Jump to content

ம. நடராசனின் பெசன்ட் நகர் வீட்டில் என்ன நடக்கிறது? #OpsVsSasikala #VikatanExclusive


Recommended Posts

ம. நடராசனின் பெசன்ட் நகர் வீட்டில் என்ன நடக்கிறது? #OpsVsSasikala #VikatanExclusive

நடராசன்

மிழகம், எப்போதையும்விட அதிகமாகவே சத்தமாக இருக்கிறது. பிப்ரவரி 7 - ம் நாள் முன்னிரவு மெல்லிய குரலில் பன்னீர்செல்வம் பேசியது இப்போது எங்கும் எதிலும் எதிரொலித்து பெருஞ்சத்தமாக மாறி இருக்கிறது. கட்சி அரசியலை விரும்பாத, எப்போதும் இந்தக் களேபரங்களிலிருந்து விலகி நிற்க விரும்புபவர்கள்கூட இந்தச் சத்தத்திலிருந்து தப்பவில்லை. ஒன்று இந்தச் சத்தத்தின் குரலாக இருக்கிறார்கள்... இல்லையென்றால், செவியாக இருக்கிறார்கள். சரி... இவ்வளவு சத்தத்துக்கு நெருக்கமானவர், இந்தச் சத்தம் ஜனிக்கும் மூலத்தின் ஒருவர்... இப்போது எப்படி இருக்கிறார்... என்ன செய்துகொண்டிருக்கிறார்...? 

கால்நூற்றாண்டு காலமாகத் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கும் ம.நடராசனைத்தான் சொல்கிறேன். இவர் வேடிக்கை மட்டும்தான் பார்க்கிறாரா... இல்லை, இவர்தான் எல்லாவற்றையும் இயக்குகிறாரா என எப்போதும் திரைக்குப்பின்னால் இயங்கும் நடராசனின் பெசன்ட்  நகர் இல்லம் எப்படி இருக்கிறது...?  

“ஏதாவது நியூஸ் சேனல் போடுங்கப்பா...”

அரசியலில் அதிர்வுகளை உண்டாக்கும் க்ரீன்வேஸ் சாலையிலிருந்து ஏறத்தாழ ஐந்து கிலோமீட்டர் தொலைவில்தான்  ம.நடராஜனின் வீடு  இருக்கும் பெசன்ட் நகர் பாரிவீதி இருக்கிறது. ஞாயிறு மாலைப் பொழுதில் அங்கே சென்றபோது, நாம் பார்த்த விஷயங்கள் நம்மை நடராசன்வியப்பில் ஆழ்த்தின. ஆம், கிரீன்வேஸின் பரபரப்பு எதும் தன்னை ஆட்கொள்ளாமல் ஏதோ, ஜென் துறவிகள் தியானிக்கும் இடம்போல அமைதி ததும்புகிறது. வீட்டுக்கு வெளியேயும் எந்தப் பரப்பரப்பும் இல்லை.... க்ரீன்வேஸ் செல்லும்  தலைவர்கள், வழிதவறி இங்கே வரலாம் என்று நடராஜன் நம்புகிறாரா என்று தெரியவில்லை... வீட்டின் ஏழு அடி உயர மெயின் கேட் திறந்தே இருக்கிறது...!

கேட்டின் அருகே நின்றுகொண்டிருந்த ஒரு மன்னை நபரிடம் பேச்சுக் கொடுத்தோம். “நண்பா... உள்ளே என்னதான் நடக்குது...?”. அவர் படுசாவகாசமாக, “எல்லாரும் ’பாலிமர் டி.வி’-யில் ஓடுற ‘எத்தன்’ படம் பார்த்துக்கிட்டு இருக்காங்க. “ஏங்க என்னங்க சொல்றீங்க...” என்று நாம் அதிர்ச்சியுடன் கேட்க... “அட... ஆமாங்க... எல்லாச் செய்திச் சேனல்களிலும் ஒரே செய்தியை ஒன்பது தடவை போட்டா... அதையேவா பார்த்துக்கிட்டு இருப்பாங்க...” என்கிறார் அசால்டாக. 

கிளீன் சேவ் முகத்துடன் மஞ்சள் சட்டை அணிந்த நபர் உள்ளிருந்து நம் சத்தம் கேட்டு வெளியே வருகிறார். நம்மை அறிமுகம் செய்துகொண்ட பிறகு, ஒரு தயக்கத்துக்குப்பின் பேசுகிறார், “நேற்று காலையில் பெசன்ட் நகரில் இருக்கும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர். நடராஜ் இல்லத்துக்கு மாஃபா பாண்டியராஜன் வந்தார்.  உடனே,  ம.நடராஜனை சந்திக்க மாஃபா விரைந்தார் என ஒரு செய்தி உலாவுகிறது. அதாவது பரவாயில்லை, எனக்கே வாட்ஸ்அப்பில், ‘பரபரப்பு : நடராஜனை சந்தித்தார் மாஃபா...  மீண்டும் சசி அணிக்கே திரும்பினார். டெல்லி அழுத்தங்களை எப்படி எதிர்கொள்வது என்று ஆலோசனை” என ஒரு செய்திவருகிறது. என்னத்த சொல்ல...சமூக ஊடகங்களில்தான் அரசியல் நடக்கின்றன... நாங்கள் நடக்கும் விஷயங்களை ஒரு பார்வையாளனாக வேடிக்கை மட்டும்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.”

“ஆளுநர்கிட்ட கேளுங்க?”

நடராசன் - சசிகலா’’சரி... நடராஜன்  உடல்நிலை இப்ப எப்படி இருக்கு... என்ன முடிவு பண்ணி இருக்காரு...’’   என்று நாம் கேட்க. அவர், “தலைவர் இப்ப நல்லா இருக்காரு... சாதாரண செக்அப்தான்” என்றவர்... குறும்பாக, “அவர் ட்ரீட்மென்ட் எடுத்துக்கிட்ட படத்தையெல்லாம் வெளியிடச் சொல்ல மாட்டீங்கள்ல” என்றவர் அழுத்துக்கொண்டு, “என்ன கேட்டீங்க.... என்ன முடிவு பண்ணி இருக்கார்ன்னா... முடிவு பண்ண நாங்க யாருங்க... இதை நீங்க ஆளுநர்கிட்டத்தான் கேட்கணும். அவர்தான் இப்ப ஒரு முடிவும் பண்ணாம இருக்காரு... அவரை ஏதாவது முடிவு பண்ணச் சொல்லுங்க” என்கிறார் கோபமாக.  

நாம் பேசிக் கொண்டிருந்தபோது, உள்ளே தொலைக்காட்சி சேனலை மாற்றி இருப்பார்கள்போல... ஒரு குரல், “சீக்கிரம் வாங்க... சீக்கிரம் வாங்க... நடிகர் திலகத்தை காட்டுறாங்க” என்று ஒரு சத்தம். நாம் விநோதமாகப் பார்க்க... “பன்னீசெல்வம் பேசுறத காட்டுறாங்கபோல...” என்றவர் உள்ளே நகர்ந்தார். 

http://www.vikatan.com/news/tamilnadu/80605-this-is-what-happening-at-m-natarajan-house-now-opsvssasikala-vikatanexclusive.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.