40 ஆடம்பர அறைகள். பெரும்பாலான அறைகளின் ஜன்னலை திறந்தால் கடல்பரப்பை காணமுடியும். அரை மணிநேரம் சுற்றிப் பார்த்த என்னை, 'எங்கே செல்கிறீர்கள்; என்ன வேண்டும்?' என, எதிர்பட்ட நபர்கள் விசாரித்தனர். அவர்கள் ஓட்டல் ஊழியர்களா, அடியாட்களா என, தெரியாது.
 

'ரிலாக்ஸ்'சுக்கு மசாஜ்



மதியம், 2:00 மணி அளவில், என் அறை கதவை திறந்த, தென் மாவட்ட எம்.எல்.ஏ., ஒருவர், 'போன் எதுவும் வேலை செய்யலையா?' என்றார். அருகில் இருந்த, 'இன்டர்காம்'மை பரிசோதித்தேன்; செத்துப்போயிருந்தது. ஆபரேட்டரை தொடர்பு கொண்டோம். 'லைன் பால்ட்; சரிபார்க்கிறோம்' என்றனர்.

மொபைல் போனில் பேச முயன்றாலும், 'நெட்வொர்க்' கிடைக்கவில்லை. விடுதி ஊழியர்களிடம் கேட்ட போது, 'இங்கு சிக்னல் சரிவர கிடைக்காது' என்றனர். விடுதி வளாகத்தில், மொபைல் போன்களை செயல் இழக்கச் செய்யும், 'ஜாமர்' கருவி பொருத்தி இருக்கின்றனரா என்றெல்லாம் தெரியாது; ஆனால், பலருக்கும் அந்த சந்தேகம் ஏற்பட்டது.
இது, எங்களுக்கு மிகுந்த கோபமூட்டியது. உடன், சீனியர் அமைச்சர் ஒருவரை சந்தித்த எம்.எல்.ஏ.,க்கள் சிலர், 'எங்கள் மீது நம்பிக்கையில்லாமல் தானே இப்படி எல்லாம் செய்கிறீர்கள்.எங்களது சொந்த கார்கள், டிரைவருடன் சென்னை நகருக்குள் நிற்கின்றன. போன் செய்து அழைத்துக் கொள்கிறோம்; எங்களிடம் மொபைல் சார்ஜர்கள் போதிய அளவில் இல்லை. எங்களது டிரைவர்களுடன் வாகனங்கள் வர அனுமதியுங்கள்' என்றனர்.

 

'வீண் பிரச்னை கிளப்பாதீர்கள்; இன்று மாலைக்குள் முடிவுக்கு வந்துவிடும். 'சின்னம்மா' இங்கே வருகிறார்; அமைதியாக இருங்கள்' என்றார். விரக்தியடைந்து நாங்கள் அறைக்கு திரும்பினோம்.
சிறிது நேரத்தில், அறைக்கு வந்த விடுதி ஊழியர்கள், 'உங்களுக்கு எவ்விதமான கட்டுப்பாடும் இல்லை; உடற்பயிற்சி செய்வதற்கான, 'ஜிம்' பாயின்ட்; மசாஜ் சென்டர், விளையாட்டு மைய வசதிகளும் உள்ளன; விரும்பியபடி இருக்கலாம்' என்றனர்.

பின், எம்.எல்.ஏ.,க்கள் சிலர், ஆயில் மசாஜ் எடுத்தனர். சிலர் டேபிள் டென்னிஸ் விளையாடினர். பெண் எம்.எல்.ஏ.,க்களோ, 'விடுதி வளாக பியூட்டி பார்லரு'க்குச் சென்றனர். எம்.எல்.ஏ.,க்கள் பலர் நோய்களுக்காக மாத்திரை சாப்பிடுபவர்கள். அவர்களுக்கு புகை, போதையால், உயிருக்கு ஏதாவது ஆபத்து நேரிட்டு விடக்கூடாது என்பதால், டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனைகள் நடந்தன. அருகில் உள்ள மருத்துவமனையின் ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மூன்றாம் நாளில், எங்களை குழப்பம் சூழ ஆரம்பித்தது. ஒவ்வொருவராக, ஓ.பி.எஸ்., அணிக்குப் போகும் தகவல் வந்தது. வெளியே என்ன நடக்கிறது என, தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டினோம். எங்களை கட்டுப்படுத்தி வைத்திருந்த அமைச்சரிடம், 'என்ன அண்ணே, இப்படியெல்லாம் நடக்கிறது' என்றோம்.
'அதைப்பற்றி கவலைப்படாதீர்கள்; மாலையில் சின்னம்மா, இங்கு வருகிறார்' என்றார். ஒரு கட்டத்தில், 'மேலிட உத்தரவு; இங்கிருந்து யாரும் தனியாக வெளியே போக முடியாது' என்றனர். அப்போது தான், சிலர் வாக்குவாதம் செய்தனர். 'நாங்கள் என்ன சிறை கைதியா... எங்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை இல்லையா' என்றெல்லாம், அமைச்சரிடம் கேள்வி எழுப்பினர். ஆனால், அதை கண்டு கொள்ளவில்லை. சிலரை, போனில் யாருடனும் பேசக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதித்தனர்.

