Jump to content

மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள் மாயம் : தமிழகம் முழுவதும் குவியுது புகார்


Recommended Posts

மந்திரிகள், எம்.எல்.ஏ.,க்கள் மாயம் :
தமிழகம் முழுவதும் குவியுது புகார்
 
 
 

தமிழகம் முழுவதும், 'அமைச்சர்கள், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களை காணவில்லை' என, போலீசில் புகார்கள் குவிந்து வருகின்றன.

 

Tamil_News_large_171020920170213230027_318_219.jpg

 

வீரமணி எங்கே?


வேலுார் மாவட்டம், ஜோலார்பேட்டை ஒன்றிய அ.தி.மு.க., முன்னாள் செயலர் கே.கே.மணி, தன் ஆதரவாளர்களுடன், ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார்.
அதில், '6ம் தேதி முதல், எங்கள் தொகுதி சட்டசபை உறுப்பினரும், வணிக வரி மற்றும் பத்திரப்பதிவு துறை அமைச்சருமான வீரமணியை காணவில்லை. மொபைல் போனில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் முடியவில்லை; அவரை கண்டுபிடித்து தர வேண்டும்' என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
 

* வேளாண் மந்திரி கடத்தல்?


தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரையிடம், மாவட்ட ஜெ., பேரவை அவை தலைவர் ரவிசங்கர், நேற்று மனு அளித்தார். அதில், '5ம் தேதி, வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு வீட்டிற்கு சென்றேன்; அங்கு அவர் இல்லை. அவரை யாரோ கடத்தியிருப்பர் என்ற சந்தேகம் உள்ளது. போலீசாருக்கு உத்தரவிட்டு, கண்டுபிடித்து தர வேண்டும்' என, தெரிவித்துள்ளார்.
 

சம்பத் வீட்டுக்கு பாதுகாப்பு:


கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, தொழில் துறை அமைச்சர் சம்பத், எம்.எல்.ஏ.,க்கள், பண்ருட்டி - சத்யா, விருத்தாசலம் - கலைச்செல்வம்,


சிதம்பரம் - பாண்டியன், காட்டுமன்னார்கோவில் - முருகுமாறன் ஆகியோர், சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சசிகலாவிற்கு ஆதரவு தெரிவித்து வரும், எம்.எல்.ஏ.,க்கள் வீடு மற்றும் அலுவலகங்களை, அ.தி.மு.க.,வினரே முற்றுகையிட உள்ளதாக தகவல் பரவியது. இதையடுத்து, மஞ்சக்குப்பத்தில் உள்ள அமைச்சர் சம்பத் வீட்டில், ஆயுதம் தாங்கிய போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
 

கண்டுபிடியுங்க:


கடலுார்மாவட்டம், காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த லதா, 35, என்பவர் தலைமையில், 20 பெண்கள், காட்டுமன்னார்கோவில் காவல் நிலையத்தில் நேற்று அளித்த புகார்:
அதில், 'எங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு, முருகுமாறன் எம்.எல்.ஏ.,வை சந்தித்து மனு அளிக்க, அவரது அலுவலகத்திற்கு சென்றோம்; அங்கு அவர் இல்லை. காணாமல் போன எம்.எல்.ஏ., முருகுமாறனை கண்டுபிடித்து தர வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.
 

அடம் பிடித்தவர் கைது


கரூர் அடுத்த, தான்தோன்றிமலையை சேர்ந்தவர், லாரி ஓட்டுனர் அன்பழகன், 45. இவர், நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு, வீட்டருகில் உள்ள மொபைல் போன் டவரில் ஏறினார்.
சிறிது நேரத்தில், 'போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இங்கு வர வேண்டும்' என, போதையில் கூச்சலிட்டார்.ஆர்.டி.ஓ., பாலசுப்பிரமணியம் மற்றும் வாங்கல் போலீசார், 'மைக்' மூலம் அன்பழகனிடம் பேச்சு நடத்தியும் பலன் இல்லை.
தொடர்ந்து, அவரது நண்பர் சிவா, டவரில் ஏறி, அன்பழகனிடம் பேச்சு நடத்தினார். நீண்ட இழுபறிக்கு பின், நேற்று அதிகாலை, 12:30 மணியளவில், டவரில் இருந்து கீழே இறங்கினார். அவரை, பசுபதிபாளையம்போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
 

காமெடியை காணோம்


ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில், முக்குலத்தோர் புலிப்படை

 

சார்பில், அ.தி.மு.க., சின்னத்தில், நடிகர் கருணாஸ் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனார். சில வாரங்களாக இவர் தொகுதிக்கு வரவில்லை.இந்நிலையில், மாவூர் ஊராட்சி முன்னாள் தலைவர் காளிமுத்து, திருவாடானை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.அதில், 'திருவாடானை எம்.எல்.ஏ., கருணாஸ், சில நாட்களாக தொகுதி பக்கம் வரவில்லை. கிராம பகுதிகளில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, எம்.எல்.ஏ., கருணாசை கண்டுபிடித்து தரவேண்டும்' என தெரிவித்துள்ளார்.
 

