Jump to content

எல்லைச் சுவர்: என்ன செய்யும் மெக்ஸிகோ?


Recommended Posts

எல்லைச் சுவர்: என்ன செய்யும் மெக்ஸிகோ?

 

mexico_3132107f.jpg
 
 
 

கடந்த ஒரு நூற்றாண்டாக, மெக்ஸிகோவின் ஊழல்கள், மனித உரிமை மீறல்கள், சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கு அதிகம். ஆனால், மெக்ஸிகோவுக்குப் பொருளாதாரரீதியான ஆதரவளித்ததுடன், ஆட்சி மாற்றம் குறித்து அழுத்தம் தராமல் விலகியும் நின்றிருக்கிறது. அமெரிக்கா - மெக்ஸிகோ இடையிலான உறவு, இரு தரப்புக்கும் பலனளிக்கக்கூடியதாகவே இருந்தது. அந்த உறவின் சீர்குலைவு இரு தரப்புக்கும் மோசமாகவே அமையும்!

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, ராஜதந்திரரீதியிலான பிரச்சினைகளைக் கையில் எடுத்திருக்கிறார் ட்ரம்ப். முதலில், அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையில் சுவர் எழுப்பும் தனது திட்டத்துக்கான செலவை மெக்ஸிகோவே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதுவும், வெள்ளை மாளிகை அதிகாரிகளை மெக்ஸிகோ அதிகாரிகள் சந்திக்கவிருந்த அதே நாளில் அந்த அறிவிப்பை வெளியிட்டார். அதை ஏற்க மெக்ஸிகோ அதிபர் என்ரிக் பீனா நீட்டோ மறுத்ததை அடுத்து, அவரது அமெரிக்கப் பயணத்தை ரத்துசெய்வது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ட்வீட் செய்தார் ட்ரம்ப். என்ரிக் பீனா அதைத்தான் செய்தார்.

மெக்ஸிகோவைப் பொறுத்தவரை, அதிபரின் அமெரிக்கப் பயணம் ரத்து செய்யப்பட்டதும், அமெரிக்காவுடனான பதற்றங்களும், கவலையளிக்கிற பெரும் பிரச்சினைகள். இரு தரப்பு உறவில் பின்னடைவு ஏற்பட வேண்டும் என்று மெக்ஸிகோவில் யாருமே விரும்பவில்லை.

எல்லாமே கேள்விக்குறி

அமெரிக்காவுடனான உறவில் மெக்ஸி கோவின் முந்தைய ஐந்து அதிபர்களும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் ஆக்கபூர்வமாகச் செயல்பட்டனர். வட அமெரிக்காவின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், 1990-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது அமெரிக்கா தந்த ஆதரவு, குடியேற்றம் தொடர்பாக 2001-ல் நடந்த பேச்சுவார்த்தைகள், போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கைகள், பாதுகாப்புக் கூட்டு நடவடிக்கைகள், தொல்லை தருபவர்களாக அல்லாமல் ஆக்கபூர்வமான அண்டை நாட்டுக்காரர்கள்தான் மெக்ஸிகர்கள் எனும் மனப்பான்மை வளர்த்தெடுக்கப்பட்டது - இவை எல்லாமே கேள்விக்குரியவையாக ஆகிவிட்டன.

அமெரிக்காவுடன் தன்னைப் பிணைத்துக் கொண்டிருப்பதால், வட அமெரிக்க உறவு, தடையற்ற வர்த்தகம், ஜனநாயகம், மனித உரிமைகளுக்கான மரியாதை என்று பல விஷயங்களில் அமெரிக்காவையே சார்ந்திருக்கிறது மெக்ஸிகோ. ட்ரம்பின் உத்தரவுகளையும், இந்த அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பான அவரது பார்வை யையும் பார்க்கும்போது, இவ்விஷயத்தில் மெக்ஸிகோவின் முடிவு தவறு என்றே எண்ணத் தோன்றுகிறது. அதனால்தான் இன்றைக்கு மெக்ஸிகோ இரண்டு கடினமான விஷயங்களில் ஒன்றைத் தேர்வுசெய்ய வேண்டிய நிலையில் இருக்கிறது. ஒன்று, ட்ரம்பைச் சகித்துக்கொண்டு சாத்தியமான, அத்தனை மோசமில்லாத விஷயங்களையும் அமெரிக்காவிடமிருந்து பெற்றுக்கொள்வது. இரண்டாவது, தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயங்களில் அமெரிக்கா ஏற்படுத்தும் அழுத்தங்களுக்கு எதிராக, வலுவான எதிர்ப்புக் கொள்கையைக் கைக்கொள்வது. ட்ரம்பின் பதவிக்காலம் முடிவதற்கு மெக்ஸிகோ காத்திருக்க வேண்டியிருக்கலாம். அவரது நடவடிக்கைகள் காரணமாக அமெரிக்காவுக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்பதும், விரைவில் இந்த ஏற்றத்தாழ்வு சீர்செய்வதில் அமெரிக்காவிலும் வெளியிலும் இருக்கும் மெக்ஸிகோ ஆதரவாளர்கள் ஈடுபடுவார்கள் என்றும் நம்பலாம்.

ஒப்பந்தத்தை மாற்றம் செய்வது தொடர்பாக ட்ரம்ப் வலியுறுத்துவார் என்று சில காலத்துக்கு முன்பே பீனா நீட்டோவுக்குத் தெரிந்திருந்தது. ‘நாஃப்டா’வில் (வட அமெரிக்க தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்) உறுப்பினர்களாக உள்ள அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ என்று மூன்று நாடுகளுக்கும் நல்ல பலன் கிடைக்கும் என்று அவர் அறிந்திருந்தார். ஆனால், மூன்று நாடுகளின் நாடாளுமன்றத்திலும் இதற்கான திட்டமிடல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டால், அது மெக்ஸிகோவுக்குப் பெரும் பின்னடைவைத் தரும்.

