Jump to content

எத்தனை எம்.எல்.ஏ.,க்கள்? : சசி பேச்சால் குழப்பம்


Recommended Posts

எத்தனை எம்.எல்.ஏ.,க்கள்? : சசி பேச்சால் குழப்பம்
 
 
 

சசிகலா பேசும் போது, 129 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாக தெரிவித்தது, அனைத்து தரப்பினரிடமும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின் தற்போது, அ.தி.மு.க.,விற்கு, 135 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் ஆறு பேர், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். பன்னீர் உட்பட ஏழு பேர், சசிகலாவுக்கு எதிராக உள்ளனர்.

 

Tamil_News_large_1710243_318_219.jpg

 

நட்ராஜ் நடுநிலை


அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நட்ராஜ், அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்ற, மனிதநேய ஜனநாயக

கட்சி எம்.எல்.ஏ., தமிமுன் அன்சாரி ஆகியோர் நடுநிலை வகிக்கின்றனர்; மீதம், 126 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஆனால் சசிகலா, தொண்டர்களிடம் பேசும்போது, '129 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது' என்றார். உண்மையில், எத்தனை எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு என்பதை தெரிந்து பேசுகிறாரா அல்லது தெரியாமல் பேசுகிறாரா என, கட்சியினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் குழப்பம் அடைந்துள்ளனர்.


அ.தி.மு.க., தலைமையகத்தில் சசி ஆதரவாளர்கள் குவிப்பு


அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தை கைப்பற்ற, முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வந்தால்அவர்களை தடுக்க, தங்களின் ஆதரவாளர்களை சசிகலா தரப்பு குவித்துள்ளது.
சசிகலாவுக்கு எதிராக, முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கி உள்ளார். அவைத்தலைவர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட நிர்வாகிகள், அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்

 

நாளுக்கு நாள், அவருக்கு ஆதரவு அதிகரித்து வருவதால் அவரது ஆதரவாளர்கள், கட்சி தலைமை அலுவலகத்தை கைப்பற்ற வரலாம் என்ற தகவல் பரவியுள்ளது. அவ்வாறு வருவோரை தடுப்பதற்காக, சசிகலா தரப்பு, நுாற்றுக்கணக்கானோரை, ஷிப்டு அடிப்படையில், கட்சி அலுவலகத்தில் தங்க வைத்துள்ளது.

- நமது நிருபர் -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710243

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.