இன்ஸ்பெக்டர் அடாவடி


கடலுார் மாவட்டம், சிதம்பரத்தை சேர்ந்தவர், ஜெயவேல், 65; அ.தி.மு.க., முன்னாள் நகராட்சி கவுன்சிலர்.இவர், 'சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை. சசிகலா கும்பல் பிடியில் அவர் உள்ளதாக தெரிகிறது; உடனே அவரை மீட்டுத் தர வேண்டும்' என, சிதம்பரம் டவுன் போலீசில் நேற்று புகார் கொடுத்தார்.
பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் மோகன், புகாரை வாங்கி படித்து விட்டு, ஜெயவேலை ஆபாசமாக திட்டி, சட்டையை கழற்றி தரையில் உட்கார வைத்துள்ளார். மேலும், 'ஏதாவது கேஸ் போட்டு சிறையில் தள்ளி விடுவேன்' என, மிரட்டியுள்ளர். இதையறிந்து, ஏராளமானோர் காவல் நிலையம் முன் கூடியதால் பரபரப்பு நிலவியது. இன்ஸ்பெக்டர் மோகன், ஜெயவேல் கொடுத்த புகார் மனுவின் பின் பக்கத்தில், 'புகாரை திரும்ப பெற்றுக் கொண்டேன்' என எழுதி வாங்கிவிட்டு, அனுப்பியுள்ளார்.

- நமது நிருபர் குழு -

http://www.dinamalar.com/news_detail.asp?id=1710209

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
On 2/13/2017 at 2:30 PM, நவீனன் said:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதியில், முக்குலத்தோர் புலிப்படை

 

சார்பில், அ.தி.மு.க., சின்னத்தில், நடிகர் கருணாஸ் போட்டியிட்டு, எம்.எல்.ஏ., ஆனார். சில வாரங்களாக இவர் தொகுதிக்கு வரவில்லை.இந்நிலையில், மாவூர் ஊராட்சி முன்னாள் தலைவர் காளிமுத்து, திருவாடானை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.அதில், 'திருவாடானை எம்.எல்.ஏ., கருணாஸ், சில நாட்களாக தொகுதி பக்கம் வரவில்லை. கிராம பகுதிகளில் வளர்ச்சி பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, எம்.எல்.ஏ., கருணாசை கண்டுபிடித்து தரவேண்டும்' என தெரிவித்துள்ளார்.
 

 

:D:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • என் வாக்கை திருடியது யார் ?     தோல்விக்கு இப்பவே நாடகம் போடுகின்றார்கள் என ஒரு கூட்டம் சொல்லும் 😂
    • அமெரிக்காவின் எழுதப்பட்ட சாசனத்தை ட்ரம்ப் மீறுவதால் ஆயிரம் யூரிகளும் உருவாக்கப்படுவர். என்ன ஒன்று.... டொனால்ட் ரம்ப் அடுத்த தேர்தலில் வேற்றியீட்டி அந்த நான்கு வருடத்தில் எதையுமே சாதிக்கப்போவதில்லை. எனவே கலக,அழிவின் உச்சம் பெற்றவன் மீண்டும் ஆட்சிக்கு வந்து  உலகம் அழிந்து போவதே சிறப்பு.
    • நாம்தமிழர்  கட்சியின் தீவிர ஆதரவாளர் நடிகர் சூரி தனது பெயர் வாக்களர் டாப்பில் இல்லை மனைவி பெயர் இருக்கிறது என்னால் ஜனநாயகக் கடமையை ஆற்ற முயெவில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார். தமிழ்நாடு அறிந்த ஒருவரன் பெயர் வாக்காளர் அட்டவணையில் இலை;லையென்றால் சாதாரண மக்களின் நிலை என்ன? தேர்தல் ஆணையம் சின்னங்களைப் பறிக்கும் வேலையைப் பார்க்காமல் அனைத்துக் குடிமகன்களுக்கும் வாக்குரிமை இருக்கிறதா அவர்கள் பெயர் வாக்காளர் இடாப்பில் இருக்கின்றதா என்பதைப் பார்க்க வேணடும்.
    • ஓம் ஓம் திராவிட‌ம் எந்த‌ நிலைக்கும் போகும் என்று ஊர் உல‌க‌ம் அறிந்த‌ உண்மை....................இந்த‌ தேர்த‌லில் 300 , 500 , 2000 இதை தாண்ட‌ வில்லை ப‌ல‌ர் கையும் க‌ள‌வுமாய் பிடி ப‌ட்டு த‌ப்பி ஓடி இருக்கின‌ம் நேற்று....................நீங்க‌ளும் காணொளி பார்த்து இருப்பிங்க‌ள் என்று நினைக்கிறேன்😂😁🤣....................................................
    • பிந்தி கிடைத்த‌ த‌க‌வ‌லின் ப‌டி பெரிய‌ப்ப‌ட்ட‌ ம‌ணிக்கூடு நீண்ட‌ நாளாய் வேலை செய்யுது இல்லையாம்  ஆன‌ ப‌டியால் புல‌வ‌ர் அண்ணாவின் போட்டி ப‌திவு ஏற்றுக் கொள்ள‌ப் ப‌டும் லொல்😂😁🤣...........................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.