மெக்ஸிகோ பின்பற்ற வேண்டியவை

வர்த்தகத்தில் ஒரு எச்சரிக்கைக் கோட்டை மெக்ஸிகோ பின்பற்ற வேண்டும். மூன்று நாடுகளின் நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமலேயே அனைத்தையும் செய்ய முடியும் என்பது நல்ல விஷயம்தான். எனினும், அதனால் மட்டும் பலன் இருக்கப்போவதில்லை. ஒரு நாடு விலகுவதாக இருந்தால், ஆறு மாத ‘நோட்டீஸ்’ கொடுத்துவிட்டு விலகிவிடலாம் என்று சொல்லும் நாஃப்டா பிரிவு 2205-ஐ அமெரிக்காவைப் பயன்படுத்தச் செய்வது நல்லது.

அமெரிக்கா - மெக்ஸிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்திலும் இதேபோன்ற ஒரு கட்டுப்பாட்டை மெக்ஸிகோ கடைப்பிடித்தாக வேண்டும். இதிலும்கூட இந்தச் சுவர் கட்டுவதற்கான செலவை ஏற்க முடியாது என்று பீனா பேசுகிறாரே தவிர, அந்தச் சுவரே வேண்டாம் என்று பேசவில்லை. சுவர் கட்ட யார் செலவு செய்வது என்பதல்ல விஷயம்; ஒரு நட்பு நாட்டின் மீது நிகழ்த்தப்படும் விரோத நடவடிக்கை இது. லத்தீன் - அமெரிக்கா முழுமைக்கும் மோசமான சமிக்ஞையை அனுப்பும் விஷயமும்கூட. சுவர் எழுப்புவது என்பது எல்லைப் பகுதியில் சமூகப் பிரச்சினைகள், கலாச்சார, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளை எழுப்பக்கூடியது. சட்டவிரோதமாக எல்லை தாண்டுவதை, அதில் இருக்கும் அபாயத்தை அதிகரிக்கச் செய்யக் கூடியது. முன்பைவிட அதிகமான குற்றச் சம்பவங்களுக்கும் வழிவகுக்கக் கூடியது. மெக்ஸிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 20% வரி விதித்து அந்த நிதியை, சுவர் எழுப்பும் செலவுக்குப் பயன்படுத்துவது என்று வெள்ளை மாளிகை பரிசீலிப்பதும் பழிவாங்கும் எண்ணத்தைத் தூண்டாத விஷயம் அல்ல.

இரு தரப்புக்கும் மோசம்

அமெரிக்காவிலிருந்து மக்கள் அனுப்பப் படும் விஷயத்தில் தனது உறுதியான நிலைப்பாட்டை மெக்ஸிகோ தெரிவிக்க வேண்டும். குடியேற்ற அமலாக்க விஷயத்தில் அதிகமான முகவர்களையும் பணத்தையும் எதிர்பார்ப்பது, அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நகரங்களுக்குத் தண்டனை அளிப்பது, குற்றவாளிகள் என்று சொல்லிப் பலரை மெக்ஸிகோவுக்கு அனுப்ப முயற்சிப்பது ஆகியவை நட்பார்ந்த நடவடிக்கைகள் அல்ல. 1990-களில் எல் சால்வடார் நாட்டின் மீது இதுபோன்ற நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்ததை அடுத்து, உலகின் மிக வன்முறையான நாடாக அது மாறியது.

துரதிர்ஷ்டவசமான, தேவையற்ற பிரச்சினை நிலவும் இந்தச் சூழலில், மெக்ஸிகோவின் உறுதியான நிலைப்பாடு அமெரிக்காவின் தெற்குப் பிராந்தியத்தில் அது நடந்துகொள்ளும் விதத்தைப் பொறுத்து அமையும். கடந்த ஒரு நூற்றாண்டாக, மெக்ஸிகோவின் ஊழல்கள், மனித உரிமை மீறல்கள், சர்வாதிகார ஆட்சி ஆகியவற்றில் அமெரிக்காவின் பங்கு அதிகம். ஆனால், மெக்ஸிகோவுக்குப் பொருளாதார ரீதியான ஆதரவளித்ததுடன், ஆட்சி மாற்றம் குறித்து அழுத்தம் தராமல் விலகியும் நின்றிருக்கிறது அமெரிக்கா. அத்துடன், மெக்ஸிகோவிலிருந்து பெருமளவில் நிகழ்ந்த குடியேற்றத்தைப் பொறுத்துக்கொண்டதுடன், மெக்ஸிகோவை மரியாதையுடனேயே நடத்தியிருக்கிறது. அமெரிக்கா - மெக்ஸிகோ இடையிலான உறவு, இரு தரப்புக்கும் பலனளிக்கக்கூடியதாகவே இருந்தது. அந்த உறவின் சீர்குலைவு இரு தரப்புக்கும் மோசமாகவே அமையும்!

- ஜார்ஜ் ஜி. காஸ்டெனெடா, மெக்ஸிகோ வெளியுறவுத் துறை முன்னாள் அமைச்சர், நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர்.

© ‘தி நியூயார்க் டைம்ஸ்’, தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

http://tamil.thehindu.com/opinion/columns/எல்லைச்-சுவர்-என்ன-செய்யும்-மெக்ஸிகோ/article9537927.ece?homepage=true&theme=true

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
    • @நீர்வேலியான், உங்கள் பதில்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன😀 வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.