அமைச்சர் கூறியதைப் போலவே, மாலையில் பொதுச்செயலர் சசிகலா வந்தார். 'நாம் தான் ஆட்சி அமைக்கப் போகிறோம்; குழப்பமடையாதீர்கள்' என்றார். அவர் பேசி முடிந்ததும் முக்கிய நிர்வாகிகள் மட்டுமே அவருடன் உரையாடினர்; எங்களால் எதுவும் பேச முடியவில்லை.
எங்களை சிறை வைத்துள்ள சொகுசு விடுதி, சமீபத்தில் தமிழகத்தில் வருமான வரி சோதனைக்கு உள்ளாகி, கைது செய்யப்பட்ட முக்கிய பிரமுகருக்கு சொந்தமானது என, கூறப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.- நமது சிறப்பு நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710399

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னம்மா, பெரியம்மா, குஞ்சியம்மா, ஆசையம்மா.....!

நீங்கெல்லாம் சோத்துக்கு ..உப்பு போட்டு சாப்பிடுகிற மனுசர் தானா?

தமிழ் நாட்டு ....அம்மா...அரசியலைப் பார்க்க வாழ்க்கையே வெறுக்குது...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, புங்கையூரன் said:

சின்னம்மா, பெரியம்மா, குஞ்சியம்மா, ஆசையம்மா.....!

நீங்கெல்லாம் சோத்துக்கு ..உப்பு போட்டு சாப்பிடுகிற மனுசர் தானா?

தமிழ் நாட்டு ....அம்மா...அரசியலைப் பார்க்க வாழ்க்கையே வெறுக்குது...!

 
 

அம்மாவின் ஊழல் ஏஜென்ட் தான் சின்னம்மா. இந்த மாபியா கும்பல், மலையையும், மண்ணையும் வித்து, அதிலிருந்து வாக்காளருக்கு ஓட்டுக்கு பணத்தினைக் கொடுத்து, தம் விரல்களாலே தமது கண்ணை குத்த வைத்து, பதவியினைப் பிடித்தார்கள்.

பணம் கொடுத்து, வாக்கு வாங்குவதில் வந்த நம்பிக்கையால், பிரச்சாரத்துக்கு பெரிதாக போகாமலே, வெல்ல முடிந்தது, அம்மாவால்.

சின்னம்மாவிடம், பணம் தாராளமாக இருப்பதால், பதவி ஆசையும் வருகிறது.

உண்மையிலே, மறு தேர்தல் தேர்தலே சரியான வழி. 

தமிழகத்துக்கு இந்தாண்டு மிகச் சிறப்பானது.

ஒன்று அம்மா போனது, அடுத்தது அய்யாவுக்கு அறளை பெயர்ந்தது. அடுத்த முக்கிய விடயம், மோடியின் பணம் செல்லாது என்ற அறிவிப்பும்,  வங்கியில் பணம் எடுக்க கட்டுப்பாடு விதித்தது.

இதன் மூலம், இனி வரும் தேர்தல்களில், ஓட்டுக்கு, துட்டு கொடுப்பது குறையும்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் இங்கு குறிப்பிடுவது 2001 / கட்டாயம் 2004  க்கு முன்  கடந்த இருபதுக்கு மேற்பட்ட ஆண்டுகளாக எனக்கு அதனுடன் ஒரு தொடர்பும் இல்லை இலங்கையில் அன்று 55 வயதுடன் ஓய்வு பெறலாம். என்றாலும் நான் வேறு பல காரணங்களால் கொஞ்சம் நேரத்துடன் ஓய்வு பெற்று விட்டேன்
    • The Take – From India to Ukraine: the South Asians fighting in Russia’s war South Asian countries are facing skyrocketing unemployment, prompting people to fight in wars thousands of miles away. https://www.aljazeera.com/podcasts/2024/3/5/the-take-from-india-to-ukraine-the-south-asians-fighting-in-russias-war உக்ரைனுக்காவும் சாகினம். வருமானமே முக்கிய காரணம். 
    • பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் 16 APR, 2024 | 12:43 PM (நெவில் அன்தனி) பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஆரம்பமாவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் கிரேக்கத்தின் பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் பாரம்பரிய முறையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) ஏற்றப்படவுள்ளது. இந்த ஒலிம்பிக் சுடர் பிரெஞ்சு தலைநகர் பாரிஸை எதிர்வரும் ஜூலை 26ஆம் திகதி சென்றடைவதற்கு முன்னர் அக்ரோபோலியிலிருந்து பிரெஞ்சு பொலினேசியாவுக்கு பயணிக்கவுள்ளது. கொவிட் - 19 தொற்றுநோய் காரணமாக டோக்கியோ 2020 ஒலிம்பிக், பெய்ஜிங் 2022 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களுக்கான தீபச் சுடர் ஏற்ற நிகழ்வு பார்வையாளர்கள் இன்றி நடத்தப்பட்டது. இம்முறை ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றத்தை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிரேக்க ஒலிம்பிக் குழுத் தலைவர் கெத்தரினா சக்கெல்லாரோபவ்லூ, சர்வதேச ஒலிம்பிக் குழுத் தலைவர் தோமஸ் பெச் உட்பட சுமார் 600 பிரமுகர்கள் ஒலிம்பிக் தீபச் சுடர் ஏற்றும் வைபவத்தில் கலந்துகொள்வர் என அறிவிக்கப்படுகிறது. பண்டைய பெண் பாதிரியார்களாக   உடையணிந்த நடிகைகள் குழிவுவில்லை கண்ணாடியைக் கொண்டு சூரிய ஒளிக் கதிரினால் இயற்கையாக சுடரை ஏற்றிவைப்பர். கிறிஸ்துவுக்கு முன்னர் 776ஆம் ஆண்டில் பண்டைய ஒலிம்பிக்கின் பிறப்பிடமான ஒலிம்பியாவில் ஆரம்பமான இயற்கையாக தீபச் சுடரை ஏற்றும் இந்த நடைமுறை பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டுவருகிறது. 2600 ஆண்டுகள் பழைமைவாய்ந்த ஹேரா கோவிலின் இடிபாடுகள் உள்ள இடத்தில் நடைபெறும் இந்த வைபவத்தில் ஒலிம்பிக் கீதத்தை அமெரிக்க பாடகி ஜொய்ஸ் டிடோனட்டோ பாடுவார். ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படுவதானது ஒலிம்பிக் விழாவுக்கான நாட்களைக் கணக்கிடுவதாக அமைகிறது. ஒலிம்பிக் சுடரை முதலாவதாக ஏந்திச் செல்லும் பாக்கியம் கிரேகத்தின் படகோட்ட சம்பியன் ஸ்டெஃபானஸ் டௌஸ்கொஸுக்கு கிடைத்துள்ளது. இவர் டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் படகோட்டப் போட்டியில் பங்குபற்றிய வீரராவார். கிரேக்கத்தில் ஒலிம்பிக் சுடரை சுமார் 600 பேர், 11 தினங்களில் 5,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஏந்திச் செல்வர். ஏதென்ஸ் 2004 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் நீச்சல் போட்டியில் சம்பியனான பிரெஞ்சு நீச்சல் வீராங்கனை லோரி மனவ்டூ, பிரான்ஸ் தேச ஒலிம்பிக் சுடர் பயணத்தில் முதலாமவராக தீபத்தை ஏந்திச் செல்வார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி தொடக்க விழாவுடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் 11ஆம் திகதி முடிவு விழாவுடன் நிறைவுபெறும். https://www.virakesari.lk/article/181219
    • process flow of the cement manufacturing process – palavi operation   The Puttalam cement factory, now owned by the Swiss  company Holcim Group, is the biggest one in Sri Lanka and is located in the Palaviya G.S. division, just 8 km from Puttalam town. The local population claims that cement dust poses a health hazard [Pollution] to them. For Example, during the 2001-2004 period, they rose up with several protests.  The site consists of a dry process cement plant with two kilns
    • 16 APR, 2024 | 03:39 PM   ஈரானின் அணுஉலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது. சிரிய தலைநகரில் உள்ள ஈரானின் துணைதூதரகத்தின் மீது  இஸ்ரேல்  மேற்கொண்ட தாக்குதலிற்கு ஈரான் பதில் தாக்குதலைமேற்கொண்டுள்ள நிலையில் தனது நாடு அதற்கு பதிலடி கொடுக்கும் என இஸ்ரேலின் இராணுவதளபதி தெரிவித்துள்ளார். பாதுகாப்பு காரணமாக ஞாயிற்றுக்கிழமை ஈரான் தனது அணுஉலைகளை மூடியது என தெரிவித்துள்ள ஐஏஈஏ அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ரபெல் குரொசி தெரிவித்துள்ளார். பின்னர் திங்கட்கிழமை  அவை திறக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் நாங்கள் எப்போதும் அது குறித்து அச்சமடைந்துள்ளோம் கடும் பொறுமையை நிதானத்தை கடைப்பிடிக்க கோருகின்றோம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/181235
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.